|
|||||
அரசுப்பணிகளில் பதவி உயர்வு: இட ஒதுக்கீடு அடிப்படையில் வழங்க அவசியமில்லை! |
|||||
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு! அரசுப்பணிகளில் பதவி உயர்வு, இட ஒதுக்கீடு அடிப்படையில் வழங்க அவசியமில்லை என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அரசு பணிகளின் பதவி உயர்வில் எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினர் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அவசியமில்லை என ஏற்கனவே 2006 ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், இந்த வழக்கை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றஞ வேண்டும் எனவும் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு, 2006 ம் ஆண்டு அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை. பதவி உயர்வில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. இந்த வழக்கை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்ற முடியாது என்று தீர்ப்பு வழங்கினர். |
|||||
by Mani Bharathi on 27 Sep 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|