LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

புறநானூறு-11

 

251. அவனும் இவனும்!
பாடியவர்: மாற்பித்தியார்
திணை: வாகை 
துறை: தாபத வாகை 
ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற்,
பாவை அன்ன குறுந்தொடி மகளிர்
இழைநிலை நெகிழ்ந்த மள்ளற் கண்டிக்கும்-
கழைக்கண் நெடுவரை அருவியாடிக்,
கான யானை தந்த விறகின் 5
கடுந்தெறல் செந்தீ வேட்டுப்,
புறம்தாழ் புரிசடை புலர்த்து வோனே!  
252. அவனே இவன்!
பாடியவர்: மாற்பித்தியார்
திணை: வாகை 
துறை: தாபத வாகை 
கறங்குவெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து,
தில்லை அன்ன புல்லென் சடையோடு,
அள்இலைத் தாளி கொய்யு மோனே
இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
சொல்வலை வேட்டுவன் ஆயினன், முன்னே. 5
253. கூறு நின் உரையே!
பாடியவர்: குளம்பாதாயனார்
திணை: பொதுவியல் 
துறை: முதுபாலை 
என்திறத்து அவலம் கொள்ளல், இனியே;
வல்வார் கண்ணி இளையர் திளைப்ப,
நாகாஅல் என வந்த மாறே, எழாநெல்
பைங்கழை பொதிகளைந்து அன்ன விளர்ப்பின்,
வளைஇல், வறுங்கை ஓச்சிக், 5
கிளையுள்ஒய்வலோ? கூறுநின் உரையே!  
254. ஆனாது புகழும் அன்னை!
பாடியவர்: கயமனார்
திணை: பொதுவியல் 
துறை: முதுபாலை 
இளையரும் முதியரும் வேறுபுலம் படர,
எதிர்ப்ப எழாஅய், மார்பமண் புல்ல,
இடைச்சுரத்து இறுத்த, மள்ள ! விளர்த்த
வளையில் வறுங்கை ஓச்சிக் கிளையுள்,
இன்னன் ஆயினன், இளையோன் என்று, 5
நின்னுரை செல்லும் ஆயின், மற்று
முன்ஊர்ப் பழுனிய கோளி ஆலத்துப்,
புள்ளார் யாணர்த் தற்றே என் மகன்
வளனும் செம்மலும் எமக்கு என , நாளும்
ஆனாது புகழும் அன்னை 10
யாங்குஆ குவள்கொல் ? அளியள் தானே!  
255. முன்கை பற்றி நடத்தி!
பாடியவர்: வன்பரணர்
திணை: பொதுவியல் 
துறை: முதுபாலை 
ஐயோ! எனின் யான் புலி அஞ் சுவலே;
அணைத்தனன் கொளினே, அகன்மார்புஎடுக்கல்லேன்!
என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை
இன்னாது உற்ற அறனில் கூற்றே!
திரைவளை முன்கை பற்றி- 5
வரைநிழல் சேர்கம்- நடந்திசின் சிறிதே!  
256. அகலிதாக வனைமோ!
பாடியவர்: பெயர் தெரிந்திலது
திணை: பொதுவியல் 
துறை: முதுபாலை 
கலம்செய் கோவே : கலம்செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி,
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி 5
அகலிது ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே!  
257. செருப்பிடைச் சிறு பரல்!
பாடியவர்: பெயர் தெரிந்திலது
திணை: வெட்சி 
துறை: உண்டாட்டு 
செருப்புஇடைச் சிறுபரல் அன்னன்; கணைக்கால்,
அவ்வயிற்று அகன்ற மார்பின், பைங்கண்,
குச்சின் நிரைத்த குரூஉமயிர் மோவாய்ச்,
செவிஇறந்து தாழ்தரும் கவுளன், வில்லொடு,
யார்கொலோ, அளியன் தானே? தேரின் 5
ஊர்பெரிது இகந்தன்றும் இலனே; அரண்எனக்
காடுகைக் கொண்டன்றும், இலனே ; காலைப்,
புல்லார் இனநிரை செல்புறம் நோக்கிக்,
கையின் சுட்டிப் பைஎன எண்ணிச்,
சிலையின் மாற்றி யோனே ; அவைதாம் 10
மிகப்பல ஆயினும், என்னாம்-எனைத்தும்
வெண்கோள் தோன்றாக் குழிசியொடு,
நாள்உறை மத்தொலி கேளா தோனே?  
258. தொடுதல் ஓம்புமதி!
பாடியவர்: உலோச்சனார்
திணை: வெட்சி 
துறை: உண்டாட்டு 
முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத்
தெறிப்ப விளைந்த தீங்கந் தாரம்
நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு,
பச்சூன் தின்று, பைந்நிணப் பெருத்த
எச்சில் ஈர்ங்கை விற்புறம் திமிரிப், 5
புலம்புக் கனனே, புல்அணற் காளை,
ஒருமுறை உண்ணா அளவைப், பெருநிரை
ஊர்ப்புறம் நிறையத் தருகுவன் ; யார்க்கும்
தொடுதல் ஓம்புமதி முதுகட் சாடி;
ஆதரக் கழுமிய துகளன், 10
காய்தலும் உண்டு, அக் கள்வெய் யோனே.  
259. புனை கழலோயே!
பாடியவர்: கோடை பாடிய பெரும்பூதனார்
திணை: கரந்தை 
துறை: செருமலைதல் (பிள்ளைப் பெயர்ச்சியுமாம்). 
ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது,
இலைபுதை பெருங்காட்டுத் தலைகரந்து இருந்த
வல்வில் மறவர் ஒடுக்கம் காணாய்,
செல்லல், செல்லல் ; சிறக்க நின், உள்ளம்;
முதுகுமெய்ப் புலைத்தி போலத் 5
தாவுபு தெறிக்கும் ஆன்மேல் ;
புடையிலங்கு ஒள்வாள் புனைகழ லோயே!  
260. கேண்மதி பாண!
பாடியவர்: வடமோதங்கிழார்
திணை: கரந்தை (பாடாண் திணையுமாம்) 
துறை: கையறுநிலை செருவிடை வீழ்தல்; 
கையறு நிலையுமாம்; பாண்பாட்டுமாம்; பாடாண் பாட்டுமாம்.
வளரத் தொடினும், வெளவுபு திரிந்து,
விளரி உறுதரும் தீந்தொடை நினையாத்
தளரும் நெஞ்சம் தலைஇ; மனையோள்
உளரும் கூந்தல் நோக்கி, களர 5
கள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப்
பசிபடு மருங்குலை, கசிபு, கைதொழாஅக்,
காணலென் கொல் ? என வினவினை வரூஉம்
பாண ! கேண்மதி, யாணரது நிலையே;
புரவுத்தொடுத்து உண்குவை ஆயினும், இரவுஎழுந்து, 10
எவ்வம் கொள்வை ஆயினும், இரண்டும்,
கையுள போலும் கடிதுஅண் மையவே;
முன்ஊர்ப் பூசலின் தோன்றித் தன்னூர்
நெடுநிரை தழீஇய மீளி யாளர்
விடுகணை நீத்தம் துடிபுணை யாக, 15
வென்றி தந்து, கொன்றுகோள் விடுத்து,
வையகம் புலம்ப வளைஇய பாம்பின்
வைஎயிற்று உய்ந்த மதியின், மறவர்
கையகத்து உய்ந்த கன்றுடைப் பல்லான்
நிரையொடு வந்த உரைய னாகி, 20
உரிகளை அரவ மானத், தானே
அரிதுசெல் உலகில் சென்றனன் ; உடம்பே,
கானச் சிற்றியாற்று அருங்கரைக் கால்உற்றுக்,
கம்பமொடு துளங்கிய இலக்கம் போல,
அம்பொடு துளங்க ஆண்டுஒழிந் தன்றே; 25
உயர்இசை வெறுப்பத் தோன்றிய பெயரே,
மடஞ்சால் மஞ்ஞை அணிமயிர் சூட்டி,
இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்,
படஞ்செய் பந்தர்க் கல்மிசை யதுவே.  
261. கழிகலம் மகடூஉப் போல!
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்
திணை: கரந்தை 
துறை: கையறு நிலை 
அந்தோ! எந்தை அடையாப் பேரில்;
வண்டுபடு நறவின் தண்டா மண்டையொடு
வரையாப் பெருஞ்சோற்று முரிவாய் முற்றம்,
வெற்றுயாற்று அம்பியின் எற்று ? அற்று ஆகக்
கண்டனென், மன்ற ; சோர்க, என் கண்ணே;
5
வையங் காவலர் வளம்கெழு திருநகர்,
மையல் யானை அயாவுயிர்த் தன்ன
நெய்யுலை சொரிந்த மையூன் ஓசை
புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆரப்
பயந்தனை, மன்னால், முன்னே! இனியே 10
பல்ஆ தழீஇய கல்லா வல்வில்
உழைக்குரற் கூகை அழைப்ப ஆட்டி,
நாகுமுலை அன்ன நறும்பூங் கரந்தை
விரகுஅறி யாளர் மரபிற் சூட்ட,
நிரைஇவண் தந்து, நடுகல் ஆகிய 15
வென்வேல் விடலை இன்மையின் புலம்பிக்,
கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய
கழிகலம் மகடூஉப் போல
புல்என் றனையால், பல்அணி இழந்தே.  
262. தன்னினும் பெருஞ் சாயலரே!
பாடியவர்: மதுரைப் பேராலவாயர்
திணை: வெட்சி 
துறை: உண்டாட்டு (தலை தோற்றமுமாம்) 
நறவும் தொடுமின் ; விடையும் வீழ்மின்;
பாசுவல் இட்ட புன்காற் பந்தர்ப்
புனல்தரும் இளமணல் நிறையப் பெய்ம்மின்-
ஒன்னார் முன்னிலை முருக்கிப், பின்நின்று;
நிரையோடு வரூஉம் என்னைக்கு 5
உழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே.  
263. களிற்றடி போன்ற பறை!
பாடியவர்
பாடப்பாட்டோர்
திணை: கரந்தை 
துறை: கையறுநிலை 
பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண்
இரும்பறை இரவல ! சேறி ஆயின்,
தொழாதனை கழிதல் ஓம்புமதி; வழாது,
வண்டுமேம் படூஉம், இவ் வறநிலை யாறே-
பல்லாத் திரள்நிரை பெயர்தரப் பெயர்தந்து, 5
கல்லா இளையர் நீங்க நீங்கான்,
வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்,
கொல்புனல் சிறையின் விலங்கியோன் கல்லே.  
264. இன்றும் வருங்கொல்!
பாடியவர்: உறையூர் இளம்பொன் வாணிகனார்
திணை: கரந்தை 
துறை: கையறுநிலை 
பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி,
மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு,
அணிமயிற் பீலி சூட்டிப், பெயர்பொறித்து
இனிநட் டனரே! கல்லும் ; கன்றொடு
கறவை தந்து பகைவர் ஓட்டிய 5
நெடுந்தகை கழிந்தமை அறியாது
இன்றும் வருங்கொல், பாணரது கடும்பே?  
265. வென்றியும் நின்னோடு செலவே!
பாடியவர்: சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
திணை: கரந்தை 
துறை: கையறுநிலை 
ஊர்நனி இறந்த பார்முதிர் பறந்தலை,
ஓங்குநிலை வேங்கை ஒள்ளிணர் நறுவீப்
போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்துப்,
பல்ஆன் கோவலர் படலை சூட்டக்,
கல்ஆ யினையே-கடுமான் தோன்றல்! 5
வான்ஏறு புரையும்நின் தாள்நிழல் வாழ்க்கைப்
பரிசிலர் செல்வம் அன்றியும் ! விரிதார்க்
கடும்பகட்டு யானை வேந்தர்
ஒடுங்க வென்றியும், நின்னொடு செலவே.  
266. அறிவுகெட நின்ற வறுமை!
பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் உருவப்பறேர் இளஞ்சேட் சென்னி.
திணை: பாடாண். 
துறை: பரிசில் கடாநிலை 
பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக்,
கயங்களி முளியும் கோடை ஆயினும்,
புழற்கால் ஆம்பல் அகலடை நீழல்
கதிர்கோட்டு நந்தின் கரிமுக ஏற்றை
நாகுஇள வளையொடு பகல்மணம் புகூஉம் 5
நீர்திகழ் கழனி நாடுகெழு பெருவிறல்!
வான்தோய் நீள்குடை, வயமான் சென்னி!
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன்,
ஆசாகு என்னும் பூசல்போல,
வல்லே களைமதி அத்தை- உள்ளிய 10
விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைப்,
பொறிப்புணர் உடம்பில் தோன்றிஎன்
அறிவுகெட நின்ற நல்கூர் மையே!  
267- 268 கிடைத்தில
269. கருங்கை வாள் அதுவோ!
பாடியவர்: அவ்வையார்
திணை: வெட்சி 
துறை: உண்டாட்டு 
குயில்வாய் அன்ன கூர்முகை அதிரல்
பயிலாது அல்கிய பல்காழ் மாலை,
மையிரும் பித்தை பொலியச் சூட்டிப்,
புத்தகல் கொண்ட புலிக்கண் வெப்பர்
ஒன்றுஇரு முறையிருந்து உண்ட பின்றை, 5
உவலைக் கண்ணித் துடியன் வந்தெனப்
பிழிமகிழ் வல்சி வேண்ட, மற்றிது
கொள்ளாய் என்ப, கள்ளின் வாழ்த்திக்
கரந்தை நீடிய அறிந்துமாறு செருவின்
பல்லான் இனநிரை தழீஇய வில்லோர்க், 10
கொடுஞ்சிறைக் க்ரூஉப்பருந்து ஆர்ப்பத்,
தடிந்துமாறு பெயர்த்தது, இக் கருங்கை வாளே.  
270. ஆண்மையோன் திறன்!
பாடியவர்: கழாத்தலையார்
திணை: கரந்தை 
துறை: கையறுநிலை 
பன்மீன் இமைக்கும் மாக விசும்பின்
இரங்கு முரசின், இனம்சால் யானை,
நிலந்தவ உருட்டிய நேமி யோரும்
சமங்கண் கூடித் தாம்வேட் பவ்வே-
நறுவிரை துறந்த நாறா நரைத்தலைச் 5
சிறுவர் தாயே! பேரிற் பெண்டே!
நோகோ யானே ; நோக்குமதி நீயே;
மறப்படை நுவலும் அரிக்குரல் தண்ணுமை
இன்னிசை கேட்ட துன்னரும் மறவர்
வென்றிதரு வேட்கையர், மன்றம் கொண்மார், 10
பேரமர் உழந்த வெருவரு பறந்தலை.
விழுநவி பாய்ந்த மரத்தின்,
வாண்மிசைக் கிடந்த ஆண்மையோன் திறத்தே.  
271. மைந்தன் மலைந்த மாறே!
பாடியவர்: வெறி பாடிய காமக்கண்ணியார்.
திணை: நொட்சி. 
துறை: செருவிடை வீழ்தல். 
நீரறவு அறியா நிலமுதற் கலந்த
கருங்குரல் நொச்சிக் கண்ணார் குரூஉத்தழை,
மெல்இழை மகளிர் ஐதகல் அல்குல்,
தொடலை ஆகவும் கண்டனம் ; இனியே,
வெருவரு குருதியொடு மயங்கி, உருவுகரந்து, 5
ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன்செத்துப்,
பருந்துகொண்டு உகப்பயாம் கண்டனம்
மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே!  
272. கிழமையும் நினதே!
பாடியவர்: மோசிசாத்தனார்
திணை: நொட்சி 
துறை: செருவிடை வீழ்தல் 
மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி!
போதுவிரி பன்மர னுள்ளும் சிறந்த
காதல் நன்மரம் நீ; நிழற் றிசினே!
கடியுடை வியன்நகர்க் காண்வரப் பொலிந்த
தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி; 5
காப்புடைப் புரிசை புக்குமாறு அழித்தலின்,
ஊர்ப்புறம் கொடாஅ நெடுந்தகை
பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே.  
273. கூடல் பெருமரம்!
பாடியவர்: எருமை வெளியனார்
திணை: தும்பை 
துறை: குதிரை மறம் 
மாவா ராதே ; மாவா ராதே ;
எல்லார் மாவும் வந்தன ; எம்இல்,
புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த
செல்வன் ஊரும் மாவா ராதே-
இருபேர் யாற்ற ஒருபெருங் கூடல் 5
விலங்கிடு பெருமரம் போல,
உலந்தன்று கொல் ; அவன் மலைந்த மாவே?  
274. நீலக் கச்சை!
பாடியவர்: உலோச்சனார்
திணை: தும்பை 
துறை: எருமை மறம் 
நீலக் கச்சைப் பூவார் ஆடைப்,
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
மேல்வரும் களிற்றொடு வேல்துரந்து ; இனியே,
தன்னும் துரக்குவன் போலும்-ஒன்னலர்
எகுடை வலத்தர் மாவொடு பரத்தரக், 5
கையின் வாங்கித் தழீஇ,
மொய்ம்பின் ஊக்கி, மெய்க்கொண் டனனே;  
275. தன் தோழற்கு வருமே!
பாடியவர்: ஒரூஉத்தனார்
திணை: தும்பை 
துறை: எருமை மறம் 
கோட்டம் கண்ணியும், கொடுந்திரை ஆடையும்,
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்,
ஒத்தன்று மாதோ, இவற்கே : செற்றிய
திணிநிலை அலறக் கூவை போழ்ந்து , தன்
வடிமாண் எகம் கடிமுகத்து ஏந்தி, 5
ஓம்புமின், ஓம்புமின், இவண்! ஓம்பாது
தொடர்கொள் யானையின் குடர்கால் தட்பக்,
கன்றுஅமர் கறவை மான ;
முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே.


251. அவனும் இவனும்!
பாடியவர்: மாற்பித்தியார்திணை: வாகை துறை: தாபத வாகை 
ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற்,பாவை அன்ன குறுந்தொடி மகளிர்இழைநிலை நெகிழ்ந்த மள்ளற் கண்டிக்கும்-கழைக்கண் நெடுவரை அருவியாடிக்,கான யானை தந்த விறகின் 5கடுந்தெறல் செந்தீ வேட்டுப்,புறம்தாழ் புரிசடை புலர்த்து வோனே!  


252. அவனே இவன்!
பாடியவர்: மாற்பித்தியார்திணை: வாகை துறை: தாபத வாகை 
கறங்குவெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து,தில்லை அன்ன புல்லென் சடையோடு,அள்இலைத் தாளி கொய்யு மோனேஇல்வழங்கு மடமயில் பிணிக்கும்சொல்வலை வேட்டுவன் ஆயினன், முன்னே. 5


253. கூறு நின் உரையே!
பாடியவர்: குளம்பாதாயனார்திணை: பொதுவியல் துறை: முதுபாலை 
என்திறத்து அவலம் கொள்ளல், இனியே;வல்வார் கண்ணி இளையர் திளைப்ப,நாகாஅல் என வந்த மாறே, எழாநெல்பைங்கழை பொதிகளைந்து அன்ன விளர்ப்பின்,வளைஇல், வறுங்கை ஓச்சிக், 5கிளையுள்ஒய்வலோ? கூறுநின் உரையே!  


254. ஆனாது புகழும் அன்னை!
பாடியவர்: கயமனார்திணை: பொதுவியல் துறை: முதுபாலை 
இளையரும் முதியரும் வேறுபுலம் படர,எதிர்ப்ப எழாஅய், மார்பமண் புல்ல,இடைச்சுரத்து இறுத்த, மள்ள ! விளர்த்தவளையில் வறுங்கை ஓச்சிக் கிளையுள்,இன்னன் ஆயினன், இளையோன் என்று, 5நின்னுரை செல்லும் ஆயின், மற்றுமுன்ஊர்ப் பழுனிய கோளி ஆலத்துப்,புள்ளார் யாணர்த் தற்றே என் மகன்வளனும் செம்மலும் எமக்கு என , நாளும்ஆனாது புகழும் அன்னை 10யாங்குஆ குவள்கொல் ? அளியள் தானே!  


255. முன்கை பற்றி நடத்தி!
பாடியவர்: வன்பரணர்திணை: பொதுவியல் துறை: முதுபாலை 
ஐயோ! எனின் யான் புலி அஞ் சுவலே;அணைத்தனன் கொளினே, அகன்மார்புஎடுக்கல்லேன்!என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னைஇன்னாது உற்ற அறனில் கூற்றே!திரைவளை முன்கை பற்றி- 5வரைநிழல் சேர்கம்- நடந்திசின் சிறிதே!  


256. அகலிதாக வனைமோ!
பாடியவர்: பெயர் தெரிந்திலதுதிணை: பொதுவியல் துறை: முதுபாலை 
கலம்செய் கோவே : கலம்செய் கோவே!அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்தியசிறுவெண் பல்லி போலத் தன்னொடுசுரம்பல வந்த எமக்கும் அருளி,வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி 5அகலிது ஆக வனைமோநனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே!  


257. செருப்பிடைச் சிறு பரல்!
பாடியவர்: பெயர் தெரிந்திலதுதிணை: வெட்சி துறை: உண்டாட்டு 
செருப்புஇடைச் சிறுபரல் அன்னன்; கணைக்கால்,அவ்வயிற்று அகன்ற மார்பின், பைங்கண்,குச்சின் நிரைத்த குரூஉமயிர் மோவாய்ச்,செவிஇறந்து தாழ்தரும் கவுளன், வில்லொடு,யார்கொலோ, அளியன் தானே? தேரின் 5ஊர்பெரிது இகந்தன்றும் இலனே; அரண்எனக்காடுகைக் கொண்டன்றும், இலனே ; காலைப்,புல்லார் இனநிரை செல்புறம் நோக்கிக்,கையின் சுட்டிப் பைஎன எண்ணிச்,சிலையின் மாற்றி யோனே ; அவைதாம் 10மிகப்பல ஆயினும், என்னாம்-எனைத்தும்வெண்கோள் தோன்றாக் குழிசியொடு,நாள்உறை மத்தொலி கேளா தோனே?  


258. தொடுதல் ஓம்புமதி!
பாடியவர்: உலோச்சனார்திணை: வெட்சி துறை: உண்டாட்டு 
முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத்தெறிப்ப விளைந்த தீங்கந் தாரம்நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு,பச்சூன் தின்று, பைந்நிணப் பெருத்தஎச்சில் ஈர்ங்கை விற்புறம் திமிரிப், 5புலம்புக் கனனே, புல்அணற் காளை,ஒருமுறை உண்ணா அளவைப், பெருநிரைஊர்ப்புறம் நிறையத் தருகுவன் ; யார்க்கும்தொடுதல் ஓம்புமதி முதுகட் சாடி;ஆதரக் கழுமிய துகளன், 10காய்தலும் உண்டு, அக் கள்வெய் யோனே.  


259. புனை கழலோயே!
பாடியவர்: கோடை பாடிய பெரும்பூதனார்திணை: கரந்தை துறை: செருமலைதல் (பிள்ளைப் பெயர்ச்சியுமாம்). 
ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது,இலைபுதை பெருங்காட்டுத் தலைகரந்து இருந்தவல்வில் மறவர் ஒடுக்கம் காணாய்,செல்லல், செல்லல் ; சிறக்க நின், உள்ளம்;முதுகுமெய்ப் புலைத்தி போலத் 5தாவுபு தெறிக்கும் ஆன்மேல் ;புடையிலங்கு ஒள்வாள் புனைகழ லோயே!  


260. கேண்மதி பாண!
பாடியவர்: வடமோதங்கிழார்திணை: கரந்தை (பாடாண் திணையுமாம்) துறை: கையறுநிலை செருவிடை வீழ்தல்; 
கையறு நிலையுமாம்; பாண்பாட்டுமாம்; பாடாண் பாட்டுமாம்.வளரத் தொடினும், வெளவுபு திரிந்து,விளரி உறுதரும் தீந்தொடை நினையாத்தளரும் நெஞ்சம் தலைஇ; மனையோள்உளரும் கூந்தல் நோக்கி, களர 5கள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப்பசிபடு மருங்குலை, கசிபு, கைதொழாஅக்,காணலென் கொல் ? என வினவினை வரூஉம்பாண ! கேண்மதி, யாணரது நிலையே;புரவுத்தொடுத்து உண்குவை ஆயினும், இரவுஎழுந்து, 10எவ்வம் கொள்வை ஆயினும், இரண்டும்,கையுள போலும் கடிதுஅண் மையவே;முன்ஊர்ப் பூசலின் தோன்றித் தன்னூர்நெடுநிரை தழீஇய மீளி யாளர்விடுகணை நீத்தம் துடிபுணை யாக, 15வென்றி தந்து, கொன்றுகோள் விடுத்து,வையகம் புலம்ப வளைஇய பாம்பின்வைஎயிற்று உய்ந்த மதியின், மறவர்கையகத்து உய்ந்த கன்றுடைப் பல்லான்நிரையொடு வந்த உரைய னாகி, 20உரிகளை அரவ மானத், தானேஅரிதுசெல் உலகில் சென்றனன் ; உடம்பே,கானச் சிற்றியாற்று அருங்கரைக் கால்உற்றுக்,கம்பமொடு துளங்கிய இலக்கம் போல,அம்பொடு துளங்க ஆண்டுஒழிந் தன்றே; 25உயர்இசை வெறுப்பத் தோன்றிய பெயரே,மடஞ்சால் மஞ்ஞை அணிமயிர் சூட்டி,இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்,படஞ்செய் பந்தர்க் கல்மிசை யதுவே.  


261. கழிகலம் மகடூஉப் போல!
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்திணை: கரந்தை துறை: கையறு நிலை 
அந்தோ! எந்தை அடையாப் பேரில்;வண்டுபடு நறவின் தண்டா மண்டையொடுவரையாப் பெருஞ்சோற்று முரிவாய் முற்றம்,வெற்றுயாற்று அம்பியின் எற்று ? அற்று ஆகக்கண்டனென், மன்ற ; சோர்க, என் கண்ணே;
5வையங் காவலர் வளம்கெழு திருநகர்,மையல் யானை அயாவுயிர்த் தன்னநெய்யுலை சொரிந்த மையூன் ஓசைபுதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆரப்பயந்தனை, மன்னால், முன்னே! இனியே 10பல்ஆ தழீஇய கல்லா வல்வில்உழைக்குரற் கூகை அழைப்ப ஆட்டி,நாகுமுலை அன்ன நறும்பூங் கரந்தைவிரகுஅறி யாளர் மரபிற் சூட்ட,நிரைஇவண் தந்து, நடுகல் ஆகிய 15வென்வேல் விடலை இன்மையின் புலம்பிக்,கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கியகழிகலம் மகடூஉப் போலபுல்என் றனையால், பல்அணி இழந்தே.  


262. தன்னினும் பெருஞ் சாயலரே!
பாடியவர்: மதுரைப் பேராலவாயர்திணை: வெட்சி துறை: உண்டாட்டு (தலை தோற்றமுமாம்) 
நறவும் தொடுமின் ; விடையும் வீழ்மின்;பாசுவல் இட்ட புன்காற் பந்தர்ப்புனல்தரும் இளமணல் நிறையப் பெய்ம்மின்-ஒன்னார் முன்னிலை முருக்கிப், பின்நின்று;நிரையோடு வரூஉம் என்னைக்கு 5உழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே.  


263. களிற்றடி போன்ற பறை!
பாடியவர்பாடப்பாட்டோர்திணை: கரந்தை துறை: கையறுநிலை 
பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண்இரும்பறை இரவல ! சேறி ஆயின்,தொழாதனை கழிதல் ஓம்புமதி; வழாது,வண்டுமேம் படூஉம், இவ் வறநிலை யாறே-பல்லாத் திரள்நிரை பெயர்தரப் பெயர்தந்து, 5கல்லா இளையர் நீங்க நீங்கான்,வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்,கொல்புனல் சிறையின் விலங்கியோன் கல்லே.  


264. இன்றும் வருங்கொல்!
பாடியவர்: உறையூர் இளம்பொன் வாணிகனார்திணை: கரந்தை துறை: கையறுநிலை 
பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி,மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு,அணிமயிற் பீலி சூட்டிப், பெயர்பொறித்துஇனிநட் டனரே! கல்லும் ; கன்றொடுகறவை தந்து பகைவர் ஓட்டிய 5நெடுந்தகை கழிந்தமை அறியாதுஇன்றும் வருங்கொல், பாணரது கடும்பே?  


265. வென்றியும் நின்னோடு செலவே!
பாடியவர்: சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்திணை: கரந்தை துறை: கையறுநிலை 
ஊர்நனி இறந்த பார்முதிர் பறந்தலை,ஓங்குநிலை வேங்கை ஒள்ளிணர் நறுவீப்போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்துப்,பல்ஆன் கோவலர் படலை சூட்டக்,கல்ஆ யினையே-கடுமான் தோன்றல்! 5வான்ஏறு புரையும்நின் தாள்நிழல் வாழ்க்கைப்பரிசிலர் செல்வம் அன்றியும் ! விரிதார்க்கடும்பகட்டு யானை வேந்தர்ஒடுங்க வென்றியும், நின்னொடு செலவே.  


266. அறிவுகெட நின்ற வறுமை!
பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்.பாடப்பட்டோன்: சோழன் உருவப்பறேர் இளஞ்சேட் சென்னி.திணை: பாடாண். துறை: பரிசில் கடாநிலை 
பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக்,கயங்களி முளியும் கோடை ஆயினும்,புழற்கால் ஆம்பல் அகலடை நீழல்கதிர்கோட்டு நந்தின் கரிமுக ஏற்றைநாகுஇள வளையொடு பகல்மணம் புகூஉம் 5நீர்திகழ் கழனி நாடுகெழு பெருவிறல்!வான்தோய் நீள்குடை, வயமான் சென்னி!சான்றோர் இருந்த அவையத்து உற்றோன்,ஆசாகு என்னும் பூசல்போல,வல்லே களைமதி அத்தை- உள்ளிய 10விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைப்,பொறிப்புணர் உடம்பில் தோன்றிஎன்அறிவுகெட நின்ற நல்கூர் மையே!  


267- 268 கிடைத்தில

269. கருங்கை வாள் அதுவோ!
பாடியவர்: அவ்வையார்திணை: வெட்சி துறை: உண்டாட்டு 
குயில்வாய் அன்ன கூர்முகை அதிரல்பயிலாது அல்கிய பல்காழ் மாலை,மையிரும் பித்தை பொலியச் சூட்டிப்,புத்தகல் கொண்ட புலிக்கண் வெப்பர்ஒன்றுஇரு முறையிருந்து உண்ட பின்றை, 5உவலைக் கண்ணித் துடியன் வந்தெனப்பிழிமகிழ் வல்சி வேண்ட, மற்றிதுகொள்ளாய் என்ப, கள்ளின் வாழ்த்திக்கரந்தை நீடிய அறிந்துமாறு செருவின்பல்லான் இனநிரை தழீஇய வில்லோர்க், 10கொடுஞ்சிறைக் க்ரூஉப்பருந்து ஆர்ப்பத்,தடிந்துமாறு பெயர்த்தது, இக் கருங்கை வாளே.  


270. ஆண்மையோன் திறன்!
பாடியவர்: கழாத்தலையார்திணை: கரந்தை துறை: கையறுநிலை 
பன்மீன் இமைக்கும் மாக விசும்பின்இரங்கு முரசின், இனம்சால் யானை,நிலந்தவ உருட்டிய நேமி யோரும்சமங்கண் கூடித் தாம்வேட் பவ்வே-நறுவிரை துறந்த நாறா நரைத்தலைச் 5சிறுவர் தாயே! பேரிற் பெண்டே!நோகோ யானே ; நோக்குமதி நீயே;மறப்படை நுவலும் அரிக்குரல் தண்ணுமைஇன்னிசை கேட்ட துன்னரும் மறவர்வென்றிதரு வேட்கையர், மன்றம் கொண்மார், 10பேரமர் உழந்த வெருவரு பறந்தலை.விழுநவி பாய்ந்த மரத்தின்,வாண்மிசைக் கிடந்த ஆண்மையோன் திறத்தே.  


271. மைந்தன் மலைந்த மாறே!
பாடியவர்: வெறி பாடிய காமக்கண்ணியார்.திணை: நொட்சி. துறை: செருவிடை வீழ்தல். 
நீரறவு அறியா நிலமுதற் கலந்தகருங்குரல் நொச்சிக் கண்ணார் குரூஉத்தழை,மெல்இழை மகளிர் ஐதகல் அல்குல்,தொடலை ஆகவும் கண்டனம் ; இனியே,வெருவரு குருதியொடு மயங்கி, உருவுகரந்து, 5ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன்செத்துப்,பருந்துகொண்டு உகப்பயாம் கண்டனம்மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே!  


272. கிழமையும் நினதே!
பாடியவர்: மோசிசாத்தனார்திணை: நொட்சி துறை: செருவிடை வீழ்தல் 
மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி!போதுவிரி பன்மர னுள்ளும் சிறந்தகாதல் நன்மரம் நீ; நிழற் றிசினே!கடியுடை வியன்நகர்க் காண்வரப் பொலிந்ததொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி; 5காப்புடைப் புரிசை புக்குமாறு அழித்தலின்,ஊர்ப்புறம் கொடாஅ நெடுந்தகைபீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே.  


273. கூடல் பெருமரம்!
பாடியவர்: எருமை வெளியனார்திணை: தும்பை துறை: குதிரை மறம் 
மாவா ராதே ; மாவா ராதே ;எல்லார் மாவும் வந்தன ; எம்இல்,புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்தசெல்வன் ஊரும் மாவா ராதே-இருபேர் யாற்ற ஒருபெருங் கூடல் 5விலங்கிடு பெருமரம் போல,உலந்தன்று கொல் ; அவன் மலைந்த மாவே?  


274. நீலக் கச்சை!
பாடியவர்: உலோச்சனார்திணை: தும்பை துறை: எருமை மறம் 
நீலக் கச்சைப் பூவார் ஆடைப்,பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்மேல்வரும் களிற்றொடு வேல்துரந்து ; இனியே,தன்னும் துரக்குவன் போலும்-ஒன்னலர்எகுடை வலத்தர் மாவொடு பரத்தரக், 5கையின் வாங்கித் தழீஇ,மொய்ம்பின் ஊக்கி, மெய்க்கொண் டனனே;  


275. தன் தோழற்கு வருமே!
பாடியவர்: ஒரூஉத்தனார்திணை: தும்பை துறை: எருமை மறம் 
கோட்டம் கண்ணியும், கொடுந்திரை ஆடையும்,வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்,ஒத்தன்று மாதோ, இவற்கே : செற்றியதிணிநிலை அலறக் கூவை போழ்ந்து , தன்வடிமாண் எகம் கடிமுகத்து ஏந்தி, 5ஓம்புமின், ஓம்புமின், இவண்! ஓம்பாதுதொடர்கொள் யானையின் குடர்கால் தட்பக்,கன்றுஅமர் கறவை மான ;முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே.

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.