|
|||||
லஞ்சம் வாங்குவோருக்கு ஒவ்வொரு நாட்டிலும் என்னென்ன தண்டனை தெரியுமா !! |
|||||
நம் நாட்டில் மிக பெரிய பிரச்சனைகளுள் ஒன்று லஞ்சம். அரசு மருத்துவமனை பியுனில் தொடங்கி ஐ.ஏ.எஸ் அதிகாரி வரை அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. லஞ்சம் வாங்குபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், லஞ்சத்தை ஒழிக்கலாம் என்பது பலரது வாதமாக இருக்கிறது. லஞ்சத்திற்கு எந்தெந்த நாடுகள் என்ன விதமான தண்டணையை தருகின்றன என்பதை பற்றி இங்கு பார்ப்போமா ..... ஐஸ்லாந்து(ஊழல் குறைவான நாடுகளில் முதலிடம்) இங்கு தண்டனை என்னவோ 2 வருட சிறைச்சாலைதான். அதற்கு முன்பு லஞ்சம் வாங்கிச் சேர்த்த பணம் முழுவதும் பறிமுதல் செய்யப்படும். எகிப்து: இங்கு லஞ்சம் வாங்குவது கிரிமினல் குற்றம். நிரூபிக்கப்பட்டால் ஆயுள் முழுவதும் சிறைதான். அதுவும் உள்ளே கடுமையான வேலைகளைச் செய்யவைத்து பெண்டு நிமிர்த்தி விடுவார்கள். அர்ஜெண்டினா: லஞ்சம் வாங்கினால் சிறை தண்டனையோடு வேலையும் பறிபோய்விடும். விடுதலையான பிறகும் சாகும் வரை வேறு வேலை தர மாட்டார்கள். செக் குடியரசு: சிறை தண்டனை, வேலை காலி, வீடு மற்றும் பிற சொத்துக்கள் பறிக்கப்படும். நைஜீரியா : இங்கு தண்டனை கொஞ்சம் வித்தியாசமானது. லஞ்சம் பெற்றது உறுதியானால் அரசியல் மற்றும் குடி உரிமைகள் பறிக்கப்படும். இங்கிலாந்து : சிறை தண்டனையுடன் வாக்களிக்கும் உரிமையும் ரத்து செய்யப்படும். சீனா : கீழ்மட்ட அரசாங்க அலுவலர்களுக்கு சிறை தண்டனை. உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மரண தண்டனையும் உண்டு. விஷ ஊசி போட்டு நொடிகளில் சாகடித்து விடுவார்கள். முன்பெல்லாம் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டுச் சாகடிப்பார்கள். துப்பாக்கி குண்டுக்கான செலவு உறவினர்களிடம் வசூலிக்கப்படும். இதெல்லாம் இருக்கட்டும் நம் இந்தியாவில் லஞ்சம் வாங்கினால் என்ன தண்டனை தெரியுமா? அரசு அதிகாரி லஞ்சம் வாங்கினால், அதிகபட்சம் ஒரு வருடம் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே! உணவு, மது, பொழுதுபோக்கு போன்றவற்றை லஞ்சமாக.... மன்னிக்கவும் அன்பளிப்பாக வாங்கினால் அபராதம் மட்டுமே. '! |
|||||
by Swathi on 29 Oct 2013 6 Comments | |||||
Tags: தண்டனை ஊழல் லஞ்சம் உலக நாடுகள் Corruption Punishments | |||||
கருத்துகள் | ||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|