தேவையனவை :
புடலங்காய் - 1 மிளகாய் வற்றல் - 2 சீரகம் - கால் டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன் கடுகு - கால் டீஸ்பூன் நெய் - தேவையான அளவு தேங்காய் - கால் மூடி கறிவேப்பிலை - தேவையான அளவு செய்முறை:
1.முதலில் புடலங்காயை வட்டமாக நறுக்கி விதைகளை நீக்கி நறுக்கவும் .
2.பின்பு ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு இரண்டு மிளகாய்,, கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை இவற்றைப் போட்டுத் தாளிக்க வேண்டும்.
3.அடுத்ததாக புடலங்காயைப் போட்டு புரட்டிவிட வேண்டும். காய் வெந்ததும், துருவிய தேங்காயைப் போட்டு தேவையான உப்பு சேர்த்து இறக்கவும்.
|