மயங்கிய மாலைப்பொழுதே! நீ வாழ்வாயாக; புன்கண்மையை யுடையையாயிருந்தாய்; எம்முடைய கேளிரைப் போல வன்கண்மையை யுடைத்தோ நின்துணையும். இது தன்னுட்கையாறெய்திடு கிளவி.
தேவநேயப் பாவாணர் உரை:
(தன் செயலறவை அதன் மேலேற்றிச் சொல்லியது) மருள்மாலை - மயங்கும் மாலையே!; புன்கண்ணை - நீயும் என்னைப்போலத் துன்பமுடையையாயிருக்கின்றாய்; நின்துணை எம் கேள் போல் வன்கண்ணதோ-உன்னுடைய துணையும் என்னுடைய துணைபோல; அன்பற்றதோ? சொல்வாயாக மருளுதல் அல்லது மயங்குதல் பகலும் இரவும் தம்முட்கலத்தல். அவை கலங்குதற் பொருளும் உணர்த்தும் .புன்கண் அழகின்மையும் துன்பமும். மாலைப் பொழுது ஒளியின்றிப் பொலிவிழத்தலாலும், தலைமகள் தன் செயலற்ற நிலையை அதன் மேலும் ஏற்றிக் கூறினாள். எமக்குத் துன்பஞ்செய்தாய்; அதனால் , நீயுங் கலங்கிப் பொலிவிழந்தாய் என்னுங் குறிப்பால் 'வாழி' என்றாள்.
கலைஞர் உரை:
மயங்கும் மாலைப் பொழுதே! நீயும் எம்மைப் போல் துன்பப்படுகின்றாயே! எம் காதலர் போல் உன் துணையும் இரக்கம் அற்றதோ?.
சாலமன் பாப்பையா உரை:
பகலும் இரவுமாய் மயங்கும் மாலைப்பொழுதே! என்னைப் போலவே நீயும் ஒளி இழந்த கண்ணோடு இருக்கிறாயே; உன் கணவரும் என் கணவரைப் போல் கொடியவரோ?.
Translation
Thine eye is sad; Hail, doubtful hour of eventide!
Of cruel eye, as is my spouse, is too thy bride?.
Explanation
A long life to you, O dark evening! You are sightless. Is your help-mate (also) as hard-hearted as mine.