LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

புறநானூறு-14

 

326. பருத்திப் பெண்டின் சிறு தீ!
பாடியவர்: தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
திணை: வாகை 
துறை : மூதின் முல்லை 
ஊர்முது வேலிப் பார்நடை வெருகின்
இருட்பகை வெரீஇய நாகுஇளம் பேடை
உயிர்நடுக் குற்றுப் புலாவிட் டரற்றச்,
சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த
பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்துக், 5
கலிர்ப்பூ நெற்றிச் சேவலின் தணியும்
அருமிளை இருக்கை யதுவே -மனைவியும்,
வேட்டச் சிறா அர் சேட்புலம் படராது,
படமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்
விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் மிதவை 10
யாணர் நல்லவை பாணரொடு, ஒராங்கு
வருவிருந்து அயரும் விருப்பினள்; கிழவனும்
அருஞ்சமம் ததையத் தாக்கிப், பெருஞ்சமத்து
அண்ணல் யானை அணிந்த
பொன்செய் ஓடைப் பெரும்பரி சிலனே. 15
327. வரகின் குப்பை!
பாடியவர்: பெயர் தெரிந்திலது
திணை: வாகை 
துறை : மூதின் முல்லை 
எருது கால் உறாஅது, இளைஞர் கொன்ற
சில்விளை வரகின் புல்லென் குப்பை,
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
பசித்த பாணர் உண்டு, கடை தப்பலின்,
ஒக்கல் ஒற்கம் சொலியத் தன்னூர்ச் 5
சிறுபுல் லாளர் முகத்தவை கூறி,
வரகுடன் இரக்கும் நெடுந்தகை
அரசுவரின் தாங்கும் வல்லா ளன்னே.  
328. ஈயத் தொலைந்தன!
பாடியவர்: பெயர் தெரிந்திலது
திணை: வாகை 
துறை :மூதின் முல்லை 
.. .. டைமுதல் புறவு சேர்ந்திருந்த
புன்புலச் சீறூர், நெல்விளை யாதே;
வரகும் தினையும் உள்ளவை யெல்லாம்
இரவன் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன;
.. .. .. .. .. .. டமைந் தனனே; 5
அன்னன் ஆயினும், பாண ! நன்றும்
வள்ளத் திடும்பால் உள்ளுறை தொட.. ..
களவுப் புளியன்ன விளை.. .. .. ..
.. .. .. வாடூன் கொழுங்குறை
கொய்குரல் அரிசியொடு நெய்பெய்து அட்டுத், 10
துடுப்பொடு சிவணிய களிக்கொள் வெண்சோறு
உண்டு, இனி திருந்த பின். .. .. ..
.. .. .. தருகுவன் மாதோ-
தாளி முதல் நீடிய சிறுநறு முஞ்ஞை
முயல்வந்து கறிக்கும் முன்றில், 15
சீறூர் மன்னனைப் பாடினை செலினே.  
329. மாப்புகை கமழும்!
பாடியவர்: மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
திணை: வாகை 
துறை : மூதின் முல்லை 
இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லின் நாட்பலி யூட்டி,
நன்னீர் ஆட்டி, நெய்ந்நறைக் கொளீஇய,
மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்,
அருமுனை இருக்கைத்து ஆயினும், வரிமிடற்று 5
அரவுஉறை புற்றத்து அற்றே, நாளும்
புரவலர் புன்கண் நோக்காது, இரவலர்க்கு
அருகாது ஈயும் வண்மை,
உரைசால், நெடுந்தகை ஓம்பும் ஊரே.  
330. ஆழி அனையன்!
பாடியவர்: மதுரை கணக்காயனார்
திணை: வாகை 
துறை : மூதின் முல்லை 
வேந்துடைத் தானை முனைகெட நெரிதர
ஏந்துவாள் வலத்தன் ஒருவன் ஆகித்,
தன்இறந்து வாராமை விலக்கலின், பெருங் கடற்கு
ஆழி அனையன் மாதோ; என்றும்
பாடிச் சென்றோர்க்கு அன்றியும், வாரிப் 5
புரவிற்கு ஆற்றாச் சீறூர்த்
தொன்மை சுட்டிய வண்மை யோனே.  
331. இல்லது படைக்க வல்லன்!
பாடியவர்: உறையூர் முதுகூத்தனார் (உறையூர் முது கூற்றனார் எனவும் பாடம்).
திணை: வாகை 
துறை : மூதின் முல்லை 
கல்லறுத்து இயற்றிய வல்லுவர்க் கூவல்
வில்லேர் வாழ்க்கைச், சீறூர் மதவலி
நனிநல் கூர்ந்தனன் ஆயினும், பனிமிகப்,
புல்லென் மாலைச் சிறுதீ ஞெலியும்
கல்லா இடையன் போலக், குறிப்பின் 5
இல்லது படைக்கவும் வல்லன் ; உள்ளது
தவச்சிறிது ஆயினும் மிகப்பலர் என்னாள்,
நீள்நெடும் பந்தர் ஊண்முறை ஊட்டும்
இற்பொலி மகடூஉப் போலச், சிற்சில்
வரிசையின் அளக்கவும் வல்லன்; உரிதினின் 10
காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும்
போகுபலி வெண்சோறு போலத்
தூவவும் வல்லன், அவன் தூவுங் காலே.  
332. வேல் பெருந்தகை உடைத்தே!
பாடியவர்: விரியூர் கிழார்
திணை: வாகை 
துறை : மூதின் முல்லை 
பிறர்வேல் போலா தாகி, இவ்வூர்
மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே;
இரும்புறம் நீறும் ஆடிக், கலந்துஇடைக்
குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்;
மங்கல மகளிரொடு மாலை சூட்டி, 5
இன்குரல் இரும்பை யாழொடு ததும்பத்,
தெண்ணீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து,
மண்முழுது அழுங்கச் செல்லினும் செல்லும்; ஆங்கு,
இருங்கடல் தானை வேந்தர்
பெருங்களிற்று முகத்தினும் செலவு ஆனாதே. 10
333. தங்கனிர் சென்மோ புலவீர்!
பாடியவர்: பெயர் தெரிந்திலது.
திணை: வாகை 
துறை : மூதின் முல்லை 
நீருள் பட்ட மாரிப் பேருறை
மொக்குள் அன்ன பொகுட்டுவிழிக் கண்ண,
கரும்பிடர்த் தலைய, பெருஞ்செவிக் குறுமுயல்
உள்ளூர்க் குறும்புதல் துள்ளுவன உகளும்
தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின், 5
உண்கஎன உணரா உயவிற்று ஆயினும்,
தங்கனீர் சென்மோ, புலவீர்! நன்றும்;
சென்றதற் கொண்டு, மனையோள் விரும்பி,
வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தெனக், 10
குறித்துமாறு எதிர்ப்பை பெறாஅ மையின்,
குரல்உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து,
சிறிது புறப்பட்டன்றோ விலளே; தன்னூர்
வேட்டக் குடிதொறுங் கூட்டு .. .. ..
.. .. .. .. உடும்பு செய் 15
பாணி நெடுந்தேர் வல்லரோடு ஊரா,
வம்பணி யானை வேந்துதலை வரினும்,
உண்பது மன்னும் அதுவே;
பரிசில் மன்னும், குருசில்கொண் டதுவே.  
334. தூவாள் தூவான்!
பாடியவர்: மதுரைத் தமிழக் கூத்தனார்
திணை: வாகை 
துறை : மூதின் முல்லை 
காகரு பழனக் கண்பின் அன்ன
தூமயிர்க் குறுந்தாள் நெடுஞ்செவிக் குறுமுயல்,
புன்றலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின்,
படப்புஒடுங் கும்மே.. .. .. .. பின்பு .. .. ..
.. .. .. .. .. .. னூரே மனையோள் 5
பாணர் ஆர்த்தவும், பரிசிலர் ஓம்பவும்,
ஊணொலி அரவமொடு கைதூ வாளே;
உயர்மருப்பு யானைப் புகர்முகத்து அணிந்த
பொலம் .. .. .. .. .. .. .. ப்
பரிசில் பரிசிலர்க்கு ஈய, 10
உரவேற் காளையும் கைதூ வானே.  
335. கடவுள் இலவே!
பாடியவர்: மாங்குடி கிழார்
திணை: வாகை 
துறை : மூதின் முல்லை 
அடலருந் துப்பின் .. .. .. ..
.. .. .. .. குருந்தே முல்லை யென்று
இந்நான் கல்லது பூவும் இல்லை;
கருங்கால் வரகே, இருங்கதிர்த் தினையே,
சிறுகொடிக் கொள்ளே, பொறிகிளர் அவரையொடு 5
இந்நான் கல்லது உணாவும் இல்லை;
துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந்நான் கல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி,
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக், 10
கல்லே பரவின் அல்லது,
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.  
336. பண்பில் தாயே!
பாடியவர்: பரணர்
திணை: காஞ்சி 
துறை: பாற் பாற் காஞ்சி 
வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே;
கடவன கழிப்புஇவள் தந்தையும் செய்யான்;
ஒளிறுமுகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின்
களிறும் கடிமரம் சேரா; சேர்ந்த
ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே; 5
இயவரும் அறியாப் பல்லியம் கறங்க,
அன்னோ, பெரும்பே துற்றன்று, இவ் வருங்கடி மூதூர்;
அறன்இலன் மன்ற தானே-விறன்மலை
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
முகைவனப்பு ஏந்திய முற்றா இளமுலைத் 10
தகைவளர்த்து எடுத்த நகையொடு,
பகைவளர்த்து இருந்த இப் பண்புஇல் தாயே.  
337. இவர் மறனும் இற்று!
பாடியவர்: கபிலர்
திணை: காஞ்சி 
துறை : மகட்பாற் காஞ்சி 
ஆர்கலி யினனே, சோணாட்டு அண்ணல்;
கவிகை மண்ணாள் செல்வ ராயினும்,
வாள்வலத்து ஒழியப் பாடிச் சென்றாஅர்.
வரலதோறு அகம் மலர . .. .. .. ..
ஈதல் ஆனா இலங்குதொடித் தடக்கைப் 5
பாரி பறம்பின் பனிச்சுனை போலக்,
காண்டற்கு அரியளாகி, மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவொடு, மண்ணிய
துகில்விரி கடுப்ப நுடங்கித், தண்ணென
அகிலார் நறும்புகை ஐதுசென்று அடங்கிய 10
கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு,
மனைச்செறிந் தனளே, வாணுதல்; இனியே.
அற்றன் றாகலின், தெற்றெனப் போற்றிக்,
காய்நெல் கவளம் தீற்றிக், காவுதொறும்
கடுங்கண் யானை காப்பனர் அன்றி, 15
வருத லானார் வேந்தர்; தன்னையர்
பொருசமம் கடந்த உருகெழு நெடுவேல்
குருதி பற்றிய வெருவரு தலையர்
மற்றுஇவர் மறனும் இற்றால்; தெற்றென
யாரா குவர்கொல் தாமே - நேரிழை 20
உருத்த பல்சுணங்கு அணிந்த
மருப்புஇள வனமுலை ஞெமுக்கு வோரே?  
338. ஓரெயின் மன்னன் மகள்!
பாடியவர்: குன்றூர் கிழார் மகனார்
திணை: காஞ்சி 
துறை : மகட்பாற் காஞ்சி 
சிறப்பு: நெடுவேள் ஆதனுக்கு உரிய போந்தைப்பட்டினத்தைப் பற்றிய குறிப்பு. 
ஏர் பரந்த வயல், நீர் பரந்த செறுவின்,
நெல் மலிந்த மனைப், பொன் மலிந்த மறுகின்,
படுவண்டு ஆர்க்கும் பன்மலர்க் காவின்,
நெடுவேள் ஆதன் போந்தை அன்ன,
பெருஞ்சீர் அருங்கொண் டியளே ; கருஞ்சினை 5
வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்
மலைந்த சென்னியர், அணிந்த வில்லர்,
கொற்ற வேந்தர் தரினும், தன்தக
வணங்கார்க்கு ஈகுவன் அல்லன்- வண் தோட்டுப்
பிணங்கு கதிர்க் கழனி நாப்பண், ஏமுற்று 10
உணங்குகலன் ஆழியின் தோன்றும்
ஓர்எயில் மன்னன் ஒருமட மகளே!  
339. வளரவேண்டும் அவளே!
பாடியவர்: பெயர் தெரிந்திலது.
திணை: காஞ்சி 
துறை : மகட்பாற் காஞ்சி 
வியன்புலம் படர்ந்த பல்ஆ நெடுஏறு
மடலை மாண்நிழல் அசைவிடக், கோவலர்
வீததை முல்லைப் பூப்பறிக் குந்து;
குறுங்கோல் எறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல்
நெடுநீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து; 5
தொடலை அல்குல் தொடித்தோள் மகளிர்
கடல் ஆடிக் கயம் பாய்ந்து,
கழி நெய்தற் பூக் குறூஉந்து;
பைந்தழை துயல்வருஞ் செறுவிறற்
.. .. .. .. .. . . ..லத்தி 10
வளர வேண்டும், அவளே, என்றும்-
ஆரமர் உழப்பதும் அமரிய ளாகி,
முறஞ்செவி யானை வேந்தர்
மறங்கெழு நெஞ்சங் கொண்டொளித் தோளே.  
340. அணித்தழை நுடங்க!
பாடியவர்: பெயர் தெரிந்திலது.
திணை: காஞ்சி 
துறை : மகட்பாற் காஞ்சி 
அணித்தழை நுடங்க ஓடி, மணிப்பொறிக்
குரலம் குன்றி கொள்ளும் இளையோள்,
மாமகள் .. .. .. .. .. ..
.. .. .. ..லென வினவுதி, கேள், நீ
எடுப்பவெ .. .. .. .. .. .. .. 5
.. .. .. .. .. மைந்தர் தந்தை
இரும்பனை அன்ன பெருங்கை யானை
கரந்தையஞ் செறுவின் பெயர்க்கும்
பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந் தனனே.  
341. இழப்பது கொல்லோ பெருங்கவின்!
பாடியவர்: பரணர்
திணை: காஞ்சி 
துறை : மகட்பாற் காஞ்சி 
வேந்துகுறை யுறவுங் கொடாஅன், ஏந்துகோட்டு
அம்பூந் தொடலை அணித்தழை அல்குல்,
செம்பொறிச் சிலம்பின் இளையோள் தந்தை,
எழுவிட்டு அமைத்த திண்நிலைக் கதவின்
அனரமண் இஞ்சி நாட்கொடி நுடங்கும் 5
.. .. .. . .. .. ... .. .. .. ..
புலிக்கணத் தன்ன கடுங்கண் சுற்றமொடு,
மாற்றம் மாறான், மறலிய சினத்தன்,
பூக்கோள் என ஏஎய்க், கயம்புக் கனனே;
விளங்குஇழைப் பொலிந்த வேளா மெல்லியல்,
சுணங்கணி வனமுலை, அவளொடு நாளை 10
மணம்புகு வைகல் ஆகுதல் ஒன்றோ-
ஆரமர் உழக்கிய மறம்கிளர் முன்பின்,
நீள்இலை எகம் மறுத்த உடம்பொடு
வாரா உலகம் புகுதல் ஒன்று- எனப்
படைதொட் டனனே, குருசில்; ஆயிடைக் 15
களிறுபொரக் கலங்கிய தண்கயம் போலப்,
பெருங்கவின் இழப்பது கொல்லோ,
மென்புனல் வைப்பின்இத் தண்பணை ஊரே!  
342. வாள்தக உழக்கும் மாட்சியர்!
பாடியவர்: அரிசில் கிழார்
திணை: காஞ்சி 
துறை : மகட்பாற் காஞ்சி 
கானக் காக்கைக் கலிச்சிறகு ஏய்க்கும்
மயிலைக் கண்ணிப், பெருந்தோட் குறுமகள்,
ஏனோர் மகள்கொல் இவள்? என விதுப்புற்று,
என்னொடு வினவும் வென்வேல் நெடுந்தகை;
திருநயத் தக்க பண்பின் இவள் நலனே 5
பொருநர்க்கு அல்லது, பிறர்க்கு ஆகாதே;
பைங்கால் கொக்கின் பகுவாய்ப் பிள்ளை
மென்சேற்று அடைகரை மேய்ந்துஉண் டதற்பின்,
ஆரல் ஈன்ற ஐயவி முட்டை,
கூர்நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம், 10
தன்பணைக் கிழவன்இவள் தந்தையும்; வேந்தரும்
பெறாஅ மையின் பேரமர் செய்தலின்,
கழிபிணம் பிறங்கு போர்பு அழிகளிறு எருதா,
வாள்தக வைகலும் உழக்கும்
மாட்சி யவர் இவள் தன்னை மாரே. 15
343. ஏணி வருந்தின்று!
பாடியவர்: பரணர்
திணை: காஞ்சி 
துறை : மகட்பாற் காஞ்சி 
மீன் நொடுத்து நெல் குவைஇ
மிசை யம்பியின் மனைமறுக் குந்து!
மனைக் கவைஇய கறிமூ டையால்.
கலிச் சும்மைய கரைகலக் குறுந்து
கலந் தந்த பொற் பரிசம் 5
கழித் தொணியான் கரைசேர்க் குந்து;
மலைத் தாரமும் கடல் தாரமும்
தலைப் பெய்து, வருநர்க்கு ஈயும்
புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்
முழங்கு கடல் முழவின் முசிறி யன்ன, 10
நலஞ்சால் விழுப்பொருள் பணிந்து கொடுப்பினும்,
புரையர் அல்லோர் வரையலள், இவள் எனத்
தந்தையும் கொடாஅன் ஆயின் _ வந்தோர்,
வாய்ப்ப இறுத்த ஏணி ஆயிடை
வருந்தின்று கொல்லோ தானே_பருந்துஉயிர்த்து 15
இடைமதில் சேக்கும் புரிசைப்
படைமயங்கு ஆரிடை நெடுநல் ஊரே?  
344. இரண்டினுள் ஒன்று!
பாடியவர்: அடைநெடுங் கல்வியார் 
பாடப்பட்டோன்: பெயர் தெரிந்திலது.
திணை: காஞ்சி 
துறை : மகட்பாற் காஞ்சி
(திணை, வாகையும், துறை, மூதின் முல்லையும் கூறப்படும்.) 
செந்நெல் உண்ட பைந்தோட்டு மஞ்ஞை,
செறிவளை மகளிர், பறந்தெழுந்து,
துறைநணி மருதத்து இறுக்கும் ஊரொடு,
நிறைசால் விழுப்பொருள் தருதல் ஒன்றோ;
புகைபடு கூர்எரி பரப்பிப் பகைசெய்து, 5
பண்பில் ஆண்மை தருதல் ஒன்றோ;
இரண்டினுள் ஒன்றா காமையோ அரிதே,
காஞ்சிப் பனிமுறி ஆரங் கண்ணி. . .-
கணிமே வந்தவள் அல்குல்அவ் வரியே.  
345. பன்னல் வேலிப் பணை நல்லூர்!
பாடியவர்: அடைநெடுங் கல்வியார் 
பாடப்பட்டோன்: பெயர் தெரிந்திலது.
திணை: காஞ்சி 
துறை : மகட்பாற் காஞ்சி
(திணை, வாகையும், துறை, மூதின் முல்லையும் கூறப்படும்.) 
களிறு அணைப்பக் கலங்கின, காஅ;
தேர்ஓடத் துகள் கெழுமின, தெருவு;
மா மறுகலின் மயக்குற்றன, வழி;
கலங் கழாஅலின், துறை கலக்குற்றன;
தெறல் மறவர் இறை கூர்தலின், 5
பொறை மலிந்து நிலன் நெளிய,
வந்தோர் பலரே, வம்ப வேந்தர்,
பிடிஉயிர்ப் பன்ன கைகவர் இரும்பின்
ஓவுறழ் இரும்புறம் காவல் கண்ணிக்,
கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை, 10
மையல் நோக்கின், தையலை நயந்தோர்
அளியர் தாமே; இவள் தன்னை மாரே
செல்வம் வேண்டார், செருப்புகல் வேண்டி,
நிரல்அல் லோர்க்குத் தரலோ இல் எனக்;
கழிப்பிணிப் பலகையர், கதுவாய் வாளர், 15
குழாஅங் கொண்ட குருதிஅம் புலவொடு
கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல்
இன்ன மறவர்த் தாயினும், அன்னோ !
என்னா வதுகொல் தானே-
பன்னல் வேலிஇப் பணைநல் லூரே! 20
346. பாழ் செய்யும் இவள் நலினே!
பாடியவர்: அண்டர் மகன் குறுவழுதி
திணை: காஞ்சி 
துறை : மகட்பாற் காஞ்சி 
பிற .. .. .. ள பால் என மடுத்தலின்,
ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள்;
கல்வியென் என்னும், வல்லாண் சிறாஅன்;
ஒள்வேல் நல்லன், அதுவாய் ஆகுதல்_
அழிந்தோர் அழிய, ஒழிந்தோர் ஒக்கல் 5
பேணுநர்ப் பெறாஅது விளியும்
புன்தலைப் பெரும்பாழ் செயும் இவள் நலனே.  
347. வேர் துளங்கின மரனே!
பாடியவர்: கபிலர்
திணை: காஞ்சி 
துறை : மகட்பாற் காஞ்சி 
உண்போன் தான்நறுங் கள்ளின் இடச்சில
நாஇடைப் பறேர் கோலச் சிவந்த
ஒளிறுஒள் வாடக் குழைந்தபைந் தும்பை,
எறிந்துஇலை முறிந்த கதுவாய் வேலின்.
மணநாறு மார்பின், மறப்போர் அகுதை 5
குண்டுநீர் வரைப்பின், கூடல் அன்ன
குவைஇருங் கூந்தல் வருமுலை செப்ப,
. . . . . . . . . . . . . .
என்னா வதுகொல் தானே? . .. . .
விளங்குறு பராரைய வாயினும், வேந்தர் 10
வினைநவில் யானை பிணிப்ப,
வேர்துளங் கினநம் ஊருள் மரனே.  
348. பெருந்துறை மரனே!
பாடியவர்: பரணர்
திணை: காஞ்சி 
துறை : மகட்பாற் காஞ்சி 
வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇக்,
கண்மடற் கொண்ட தீந்தேன் இரியக்,
கள்ளரிக்கும் குயம், சிறுசின்
மீன் சீவும் பாண் சேரி,
வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன, 5
குவளை உண்கண் இவளைத், தாயே
ஈனா ளாயினள் ஆயின், ஆனாது
நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப, வயின்தொறும்,
செந்நுதல் யானை பிணிப்ப,
வருந்தல மன் - எம் பெருந்துறை மரனே. 10
349. ஊர்க்கு அணங்காயினள்!
பாடியவர்: மதுரை மருதனிள நாகனார்
திணை: காஞ்சி 
துறை : மகட்பாற் காஞ்சி 
நுதிவேல் கொண்டு நுதல்வியர் தொடையாக்,
கடிய கூறும், வேந்தே; தந்தையும்,
நெடிய அல்லது, பணிந்துமொழி யலனே;
இதுஇவர் படிவம்; ஆயின், வைஎயிற்று,
அரிமதர் மழைக்கண், அம்மா அரிவை, 5
மரம்படு சிறுதீப் போல,
அணங்கா யினள், தான் பிறந்த ஊர்க்கே.  
350. வாயிற் கொட்குவர் மாதோ!
பாடியவர்: மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தார் ஆயத்தனார்
திணை: காஞ்சி 
துறை: மகட்பாற் காஞ்சி 
தூர்ந்த கிடங்கின், சோர்ந்த ஞாயில்,
சிதைந்த இஞ்சிக், கதுவாய் மூதூர்
யாங்கா வதுகொல் தானே, தாங்காது?
படுமழை உருமின் இறங்கு முரசின்
கடுமான் வேந்தர் காலை வந்து, எம் 5
நெடுநிலை வாயில் கொட்குவர் மாதோ;
பொருதாது அமருவர் அல்லர்; போர் உழந்து
அடுமுரண் முன்பின் தன்னையர் ஏந்திய
வடிவேல் எகின் சிவந்த உண்கண்,
தொடியுறழ் முன்கை, இளையோள் 10
அணிநல் லாகத்து அரும்பிய சுணங்கே.

326. பருத்திப் பெண்டின் சிறு தீ!
பாடியவர்: தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்திணை: வாகை துறை : மூதின் முல்லை 
ஊர்முது வேலிப் பார்நடை வெருகின்இருட்பகை வெரீஇய நாகுஇளம் பேடைஉயிர்நடுக் குற்றுப் புலாவிட் டரற்றச்,சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்தபருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்துக், 5கலிர்ப்பூ நெற்றிச் சேவலின் தணியும்அருமிளை இருக்கை யதுவே -மனைவியும்,வேட்டச் சிறா அர் சேட்புலம் படராது,படமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் மிதவை 10யாணர் நல்லவை பாணரொடு, ஒராங்குவருவிருந்து அயரும் விருப்பினள்; கிழவனும்அருஞ்சமம் ததையத் தாக்கிப், பெருஞ்சமத்துஅண்ணல் யானை அணிந்தபொன்செய் ஓடைப் பெரும்பரி சிலனே. 15


327. வரகின் குப்பை!
பாடியவர்: பெயர் தெரிந்திலதுதிணை: வாகை துறை : மூதின் முல்லை 
எருது கால் உறாஅது, இளைஞர் கொன்றசில்விளை வரகின் புல்லென் குப்பை,தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்பசித்த பாணர் உண்டு, கடை தப்பலின்,ஒக்கல் ஒற்கம் சொலியத் தன்னூர்ச் 5சிறுபுல் லாளர் முகத்தவை கூறி,வரகுடன் இரக்கும் நெடுந்தகைஅரசுவரின் தாங்கும் வல்லா ளன்னே.  


328. ஈயத் தொலைந்தன!
பாடியவர்: பெயர் தெரிந்திலதுதிணை: வாகை துறை :மூதின் முல்லை 
.. .. டைமுதல் புறவு சேர்ந்திருந்தபுன்புலச் சீறூர், நெல்விளை யாதே;வரகும் தினையும் உள்ளவை யெல்லாம்இரவன் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன;.. .. .. .. .. .. டமைந் தனனே; 5அன்னன் ஆயினும், பாண ! நன்றும்வள்ளத் திடும்பால் உள்ளுறை தொட.. ..களவுப் புளியன்ன விளை.. .. .. .... .. .. வாடூன் கொழுங்குறைகொய்குரல் அரிசியொடு நெய்பெய்து அட்டுத், 10துடுப்பொடு சிவணிய களிக்கொள் வெண்சோறுஉண்டு, இனி திருந்த பின். .. .. .... .. .. தருகுவன் மாதோ-தாளி முதல் நீடிய சிறுநறு முஞ்ஞைமுயல்வந்து கறிக்கும் முன்றில், 15சீறூர் மன்னனைப் பாடினை செலினே.  


329. மாப்புகை கமழும்!
பாடியவர்: மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்திணை: வாகை துறை : மூதின் முல்லை 
இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்புடைநடு கல்லின் நாட்பலி யூட்டி,நன்னீர் ஆட்டி, நெய்ந்நறைக் கொளீஇய,மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்,அருமுனை இருக்கைத்து ஆயினும், வரிமிடற்று 5அரவுஉறை புற்றத்து அற்றே, நாளும்புரவலர் புன்கண் நோக்காது, இரவலர்க்குஅருகாது ஈயும் வண்மை,உரைசால், நெடுந்தகை ஓம்பும் ஊரே.  


330. ஆழி அனையன்!
பாடியவர்: மதுரை கணக்காயனார்திணை: வாகை துறை : மூதின் முல்லை 
வேந்துடைத் தானை முனைகெட நெரிதரஏந்துவாள் வலத்தன் ஒருவன் ஆகித்,தன்இறந்து வாராமை விலக்கலின், பெருங் கடற்குஆழி அனையன் மாதோ; என்றும்பாடிச் சென்றோர்க்கு அன்றியும், வாரிப் 5புரவிற்கு ஆற்றாச் சீறூர்த்தொன்மை சுட்டிய வண்மை யோனே.  


331. இல்லது படைக்க வல்லன்!
பாடியவர்: உறையூர் முதுகூத்தனார் (உறையூர் முது கூற்றனார் எனவும் பாடம்).திணை: வாகை துறை : மூதின் முல்லை 
கல்லறுத்து இயற்றிய வல்லுவர்க் கூவல்வில்லேர் வாழ்க்கைச், சீறூர் மதவலிநனிநல் கூர்ந்தனன் ஆயினும், பனிமிகப்,புல்லென் மாலைச் சிறுதீ ஞெலியும்கல்லா இடையன் போலக், குறிப்பின் 5இல்லது படைக்கவும் வல்லன் ; உள்ளதுதவச்சிறிது ஆயினும் மிகப்பலர் என்னாள்,நீள்நெடும் பந்தர் ஊண்முறை ஊட்டும்இற்பொலி மகடூஉப் போலச், சிற்சில்வரிசையின் அளக்கவும் வல்லன்; உரிதினின் 10காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும்போகுபலி வெண்சோறு போலத்தூவவும் வல்லன், அவன் தூவுங் காலே.  


332. வேல் பெருந்தகை உடைத்தே!
பாடியவர்: விரியூர் கிழார்திணை: வாகை துறை : மூதின் முல்லை 
பிறர்வேல் போலா தாகி, இவ்வூர்மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே;இரும்புறம் நீறும் ஆடிக், கலந்துஇடைக்குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்;மங்கல மகளிரொடு மாலை சூட்டி, 5இன்குரல் இரும்பை யாழொடு ததும்பத்,தெண்ணீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து,மண்முழுது அழுங்கச் செல்லினும் செல்லும்; ஆங்கு,இருங்கடல் தானை வேந்தர்பெருங்களிற்று முகத்தினும் செலவு ஆனாதே. 10


333. தங்கனிர் சென்மோ புலவீர்!
பாடியவர்: பெயர் தெரிந்திலது.திணை: வாகை துறை : மூதின் முல்லை 
நீருள் பட்ட மாரிப் பேருறைமொக்குள் அன்ன பொகுட்டுவிழிக் கண்ண,கரும்பிடர்த் தலைய, பெருஞ்செவிக் குறுமுயல்உள்ளூர்க் குறும்புதல் துள்ளுவன உகளும்தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின், 5உண்கஎன உணரா உயவிற்று ஆயினும்,தங்கனீர் சென்மோ, புலவீர்! நன்றும்;சென்றதற் கொண்டு, மனையோள் விரும்பி,வரகும் தினையும் உள்ளவை எல்லாம்இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தெனக், 10குறித்துமாறு எதிர்ப்பை பெறாஅ மையின்,குரல்உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து,சிறிது புறப்பட்டன்றோ விலளே; தன்னூர்வேட்டக் குடிதொறுங் கூட்டு .. .. .... .. .. .. உடும்பு செய் 15பாணி நெடுந்தேர் வல்லரோடு ஊரா,வம்பணி யானை வேந்துதலை வரினும்,உண்பது மன்னும் அதுவே;பரிசில் மன்னும், குருசில்கொண் டதுவே.  


334. தூவாள் தூவான்!
பாடியவர்: மதுரைத் தமிழக் கூத்தனார்திணை: வாகை துறை : மூதின் முல்லை 
காகரு பழனக் கண்பின் அன்னதூமயிர்க் குறுந்தாள் நெடுஞ்செவிக் குறுமுயல்,புன்றலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின்,படப்புஒடுங் கும்மே.. .. .. .. பின்பு .. .. .... .. .. .. .. .. னூரே மனையோள் 5பாணர் ஆர்த்தவும், பரிசிலர் ஓம்பவும்,ஊணொலி அரவமொடு கைதூ வாளே;உயர்மருப்பு யானைப் புகர்முகத்து அணிந்தபொலம் .. .. .. .. .. .. .. ப்பரிசில் பரிசிலர்க்கு ஈய, 10உரவேற் காளையும் கைதூ வானே.  


335. கடவுள் இலவே!
பாடியவர்: மாங்குடி கிழார்திணை: வாகை துறை : மூதின் முல்லை 
அடலருந் துப்பின் .. .. .. .... .. .. .. குருந்தே முல்லை யென்றுஇந்நான் கல்லது பூவும் இல்லை;கருங்கால் வரகே, இருங்கதிர்த் தினையே,சிறுகொடிக் கொள்ளே, பொறிகிளர் அவரையொடு 5இந்நான் கல்லது உணாவும் இல்லை;துடியன், பாணன், பறையன், கடம்பன், என்றுஇந்நான் கல்லது குடியும் இல்லை;ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி,ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக், 10கல்லே பரவின் அல்லது,நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.  


336. பண்பில் தாயே!
பாடியவர்: பரணர்திணை: காஞ்சி துறை: பாற் பாற் காஞ்சி 
வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே;கடவன கழிப்புஇவள் தந்தையும் செய்யான்;ஒளிறுமுகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின்களிறும் கடிமரம் சேரா; சேர்ந்தஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே; 5இயவரும் அறியாப் பல்லியம் கறங்க,அன்னோ, பெரும்பே துற்றன்று, இவ் வருங்கடி மூதூர்;அறன்இலன் மன்ற தானே-விறன்மலைவேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்முகைவனப்பு ஏந்திய முற்றா இளமுலைத் 10தகைவளர்த்து எடுத்த நகையொடு,பகைவளர்த்து இருந்த இப் பண்புஇல் தாயே.  


337. இவர் மறனும் இற்று!
பாடியவர்: கபிலர்திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி 
ஆர்கலி யினனே, சோணாட்டு அண்ணல்;கவிகை மண்ணாள் செல்வ ராயினும்,வாள்வலத்து ஒழியப் பாடிச் சென்றாஅர்.வரலதோறு அகம் மலர . .. .. .. ..ஈதல் ஆனா இலங்குதொடித் தடக்கைப் 5பாரி பறம்பின் பனிச்சுனை போலக்,காண்டற்கு அரியளாகி, மாண்டபெண்மை நிறைந்த பொலிவொடு, மண்ணியதுகில்விரி கடுப்ப நுடங்கித், தண்ணெனஅகிலார் நறும்புகை ஐதுசென்று அடங்கிய 10கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு,மனைச்செறிந் தனளே, வாணுதல்; இனியே.அற்றன் றாகலின், தெற்றெனப் போற்றிக்,காய்நெல் கவளம் தீற்றிக், காவுதொறும்கடுங்கண் யானை காப்பனர் அன்றி, 15வருத லானார் வேந்தர்; தன்னையர்பொருசமம் கடந்த உருகெழு நெடுவேல்குருதி பற்றிய வெருவரு தலையர்மற்றுஇவர் மறனும் இற்றால்; தெற்றெனயாரா குவர்கொல் தாமே - நேரிழை 20உருத்த பல்சுணங்கு அணிந்தமருப்புஇள வனமுலை ஞெமுக்கு வோரே?  


338. ஓரெயின் மன்னன் மகள்!
பாடியவர்: குன்றூர் கிழார் மகனார்திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி சிறப்பு: நெடுவேள் ஆதனுக்கு உரிய போந்தைப்பட்டினத்தைப் பற்றிய குறிப்பு. 
ஏர் பரந்த வயல், நீர் பரந்த செறுவின்,நெல் மலிந்த மனைப், பொன் மலிந்த மறுகின்,படுவண்டு ஆர்க்கும் பன்மலர்க் காவின்,நெடுவேள் ஆதன் போந்தை அன்ன,பெருஞ்சீர் அருங்கொண் டியளே ; கருஞ்சினை 5வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்மலைந்த சென்னியர், அணிந்த வில்லர்,கொற்ற வேந்தர் தரினும், தன்தகவணங்கார்க்கு ஈகுவன் அல்லன்- வண் தோட்டுப்பிணங்கு கதிர்க் கழனி நாப்பண், ஏமுற்று 10உணங்குகலன் ஆழியின் தோன்றும்ஓர்எயில் மன்னன் ஒருமட மகளே!  


339. வளரவேண்டும் அவளே!
பாடியவர்: பெயர் தெரிந்திலது.திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி 
வியன்புலம் படர்ந்த பல்ஆ நெடுஏறுமடலை மாண்நிழல் அசைவிடக், கோவலர்வீததை முல்லைப் பூப்பறிக் குந்து;குறுங்கோல் எறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல்நெடுநீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து; 5தொடலை அல்குல் தொடித்தோள் மகளிர்கடல் ஆடிக் கயம் பாய்ந்து,கழி நெய்தற் பூக் குறூஉந்து;பைந்தழை துயல்வருஞ் செறுவிறற்.. .. .. .. .. . . ..லத்தி 10வளர வேண்டும், அவளே, என்றும்-ஆரமர் உழப்பதும் அமரிய ளாகி,முறஞ்செவி யானை வேந்தர்மறங்கெழு நெஞ்சங் கொண்டொளித் தோளே.  


340. அணித்தழை நுடங்க!
பாடியவர்: பெயர் தெரிந்திலது.திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி 
அணித்தழை நுடங்க ஓடி, மணிப்பொறிக்குரலம் குன்றி கொள்ளும் இளையோள்,மாமகள் .. .. .. .. .. .... .. .. ..லென வினவுதி, கேள், நீஎடுப்பவெ .. .. .. .. .. .. .. 5.. .. .. .. .. மைந்தர் தந்தைஇரும்பனை அன்ன பெருங்கை யானைகரந்தையஞ் செறுவின் பெயர்க்கும்பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந் தனனே.  


341. இழப்பது கொல்லோ பெருங்கவின்!
பாடியவர்: பரணர்திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி 
வேந்துகுறை யுறவுங் கொடாஅன், ஏந்துகோட்டுஅம்பூந் தொடலை அணித்தழை அல்குல்,செம்பொறிச் சிலம்பின் இளையோள் தந்தை,எழுவிட்டு அமைத்த திண்நிலைக் கதவின்அனரமண் இஞ்சி நாட்கொடி நுடங்கும் 5.. .. .. . .. .. ... .. .. .. ..புலிக்கணத் தன்ன கடுங்கண் சுற்றமொடு,மாற்றம் மாறான், மறலிய சினத்தன்,பூக்கோள் என ஏஎய்க், கயம்புக் கனனே;விளங்குஇழைப் பொலிந்த வேளா மெல்லியல்,சுணங்கணி வனமுலை, அவளொடு நாளை 10மணம்புகு வைகல் ஆகுதல் ஒன்றோ-ஆரமர் உழக்கிய மறம்கிளர் முன்பின்,நீள்இலை எகம் மறுத்த உடம்பொடுவாரா உலகம் புகுதல் ஒன்று- எனப்படைதொட் டனனே, குருசில்; ஆயிடைக் 15களிறுபொரக் கலங்கிய தண்கயம் போலப்,பெருங்கவின் இழப்பது கொல்லோ,மென்புனல் வைப்பின்இத் தண்பணை ஊரே!  


342. வாள்தக உழக்கும் மாட்சியர்!
பாடியவர்: அரிசில் கிழார்திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி 
கானக் காக்கைக் கலிச்சிறகு ஏய்க்கும்மயிலைக் கண்ணிப், பெருந்தோட் குறுமகள்,ஏனோர் மகள்கொல் இவள்? என விதுப்புற்று,என்னொடு வினவும் வென்வேல் நெடுந்தகை;திருநயத் தக்க பண்பின் இவள் நலனே 5பொருநர்க்கு அல்லது, பிறர்க்கு ஆகாதே;பைங்கால் கொக்கின் பகுவாய்ப் பிள்ளைமென்சேற்று அடைகரை மேய்ந்துஉண் டதற்பின்,ஆரல் ஈன்ற ஐயவி முட்டை,கூர்நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம், 10தன்பணைக் கிழவன்இவள் தந்தையும்; வேந்தரும்பெறாஅ மையின் பேரமர் செய்தலின்,கழிபிணம் பிறங்கு போர்பு அழிகளிறு எருதா,வாள்தக வைகலும் உழக்கும்மாட்சி யவர் இவள் தன்னை மாரே. 15


343. ஏணி வருந்தின்று!
பாடியவர்: பரணர்திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி 
மீன் நொடுத்து நெல் குவைஇமிசை யம்பியின் மனைமறுக் குந்து!மனைக் கவைஇய கறிமூ டையால்.கலிச் சும்மைய கரைகலக் குறுந்துகலந் தந்த பொற் பரிசம் 5கழித் தொணியான் கரைசேர்க் குந்து;மலைத் தாரமும் கடல் தாரமும்தலைப் பெய்து, வருநர்க்கு ஈயும்புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்முழங்கு கடல் முழவின் முசிறி யன்ன, 10நலஞ்சால் விழுப்பொருள் பணிந்து கொடுப்பினும்,புரையர் அல்லோர் வரையலள், இவள் எனத்தந்தையும் கொடாஅன் ஆயின் _ வந்தோர்,வாய்ப்ப இறுத்த ஏணி ஆயிடைவருந்தின்று கொல்லோ தானே_பருந்துஉயிர்த்து 15இடைமதில் சேக்கும் புரிசைப்படைமயங்கு ஆரிடை நெடுநல் ஊரே?  


344. இரண்டினுள் ஒன்று!
பாடியவர்: அடைநெடுங் கல்வியார் பாடப்பட்டோன்: பெயர் தெரிந்திலது.திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி(திணை, வாகையும், துறை, மூதின் முல்லையும் கூறப்படும்.) 
செந்நெல் உண்ட பைந்தோட்டு மஞ்ஞை,செறிவளை மகளிர், பறந்தெழுந்து,துறைநணி மருதத்து இறுக்கும் ஊரொடு,நிறைசால் விழுப்பொருள் தருதல் ஒன்றோ;புகைபடு கூர்எரி பரப்பிப் பகைசெய்து, 5பண்பில் ஆண்மை தருதல் ஒன்றோ;இரண்டினுள் ஒன்றா காமையோ அரிதே,காஞ்சிப் பனிமுறி ஆரங் கண்ணி. . .-கணிமே வந்தவள் அல்குல்அவ் வரியே.  


345. பன்னல் வேலிப் பணை நல்லூர்!
பாடியவர்: அடைநெடுங் கல்வியார் பாடப்பட்டோன்: பெயர் தெரிந்திலது.திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி(திணை, வாகையும், துறை, மூதின் முல்லையும் கூறப்படும்.) 
களிறு அணைப்பக் கலங்கின, காஅ;தேர்ஓடத் துகள் கெழுமின, தெருவு;மா மறுகலின் மயக்குற்றன, வழி;கலங் கழாஅலின், துறை கலக்குற்றன;தெறல் மறவர் இறை கூர்தலின், 5பொறை மலிந்து நிலன் நெளிய,வந்தோர் பலரே, வம்ப வேந்தர்,பிடிஉயிர்ப் பன்ன கைகவர் இரும்பின்ஓவுறழ் இரும்புறம் காவல் கண்ணிக்,கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை, 10மையல் நோக்கின், தையலை நயந்தோர்அளியர் தாமே; இவள் தன்னை மாரேசெல்வம் வேண்டார், செருப்புகல் வேண்டி,நிரல்அல் லோர்க்குத் தரலோ இல் எனக்;கழிப்பிணிப் பலகையர், கதுவாய் வாளர், 15குழாஅங் கொண்ட குருதிஅம் புலவொடுகழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல்இன்ன மறவர்த் தாயினும், அன்னோ !என்னா வதுகொல் தானே-பன்னல் வேலிஇப் பணைநல் லூரே! 20


346. பாழ் செய்யும் இவள் நலினே!
பாடியவர்: அண்டர் மகன் குறுவழுதிதிணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி 
பிற .. .. .. ள பால் என மடுத்தலின்,ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள்;கல்வியென் என்னும், வல்லாண் சிறாஅன்;ஒள்வேல் நல்லன், அதுவாய் ஆகுதல்_அழிந்தோர் அழிய, ஒழிந்தோர் ஒக்கல் 5பேணுநர்ப் பெறாஅது விளியும்புன்தலைப் பெரும்பாழ் செயும் இவள் நலனே.  


347. வேர் துளங்கின மரனே!
பாடியவர்: கபிலர்திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி 
உண்போன் தான்நறுங் கள்ளின் இடச்சிலநாஇடைப் பறேர் கோலச் சிவந்தஒளிறுஒள் வாடக் குழைந்தபைந் தும்பை,எறிந்துஇலை முறிந்த கதுவாய் வேலின்.மணநாறு மார்பின், மறப்போர் அகுதை 5குண்டுநீர் வரைப்பின், கூடல் அன்னகுவைஇருங் கூந்தல் வருமுலை செப்ப,. . . . . . . . . . . . . .என்னா வதுகொல் தானே? . .. . .விளங்குறு பராரைய வாயினும், வேந்தர் 10வினைநவில் யானை பிணிப்ப,வேர்துளங் கினநம் ஊருள் மரனே.  


348. பெருந்துறை மரனே!
பாடியவர்: பரணர்திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி 
வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇக்,கண்மடற் கொண்ட தீந்தேன் இரியக்,கள்ளரிக்கும் குயம், சிறுசின்மீன் சீவும் பாண் சேரி,வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன, 5குவளை உண்கண் இவளைத், தாயேஈனா ளாயினள் ஆயின், ஆனாதுநிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப, வயின்தொறும்,செந்நுதல் யானை பிணிப்ப,வருந்தல மன் - எம் பெருந்துறை மரனே. 10


349. ஊர்க்கு அணங்காயினள்!
பாடியவர்: மதுரை மருதனிள நாகனார்திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி 
நுதிவேல் கொண்டு நுதல்வியர் தொடையாக்,கடிய கூறும், வேந்தே; தந்தையும்,நெடிய அல்லது, பணிந்துமொழி யலனே;இதுஇவர் படிவம்; ஆயின், வைஎயிற்று,அரிமதர் மழைக்கண், அம்மா அரிவை, 5மரம்படு சிறுதீப் போல,அணங்கா யினள், தான் பிறந்த ஊர்க்கே.  


350. வாயிற் கொட்குவர் மாதோ!
பாடியவர்: மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தார் ஆயத்தனார்திணை: காஞ்சி துறை: மகட்பாற் காஞ்சி 
தூர்ந்த கிடங்கின், சோர்ந்த ஞாயில்,சிதைந்த இஞ்சிக், கதுவாய் மூதூர்யாங்கா வதுகொல் தானே, தாங்காது?படுமழை உருமின் இறங்கு முரசின்கடுமான் வேந்தர் காலை வந்து, எம் 5நெடுநிலை வாயில் கொட்குவர் மாதோ;பொருதாது அமருவர் அல்லர்; போர் உழந்துஅடுமுரண் முன்பின் தன்னையர் ஏந்தியவடிவேல் எகின் சிவந்த உண்கண்,தொடியுறழ் முன்கை, இளையோள் 10அணிநல் லாகத்து அரும்பிய சுணங்கே.

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.