LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம்

பொதுவாழ்வில் பொறுப்பு

 அரிசன சேவா சங்கம் என்பது காங்கிரஸ் மகாசபையில் ஓர் அங்கமாக விளங்கியது . தென்மாவட்டங்களில் இந்த அமைப்பைத் தொடங்கி மிகச் சிறப்பாக நடத்தி வந்தவர்களில் மதுரை வழக்குரைஞர் வைத்தியநாதய்யர் , என் . எம் . ஆர் . சுப்பராமன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் .

ஏற்கனவே கல்விப் பொருளுதவி செய்த சுப்பராமன் வழியாகக் கக்கனைப்பற்றி வைத்தியநாதய்யர் தெரிந்து வைத்திருந்தார் . சேவா சங்க வளர்ச்சிப் பணிகளுக்கு உதவும்தொண்டர்கள் தேவைப்பட்ட காலமது . கக்கனைச் சந்தித்துக் கலந்து பேசிய வைத்தியநாதய்யர் கக்கனைச் சேவா சங்கத் தொண்டனாகச் சேர்த்துக் கொள்ள எண்ணினார் .

கக்கனின் பண்பான பேச்சு ; பாசமான பார்வை ; பழகும் முறை ஆகியன அய்யருக்கு மிகவும் பிடித்திருந்தது . மேலும் அவர்தம் எளிமை , உண்மை ஆகியன அய்யரின் மனத்தைக் கவர்ந்தன . சேவா சங்கப் பணிகளை முடித்த பிறகு கக்கனைத் தம் வீட்டிலேயே தங்க இசைவளித்தாரெனில் அக்கால வெள்ளத்தில் இவருடைய நட்பின் திறம் கரையேறியது என்றே மகிழலாம் .

ஒவ்வொரு கிராமமாகச் சென்று இரவுப் பள்ளிகள் தொடங்குவது , அப்பள்ளிகளுக்குத் தேவையானப் பொருட்களை வாங்கிக் கொடுப்பது , பள்ளிகளை மேற்பார்வை செய்வது ஆகியன கக்கனின் அன்றாடப் பணிகள் . இதுதான் இவருக்குக் கிடைத்த தொடக்க காலப் பொதுத்தொடர்பு . வைத்தியநாதய்யரின் ஆணைப்படியே பள்ளி வேலைகளைச் செய்து முடிக்கும் வல்லவர் என்ற பெயர் பெற்றார் .

மதுரை மேலூர் வட்டம் தொடங்கிக் கிட்டத்தட்ட சிவகங்கை வரையிலான அனைத்துத் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புகளுக்கும் சென்று இரவுப் பள்ளிகளைத் தொடங்கினார் . ஆர்வமுள்ள படித்த இளைஞர்களை ஆசிரியர்களாக அமர்த்தி கல்வித் தொண்டு செய்தார் . தொடக்கக் காலத்தில் நடந்தே பல ஊர்களுக்குச் செல்ல வேண்டியதாக இருந்தது . இதனால் மனம் சலிப்படையவில்லை . காடு மேடுகளில் நடந்து சென்று பள்ளிகளைத் தொடங்கினார் . சில இடங்களில் இவர்தம் தொண்டிற்கு வரவேற்பும் சில இடங்களில் எதிர்ப்பும் இருந்தன . எல்லாவற்றையும் மனத்துணிவோடு எதிர்கொண்டு செய்த பணிகளுக்குச் சேவா சங்கத்திலிருந்தோ அல்லது வேறு எவரிடமிருந்தோ சம்பளமாக எதையுமே பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

இரவுப் பள்ளிகளுக்குத் தேவையான பொருட்கள் வாங்க அவ்வப்போது திரு . வைத்தியநாதய்யரும் அவர்தம் நண்பர்களும் கொடுக்கும் சிறிய தொகைக்கும் முறையான கணக்குகளை ஐயர் அவர்களிடம் கொடுத்து வந்தார் . இந்தத் தனிமனித ஒழுக்கமே பிற்காலத்தில் இவர்தம் அரசியல் வெற்றிக்குப் படிகளாக அமைந்தன . ‘ ஒழுக்கத்தின் எய்துவார் மேன்மை’ என்ற வள்ளுவரின் வாக்கு உண்மையானது என்று உணர்ந்து கொள்ள இதையுமொரு சான்றாகக் கொள்ளலாம் .

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.