LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஆக்கம் படத்தில் ரவுடியானார் பவர் ஸ்டார் !!

சென்னையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கி வரும் படம் ஆக்கம். 


இந்த படத்தை மு களஞ்சியத்தின் உதவி இயக்குநராக இருந்த ஞானசம்பந்தன் இயக்குகிறார். 


இந்த படத்தின் நாயகனாக புதுமுகம் சதீஷ் ராகவன் நடிக்கிறார். நாயகியாக மலையாள நடிகை வைதேகி நடிக்கிறார். 


மேலும் இந்த படத்தில், ரஞ்சித், தருண்குமார், பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 


இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். ஜி.ஏ.சிவசந்தர் ஒளிப்பதிவு செய்கிறார்.


இந்த படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு பிரபல ரவுடியாக நடித்துள்ளார். ஜெயிலுக்குள் ரவுடியாக உருவாவதுபோல் இவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை முழுக்க முழுக்க வடசென்னையிலேயே படமாக்கியுள்ளனர். 


இரண்டு கட்டப் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ள படக்குழு தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் பரபரப்பாக உள்ளனர். 


ஆக்கம் திரைப்படம் குறித்து இயக்குனர் கூறுகையில், "சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து படத்தை எடுத்திருக்கிறோம். ஆக்ஷன், காதல் கலந்த கதை. முழுக்க முழுக்க வடசென்னையில் நடக்கும் கதை என்பதால் ராயபுரம், புளியாந்தோப்பு, வியாசர்பாடி, எண்ணூர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம் என்றார்.

by Swathi   on 10 Oct 2014  0 Comments
Tags: Power Star Srinivasan   Aakkam Tamil Movie   Director Gnanasambandam   Actor Sathish Raghavan   Aakam Movie Latest News   ஆக்கம் திரைப்படம்   பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்  
 தொடர்புடையவை-Related Articles
கோணலா இருந்தாலும் என்னோடது படத்தின் மூலம் வில்லன் ஆகிறாராம் பவர்ஸ்டார் !! கோணலா இருந்தாலும் என்னோடது படத்தின் மூலம் வில்லன் ஆகிறாராம் பவர்ஸ்டார் !!
ஆக்கம் படத்தில் ரவுடியானார் பவர் ஸ்டார் !! ஆக்கம் படத்தில் ரவுடியானார் பவர் ஸ்டார் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.