திரு இயக்கத்தில், ஜெய் மற்றும் திரிஷா ஆகியோர் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்கள். வரும் மார்ச்சில் தொடங்க இருக்கும் இந்த படத்தை வருண்மணியன் தயாரிக்கிறார்.
இந்த படத்தில் ஜெய் மற்றும் த்ரிஷா இருவருக்கும் சமமான கதாப்பாத்திரம் இருப்பதாகவும் இவர்கள் இருவரின் பாத்திரமும் கதையை பலப்படுத்தும் என்கிறது படக்குழு. கும்பகோணம் பெண்ணாக நடிக்கவிருக்கிறார் த்ரிஷா.
தமன் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். தற்போது இப்படத்தின் லேட்டஸ்ட் நியூஸ் என்னவென்றால் இந்த படத்தில் பிரபு தேவா ஜெய்க்கு அண்ணனாக நடிக்க இருக்கிறாராம்.
இந்த படத்தின் இயக்குனர் திரு, படத்தின் கதையை பிரபு தேவாவிடம் கூற அவருக்கு பிடித்துவிட்டதாம் உடனே ஓகே எனவும் கூறிவிட்டாராம்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் பிரபுதேவா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
|