LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

புறநானூறு-2

 

26. நோற்றார் நின் பகைவர்!
பாடியவர்: மாங்குடி கிழவர்; மாங்குடி மருதனார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: வாகை. 
துறை: அரச வாகை. 
நளி கடல் இருங் குட்டத்து
வளி புடைத்த கலம் போலக்,
களிறு சென்று களன் அகற்றவும்,
களன் அகற்றிய வியல் ஆங்கண்
ஒளிறு இலைய எகு ஏந்தி, 5
அரைசு பட அமர் உழக்கி,
உரை செல முரசு வெளவி,
முடித் தலை அடுப் பாகப்,
புனல் குருதி உலைக் கொளீஇத்,
தொடித்தோள் துடுப்பின் துழந்த வல்சியின், 10
அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய!
ஆன்ற கேள்வி, அடங்கிய கொள்கை,
நான்மறை முதல்வர் சுற்ற மாக,
மன்னர் ஏவல் செய்ய, மன்னிய
வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே! 15
நோற்றோர் மன்ற நின் பகைவர், நின்னொடு
மாற்றார் என்னும் பெயர் பெற்று,
ஆற்றார் ஆயினும், ஆண்டுவாழ் வோரே.  
27. புலவர் பாடும் புகழ்!
பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல்.
துறை: முதுமொழிக் காஞ்சி. 
சேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ்,
நூற் றிதழ் அலரின் நிறை கண் டன்ன,
வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து,
வீற்றிருந் தோரை எண்ணுங் காலை,
உரையும் பாட்டும் உடையோர் சிலரே; 5
மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே:
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி
எய்துப என்ப, தம் செய்வினை முடித்து எனக்
கேட்பல்; எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி! 10
தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும்,
மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும்,
அறியா தோரையும், அறியக் காட்டித்,
திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து,
வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும், 15
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி,
அருள வல்லை ஆகுமதி; அருளிலர்
கொடா அமை வல்லர் ஆகுக;
கெடாஅத் துப்பின்நின் பகைஎதிர்ந் தோரே.  
28. போற்றாமையும் ஆற்றாமையும்!
பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல்.
துறை: முதுமொழிக் காஞ்சி.
சிறப்பு: எண்பேர் எச்சங்கள் பற்றிய விளக்கம். அறம் பொருள் இன்பம் 
எனும் உறுதிப் பொருள்கள் பற்றிய குறிப்பு.
சிறப்பில் சிதடும், உறுப்பில் பிண்டமும்,
கூனும், குறளும், ஊமும், செவிடும்
மாவும், மருளும், உளப்பட வாழ்நர்க்கு
எண்பேர் எச்சம் என்றிவை எல்லாம் 5
பேதைமை அல்லது ஊதியம் இல், என
முன்னும் அறிந்தோர் கூறினர்; இன்னும்,
அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது:-
வட்ட வரிய செம்பொறிச் சேவல்
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம் 10
கானத் தோர், நின் தெவ்வர்; நீயே
புறஞ்சிறை மாக்கட்கு அறங்குறித்து, அகத்தோர்
புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப்
பூம்போது சிதைய வீழ்ந்தெனக், கூத்தர்
ஆடுகளம் கடுக்கும் அகநாட் டையே; 15
அதனால், அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும், பெரும! நின்செல்வம்;
ஆற்றாமை நின் போற்றா மையே.  
29. நண்பின் பண்பினன் ஆகுக!
பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல்.
துறை : முதுமொழிக் காஞ்சி. சிறப்பு : சிறந்த அறநெறிகள். 
அழல் புரிந்த அடர் தாமரை
ஐது அடர்ந்ற நூற் பெய்து,
புனை விளைப் பொலிந்த பொலன் நறுந் தெரியல்
பாறு மயிர் இருந்தலை பொலியச் சூடிப்,
பாண் முற்றுக, நின் நாள்மகிழ் இருக்கை! 5
பாண் முற்று ஒழிந்த பின்றை, மகளிர்
தோள் முற்றுக, நின் சாந்துபுலர் அகலம்! ஆங்க
முனிவில் முற்றத்து, இனிது முரசு இயம்பக்,
கொடியோர்த் தெறுதலும், செவ்வியோர்க்குஅளித்தலும்,
ஒடியா முறையின் மடிவிலை யாகி 10
நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லை என்போர்க்கு இனன் ஆகி லியர்!
நெல்விளை கழனிப் படுபுள் ஓப்புநர்
ஒழி மடல் விறகின் கழுமீன் சுட்டு,
வெங்கள் தொலைச்சியும் அமையார், தெங்கின் 15
இளநீர் உதிர்க்கும் வளமிகு நன்னாடு
பெற்றனர் உவக்கும் நின் படைகொள் மாக்கள்
பற்றா மாக்களின் பரிவு முந்து உறுத்துக்,
கூவை துற்ற நாற்கால் பந்தர்ச்,
சிறுமனை வாழ்க்கையின் ஒரீஇ, வருநர்க்கு 20
உதவி ஆற்றும் நண்பின் பண்புடை
ஊழிற்று ஆக, நின் செய்கை! விழவின்
கோடியர் நீர்மை போல முறை முறை
ஆடுநர் கழியும்இவ் உலகத்துக், கூடிய
நகைப் புறனாக, நின் சுற்றம்! 25
இசைப்புற னாக, நீ ஓம்பிய பொருளே!  
30. எங்ஙனம் பாடுவர்?
பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.
திணை :பாடாண். 
துறை : இயன்மொழி.
சிறப்பு : தலைவனின் இயல்பு கூறுதல். 
செஞ்ஞா யிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்,
பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும்,
வளி திரிதரு திசையும்,
வறிது நிலைஇய காயமும், என்றிவை 5
சென்றளந்து அறிந்தார் போல, என்றும்
இனைத்து என்போரும் உளரே அனைத்தும்
அறிவுஅறி வாகச் செறிவினை யாகிக்,
களிறுகவுள் அடுத்த எறிகல் போல
ஒளித்த துப்பினை ஆதலின், வெளிப்பட 10
யாங்ஙனம் பாடுவர், புலவர்? கூம்பொடு
மீப்பாய் களையாது, மிசைப் பரந் தோண்டாது,
புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர்
இடைப்புலப் பெருவழிச் சொரியும்
கடல்பல் தாரத்த நாடுகிழ வோயே! 15
31. வடநாட்டார் தூங்கார்!
பாடியவர்: கோவூர்கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.
திணை :வாகை. 
துறை : அரசவாகை: மழபுல வஞ்சியும் ஆம்.
சிறப்பு : வடபுலத்து அரசர்கள் இச்சோழனது மறமாண்பைக் கேட்டு அஞ்சிய அச்சத்தால் 
துஞ்சாக் கண்ணர் ஆயினமை.
சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல,
இரு குடை பின்பட ஓங்கி ஒரு குடை
உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க,
5
நல்லிசை வேட்டம் வேண்டி, வெல்போர்ப்
பாசறை யல்லது நீயொல் லாயே;
நிதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார்
கடிமதில் பாயும் நின் களிறு அடங் கலவே;
போர் எனில் புகலும் புனைகழல் மறவர், 10
காடிடைக் கிடந்த நாடுநனி சேஎய;
செல்வேம் அல்லேம் என்னார்; கல்லென்
விழவுடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக்,
குண கடல் பின்ன தாகக், குட கடல்
வெண் தலைப் புணரி நின் மான்குளம்பு அலைப்ப, 15
வலமுறை வருதலும் உண்டு என்று அலமந்து
நெஞ்சு நடுங்கு அவலம் பாயத்,
துஞ்சாக் கண்ண, வட புலத்து அரசே.  
32. பூவிலையும் மாடமதுரையும்!
பாடியவர்: கோவூர்கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.
திணை: பாடாண். 
துறை: இயன்மொழி.
சிறப்பு: சோழனது நினைத்தது முடிக்கும் உறுதிப்பாடு. 
கடும்பின் அடுகலம் நிறையாக, நெடுங் கொடிப்
பூவா வஞ்சியும் தருகுவன்; ஒன்றோ?
வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள்,
ஒண்ணுதல், விறலியர் பூவிலை பெறுக! என,
மாட மதுரையும் தருகுவன்; எல்லாம் 5
பாடுகம் வம்மினோ, பரிசில் மாக்கள்!
தொன்னிலக் கிழமை சுட்டின், நன்மதி
வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த
பசுமண் குரூஉத்திரள் போல, அவன்
கொண்ட குடுமித்தும், இத் தண்பணை நாடே. 10
33. புதுப்பூம் பள்ளி!
பாடியவர்: கோவூர்கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.
திணை:வாகை. 
துறை: அரசவாகை.
சிறப்பு: பகைவரது கோட்டைகளைக் கைப்பற்றியவுடன், அவற்றின் கதவுகளில் வெற்றிபெற்றோன் தனது அரச முத்திரையைப் பதிக்கும் மரபுபற்றிய செய்தி. 
கான் உறை வாழ்க்கைக் கதநாய், வேட்டுவன்
மான்தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பும், நிறைய,
ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல் 5
முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்பன் புன்னாட்டுள்ளும்,
ஏழெயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு நின்;
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை;
பாடுநர் வஞ்சி பாடப், படையோர் 10
தாதுஎரு மறுகின் பாசறை பொலியப்,
புலராப் பச்சிலை இடையிடுபு தொடுத்த
மலரா மாலைப் பந்துகண் டன்ன
ஊன்சோற் றமலை பான்கடும்பு அருத்தும்
செம்மற்று அம்மநின் வெம்முனை இருக்கை; 15
வல்லோன் தைஇய வரிவனப்பு உற்ற
அல்லிப் பாவை ஆடுவனப்பு ஏய்ப்பக்
காம இருவர் அல்லது, யாமத்துத்
தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின்,
ஒதுக்குஇன் திணிமணல் புதுப்பூம் பள்ளி 20
வாயின் மாடந்தொறும் மைவிடை வீழ்ப்ப
நீஆங்குக் கொண்ட விழவினும் பலவே.  
34. செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை!
பாடியவர்: ஆலத்தூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை:பாடாண். 
துறை: இயன்மொழி.
சிறப்பு: 'செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என்னும் அறநெறி பற்றிய செய்தி. 
ஆன்மலை அறுத்த அறனி லோர்க்கும்,
மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்,
குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்,
வழுவாய் மருங்கின் கழுவாயும் உள என,
நிலம்புடை பெயர்வ தாயினும், ஒருவன்
5
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என
அறம் பாடின்றே ஆயிழை கணவ!
காலை அந்தியும், மாலை அந்தியும்,
புறவுக் கருவன்ன புன்புல வரகின்
பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கிக், 10
குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த ஒக்கலொடு,
இரத்தி நீடிய அகன்தலை மன்றத்துக்,
கரப்பில் உள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி,
அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு
அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன், 15
எங்கோன்,வளவன் வாழ்க!என்று, நின்
பீடுகெழு நோன்தாள் பாடேன் ஆயின்,
படுபறி யலனே, பல்கதிர்ச் செல்வன்;
யானோ தஞ்சம்; பெரும! இவ் வுலகத்துச்
சான்றோர் செய்த நன்றுண் டாயின், 20
இமையத்து ஈண்டி, இன்குரல் பயிற்றிக்,
கொண்டல் மாமழை பொழிந்த
நுண்பல் துளியினும் வாழிய, பலவே!  
35. உழுபடையும் பொருபடையும்!
பாடியவர்: வெள்ளைக்குடி நாகனார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை: பாடாண். 
துறை: செவியறிவுறூஉ
சிறப்பு: அரச நெறியின் செவ்வி பற்றிய செய்திகள்.
சிறப்பு: 'பாடிப் பழஞ் செய்க்கடன் வீடு கொண்டது' என்று இதனைக் குறிப்பர். 
நளிஇரு முந்நீர் ஏணி யாக,
வளிஇடை வழங்கா வானம் சூடிய
மண்திணி கிடக்கைத் தண்தமிழ்க் கிழவர்,
முரசு முழங்கு தானை மூவர் உள்ளும்,
அரசுஎனப் படுவது நினதே, பெரும!
5
அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்,
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்,
அந்தண் காவிரி வந்து கவர்பு ஊட்டத்,
தோடு கொள் வேலின் தோற்றம் போல,
ஆடுகண் கரும்பின் வெண்பூ நுடங்கும்
10
நாடுஎனப் படுவது நினதே அத்தை; ஆங்க
நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே!
நினவ கூறுவல்: எனவ கேண்மதி!
அறம்புரிந் தன்ன செங்கோல் நாட்டத்து
முறைவெண்டு பொழுதின் பதன் எளியோர் ஈண்டு 15
உறைவேண்டு பொழுதில் பெயல்பெற் றோறே;
ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்டுமூ
மாக விசும்பின் நடுவுநின் றாங்குக்,
கண்பொர விளங்கும்நின் விண்பொரு வியன்குடை
வெயில்மறைக் கொண்டன்றோ? அன்றே; வருந்திய 20
குடிமறைப் பதுவே; கூர்வேல் வளவ!
வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக்,
களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை,
வருபடை தாங்கிப், பெயர்புறத் தார்த்துப்,
பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை 25
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே;
மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும்,
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்,
காவலர்ப் பழிக்கும், இக் கண்ணகன் ஞாலம்;
அதுநற்கு அறிந்தனை யாயின், நீயும் 30
நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது,
பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிக்,
குடிபுறம் தருகுவை யாயின், நின்
அடிபுறம் தருகுவர், அடங்கா தேரே.  
36. நீயே அறிந்து செய்க!
பாடியவர்: ஆலத்தூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை:வஞ்சி. 
துறை: துணை வஞ்சி.
குறிப்பு: சோழன் கருவூரை முற்றியிருந்தபோது பாடியது. 
அடுநை யாயினும், விடுநை யாயினும்,
நீ அளந் தறிதி நின் புரைமை; வார்தோல்,
செயறியரிச் சிலம்பின், குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும்
தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக், 5
கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலின், நிலையழிந்து,
வீகமழ் நெடுஞ்சினை புலம்பக், காவுதொறும்
கடிமரம் தடியும் ஓசை தன்ஊர்
நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப, 10
ஆங்குஇனி திருந்த வேந்தனொடு, ஈங்குநின்
சிலைத்தார் முரசும் கறங்க,
மலைத்தனை எண்பது நாணுத்தகவு உடைத்தே.  
37. புறவும் போரும்!
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: வாகை; உழிஞை எனவும் பாடம்.
துறை: அரச வாகை குற்றுழிஞை எனவும், முதல் வஞ்சி எனவும் பாடம். 
நஞ்சுடை வால் எயிற்று, ஐந்தலை சுமந்த,
வேக வெந்திறல், நாகம் புக்கென,
விசும்புதீப் பிறப்பத் திருகிப், பசுங்கொடிப்
பெருமலை விடரகத்து உரும்எறிந் தாங்குப்,
புள்ளுறு புன்கண் தீர்த்த, வெள் வேல் 5
சினங்கெழு தானைச், செம்பியன் மருக!
கராஅம் கலித்த குண்டுகண் அகழி,
இடம்கருங் குட்டத்து உடந்தொக்கு ஓடி,
யாமம் கொள்பவர் சுடர்நிழல் கதூஉம்
கடுமுரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச், 10
செம்புஉறழ் புரிசைச், செம்மல் மூதூர்,
வம்புஅணி யானை வேந்துஅகத் துண்மையின்,
நல்ல என்னாது, சிதைத்தல்
வல்லையால் நெடுந்தகை! செருவத் தானே!  
38. வேண்டியது விளைக்கும் வேந்தன்!
பாடியவர்: ஆவூர் மூலங் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை: பாடாண். 
துறை: இயன்மொழி,
குறிப்பு: 'எம்முள்ளீர், எந்நாட்டீர்?' என்று அவன் கேட்ப, அவர் பாடியது. 
வரை புரையும் மழகளிற்றின் மிசை,
வான் துடைக்கும் வகைய போல
விரவு உருவின கொடி நுடங்கும்
வியன் தானை விறல் வேந்தே!
நீ, உடன்று நோக்கும்வாய் எரிதவழ, 5
நீ, நயந்து நோக்கும்வாய் பொன்பூப்பச்,
செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும்,
வெண் திங்களுள் வெயில் வேண்டினும்,
வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின்,
நின்நிழல் பிறந்து, நின்நிழல் வளர்ந்த, 10
எம் அளவு எவனோ மற்றே? இன்நிலைப்
பொலம்பூங் காவின் நன்னாட் டோரும்
செய்வினை மருங்கின் எய்தல் அல்லதை,
உடையோர் ஈதலும், இல்லோர் இரத்தலும்
கடவ தன்மையின், கையறவு உடைத்துஎன, 15
ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின்,
நின்நாடு உள்ளுவர், பரிசிலர்:
ஒன்னார் தேஎத்தும், நின்னுடைத் தெனவே.  
39. புகழினும் சிறந்த சிறப்பு!
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை: பாடாண். 
துறை : இயன்மொழி,
சிறப்பு : வளவன் வஞ்சியை வெற்றி கொண்டது. 
புறவின் அல்லல் சொல்லிய, கறையடி
யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக்
கோல்நிறை துலாஅம் புக்கோன் மருக!
ஈதல்நின் புகழும் அன்றே; சார்தல்
ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல் 5
தூங்கெயில் எறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின்,
அடுதல்நின் புகழும் அன்றே; கெடுவின்று,
மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து,
அறம்நின்று நிலையிற் றாகலின், அதனால்
முறைமைநின் புகழும் அன்றே; மறம்மிக்கு, 10
எழுசமம் கடந்த எழுஉறழ் திணிதோள்,
கண்ணார் கண்ணிக், கலிமான், வளவ!
யாங்கனம் மொழிகோ யானே; ஓங்கிய
வரையளந் தறியாப் பொன்படு நெடுங்கோட்டு
இமையம் சூட்டியஏம விற்பொறி, 15
மாண்வினை நெடுந்தேர், வானவன் தொலைய
வாடா வஞ்சி வாட்டும்நின்
பீடுகெழு நோன்தாள் பாடுங் காலே?  
40. ஒரு பிடியும் எழு களிரும்!
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை :பாடாண். 
துறை : செவியறிவுறூஉ. 
நீயே, பிறர் ஓம்புறு மறமன் னெயில்
ஓம்பாது கடந்தட்டு, அவர்
முடி புனைந்த பசும் பொன்னின்
அடி பொலியக் கழல் தைஇய
வல் லாளனை, வய வேந்தே! 5
யாமே, நின், இகழ் பாடுவோர் எருத்தடங்கப்,
புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற,
இன்றுகண் டாங்குக் காண்குவம், என்றும்
இன்சொல் எண்பதத்தை ஆகுமதி; பெரும!
ஒருபிடி படியுஞ் சீறிடம் 10
எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே!  
41. காலனுக்கு மேலோன்!
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை : வஞ்சி. 
துறை: கொற்ற வள்ளை. 
காலனும் காலம் பார்க்கும்; பாராது
வேல்ஈண்டு தானை விழுமியோர் தொலைய,
வேண்டிடத்து அடூஉம் வெல்போர் வேந்தே!
திசைஇரு நான்கும் உற்கம் உற்கவும்,
பெருமரத்து, இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவும், 5
வெங்கதிர்க் கனலி துற்றவும், பிறவும்,
அஞ்சுவரத் தகுந புள்ளுக்குரல் இயம்பவும்,
எயிறுநிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும்,
களிறுமேல் கொள்ளவும், காழகம் நீப்பவும்,
வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும், 10
கனவின் அரியன காணா, நனவின்
செருச்செய் முன்ப,! நின் வருதிறன் நோக்கி,
மையல் கொண்ட ஏமம்இல் இருக்கையர்,
புதல்வர் பூங்கண் முத்தி, மனையோட்கு
எவ்வம் சுரக்கும் பைதல் மாக்களொடு 15
பெருங்கலக் குற்றன்றால் தானே; காற்றோடு
எரிநிகழ்ந் தன்ன செலவின்
செருமிகு வளவ! நிற் சினைஇயோர் நாடே.  
42. ஈகையும் வாகையும்!
பாடியவர்: இடைக்காடனார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை : வாகை. 
துறை: அரச வாகை.
சிறப்பு : சோழனின் மறமேம் பாடும், கொடை மேம்பாடும், வலிமைச் சிறப்பும். 
ஆனா ஈகை, அடு போர், அண்ணல்! நின்
யானையும் மலையின் தோன்றும்; பெரும! நின்
தானையும் கடலென முழங்கும்; கூர்நுனை
வேலும் மின்னின் விளங்கும் ; உலகத்து
அரைசுதலை பனிக்கும் ஆற்றலை யாதலின், 5
புரைதீர்ந் தன்று; அது புதுவதோ அன்றே;
தண்புனற் பூசல் அல்லது, நொந்து,
களைக, வாழி, வளவ! என்று, நின்
முனைதரு பூசல் கனவினும் அறியாது,
புலிபுறங் காக்கும் குருளை போல, 10
மெலிவில் செங்கோல் நீபுறங் காப்பப்,
பெருவிறல் யாணர்த் தாகி, அரிநர்
கீழ்மடைக் கொண்ட வாளையும், உழவர்
படைமிளிர்ந் திட்ட யாமையும், அறைநர்
கரும்பிற் கொண்ட தேனும், பெருந்துறை 15
நீர்தரு மகளிர் குற்ற குவளையும்,
வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும்
மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந!
மலையின் இழிந்து, மாக்கடல் நோக்கி,
நிலவரை இழிதரும் பல்யாறு போலப், 20
புலவ ரெல்லாம் நின்நோக் கினரே;
நீயே, மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக்
கூற்றுவெகுண் டன்ன முன்பொடு,
மாற்றுஇரு வேந்தர் மண்நோக் கினையே.  
43. பிறப்பும் சிறப்பும்!
பாடியவர்: தாமப்பல் கண்ணனார்,
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்.
திணை : வாகை. 
துறை: அரசவாகை.
குறிப்பு : புலவரும் அரச குமரனும் வட்டுப் பொருவுழிக் கைகரப்ப, வெகுண்டு, வட்டுக் கொண்டு 
எறிந்தானைச் , 'சோழன் மகன்
அல்லை' என, நாணியுருந்தானை அவர் பாடியது.
நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்,
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்,
கால்உண வாகச், சுடரொடு கொட்கும் 5
அவிர்சடை முனிவரும் மருளக், கொடுஞ்சிறைக்
கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித், தொரீஇத்,
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி யஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக! 10
நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்
தேர்வண் கிள்ளி தம்பி! வார் கோல்,
கொடுமர மறவர் பெரும! கடுமான்
கைவண் தோன்றல்! ஐயம் உடையேன்:
ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம் 15
பார்ப்பார் நோவன செய்யலர்: மற்றுஇது
நீர்த்தோ நினக்கு? என வெறுப்பக் கூறி,
நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும்,
நீபிழைத் தாய்போல் நனிநா ணினையே;
தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல்! 20
இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணும் எனக்
காண்டகு மொய்ம்ப! காட்டினை; ஆகலின்,
யானே பிழைத்தனென் ! சிறக்கநின் ஆயுள்;
மிக்குவரும் இன்னீர்க் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவே! 25
44. அறமும் மறமும்!
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் நெடுங்கிள்ளி.
திணை : வாகை. 
துறை: அரச வாகை.
குறிப்பு :நலங்கிள்ளி ஆவுரை முற்றியிருந்தான்; அதுகாலை அடைத்திருந்த நெடுங்கிள்ளியைக் கண்டு பாடியது, இச் செய்யுள்.
இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா,
நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ,
திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி,
நிலமிசைப் புரளும் கைய, வெய்துயிர்த்து,
அலமரல் யானை உருமென முழங்கவும், 5
பாலில் குழவி அலறவும், மகளிர்
பூவில் வறுந்தலை முடிப்பவும், நீரில்
வினைபுனை நல்லில் இனைகூஉக் கேட்பவும்,
இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல்;
துன்னரும் துப்பின் வயமான் தோன்றல்! 10
அறவை யாயின்,நினது எனத் திறத்தல்!
மறவை யாயின், போரொடு திறத்தல்;
அறவையும் மறவையும் அல்லை யாகத்,
திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின்
நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல் 15
நாணுத்தக வுடைத்திது காணுங் காலே. 20
45. தோற்பது நும் குடியே!
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோர்: சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும்.
திணை: வஞ்சி. 
துறை; துணை வஞ்சி.
குறிப்பு: முற்றியிருந்த நலங்கிள்ளியையும், அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும் பாடிய செய்யுள் இது. 
இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்!
நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே;
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே; 5
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்,
குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும், இவ் இகலே!  
46. அருளும் பகையும்!
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: வஞ்சி. 
துறை; துணை வஞ்சி.
குறிப்பு: மலையமான் மக்களை யானைக் காலில் இட்ட காலத்துப் பாடி உய்யக் கொண்டது. 
நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை;
இவரே, புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித்,
தமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்!
களிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த 5
புன்றலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி,
விருந்திற் புன்கண்நோ வுடையர்;
கெட்டனை யாயின், நீ வேட்டது செய்ம்மே!  
47. புலவரைக் காத்த புலவர்!
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோன்: காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி.
திணை: வஞ்சி. 
துறை; துணை வஞ்சி.
குறிப்பு: சோழன் நலங்கிள்ளியிடமிருந்து உறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனை, ஒற்று வந்தான் என்று கொல்லப் புகுந்தவிடத்துப், பாடி உய்யக் கொண்ட செய்யுள் இது. 
வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி,
நெடிய என்னாது சுரம்பல கடந்து,
வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்,
பெற்றது மகழ்ந்தும், சுற்றம் அருத்தி,
ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி, 5
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந் தன்றோ? இன்றே; திறம்பட
நண்ணார் நாண, அண்ணாந்து ஏகி,
ஆங்குஇனிது ஒழுகின் அல்லது, ஓங்கு புகழ்
மண்ணாள் செல்வம் எய்திய 10
நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே.  
48. 'கண்டனம்' என நினை!
பாடியவர்: பொய்கையார்.
பாடப்பட்டோன்: சேரமான் கோக்கோதை மார்பன்.
திணை: பாடாண். 
துறை: புலவராற்றுப் படை. 
கோதை மார்பிற் கோதை யானும்,
கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்,
மாக்கழி மலர்ந்த நெய்த லானும்,
கள்நா றும்மே, கானல்அம் தொண்டி;
அதுஎம் ஊரே; அவன்எம் இறைவன்; 5
எம்மும் உள்ளுமோ; முதுவாய் இரவல!
அமர்மேம் படூஉங் காலை, நின்
புகழ்மேம் படுநனைக் கண்டனம் எனவே.  
49. எங்ஙனம் மொழிவேன்?
பாடியவர்: பொய்கையார்.
பாடப்பட்டோன்: சேரமான் கோக்கோதை மார்பன்.
திணை: பாடாண். 
துறை: புலவராற்றுப் படை. 
நாடன் என்கோ? ஊரன் என்கோ?
பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ?
யாங்கனம் மொழிகோ, ஓங்குவாள் கோதையை?
புனவர் தட்டை புடைப்பின், அயலது
இறங்குகதிர் அலமரு கழனியும், 5
பிறங்குநீர்ச் சேர்ப்பினும் , புள் ஒருங்கு எழுமே!  
50. கவரி வீசிய காவலன்!
பாடியவர்: மோசிகீரனார்.
பாடப்பட்டோன்: சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.
திணை:பாடாண். 
துறை: இயன் மொழி.
குறிப்பு: அறியாது முரசுகட்டிலில் ஏறியவரைத் தண்டம் செய்யாது துயில் எழுந் துணையும் கவரிகொண்டு வீசினன் சேரமான்; அது குறித்துப் புலவர் பாடிய செய்யுள் இது. 
மாசற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி, மணித்தார்,
பொலங்குழை உழிஞையொடு, பொலியச் சூட்டிக்,
குருதி வேட்கை உருகெழு முரசம் 5
மண்ணி வாரா அளவை, எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர,
இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும், நற் றமிழ்முழுது அறிதல்; 10
அதனொடும் அமையாது, அணுக வந்து, நின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சித், தண்ணென
வீசி யோயே; வியலிடம் கமழ,
இவன்இசை உடையோர்க்கு அல்லது, அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை 15
விளங்கக் கேட்ட மாறுகொல்:
வலம்படு குருசில்! நீ ஈங்குஇது செயலே


26. நோற்றார் நின் பகைவர்!
பாடியவர்: மாங்குடி கிழவர்; மாங்குடி மருதனார் எனவும் பாடம்.பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.திணை: வாகை. துறை: அரச வாகை. 
நளி கடல் இருங் குட்டத்துவளி புடைத்த கலம் போலக்,களிறு சென்று களன் அகற்றவும்,களன் அகற்றிய வியல் ஆங்கண்ஒளிறு இலைய எகு ஏந்தி, 5அரைசு பட அமர் உழக்கி,உரை செல முரசு வெளவி,முடித் தலை அடுப் பாகப்,புனல் குருதி உலைக் கொளீஇத்,தொடித்தோள் துடுப்பின் துழந்த வல்சியின், 10அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய!ஆன்ற கேள்வி, அடங்கிய கொள்கை,நான்மறை முதல்வர் சுற்ற மாக,மன்னர் ஏவல் செய்ய, மன்னியவேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே! 15நோற்றோர் மன்ற நின் பகைவர், நின்னொடுமாற்றார் என்னும் பெயர் பெற்று,ஆற்றார் ஆயினும், ஆண்டுவாழ் வோரே.  


27. புலவர் பாடும் புகழ்!
பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல்.துறை: முதுமொழிக் காஞ்சி. 
சேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ்,நூற் றிதழ் அலரின் நிறை கண் டன்ன,வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து,வீற்றிருந் தோரை எண்ணுங் காலை,உரையும் பாட்டும் உடையோர் சிலரே; 5மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே:புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்வலவன் ஏவா வான ஊர்திஎய்துப என்ப, தம் செய்வினை முடித்து எனக்கேட்பல்; எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி! 10தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும்,மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும்,அறியா தோரையும், அறியக் காட்டித்,திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து,வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும், 15வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி,அருள வல்லை ஆகுமதி; அருளிலர்கொடா அமை வல்லர் ஆகுக;கெடாஅத் துப்பின்நின் பகைஎதிர்ந் தோரே.  


28. போற்றாமையும் ஆற்றாமையும்!
பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல்.துறை: முதுமொழிக் காஞ்சி.சிறப்பு: எண்பேர் எச்சங்கள் பற்றிய விளக்கம். அறம் பொருள் இன்பம் 
எனும் உறுதிப் பொருள்கள் பற்றிய குறிப்பு.சிறப்பில் சிதடும், உறுப்பில் பிண்டமும்,கூனும், குறளும், ஊமும், செவிடும்மாவும், மருளும், உளப்பட வாழ்நர்க்குஎண்பேர் எச்சம் என்றிவை எல்லாம் 5பேதைமை அல்லது ஊதியம் இல், எனமுன்னும் அறிந்தோர் கூறினர்; இன்னும்,அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது:-வட்ட வரிய செம்பொறிச் சேவல்ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம் 10கானத் தோர், நின் தெவ்வர்; நீயேபுறஞ்சிறை மாக்கட்கு அறங்குறித்து, அகத்தோர்புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப்பூம்போது சிதைய வீழ்ந்தெனக், கூத்தர்ஆடுகளம் கடுக்கும் அகநாட் டையே; 15அதனால், அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்ஆற்றும், பெரும! நின்செல்வம்;ஆற்றாமை நின் போற்றா மையே.  


29. நண்பின் பண்பினன் ஆகுக!
பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல்.துறை : முதுமொழிக் காஞ்சி. சிறப்பு : சிறந்த அறநெறிகள். 
அழல் புரிந்த அடர் தாமரைஐது அடர்ந்ற நூற் பெய்து,புனை விளைப் பொலிந்த பொலன் நறுந் தெரியல்பாறு மயிர் இருந்தலை பொலியச் சூடிப்,பாண் முற்றுக, நின் நாள்மகிழ் இருக்கை! 5பாண் முற்று ஒழிந்த பின்றை, மகளிர்தோள் முற்றுக, நின் சாந்துபுலர் அகலம்! ஆங்கமுனிவில் முற்றத்து, இனிது முரசு இயம்பக்,கொடியோர்த் தெறுதலும், செவ்வியோர்க்குஅளித்தலும்,ஒடியா முறையின் மடிவிலை யாகி 10நல்லதன் நலனும் தீயதன் தீமையும்இல்லை என்போர்க்கு இனன் ஆகி லியர்!நெல்விளை கழனிப் படுபுள் ஓப்புநர்ஒழி மடல் விறகின் கழுமீன் சுட்டு,வெங்கள் தொலைச்சியும் அமையார், தெங்கின் 15இளநீர் உதிர்க்கும் வளமிகு நன்னாடுபெற்றனர் உவக்கும் நின் படைகொள் மாக்கள்பற்றா மாக்களின் பரிவு முந்து உறுத்துக்,கூவை துற்ற நாற்கால் பந்தர்ச்,சிறுமனை வாழ்க்கையின் ஒரீஇ, வருநர்க்கு 20உதவி ஆற்றும் நண்பின் பண்புடைஊழிற்று ஆக, நின் செய்கை! விழவின்கோடியர் நீர்மை போல முறை முறைஆடுநர் கழியும்இவ் உலகத்துக், கூடியநகைப் புறனாக, நின் சுற்றம்! 25இசைப்புற னாக, நீ ஓம்பிய பொருளே!  


30. எங்ஙனம் பாடுவர்?
பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.திணை :பாடாண். துறை : இயன்மொழி.சிறப்பு : தலைவனின் இயல்பு கூறுதல். 
செஞ்ஞா யிற்றுச் செலவும்அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்,பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும்,வளி திரிதரு திசையும்,வறிது நிலைஇய காயமும், என்றிவை 5சென்றளந்து அறிந்தார் போல, என்றும்இனைத்து என்போரும் உளரே அனைத்தும்அறிவுஅறி வாகச் செறிவினை யாகிக்,களிறுகவுள் அடுத்த எறிகல் போலஒளித்த துப்பினை ஆதலின், வெளிப்பட 10யாங்ஙனம் பாடுவர், புலவர்? கூம்பொடுமீப்பாய் களையாது, மிசைப் பரந் தோண்டாது,புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர்இடைப்புலப் பெருவழிச் சொரியும்கடல்பல் தாரத்த நாடுகிழ வோயே! 15


31. வடநாட்டார் தூங்கார்!
பாடியவர்: கோவூர்கிழார்.பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.திணை :வாகை. துறை : அரசவாகை: மழபுல வஞ்சியும் ஆம்.சிறப்பு : வடபுலத்து அரசர்கள் இச்சோழனது மறமாண்பைக் கேட்டு அஞ்சிய அச்சத்தால் 
துஞ்சாக் கண்ணர் ஆயினமை.சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல,இரு குடை பின்பட ஓங்கி ஒரு குடைஉருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க,
5நல்லிசை வேட்டம் வேண்டி, வெல்போர்ப்பாசறை யல்லது நீயொல் லாயே;நிதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார்கடிமதில் பாயும் நின் களிறு அடங் கலவே;போர் எனில் புகலும் புனைகழல் மறவர், 10காடிடைக் கிடந்த நாடுநனி சேஎய;செல்வேம் அல்லேம் என்னார்; கல்லென்விழவுடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக்,குண கடல் பின்ன தாகக், குட கடல்வெண் தலைப் புணரி நின் மான்குளம்பு அலைப்ப, 15வலமுறை வருதலும் உண்டு என்று அலமந்துநெஞ்சு நடுங்கு அவலம் பாயத்,துஞ்சாக் கண்ண, வட புலத்து அரசே.  


32. பூவிலையும் மாடமதுரையும்!
பாடியவர்: கோவூர்கிழார்.பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.திணை: பாடாண். துறை: இயன்மொழி.சிறப்பு: சோழனது நினைத்தது முடிக்கும் உறுதிப்பாடு. 
கடும்பின் அடுகலம் நிறையாக, நெடுங் கொடிப்பூவா வஞ்சியும் தருகுவன்; ஒன்றோ?வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள்,ஒண்ணுதல், விறலியர் பூவிலை பெறுக! என,மாட மதுரையும் தருகுவன்; எல்லாம் 5பாடுகம் வம்மினோ, பரிசில் மாக்கள்!தொன்னிலக் கிழமை சுட்டின், நன்மதிவேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்தபசுமண் குரூஉத்திரள் போல, அவன்கொண்ட குடுமித்தும், இத் தண்பணை நாடே. 10


33. புதுப்பூம் பள்ளி!
பாடியவர்: கோவூர்கிழார்.பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.திணை:வாகை. துறை: அரசவாகை.சிறப்பு: பகைவரது கோட்டைகளைக் கைப்பற்றியவுடன், அவற்றின் கதவுகளில் வெற்றிபெற்றோன் தனது அரச முத்திரையைப் பதிக்கும் மரபுபற்றிய செய்தி. 
கான் உறை வாழ்க்கைக் கதநாய், வேட்டுவன்மான்தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள்தயிர்கொடு வந்த தசும்பும், நிறைய,ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல் 5முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும்தென்னம் பொருப்பன் புன்னாட்டுள்ளும்,ஏழெயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு நின்;பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை;பாடுநர் வஞ்சி பாடப், படையோர் 10தாதுஎரு மறுகின் பாசறை பொலியப்,புலராப் பச்சிலை இடையிடுபு தொடுத்தமலரா மாலைப் பந்துகண் டன்னஊன்சோற் றமலை பான்கடும்பு அருத்தும்செம்மற்று அம்மநின் வெம்முனை இருக்கை; 15வல்லோன் தைஇய வரிவனப்பு உற்றஅல்லிப் பாவை ஆடுவனப்பு ஏய்ப்பக்காம இருவர் அல்லது, யாமத்துத்தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின்,ஒதுக்குஇன் திணிமணல் புதுப்பூம் பள்ளி 20வாயின் மாடந்தொறும் மைவிடை வீழ்ப்பநீஆங்குக் கொண்ட விழவினும் பலவே.  


34. செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை!
பாடியவர்: ஆலத்தூர் கிழார்.பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.திணை:பாடாண். துறை: இயன்மொழி.சிறப்பு: 'செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என்னும் அறநெறி பற்றிய செய்தி. 
ஆன்மலை அறுத்த அறனி லோர்க்கும்,மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்,குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்,வழுவாய் மருங்கின் கழுவாயும் உள என,நிலம்புடை பெயர்வ தாயினும், ஒருவன்
5செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் எனஅறம் பாடின்றே ஆயிழை கணவ!காலை அந்தியும், மாலை அந்தியும்,புறவுக் கருவன்ன புன்புல வரகின்பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கிக், 10குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த ஒக்கலொடு,இரத்தி நீடிய அகன்தலை மன்றத்துக்,கரப்பில் உள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி,அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்குஅகலாச் செல்வம் முழுவதும் செய்தோன், 15எங்கோன்,வளவன் வாழ்க!என்று, நின்பீடுகெழு நோன்தாள் பாடேன் ஆயின்,படுபறி யலனே, பல்கதிர்ச் செல்வன்;யானோ தஞ்சம்; பெரும! இவ் வுலகத்துச்சான்றோர் செய்த நன்றுண் டாயின், 20இமையத்து ஈண்டி, இன்குரல் பயிற்றிக்,கொண்டல் மாமழை பொழிந்தநுண்பல் துளியினும் வாழிய, பலவே!  


35. உழுபடையும் பொருபடையும்!
பாடியவர்: வெள்ளைக்குடி நாகனார்.பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.திணை: பாடாண். துறை: செவியறிவுறூஉசிறப்பு: அரச நெறியின் செவ்வி பற்றிய செய்திகள்.சிறப்பு: 'பாடிப் பழஞ் செய்க்கடன் வீடு கொண்டது' என்று இதனைக் குறிப்பர். 
நளிஇரு முந்நீர் ஏணி யாக,வளிஇடை வழங்கா வானம் சூடியமண்திணி கிடக்கைத் தண்தமிழ்க் கிழவர்,முரசு முழங்கு தானை மூவர் உள்ளும்,அரசுஎனப் படுவது நினதே, பெரும!
5அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்,இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்,அந்தண் காவிரி வந்து கவர்பு ஊட்டத்,தோடு கொள் வேலின் தோற்றம் போல,ஆடுகண் கரும்பின் வெண்பூ நுடங்கும்
10நாடுஎனப் படுவது நினதே அத்தை; ஆங்கநாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே!நினவ கூறுவல்: எனவ கேண்மதி!அறம்புரிந் தன்ன செங்கோல் நாட்டத்துமுறைவெண்டு பொழுதின் பதன் எளியோர் ஈண்டு 15உறைவேண்டு பொழுதில் பெயல்பெற் றோறே;ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்டுமூமாக விசும்பின் நடுவுநின் றாங்குக்,கண்பொர விளங்கும்நின் விண்பொரு வியன்குடைவெயில்மறைக் கொண்டன்றோ? அன்றே; வருந்திய 20குடிமறைப் பதுவே; கூர்வேல் வளவ!வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக்,களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை,வருபடை தாங்கிப், பெயர்புறத் தார்த்துப்,பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை 25ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே;மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும்,இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்,காவலர்ப் பழிக்கும், இக் கண்ணகன் ஞாலம்;அதுநற்கு அறிந்தனை யாயின், நீயும் 30நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது,பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிக்,குடிபுறம் தருகுவை யாயின், நின்அடிபுறம் தருகுவர், அடங்கா தேரே.  


36. நீயே அறிந்து செய்க!
பாடியவர்: ஆலத்தூர் கிழார்.பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.திணை:வஞ்சி. துறை: துணை வஞ்சி.குறிப்பு: சோழன் கருவூரை முற்றியிருந்தபோது பாடியது. 
அடுநை யாயினும், விடுநை யாயினும்,நீ அளந் தறிதி நின் புரைமை; வார்தோல்,செயறியரிச் சிலம்பின், குறுந்தொடி மகளிர்பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும்தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக், 5கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய்நெடுங்கை நவியம் பாய்தலின், நிலையழிந்து,வீகமழ் நெடுஞ்சினை புலம்பக், காவுதொறும்கடிமரம் தடியும் ஓசை தன்ஊர்நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப, 10ஆங்குஇனி திருந்த வேந்தனொடு, ஈங்குநின்சிலைத்தார் முரசும் கறங்க,மலைத்தனை எண்பது நாணுத்தகவு உடைத்தே.  


37. புறவும் போரும்!
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.திணை: வாகை; உழிஞை எனவும் பாடம்.துறை: அரச வாகை குற்றுழிஞை எனவும், முதல் வஞ்சி எனவும் பாடம். 
நஞ்சுடை வால் எயிற்று, ஐந்தலை சுமந்த,வேக வெந்திறல், நாகம் புக்கென,விசும்புதீப் பிறப்பத் திருகிப், பசுங்கொடிப்பெருமலை விடரகத்து உரும்எறிந் தாங்குப்,புள்ளுறு புன்கண் தீர்த்த, வெள் வேல் 5சினங்கெழு தானைச், செம்பியன் மருக!கராஅம் கலித்த குண்டுகண் அகழி,இடம்கருங் குட்டத்து உடந்தொக்கு ஓடி,யாமம் கொள்பவர் சுடர்நிழல் கதூஉம்கடுமுரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச், 10செம்புஉறழ் புரிசைச், செம்மல் மூதூர்,வம்புஅணி யானை வேந்துஅகத் துண்மையின்,நல்ல என்னாது, சிதைத்தல்வல்லையால் நெடுந்தகை! செருவத் தானே!  


38. வேண்டியது விளைக்கும் வேந்தன்!
பாடியவர்: ஆவூர் மூலங் கிழார்.பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.திணை: பாடாண். துறை: இயன்மொழி,குறிப்பு: 'எம்முள்ளீர், எந்நாட்டீர்?' என்று அவன் கேட்ப, அவர் பாடியது. 
வரை புரையும் மழகளிற்றின் மிசை,வான் துடைக்கும் வகைய போலவிரவு உருவின கொடி நுடங்கும்வியன் தானை விறல் வேந்தே!நீ, உடன்று நோக்கும்வாய் எரிதவழ, 5நீ, நயந்து நோக்கும்வாய் பொன்பூப்பச்,செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும்,வெண் திங்களுள் வெயில் வேண்டினும்,வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின்,நின்நிழல் பிறந்து, நின்நிழல் வளர்ந்த, 10எம் அளவு எவனோ மற்றே? இன்நிலைப்பொலம்பூங் காவின் நன்னாட் டோரும்செய்வினை மருங்கின் எய்தல் அல்லதை,உடையோர் ஈதலும், இல்லோர் இரத்தலும்கடவ தன்மையின், கையறவு உடைத்துஎன, 15ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின்,நின்நாடு உள்ளுவர், பரிசிலர்:ஒன்னார் தேஎத்தும், நின்னுடைத் தெனவே.  


39. புகழினும் சிறந்த சிறப்பு!
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.திணை: பாடாண். துறை : இயன்மொழி,சிறப்பு : வளவன் வஞ்சியை வெற்றி கொண்டது. 
புறவின் அல்லல் சொல்லிய, கறையடியானை வான்மருப் பெறிந்த வெண்கடைக்கோல்நிறை துலாஅம் புக்கோன் மருக!ஈதல்நின் புகழும் அன்றே; சார்தல்ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல் 5தூங்கெயில் எறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின்,அடுதல்நின் புகழும் அன்றே; கெடுவின்று,மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து,அறம்நின்று நிலையிற் றாகலின், அதனால்முறைமைநின் புகழும் அன்றே; மறம்மிக்கு, 10எழுசமம் கடந்த எழுஉறழ் திணிதோள்,கண்ணார் கண்ணிக், கலிமான், வளவ!யாங்கனம் மொழிகோ யானே; ஓங்கியவரையளந் தறியாப் பொன்படு நெடுங்கோட்டுஇமையம் சூட்டியஏம விற்பொறி, 15மாண்வினை நெடுந்தேர், வானவன் தொலையவாடா வஞ்சி வாட்டும்நின்பீடுகெழு நோன்தாள் பாடுங் காலே?  


40. ஒரு பிடியும் எழு களிரும்!
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.திணை :பாடாண். துறை : செவியறிவுறூஉ. 
நீயே, பிறர் ஓம்புறு மறமன் னெயில்ஓம்பாது கடந்தட்டு, அவர்முடி புனைந்த பசும் பொன்னின்அடி பொலியக் கழல் தைஇயவல் லாளனை, வய வேந்தே! 5யாமே, நின், இகழ் பாடுவோர் எருத்தடங்கப்,புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற,இன்றுகண் டாங்குக் காண்குவம், என்றும்இன்சொல் எண்பதத்தை ஆகுமதி; பெரும!ஒருபிடி படியுஞ் சீறிடம் 10எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே!  


41. காலனுக்கு மேலோன்!
பாடியவர்: கோவூர் கிழார்.பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.திணை : வஞ்சி. துறை: கொற்ற வள்ளை. 
காலனும் காலம் பார்க்கும்; பாராதுவேல்ஈண்டு தானை விழுமியோர் தொலைய,வேண்டிடத்து அடூஉம் வெல்போர் வேந்தே!திசைஇரு நான்கும் உற்கம் உற்கவும்,பெருமரத்து, இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவும், 5வெங்கதிர்க் கனலி துற்றவும், பிறவும்,அஞ்சுவரத் தகுந புள்ளுக்குரல் இயம்பவும்,எயிறுநிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும்,களிறுமேல் கொள்ளவும், காழகம் நீப்பவும்,வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும், 10கனவின் அரியன காணா, நனவின்செருச்செய் முன்ப,! நின் வருதிறன் நோக்கி,மையல் கொண்ட ஏமம்இல் இருக்கையர்,புதல்வர் பூங்கண் முத்தி, மனையோட்குஎவ்வம் சுரக்கும் பைதல் மாக்களொடு 15பெருங்கலக் குற்றன்றால் தானே; காற்றோடுஎரிநிகழ்ந் தன்ன செலவின்செருமிகு வளவ! நிற் சினைஇயோர் நாடே.  


42. ஈகையும் வாகையும்!
பாடியவர்: இடைக்காடனார்.பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.திணை : வாகை. துறை: அரச வாகை.சிறப்பு : சோழனின் மறமேம் பாடும், கொடை மேம்பாடும், வலிமைச் சிறப்பும். 
ஆனா ஈகை, அடு போர், அண்ணல்! நின்யானையும் மலையின் தோன்றும்; பெரும! நின்தானையும் கடலென முழங்கும்; கூர்நுனைவேலும் மின்னின் விளங்கும் ; உலகத்துஅரைசுதலை பனிக்கும் ஆற்றலை யாதலின், 5புரைதீர்ந் தன்று; அது புதுவதோ அன்றே;தண்புனற் பூசல் அல்லது, நொந்து,களைக, வாழி, வளவ! என்று, நின்முனைதரு பூசல் கனவினும் அறியாது,புலிபுறங் காக்கும் குருளை போல, 10மெலிவில் செங்கோல் நீபுறங் காப்பப்,பெருவிறல் யாணர்த் தாகி, அரிநர்கீழ்மடைக் கொண்ட வாளையும், உழவர்படைமிளிர்ந் திட்ட யாமையும், அறைநர்கரும்பிற் கொண்ட தேனும், பெருந்துறை 15நீர்தரு மகளிர் குற்ற குவளையும்,வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும்மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந!மலையின் இழிந்து, மாக்கடல் நோக்கி,நிலவரை இழிதரும் பல்யாறு போலப், 20புலவ ரெல்லாம் நின்நோக் கினரே;நீயே, மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக்கூற்றுவெகுண் டன்ன முன்பொடு,மாற்றுஇரு வேந்தர் மண்நோக் கினையே.  


43. பிறப்பும் சிறப்பும்!
பாடியவர்: தாமப்பல் கண்ணனார்,பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்.திணை : வாகை. துறை: அரசவாகை.குறிப்பு : புலவரும் அரச குமரனும் வட்டுப் பொருவுழிக் கைகரப்ப, வெகுண்டு, வட்டுக் கொண்டு 
எறிந்தானைச் , 'சோழன் மகன்அல்லை' என, நாணியுருந்தானை அவர் பாடியது.நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்,தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்,கால்உண வாகச், சுடரொடு கொட்கும் 5அவிர்சடை முனிவரும் மருளக், கொடுஞ்சிறைக்கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித், தொரீஇத்,தன்னகம் புக்க குறுநடைப் புறவின்தபுதி யஞ்சிச் சீரை புக்கவரையா ஈகை உரவோன் மருக! 10நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்தேர்வண் கிள்ளி தம்பி! வார் கோல்,கொடுமர மறவர் பெரும! கடுமான்கைவண் தோன்றல்! ஐயம் உடையேன்:ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம் 15பார்ப்பார் நோவன செய்யலர்: மற்றுஇதுநீர்த்தோ நினக்கு? என வெறுப்பக் கூறி,நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும்,நீபிழைத் தாய்போல் நனிநா ணினையே;தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல்! 20இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணும் எனக்காண்டகு மொய்ம்ப! காட்டினை; ஆகலின்,யானே பிழைத்தனென் ! சிறக்கநின் ஆயுள்;மிக்குவரும் இன்னீர்க் காவிரிஎக்கர் இட்ட மணலினும் பலவே! 25


44. அறமும் மறமும்!
பாடியவர்: கோவூர் கிழார்.பாடப்பட்டோன்: சோழன் நெடுங்கிள்ளி.திணை : வாகை. துறை: அரச வாகை.குறிப்பு :நலங்கிள்ளி ஆவுரை முற்றியிருந்தான்; அதுகாலை அடைத்திருந்த நெடுங்கிள்ளியைக் கண்டு பாடியது, இச் செய்யுள்.
இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா,நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ,திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி,நிலமிசைப் புரளும் கைய, வெய்துயிர்த்து,அலமரல் யானை உருமென முழங்கவும், 5பாலில் குழவி அலறவும், மகளிர்பூவில் வறுந்தலை முடிப்பவும், நீரில்வினைபுனை நல்லில் இனைகூஉக் கேட்பவும்,இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல்;துன்னரும் துப்பின் வயமான் தோன்றல்! 10அறவை யாயின்,நினது எனத் திறத்தல்!மறவை யாயின், போரொடு திறத்தல்;அறவையும் மறவையும் அல்லை யாகத்,திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின்நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல் 15நாணுத்தக வுடைத்திது காணுங் காலே. 20


45. தோற்பது நும் குடியே!
பாடியவர்: கோவூர் கிழார்.பாடப்பட்டோர்: சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும்.திணை: வஞ்சி. துறை; துணை வஞ்சி.குறிப்பு: முற்றியிருந்த நலங்கிள்ளியையும், அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும் பாடிய செய்யுள் இது. 
இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்!நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடுபொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே;ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே; 5இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்,குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித்தேர்நும்மோர் அன்ன வேந்தர்க்குமெய்ம்மலி உவகை செய்யும், இவ் இகலே!  


46. அருளும் பகையும்!
பாடியவர்: கோவூர் கிழார்.பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.திணை: வஞ்சி. துறை; துணை வஞ்சி.குறிப்பு: மலையமான் மக்களை யானைக் காலில் இட்ட காலத்துப் பாடி உய்யக் கொண்டது. 
நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும்இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை;இவரே, புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித்,தமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்!களிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த 5புன்றலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி,விருந்திற் புன்கண்நோ வுடையர்;கெட்டனை யாயின், நீ வேட்டது செய்ம்மே!  


47. புலவரைக் காத்த புலவர்!
பாடியவர்: கோவூர் கிழார்.பாடப்பட்டோன்: காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி.திணை: வஞ்சி. துறை; துணை வஞ்சி.குறிப்பு: சோழன் நலங்கிள்ளியிடமிருந்து உறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனை, ஒற்று வந்தான் என்று கொல்லப் புகுந்தவிடத்துப், பாடி உய்யக் கொண்ட செய்யுள் இது. 
வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி,நெடிய என்னாது சுரம்பல கடந்து,வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்,பெற்றது மகழ்ந்தும், சுற்றம் அருத்தி,ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி, 5வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைபிறர்க்குத் தீதறிந் தன்றோ? இன்றே; திறம்படநண்ணார் நாண, அண்ணாந்து ஏகி,ஆங்குஇனிது ஒழுகின் அல்லது, ஓங்கு புகழ்மண்ணாள் செல்வம் எய்திய 10நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே.  


48. 'கண்டனம்' என நினை!
பாடியவர்: பொய்கையார்.பாடப்பட்டோன்: சேரமான் கோக்கோதை மார்பன்.திணை: பாடாண். துறை: புலவராற்றுப் படை. 
கோதை மார்பிற் கோதை யானும்,கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்,மாக்கழி மலர்ந்த நெய்த லானும்,கள்நா றும்மே, கானல்அம் தொண்டி;அதுஎம் ஊரே; அவன்எம் இறைவன்; 5எம்மும் உள்ளுமோ; முதுவாய் இரவல!அமர்மேம் படூஉங் காலை, நின்புகழ்மேம் படுநனைக் கண்டனம் எனவே.  


49. எங்ஙனம் மொழிவேன்?
பாடியவர்: பொய்கையார்.பாடப்பட்டோன்: சேரமான் கோக்கோதை மார்பன்.திணை: பாடாண். துறை: புலவராற்றுப் படை. 
நாடன் என்கோ? ஊரன் என்கோ?பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ?யாங்கனம் மொழிகோ, ஓங்குவாள் கோதையை?புனவர் தட்டை புடைப்பின், அயலதுஇறங்குகதிர் அலமரு கழனியும், 5பிறங்குநீர்ச் சேர்ப்பினும் , புள் ஒருங்கு எழுமே!  


50. கவரி வீசிய காவலன்!
பாடியவர்: மோசிகீரனார்.பாடப்பட்டோன்: சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.திணை:பாடாண். துறை: இயன் மொழி.குறிப்பு: அறியாது முரசுகட்டிலில் ஏறியவரைத் தண்டம் செய்யாது துயில் எழுந் துணையும் கவரிகொண்டு வீசினன் சேரமான்; அது குறித்துப் புலவர் பாடிய செய்யுள் இது. 
மாசற விசித்த வார்புஉறு வள்பின்மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞைஒலிநெடும் பீலி ஒண்பொறி, மணித்தார்,பொலங்குழை உழிஞையொடு, பொலியச் சூட்டிக்,குருதி வேட்கை உருகெழு முரசம் 5மண்ணி வாரா அளவை, எண்ணெய்நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கைஅறியாது ஏறிய என்னைத் தெறுவர,இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததைஅதூஉம் சாலும், நற் றமிழ்முழுது அறிதல்; 10அதனொடும் அமையாது, அணுக வந்து, நின்மதனுடை முழவுத்தோள் ஓச்சித், தண்ணெனவீசி யோயே; வியலிடம் கமழ,இவன்இசை உடையோர்க்கு அல்லது, அவணதுஉயர்நிலை உலகத்து உறையுள் இன்மை 15விளங்கக் கேட்ட மாறுகொல்:வலம்படு குருசில்! நீ ஈங்குஇது செயலே

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.