|
|||||
அறிமுகமானது இந்தியாவின் முதல் பேமன்ட் கார்டு |
|||||
ஏடிஎம் மையங்களின் இனி பணம் எடுக்கவும், ஷாப்பிங் செய்வதற்கும் இனி வெளி நாட்டு நிறுவனங்களின் ‘பெமென்ட்’ கார்டுகளை (Payment Card) எதிர்பார்க்க வேண்டியதில்லை. ஏனெனில், நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இண்டியா என்ற இந்திய நிறுவனம், ரூ பே(Ru Pay) என்ற பேமென்ட் கார்டுகளை அறிமுகம் செய்துள்ளது. இதற்கான அறிமுக நிகழ்ச்சி நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, "ரூ பே" கார்டு சேவையை தொடங்கிவைத்தார். இந்த ‘ரூ பே’ கார்டை பயன்படுத்தி ஷாப்பிங் செய்யலாம். வங்கி ஏடிஎம்களிலும் ரொக்கம் எடுக்க இந்த கார்டை பயன்படுத்தலாம். தற்போது நாடு முழுவதும் 10 ஆயிரம் வியாபார நிறுவனங்கள் இந்த கார்டை ஏற்கின்றன. விரைவில், ரூ பே கார்டு போன்று, விவசாயிகளுக்கு பலன் தரும் வகையில் கிசான் கார்டு வெளியிடப்படுகிறது. அதுபோல, விரைவில் ரயில் முன்பதிவுக்கு பயன்படும் வகையில் ரயில்வேயின் ஐஆர்டிசி நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளது. வங்கிகள் தரும் ஏடிஎம் கார்டுகளை தவிர, சில வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் தான் பேமென்ட் கார்டுகள் வெளியாகி உள்ளன. இப்போது தான் முதன் முதலில் இந்தியாவின் சொந்தமான ஒரு பேமென்ட் கார்டு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. |
|||||
by Swathi on 09 May 2014 0 Comments | |||||
Tags: First Payment Gateway India\'s First Payment Gateway RuPay RuPay Launched ரூபே பேமன்ட் கார்டு | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|