LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்

உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் ஐந்தாம் ஆண்டு செய்திக் குறிப்பு

உலகத் திருக்குறள்  முற்றோதல் இயக்கத்தின் ஐந்தாம் ஆண்டு

செய்திக் குறிப்பு

உலகத் திருக்குறள்  முற்றோதல் இயக்கத்தின் ஐந்தாம் ஆண்டு விழா கரூரில் வள்ளுவர் கலை ,அறிவியல் & மேலாண்மைக் கல்லூரியில்  பெரு நிகழ்வாக  25/05/25 அன்று நடக்க இருக்கிறது.,

தமிழ்நாட்டில்  பல ஆண்டுகளாக மனன முற்றோதல் பயிற்சி வழங்கி வரும் ஆசிரியர்களும் அனைத்து மாவட்ட திருக்குறள்  அமைப்புகளும் ,மாணவர்களும் இந்நிகழ்வில்  கலந்து கொள்கின்றனர்.

உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறளை தமிழர்கள் முழுமையாக உள்வாங்கி செயல் பட்டால், அருளும் பொருளும் நிறைந்த சமுதாயமாக தமிழ்நாடு மாறும்.

"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்றார் பாரதியார் . ஆனால் வள்ளுவத்தை தமிழர்கள் தங்கள் வாழ்வில் முழுமையாக உள்வாங்கிக் கொண்டார்களா என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.

எனவே ,அறம் சார்ந்த, குறள் சார்ந்த ஒரு சமுதாயத்தை படைக்க வேண்டும் என்றால் குறள் நெறி மக்களிடையே சென்றடைய வேண்டும் . திருக்குறளை மேற்கோளுக்காகவும் மேடைப்பேச்சுகாகவும் மட்டுமே பயன்படுத்துவதை விடுத்து வள்ளுவத்தை முழுமையாக வாழ்வியலாக்க  வேண்டுமென்றால் வள்ளுவத்தை முறைப்படி  பொருளுணர்ந்து படிக்க வேண்டும் . அப்போதுதான் , குறள் நெறி ஆழமாக வேரூன்றி நிற்கும்

வள்ளுவத்தை முறைப்படி படிப்பதற்கும், மனனம் செய்வதற்கும் ஏற்ற வயது 7 முதல் 14 வயது வரை .  பொருள் உணர்ந்து படிக்கும் பருவம்  10 வயது முதல் தொடங்கும்.  இந்த வயதில் வள்ளுவத்தை முழுமையாக மனனம் செய்து முழுமையாக உள்வாங்கி விட்டால் ,காலம் செல்லச்செல்ல  தானாகவே அதன்  பொருள் விளங்க ஆரம்பிக்கும். அவ்வாறு  கற்றவர்கள் இந்த சமுதாயத்தில் நன்மக்களாக  வளர்வார்கள். காலப் போக்கில் நாம் குறளறம் சார்ந்த சமுதாயத்தைக் கட்டமைக்க முடியும்.

இதை மனத்தில் கொண்டு  , ஐந்தாண்டுகளுக்கு முன் வலைத்தமிழ், வள்ளுவர் குரல் குடும்பம், சர்வீஸ் டு சொசைட்டி என்ற மூன்று அமைப்புக்களால் ,உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்  தொடங்கப்பட்டது.

 

இயக்கத்தின் நோக்கம்,

  1. ஆங்காங்கே பயிற்சி அளித்து வரும் மனன முற்றோதல் ஆசிரியர்களை ஒன்றிணைத்து செயல்படுவது
  2. மாவட்டம் தோறும் புதிய பயிற்சி ஆசிரியர்களை இனம் காணுவது. பயிற்சி ஆசிரியர்களுக்குத் தேவையான நிதி உதவி அளிக்க மாவட்டம் தோறும் தன்னார்வல புரவலர்களை , அமைப்புகளை இனம் காணுவது.
  3. தமிழகத்தில் இயங்கி வரும் திருக்குறள் அமைப்புகள் மற்றும் தமிழ்ச் சங்கங்களின் துணையுடன் ,தொடர்ந்து திருக்குறள் மனன முற்றோதல் வகுப்புகள் நடத்த ஆவன் செய்தல்.
  4. மனன முற்றோதல் செய்து அரசிடம் பரிசு பெற்ற மாணவர்களை ஒன்றிணைத்து அவர்களை மேலும் குறள் நெறி பரவலாக்கப் பணிகளில் ஈடுபடுத்துவது
  5. ஏற்கனவே மனன முற்றோதல் முடித்த மாணவர்கள் குறளை மறந்துவிடாமல் இருக்க ,பொருளுணர்ந்து படிக்க வழி வகை செய்தல்.
  6. கல்லூரி நிலையில் அத்தகைய மாணவர்களுக்கு தொழில் முனைவோராக மாற, குடிமைப் பணிக்கான தேர்வில் வெற்றி பெற உரியவர்களைக் கொண்டு வழி காட்டுதல்.
  7. நெஞ்சில் உறுதியும் செயலில் நேர்மையும் திறமையும் கொண்ட குறள் நெறியில் வாழும் சமுதாயத்தை உருவாக்குதல்
  8. மாவட்டம் ஒன்றுக்கு 1000 வீதம்,வருடத்திற்கு திருக்குறள் மனன முற்றோதல் செய்த 4000 மாணவர்களை (தமிழ்நாடு &பாண்டிச்சேரி ) உருவாக்குவது.
  9. ஆண்டொன்றுக்கு மனன முற்றோதல் செய்தால் 70 பேருக்கு மட்டுமே பரிசு என்ற நிலையை முற்றிலும் மாற்றி , எந்த வித உச்ச வரம்பைஇல்லாமல் எத்தனை மாணவர்கள் சொன்னாலும் அத்தனை பேருக்கும் பரிசு என்று அண்மையில் தமிழக அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
  10. நிறைவாக ,தமிழ்ச் சமுதாயம் பொருளிலும் அறத்திலும் வாழ்விலும் சிறந்து விளங்க வகை செய்தல்.

வாருங்கள் சந்திப்போம் ;வரும் தலைமுறையினர் குறித்து சிந்திப்போம்

by Swathi   on 29 May 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
லண்டன் ஆக்ஸ்போர்ட்டில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின்  183 ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா லண்டன் ஆக்ஸ்போர்ட்டில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 183 ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா
தேசிய நூலாகத் திருக்குறள் அறிவிக்கப்பட வேண்டும் - உத்தரப் பிரதேசத்திலிருந்து எழுந்த கோரிக்கை! தேசிய நூலாகத் திருக்குறள் அறிவிக்கப்பட வேண்டும் - உத்தரப் பிரதேசத்திலிருந்து எழுந்த கோரிக்கை!
தவத்திரு அழகரடிகளின் மாபெரும் குறள் செயல்திட்டம் தவத்திரு அழகரடிகளின் மாபெரும் குறள் செயல்திட்டம்
கேரளாவில் வள்ளுவர் ஞான மடங்களை உருவாக்கியவர் சிவானந்தர் கேரளாவில் வள்ளுவர் ஞான மடங்களை உருவாக்கியவர் சிவானந்தர்
திருக்குறள் முன்னோடி விருதுகள் அறிவிப்பு திருக்குறள் முன்னோடி விருதுகள் அறிவிப்பு
தவத்திரு குன்றக்குடி அடிகளார் பரப்பிய திருக்குறள் தவத்திரு குன்றக்குடி அடிகளார் பரப்பிய திருக்குறள்
வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி – நா.தனராசன் வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி – நா.தனராசன்
குறட் செல்வம் திறனாய்வு இன்பமே எந்நாளும் துன்பமில்லை - குன்றக்குடி அடிகளார் குறட் செல்வம் திறனாய்வு இன்பமே எந்நாளும் துன்பமில்லை - குன்றக்குடி அடிகளார்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.