கருத்தரித்த நிலையில், சில பெண்களுக்கு சர்க்கரை இருப்பதாகக் கண்டுபிடிக்கப்படுகிறது. கருவுற்ற நிலையில் மட்டும் சர்க்கரை நோய் தாக்குவதேன்? அது குழந்தையை பாதிக்குமா? குழந்தை பெற்ற பின்பு அது தாய்க்கு தொடரும் அபாயம் உள்ளதா?
இதற்குப் பெயர் கர்ப்பகால நீரிழிவு என்பதாகும், கர்ப்பகாலத்தில் உடலில் நிகழும் ஹார்மோன் மாறுபாடுகளாலே சர்க்கரை நோய் வருகிறது. கர்ப்பிணிப் பெண்ணின் பெற்றோருக்கு சர்க்கரை இருப்பின், மரபு ரீதியாக அவருக்கும் சர்க்கரை பாதித்து, அது கர்ப்ப காலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சர்க்கரை பாதித்த கர்ப்பிணிகளின் உடலில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தாவிட்டால், அது குழந்தையை பாதிக்கும், மேலும் கருச்சிதைவு மற்றும் குழந்தையின் உடலில் பிறவி ஒழுங்கின்மையை ஏற்படுத்தலாம். பொதுவாக, இவ்வகை கர்ப்பகாலத்தில் வளரும்.
சர்க்கரை, குழந்தை பெற்ற பின் தாய்க்கு சரியாகிவிடும். ஆனால், குழந்தை பெற்ற பின், 5-10 ஆண்டுகளில், அந்த தாய்க்கு திரும்பவும் நீரிழிவு வருவதற்கு, 50-70 சதவீதம் வாய்ப்புண்டு.
எனவே, ஆரோக்கியமான உணவு திட்டத்தின் மூலமும் முறையான குழந்தை பெற்ற பின்பு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையை சரியாகப் பேணுவதன் மூலமும் நீரிழிவுத் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். குழந்தை பெற்ற பின், 4 - 6 வாரத்திலும், பின்பு ஒவ்வோர் ஆண்டும் சர்க்கரைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
|