|
||||||||
வாஷிங்டன் காவல் துறையைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த அதிபர் ட்ரம்ப் |
||||||||
அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் காவல்துறை மாகாண அரசின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், குற்றங்கள் அதிகரித்ததாகக் கூறி அத்துறையைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் உத்தரவில் அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். அமெரிக்காவின் தலைநகராகச் செயல்படுவதற்காக உருவாக்கப்பட்ட பகுதி வாஷிங்டன். இந்த நகரின் காவல்துறை மாநகரத்தந்தை முரியல் போவ்சர் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.
கடந்த வாரம் அரசு முன்னாள் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டார். இதையடுத்து அதிபர் டிரம்ப், நகரில் குற்றச்சம்பவங்கள் அதிகம் நடப்பதாகவும், தலைநகரின் காவல்துறை தன் கட்டுப்பாட்டின் கீழ் எடுக்க உள்ளதாகவும் கூறியிருந்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 'வீடு இல்லாதவர்கள் நகரை விட்டு வெளியேறுங்கள். உங்களுக்குத் தங்கும் இடம் வழங்கப்படும். ஆனால் நகரை விட்டுத் தொலைவில் இருக்கும். குற்றவாளிகள் வெளியேற வேண்டியதில்லை. உங்களைச் சிறையில் அடைக்கப் போகிறேன்' என்றார்.
இந்நிலையில், அதிபர் டிரம்ப் நேற்று குற்ற அவசர நிலையை அறிவித்து, காவல்துறைத் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தார். இது குறித்து அவர் கையெழுத்திட்ட உத்தரவில் "வாஷிங்டனில் குற்றங்கள் கட்டுப்பாட்டை மீறியுள்ளன. கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அரசு ஊழியர்கள், பொது மக்கள் மற்றும் சுற்றுலா ப் பயணியருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் காவல்துறைஎன் அதிகாரத்தின் கீழ் பயன்படுத்தத் தீர்மானிக்கிறேன். இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
|
||||||||
| by hemavathi on 13 Aug 2025 0 Comments | ||||||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|