நான் தீவிரவாதி என்பதை நிரூபிக்க முடியுமா என பாகிஸ்தானைச் சேர்ந்த ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் முகமது ஹபீஸ் சயீத் இந்திய அரசுக்கு சவால் விடுத்துள்ளார். பாகிஸ்தானில் நேற்று முன் தினம் லாகூரில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு அவர் பேசியதாவது, இந்திய அரசு என்னை தீவிரவாதி என்று அழைக்கிறது. ஆனால், நான் தீவிரவாதி அல்ல. அப்படியும் நம்பிக்கை இல்லை என்றால், இந்தியா,பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நீதிபதிகள், பிரபல வக்கீல்கள் கொண்ட குழுவை அமைத்து என்னைப்பற்றி விசாரிக்கட்டும். அக்குழு என்ன உத்தரவை பிறப்பிக்கிறதோ அதை நான் ஏற்கிறேன். என்னை நாடு கடத்தி ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே எல்லையில் இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது என்றார்.
|