LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

புறநானூறு-3

 

51. ஈசலும் எதிர்ந்தோரும் !
பாடியவர்: ஐயூர் முடவனார்! ஐயூர் கிழார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி.
திணை: வாகை. 
துறை; அரச வாகை.
குறிப்பு; 'செம்புற்று ஈயல்போல ஒருபகல் வாழ்க்கைக்கு உலமருவோர்' என்னும் செறிவான அறவுரையைக் கூறுவது. 
நீர்மிகின், சிறையும் இல்லை; தீமிகின்,
மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை;
வளிமிகின், வலியும் இல்லை; ஒளிமிக்கு
அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி,
தண் தமிழ் பொது எனப் பொறாஅன், போர் எதிர்ந்து, 5
கொண்டி வேண்டுவன் ஆயின், கொள்க எனக்
கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே;
அளியரோ அளியர், அவன் அளிஇழந் தோரே;
நுண்பல் சிதலை அரிதுமுயன்று எடுத்த
செம்புற்று ஈயல் போல, 10
ஒருபகல் வாழ்க்கைக்கு உலமரு வோரே!  
52. ஊன் விரும்பிய புலி !
பாடியவர்: மருதன் இளநாகனார்; மருதிள நாகனார் என்பதும் பாடம்.
பாடப்பட்டோன்: பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்
வழுதி. திணை: வாகை. 
துறை; அரச வாகை.
குறிப்பு; நாயும் புலியும் என்னும் வல்லாடல் பற்றிய செய்தி. 
அணங்கு உடை நெடுங்கோட்டு அளையகம் முனைஇ,
முணங்கு நிமிர் வயமான் முழுவலி ஒருத்தல்,
ஊன்நசை உள்ளம் துரப்ப, இசை குறித்துத்
தான் வேண்டு மருங்கின் வேட்டுஎழுந் தாங்கு,
வடபுல மன்னர் வாட, அடல் குறித்து, 5
இன்னா வெம்போர் இயல்தேர் வழுதி!
இதுநீ கண்ணியது ஆயின், இரு நிலத்து
யார்கொல் அளியர் தாமே? ஊர்தொறும்
மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங் கொடி
வயல்உழை மருதின் வாங்குசினை வலக்கும், 10
பெருநல் யாணரின் ஒரீஇ, இனியே
கலி கெழு கடவுள் கந்தம் கைவிடப்
பலிகண் மாறிய பாழ்படு பொதியில்,
நரைமூ தாளர் நாயிடக் குழிந்த
வல்லின் நல்லகம் நிறையப், பல்பொறிக் 15
கான வாரணம் ஈனும்
காடாகி விளியும் நாடுடை யோரே!  
53. செந்நாவும் சேரன் புகழும்!
பாடியவர்: பொருந்தில் இளங்கீரனார்.
பாடப்பட்டோன்: சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
திணை: வாகை. 
துறை: அரசவாகை.
குறிப்பு: கைகோத்து ஆடும் தெற்றி யாட்டம் பற்றிய செய்தி. 
முதிர்வார் இப்பி முத்த வார் மணல்,
கதிர்விடு மணியின் கண்பொரு மாடத்து,
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும்
விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற
களங்கொள் யானைக், கடுமான், பொறைய! 5
விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்;
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை
கைம்முற் றலநின் புகழே, என்றும்;
ஒளியோர் பிறந்தஇம் மலர்தலை உலகத்து
வாழேம் என்றலும் அரிதே; தாழாது 10
செறுத்த செய்யுள் செய்செந் நாவின்,
வெறுத்த கேள்வி, விளங்குபுகழ்க் கபிலன்
இன்றுளன் ஆயின், நன்றுமன், என்ற நின்
ஆடு கொள் வரிசைக்கு ஒப்பப்
பாடுவன் மன்னால், பகைவரைக் கடப்பே. 15
54. எளிதும் கடிதும்!
பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன்: சேரமான் குட்டுவன் கோதை.
திணை: வாகை. 
துறை : அரசவாகை. 
எங்கோன் இருந்த கம்பலை முதூர்,
உடையோர் போல இடையின்று குறுகிச்,
செம்மல் நாளவை அண்ணாந்து புகுதல்
எம்அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே;
இரவலர்க்கு எண்மை யல்லது; புரவு எதிர்ந்து 5
வானம் நாண, வரையாது, சென்றோர்க்கு
ஆனாது ஈயும் கவிகை வண்மைக்
கடுமான் கோதை துப்பெதிர்ந்து எழுந்த
நெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப்,
பாசிலைத் தொடுத்த உவலைக் கண்ணி, 10
மாசுண் உடுக்கை, மடிவாய், இடையன்
சிறுதலை ஆயமொடு குறுகல் செல்லாப்
புலிதுஞ்சு வியன்புலத்து அற்றே
வலிதுஞ்சு தடக்கை அவனுடை நாடே.  
55. மூன்று அறங்கள்!
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண். 
துறை: செவியறிவுறூஉ. 
ஓங்கு மலைப் பெருவில் பாம்புஞாண் கொளீஇ,
ஒரு கணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெரு விறல் அமரர்க்கு வெற்றி தந்த
கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்
பிறை நுதல் விளங்கும் ஒருகண் போல,
5
வேந்து மேம்பட்ட பூந்தார் மாற!
கடுஞ் சினத்த கொல் களிறும்;
கதழ் பரிய கலி மாவும்,
நெடுங் கொடிய நிமிர் தேரும்,
நெஞ் சுடைய புகல் மறவரும், என
10
நான்குடன் மாண்ட தாயினும், மாண்ட
அறநெறி முதற்றே, அரசின் கொற்றம்;
அதனால், நமரெனக் கோல்கோ டாது,
பிறர் எனக் குணங் கொல்லாது,,
ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும்,
15
திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும்,
வானத்து அன்ன வண்மையும், மூன்றும்,
உடையை ஆகி, இல்லோர் கையற,
நீநீடு வாழிய நெடுந்தகை! தாழ்நீர்!
வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில் 20
நெடுவேள் நிலைஇய காமர் வியந்துறைக்
கடுவளி தொகுப்ப ஈண்டிய
வடுஆழ் எக்கர் மணலினும் பலவே!  
56. கடவுளரும் காவலனும்!
பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்; (மதுரை மருதன் இளநாகனார் எனவும் பாடம்).
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண். 
துறை : பூவை நிலை. 
ஏற்று வலன் உயரிய எரிமருள் அவிர்சடை,
மாற்றருங் கணிச்சி, மணி மிடற் றோனும்,
கடல் வளர் புரிவளை புரையும் மேனி,
அடல் வெந் நாஞ்சில், பனைக்கொடி யோனும்;
மண் ணுறு திருமணி புரையும் மேனி,
5
விண்ணுயர் புல்கொடி, விறல்வெய் யொனும்,
மணி மயில் உயரிய மாறா வென்றிப்,
பிணிமுக ஊர்தி, ஒண்செய் யோனும்_என
ஞாலம் காக்கும் கால முன்பின்,
தோலா நல்இசை, நால்வர் உள்ளும், 10
கூற்றுஒத் தீயே, மாற்றருஞ் சீற்றம்;
வலிஒத் தீயே, வாலி யோனைப்;
புகழ்ஒத் தீயே, இகழுநர் அடுநனை;
முருகுஒத் தீயே, முன்னியது முடித்தலின்;
ஆங்குஆங்கு அவரவர் ஒத்தலின், யாங்கும் 15
அரியவும் உளவோ, நினக்கே? அதனால்,
இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈயா,
யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனை கலத்து ஏந்தி, நாளும்
ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ்சிறந்து, 20
ஆங்கினிது ஒழுகுமதி! ஓங்குவாள் மாற!
அங்கண் விசும்பின் ஆரிருள் அகற்றும்
வெங்கதிர்ச் செல்வன் போலவும், குடதிசைத்
தண்கதிர் மதியம் போல்வும்,
நின்று நிலைஇயர், உலகமோடு உடனே! 25
57. காவன்மரமும் கட்டுத்தறியும்!
பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.
பாடப்பட்டோர்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: வஞ்சி. 
துறை : துணை வஞ்சி. 
வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன,
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற!
நின்னொன்று கூறுவது உடையோன்; என்னெனின்,
நீயே, பிறர்நாடு கொள்ளும்காலை, அவர் நாட்டு 5
இறங்கு கதிர் கழனிநின் இளையரும் கவர்க:
நனந்தலைப் பேரூர் எரியும் நைக்க;
மின்னு நிமிர்ந் தன்ன நின்ஒளிறு இலங்கு நெடுவேல்
ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்
கடிமரம் தடிதல் ஓம்பு! நின் 10
நெடுதல் யானைக்குக் கந்தாற் றாவே  
58. புலியும் கயலும்!
பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.
பாடப்பட்டோர்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவனும்
பாண்டியன் வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெரு வழுதியும்.
குறிப்பு: இருவேந்தரும் ஒருங்கிருந்தபோது பாடியது.
திணை: பாடாண். 
துறை : உடனிலை. 
நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவளே,
முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக்
கொழுநிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்,
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது.
நல்லிசை முதுகுடி நடுக்குஅறத் தழீஇ,
5
இளையது ஆயினும் கிளைஅரா எறியும்,
அருநரை உருமின், பெருநரைப் பொறாஅச்
செருமாண் பஞ்சவர் ஏறே; நீயே,
அறந்துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே,
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென, 10
வரைய சாந்தமும், திரைய முத்தமும்,
இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும்,
தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே;
பால்நிற உருவின் பனைக்கொடி யோனும்,
நீல்நிற உருவின், நேமியோனும், என்று 15
இருபெருந் தெய்வமும் உடன் நின் றாஅங்கு,
உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி,
இந்நீர் ஆகலின், இனியவும் உளவோ?
இன்னும் கேண்மின் நும் இசைவா ழியவே;
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும் 20
உடனிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப்
பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யா காதே;
அதனால், நல்ல போலவும், நயவ போலவும்,
தொல்லோர் சென்ற நெறியர் போலவும், 25
காதல் நெஞ்சின்நும் புணர்ச்சி; வென்று வென்று
அடுகளத்து உயர்க நும் வேலே; கொடுவரிக்
கோள்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி
நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த
குடுமிய ஆக, பிறர் குன்றுகெழு நாடே. 30
59. பாவலரும் பகைவரும்!
பாடியவர்: மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண்.
துறை : பூவைநிலை. 
ஆரம் தாழ்ந்த அணிகிளிர் மார்பின்,
தாள்தோய் தடக்கைத், தகைமாண் வழுதி!
வல்லை மன்ற, நீநயந் தளித்தல்!
தேற்றாய், பெரும! பொய்யே; என்றும்
காய்சினம் தவிராது கடல்ஊர்பு எழுதரும் 5
ஞாயிறு அனையை, நின் பகைவர்க்குத்;
திங்கள் அனையை, எம்ம னோர்க்கே.  
60. மதியும் குடையும்!
பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார். குடை புறப்பட்டதெனக் இருதித் தொழுதேம் என்று .
பாடப்பட்டோன்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவன்.
திணை: பாடாண். 
துறை : குடை மங்கலம். 
முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச்,
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்
உச்சி நின்ற உவவுமதி கண்டு,
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த,
சில் வளை விறலியும், யானும், வல்விரைந்து, 5
தொழுதனம் அல்லமோ, பலவே! கானல்
கழிஉப்பு முகந்து கல்நாடு மடுக்கும்
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரனுடை நோன்பகட்டு அன்ன எங்கோன்,
வலன் இரங்கு முரசின் வாய்வாள் வளவன், 10
வெயில்மறைக் கொண்ட உருகெழு சிறப்பின்
மாலை வெண்குடை ஒக்குமால் எனவே?  
61. மலைந்தோரும் பணிந்தோரும்!
பாடியவர்: கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன்: சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி. திணை; வாகை. 
துறை; அரச வாகை. 
கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்
சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்,
மலங்கு மிளிர், செறுவின் தளம்புதடிந் திட்ட
பழன வாளைப் பரூஉக்கண் துணியல்
புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை ஆக, 5
விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி,
நீடுகதிர்க் கழனிச் சூடுதடு மாறும்
வன்கை வினைஞர் புன்தலைச் சிறாஅர்
தெங்குபடு வியன்பழம் முனையின், தந்தையர்
குறைக்கண் நெடுபோர் ஏறி, விசைத் தெழுந்து, 10
செழுங்கோட் பெண்ணைப் பழந்தொட முயலும்,
வைகல் யாணர், நன்னாட்டுப் பொருநன்,
எகுவிளங்கு தடக்கை இயல்தேர்ச் சென்னி,
சிலைத்தார் அகலம் மலைக்குநர் உளர்எனின்,
தாமறி குவர்தமக்கு உறுதி; யாம் அவன் 15
எழுஉறழ் திணிதோள் வழுவின்றி மலைந்தோர்
வாழக் கண்டன்றும் இலமே; தாழாது,
திருந்து அடி பொருந்த வல்லோர்
வருந்தக் காண்டல், அதனினும் இலமே!  
62. போரும் சீரும்!
பாடியவர்: கழாத் தலையார்.
பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்; சோழன் வேற்பறடக் கைப் பெருவிறற் கிள்ளி.
குறிப்பு: போர்ப்புறத்துப் பொருது இவர் வீழ்ந்த காலைப் பாடியது.
திணை: தும்பை. 
துறை : தொகை நிலை. 
வருதார் தாங்கி, அமர்மிகல் யாவது?
பொருது ஆண்டொழிந்த மைந்தர் புண்தொட்டுக்,
குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி,
நிறம்கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்
எடுத்துஎறி அனந்தற் பறைச்சீர் தூங்கப், 5
பருந்து அருந்துற்ற தானையொடு செருமுனிந்து,
அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்
தாம்மாய்ந் தனரே; குடைதுளங் கினவே;
உரைசால் சிறப்பின் முரசு ஒழிந்தனவே;
பன்னூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம் 10
இடம்கெட ஈண்டிய வியன்கண் பாசறைக்,
களங்கொளற்கு உரியோர் இன்றித், தெறுவர,
உடன்வீழ்ந் தன்றால், அமரே; பெண்டிரும்
பாசடகு மிசையார், பனிநீர் மூழ்கார்,
மார்பகம் பொருந்தி ஆங்கமைந் தன்றே; 15
வாடாப் பூவின், இமையா நாட்டத்து,
நாற்ற உணவினோரும் ஆற்ற
அரும்பெறல் உலகம் நிறைய
விருந்துபெற் றனரால்; பொலிக, நும் புகழே!  
63. என்னாவது கொல்?
பாடியவர்: பரணர்.
பாடப்பட்டோன்: சோழன் வேற்பறடக்கைப் பெருவிறற் கிள்ளி; சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்.
குறிப்பு: இருவரும் பொருது களத்தில் வீழ்ந்த போது பாடியது.
திணை: தும்பை. 
துறை : தொகை நிலை. 
எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி,
விளைக்கும் வினையின்றிப் படைஒழிந் தனவே;
விறற் புகழ் மாண்ட புரவி எல்லாம்
மறத் தகை மைந்தரொடு ஆண்டுப்பட் டனவே;
தேர்தர வந்த சான்றோர் எல்லாம், 5
தோல் கண் மறைப்ப, ஒருங்கு மாய்ந்தனரே;
விசித்து வினை மாண்ட மயிர்க்கண் முரசம்,
பொறுக்குநர் இன்மையின், இருந்துவிளிந் தனவே;
சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென,
வேந்தரும் பொருது, களத்து ஒழிந்தனர்; இனியே, 10
என்னா வதுகொல் தானே; கழனி
ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
பாசவல் முக்கித், தண்புனல் பாயும்,
யாணர் அறாஅ வைப்பின்
காமர் கிடக்கை அவர் அகன்றலை நாடே? 15
64. புற்கை நீத்து வரலாம்!
பாடியவர்: நெடும்பல்லியத்தனார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை: பாடாண். 
துறை : விறலியாற்றுப்படை. 
அருமிளை இருக்கை யதுவே-மனைவியும்,
வேட்டச் சிறா அர் சேட்புலம் படராது,
படைமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்
விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் மிதவை,
யாணர் நல்லவை பாணரொடு, ஓராங்கு 5
வருவிருந்து அயரும் விருப்பினள் ; கிழவனும்
அருஞ்சமம் ததையத் தாக்கிப், பெருஞ்சமத்து
அண்ணல் யானை அணிந்த
பொன்செய் ஓடைப் பெரும்பரி சிலனே.
நல்யாழ்,ஆகுளி, பதலையொடு சுருக்கிச், 10
செல்லா மோதில் சில்வளை விறலி!
களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை,
விசும்புஆடு எருவை புசுந்தடி தடுப்பப்,
பகைப்புலம் மரீஇய தகைப்பெருஞ் சிறப்பின்
குடுமிக் கோமாற் கண்டு, 15
நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே?  
65. நாணமும் பாசமும்!
பாடியவர்: கழாஅத் தலையார்.
பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சேரலாதன்; இவன் கரிகாற் பெருவளத்தானோடு பொருது புறப்புண்பட்டு, வடக்கிருந்தபோது பாடியது.
திணை: பொதுவியல். 
துறை : கையறுநிலை.
சிறப்பு: புறப்புண்பட்டோர் நாணி வடக்கிருந்து உயிர்விடும் மரபு. 
மண்முழா மறப்பப், பண் யாழ் மறப்ப
இருங்கண் குழிசி கவிழ்ந்து இழுது பறப்பச்,
சுரும்பூஆர் தேறல் சுற்றம் மறப்ப,
உழவர் ஓதை மறப்ப, விழவும்
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப, 5
உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து,
இருசுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்,
தன்போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
புறப்புண் நாணி, மறத்தகை மன்னன் 10
வாள் வடக்கு இருந்தனன்; ஈங்கு,
நாள்போல் கழியல, ஞாயிற்றுப் பகலே!  
66. நல்லவனோ அவன்!
பாடியவர்: வெண்ணிக் குயத்தியார்: வெண்ணிற் குயத்தியார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.
திணை: வாகை. 
துறை : அரச வாகை. 
நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே 5
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்திப்,
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே!  
67. அன்னச் சேவலே!
பாடியவர்: பிசிராந்தையார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்,
திணை: பாடாண். 
துறை: இயன்மொழி. 
அன்னச் சேவல் ! அன்னச் சேவல் !
ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்
நாடு தலை அளிக்கும் ஒண்முகம் போலக்,
கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
மையல் மாலை யாம் கையறுபு இனையக், 5
குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி,
வடமலைப் பெயர்குவை ஆயின், இடையது
சோழ நன்னாட்டுப் படினே, கோழி
உயர் நிலை மாடத்துக், குறும்பறை அசைஇ,
வாயில் விடாது கோயில் புக்கு, எம் 10
பெருங் கோக் கிள்ளி கேட்க, இரும்பிசிர்
ஆந்தை அடியுறை எனினே, மாண்ட நின்
இன்புறு பேடை அணியத், தன்
அன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே.  
68. மறவரும் மறக்களிரும்!
பாடியவர்: கோவூர் கிழார். பாடப்பட்டோன்; சோழன் நலங்கிள்ளி.
திணை: பாடாண். 
துறை: பாணாற்றுப்படை. 
உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின்
கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது,
சில்செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து,
ஈங்குஎவன் செய்தியோ? பாண ! பூண்சுமந்து,
அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து 5
மென்மையின் மகளிர்க்கு வணங்கி,வன்மையின்
ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை,
புனிறு தீர் குழவிக்கு இலிற்றுமுலை போலச்
சுரந்த காவிரி மரங்கொல் மலிநீர்
மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன், 10
உட்பகை ஒருதிறம் பட்டெனப், புட்பகைக்கு
ஏவான் ஆகலின், சாவோம் யாம் என,
நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத்,
தணிபறை அறையும் அணிகொள் தேர்வழிக்
கடுங்கண் பருகுநர் நடுங்குகை உகத்த 15
நறுஞ்சேறு ஆடிய வறுந்தலை யானை
நெடுனகர் வரைப்பின் படுமுழா ஓர்க்கும்
உறந்தை யோனே குருசில்;
பிறன்கடை மறப்ப நல்குவன், செலினே!  
69. காலமும் வேண்டாம்!
பாடியவர்: ஆலந்தூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை:பாடாண். 
துறை: பாணாற்றுப்படை. 
கையது, கடன் நிறை யாழே; மெய்யது,
புரவலர் இன்மையின் பசியே; அரையது
வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர்
ஓம்பி உடுத்த உயவற் பாண!
பூட்கை இல்லோன் யாக்கை போலப் 5
பெரும்புல் என்ற இரும் பேர் ஒக்கலை;
வையகம் முழுவதுடன் வளைப், பையென
என்னை வினவுதி ஆயின், மன்னர்
அடுகளிறு உயவும் கொடிகொள் பாசறைக்,
குருதிப் பரப்பின் கோட்டுமா தொலைச்சிப். 10
புலாக் களம் செய்த கலாஅத் தானையன்
பிறங்கு நிலை மாடத்து உறந்தை யோனே!
பொருநர்க்கு ஓங்கிய வேலன், ஒரு நிலைப்
பகைப் புலம் படர்தலும் உரியன் ; தகைத் தார்
ஒள்ளெரி புரையும் உருகெழு புசும்பூண் 15
கிள்ளி வளவற் படர்குவை ஆயின்,
நெடுங் கடை நிற்றலும் இலையே; கடும் பகல்
தேர்வீசு இருக்கை ஆர நோக்கி,
நீ அவற் கண்ட பின்றைப், பூவின்
ஆடுவண்டு இமிராத் தாமரை 20
சூடாய் ஆதல் அதனினும் இலையே.  
70. குளிர்நீரும் குறையாத சோறும்
பாடியவர்: கோவூர் கிழார்: (கோவூர் அழகியார் எனவும் பாடம்).
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை : பாடாண். 
துறை: பாணாற்றுப்படை. 
தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண!
கயத்து வாழ் யாமை காழ்கோத் தன்ன
நுண்கோல் தகைத்த தெண்கண் மாக்கிணை
இனிய காண்க; இவண் தணிக எனக் கூறி;
வினவல் ஆனா முதுவாய் இரவல! 5
தைத் திங்கள் தண்கயம் போலக்,
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்,
அடுதீ அல்லது சுடுதீ அறியாது;
இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்,
கிள்ளி வளவன் நல்லிசை யுள்ளி, 10
நாற்ற நாட்டத்து அறுகாற் பறவை
சிறுவெள் ளாம்பல் ஞாங்கர்,ஊதும்
கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப்
பாதிரி கமழும் ஓதி, ஒண்ணுதல்,
இன்னகை விறலியொடு மென்மெல இயலிச் 15
செல்வை ஆயின், செல்வை ஆகுவை;
விறகுஒய் மாக்கள் பொன்பெற் றன்னதோர்,
தலைப்பாடு அன்று, அவன் ஈகை;
நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே!  
71. இவளையும் பிரிவேன்!
பாடியவர்: ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
திணை: காஞ்சி 
துறை: வஞ்சினக் காஞ்சி 
மடங்கலின் சினைஇ, மடங்கா உள்ளத்து,
அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து
என்னொடு பொருந்தும் என்ப ; அவரை
ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு
அவர்ப்புறம் காணேன் ஆயின் - சிறந்த 5
பேரமர் உண்கண் இவளினும் பிரிக:
அறன்நிலை திரிய அன்பின் அவையத்துத்,
திறன்இல் ஒருவனை நாட்டி, முறை திரிந்து
மெலிகோல் செய்தேன் ஆகுக; மலி புகழ்
வையை சூழ்ந்த வலங்கெழு வைப்பின் 10
பொய்யா யாணர் மையற் கோமான்
மாவனும், மன்எயில் ஆந்தையும், உரைசால்
அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும்,
வெஞ்சின இயக்கனும், உளப்படப் பிறரும்,
கண்போல் நண்பிற் கேளிரொடு கலந்த 15
இன்களி மகிழ்நகை இழுக்கிய யான் ஒன்றோ,
மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த
தென்புலம் காவலின் ஒரிஇப், பிறர்
வன்புலங் காவலின் மாறி யான் பிறக்கே!  
72. இனியோனின் வஞ்சினம்!
பாடியவர்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
திணை: காஞ்சி 
துறை: வஞ்சினக் காஞ்சி 
நகுதத் கனரே, நாடு மீக் கூறுநர்;
இளையன் இவன் என உளையக் கூறிப்
படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்
நெடுநல் யானையும், தேரும், மாவும்,
படைஅமை மறவரும், உடையும் யாம் என்று 5
உறுதுப்பு அஞ்சாது, உடல்சினம் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்கு அகப் படேஎன் ஆயின்; பொருந்திய
என் நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது, 10
கொடியன்எம் இறை எனக் கண்ணீர் பரப்பிக்,
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக,
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின் 15
புலவர் பாடாது வரைக, என் நிலவரை;
புரப்போர் புன்கண் கூர,
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே.  
73. உயிரும் தருகுவன்!
பாடியவர்:சோழன் நலங்கிள்ளி; 'நல்லுருத்திரன் பாட்டு' எனவும் பாடம்.
திணை: காஞ்சி 
துறை: வஞ்சினக் காஞ்சி 
மெல்ல வந்து, என் நல்லடி பொருந்தி,
ஈயென இரக்குவர் ஆயின், சீருடை
முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்;
இன்னுயிர்ஆயினும்கொடுக்குவென், இந்நிலத்து
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது, என் 5
உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின்
துஞ்சு புலி இடறிய சிதடன் போல,
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக்
கழைதின் யானைக் கால் அகப் பட்ட
வன்றிணி நீண்முளை போலச், சென்று அவண் 10
வருந்தப் பொரேஎன் ஆயின், பொருந்திய
தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல்லிருங் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைக, என் தாரே!  
74. வேந்தனின் உள்ளம்!
பாடியவன்: சேரமான் கணைக்கா லிரும்பொறை
திணை: பொதுவியல் 
துறை; முதுமொழிக் காஞ்சி 'தாமே தாங்கிய
தாங்கரும் பையுள்' என்னும் துறைக்குக் காட்டுவர் இளம்பூரணர் 
குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத், 5
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோ, இவ் உலகத் தானே?  
75. அரச பாரம்!
பாடியவன்: சோழன் நலங்கிள்ளி
திணை: பொதுவியல் 
துறை: பொருண்மொழிக் காஞ்சி 
மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்,
பால்தர வந்த பழவிறல் தாயம்
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு என
குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே! 5
மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள்
விழுமியோன் பெறுகுவன் ஆயின், தாழ்நீர்
அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை
என்றூழ் வாடுவறல் போல, நன்றும்
நொய்தால் அம்ம தானே-மையற்று, 10
விசும்புஉற ஓங்கிய வெண்குடை
முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே.

51. ஈசலும் எதிர்ந்தோரும் !
பாடியவர்: ஐயூர் முடவனார்! ஐயூர் கிழார் எனவும் பாடம்.பாடப்பட்டோன்: பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி.திணை: வாகை. துறை; அரச வாகை.குறிப்பு; 'செம்புற்று ஈயல்போல ஒருபகல் வாழ்க்கைக்கு உலமருவோர்' என்னும் செறிவான அறவுரையைக் கூறுவது. 
நீர்மிகின், சிறையும் இல்லை; தீமிகின்,மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை;வளிமிகின், வலியும் இல்லை; ஒளிமிக்குஅவற்றோர் அன்ன சினப்போர் வழுதி,தண் தமிழ் பொது எனப் பொறாஅன், போர் எதிர்ந்து, 5கொண்டி வேண்டுவன் ஆயின், கொள்க எனக்கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே;அளியரோ அளியர், அவன் அளிஇழந் தோரே;நுண்பல் சிதலை அரிதுமுயன்று எடுத்தசெம்புற்று ஈயல் போல, 10ஒருபகல் வாழ்க்கைக்கு உலமரு வோரே!  


52. ஊன் விரும்பிய புலி !
பாடியவர்: மருதன் இளநாகனார்; மருதிள நாகனார் என்பதும் பாடம்.பாடப்பட்டோன்: பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி. திணை: வாகை. துறை; அரச வாகை.குறிப்பு; நாயும் புலியும் என்னும் வல்லாடல் பற்றிய செய்தி. 
அணங்கு உடை நெடுங்கோட்டு அளையகம் முனைஇ,முணங்கு நிமிர் வயமான் முழுவலி ஒருத்தல்,ஊன்நசை உள்ளம் துரப்ப, இசை குறித்துத்தான் வேண்டு மருங்கின் வேட்டுஎழுந் தாங்கு,வடபுல மன்னர் வாட, அடல் குறித்து, 5இன்னா வெம்போர் இயல்தேர் வழுதி!இதுநீ கண்ணியது ஆயின், இரு நிலத்துயார்கொல் அளியர் தாமே? ஊர்தொறும்மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங் கொடிவயல்உழை மருதின் வாங்குசினை வலக்கும், 10பெருநல் யாணரின் ஒரீஇ, இனியேகலி கெழு கடவுள் கந்தம் கைவிடப்பலிகண் மாறிய பாழ்படு பொதியில்,நரைமூ தாளர் நாயிடக் குழிந்தவல்லின் நல்லகம் நிறையப், பல்பொறிக் 15கான வாரணம் ஈனும்காடாகி விளியும் நாடுடை யோரே!  


53. செந்நாவும் சேரன் புகழும்!
பாடியவர்: பொருந்தில் இளங்கீரனார்.பாடப்பட்டோன்: சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.திணை: வாகை. துறை: அரசவாகை.குறிப்பு: கைகோத்து ஆடும் தெற்றி யாட்டம் பற்றிய செய்தி. 
முதிர்வார் இப்பி முத்த வார் மணல்,கதிர்விடு மணியின் கண்பொரு மாடத்து,இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும்விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்றகளங்கொள் யானைக், கடுமான், பொறைய! 5விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்;மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலைகைம்முற் றலநின் புகழே, என்றும்;ஒளியோர் பிறந்தஇம் மலர்தலை உலகத்துவாழேம் என்றலும் அரிதே; தாழாது 10செறுத்த செய்யுள் செய்செந் நாவின்,வெறுத்த கேள்வி, விளங்குபுகழ்க் கபிலன்இன்றுளன் ஆயின், நன்றுமன், என்ற நின்ஆடு கொள் வரிசைக்கு ஒப்பப்பாடுவன் மன்னால், பகைவரைக் கடப்பே. 15


54. எளிதும் கடிதும்!
பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.பாடப்பட்டோன்: சேரமான் குட்டுவன் கோதை.திணை: வாகை. துறை : அரசவாகை. 
எங்கோன் இருந்த கம்பலை முதூர்,உடையோர் போல இடையின்று குறுகிச்,செம்மல் நாளவை அண்ணாந்து புகுதல்எம்அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே;இரவலர்க்கு எண்மை யல்லது; புரவு எதிர்ந்து 5வானம் நாண, வரையாது, சென்றோர்க்குஆனாது ஈயும் கவிகை வண்மைக்கடுமான் கோதை துப்பெதிர்ந்து எழுந்தநெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப்,பாசிலைத் தொடுத்த உவலைக் கண்ணி, 10மாசுண் உடுக்கை, மடிவாய், இடையன்சிறுதலை ஆயமொடு குறுகல் செல்லாப்புலிதுஞ்சு வியன்புலத்து அற்றேவலிதுஞ்சு தடக்கை அவனுடை நாடே.  


55. மூன்று அறங்கள்!
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார்.பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.திணை: பாடாண். துறை: செவியறிவுறூஉ. 
ஓங்கு மலைப் பெருவில் பாம்புஞாண் கொளீஇ,ஒரு கணை கொண்டு மூவெயில் உடற்றிப்பெரு விறல் அமரர்க்கு வெற்றி தந்தகறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்பிறை நுதல் விளங்கும் ஒருகண் போல,
5வேந்து மேம்பட்ட பூந்தார் மாற!கடுஞ் சினத்த கொல் களிறும்;கதழ் பரிய கலி மாவும்,நெடுங் கொடிய நிமிர் தேரும்,நெஞ் சுடைய புகல் மறவரும், என
10நான்குடன் மாண்ட தாயினும், மாண்டஅறநெறி முதற்றே, அரசின் கொற்றம்;அதனால், நமரெனக் கோல்கோ டாது,பிறர் எனக் குணங் கொல்லாது,,ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும்,
15திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும்,வானத்து அன்ன வண்மையும், மூன்றும்,உடையை ஆகி, இல்லோர் கையற,நீநீடு வாழிய நெடுந்தகை! தாழ்நீர்!வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில் 20நெடுவேள் நிலைஇய காமர் வியந்துறைக்கடுவளி தொகுப்ப ஈண்டியவடுஆழ் எக்கர் மணலினும் பலவே!  


56. கடவுளரும் காவலனும்!
பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்; (மதுரை மருதன் இளநாகனார் எனவும் பாடம்).பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.திணை: பாடாண். துறை : பூவை நிலை. 
ஏற்று வலன் உயரிய எரிமருள் அவிர்சடை,மாற்றருங் கணிச்சி, மணி மிடற் றோனும்,கடல் வளர் புரிவளை புரையும் மேனி,அடல் வெந் நாஞ்சில், பனைக்கொடி யோனும்;மண் ணுறு திருமணி புரையும் மேனி,
5விண்ணுயர் புல்கொடி, விறல்வெய் யொனும்,மணி மயில் உயரிய மாறா வென்றிப்,பிணிமுக ஊர்தி, ஒண்செய் யோனும்_எனஞாலம் காக்கும் கால முன்பின்,தோலா நல்இசை, நால்வர் உள்ளும், 10கூற்றுஒத் தீயே, மாற்றருஞ் சீற்றம்;வலிஒத் தீயே, வாலி யோனைப்;புகழ்ஒத் தீயே, இகழுநர் அடுநனை;முருகுஒத் தீயே, முன்னியது முடித்தலின்;ஆங்குஆங்கு அவரவர் ஒத்தலின், யாங்கும் 15அரியவும் உளவோ, நினக்கே? அதனால்,இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈயா,யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்பொன்செய் புனை கலத்து ஏந்தி, நாளும்ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ்சிறந்து, 20ஆங்கினிது ஒழுகுமதி! ஓங்குவாள் மாற!அங்கண் விசும்பின் ஆரிருள் அகற்றும்வெங்கதிர்ச் செல்வன் போலவும், குடதிசைத்தண்கதிர் மதியம் போல்வும்,நின்று நிலைஇயர், உலகமோடு உடனே! 25


57. காவன்மரமும் கட்டுத்தறியும்!
பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.பாடப்பட்டோர்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.திணை: வஞ்சி. துறை : துணை வஞ்சி. 
வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன,உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற!நின்னொன்று கூறுவது உடையோன்; என்னெனின்,நீயே, பிறர்நாடு கொள்ளும்காலை, அவர் நாட்டு 5இறங்கு கதிர் கழனிநின் இளையரும் கவர்க:நனந்தலைப் பேரூர் எரியும் நைக்க;மின்னு நிமிர்ந் தன்ன நின்ஒளிறு இலங்கு நெடுவேல்ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்கடிமரம் தடிதல் ஓம்பு! நின் 10நெடுதல் யானைக்குக் கந்தாற் றாவே  


58. புலியும் கயலும்!
பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.பாடப்பட்டோர்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவனும்பாண்டியன் வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெரு வழுதியும்.குறிப்பு: இருவேந்தரும் ஒருங்கிருந்தபோது பாடியது.திணை: பாடாண். துறை : உடனிலை. 
நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவளே,முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக்கொழுநிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்,தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது.நல்லிசை முதுகுடி நடுக்குஅறத் தழீஇ,
5இளையது ஆயினும் கிளைஅரா எறியும்,அருநரை உருமின், பெருநரைப் பொறாஅச்செருமாண் பஞ்சவர் ஏறே; நீயே,அறந்துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே,நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென, 10வரைய சாந்தமும், திரைய முத்தமும்,இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும்,தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே;பால்நிற உருவின் பனைக்கொடி யோனும்,நீல்நிற உருவின், நேமியோனும், என்று 15இருபெருந் தெய்வமும் உடன் நின் றாஅங்கு,உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி,இந்நீர் ஆகலின், இனியவும் உளவோ?இன்னும் கேண்மின் நும் இசைவா ழியவே;ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும் 20உடனிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப்பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம்கையகப் படுவது பொய்யா காதே;அதனால், நல்ல போலவும், நயவ போலவும்,தொல்லோர் சென்ற நெறியர் போலவும், 25காதல் நெஞ்சின்நும் புணர்ச்சி; வென்று வென்றுஅடுகளத்து உயர்க நும் வேலே; கொடுவரிக்கோள்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறிநெடுநீர்க் கெண்டையொடு பொறித்தகுடுமிய ஆக, பிறர் குன்றுகெழு நாடே. 30


59. பாவலரும் பகைவரும்!
பாடியவர்: மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.பாடப்பட்டோன்: பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்.திணை: பாடாண்.துறை : பூவைநிலை. 
ஆரம் தாழ்ந்த அணிகிளிர் மார்பின்,தாள்தோய் தடக்கைத், தகைமாண் வழுதி!வல்லை மன்ற, நீநயந் தளித்தல்!தேற்றாய், பெரும! பொய்யே; என்றும்காய்சினம் தவிராது கடல்ஊர்பு எழுதரும் 5ஞாயிறு அனையை, நின் பகைவர்க்குத்;திங்கள் அனையை, எம்ம னோர்க்கே.  


60. மதியும் குடையும்!
பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார். குடை புறப்பட்டதெனக் இருதித் தொழுதேம் என்று .பாடப்பட்டோன்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவன்.திணை: பாடாண். துறை : குடை மங்கலம். 
முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச்,செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்உச்சி நின்ற உவவுமதி கண்டு,கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த,சில் வளை விறலியும், யானும், வல்விரைந்து, 5தொழுதனம் அல்லமோ, பலவே! கானல்கழிஉப்பு முகந்து கல்நாடு மடுக்கும்ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்உரனுடை நோன்பகட்டு அன்ன எங்கோன்,வலன் இரங்கு முரசின் வாய்வாள் வளவன், 10வெயில்மறைக் கொண்ட உருகெழு சிறப்பின்மாலை வெண்குடை ஒக்குமால் எனவே?  


61. மலைந்தோரும் பணிந்தோரும்!
பாடியவர்: கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக் குமரனார்.பாடப்பட்டோன்: சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி. திணை; வாகை. துறை; அரச வாகை. 
கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்,மலங்கு மிளிர், செறுவின் தளம்புதடிந் திட்டபழன வாளைப் பரூஉக்கண் துணியல்புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை ஆக, 5விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி,நீடுகதிர்க் கழனிச் சூடுதடு மாறும்வன்கை வினைஞர் புன்தலைச் சிறாஅர்தெங்குபடு வியன்பழம் முனையின், தந்தையர்குறைக்கண் நெடுபோர் ஏறி, விசைத் தெழுந்து, 10செழுங்கோட் பெண்ணைப் பழந்தொட முயலும்,வைகல் யாணர், நன்னாட்டுப் பொருநன்,எகுவிளங்கு தடக்கை இயல்தேர்ச் சென்னி,சிலைத்தார் அகலம் மலைக்குநர் உளர்எனின்,தாமறி குவர்தமக்கு உறுதி; யாம் அவன் 15எழுஉறழ் திணிதோள் வழுவின்றி மலைந்தோர்வாழக் கண்டன்றும் இலமே; தாழாது,திருந்து அடி பொருந்த வல்லோர்வருந்தக் காண்டல், அதனினும் இலமே!  


62. போரும் சீரும்!
பாடியவர்: கழாத் தலையார்.பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்; சோழன் வேற்பறடக் கைப் பெருவிறற் கிள்ளி.குறிப்பு: போர்ப்புறத்துப் பொருது இவர் வீழ்ந்த காலைப் பாடியது.திணை: தும்பை. துறை : தொகை நிலை. 
வருதார் தாங்கி, அமர்மிகல் யாவது?பொருது ஆண்டொழிந்த மைந்தர் புண்தொட்டுக்,குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி,நிறம்கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்எடுத்துஎறி அனந்தற் பறைச்சீர் தூங்கப், 5பருந்து அருந்துற்ற தானையொடு செருமுனிந்து,அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்தாம்மாய்ந் தனரே; குடைதுளங் கினவே;உரைசால் சிறப்பின் முரசு ஒழிந்தனவே;பன்னூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம் 10இடம்கெட ஈண்டிய வியன்கண் பாசறைக்,களங்கொளற்கு உரியோர் இன்றித், தெறுவர,உடன்வீழ்ந் தன்றால், அமரே; பெண்டிரும்பாசடகு மிசையார், பனிநீர் மூழ்கார்,மார்பகம் பொருந்தி ஆங்கமைந் தன்றே; 15வாடாப் பூவின், இமையா நாட்டத்து,நாற்ற உணவினோரும் ஆற்றஅரும்பெறல் உலகம் நிறையவிருந்துபெற் றனரால்; பொலிக, நும் புகழே!  


63. என்னாவது கொல்?
பாடியவர்: பரணர்.பாடப்பட்டோன்: சோழன் வேற்பறடக்கைப் பெருவிறற் கிள்ளி; சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்.குறிப்பு: இருவரும் பொருது களத்தில் வீழ்ந்த போது பாடியது.திணை: தும்பை. துறை : தொகை நிலை. 
எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி,விளைக்கும் வினையின்றிப் படைஒழிந் தனவே;விறற் புகழ் மாண்ட புரவி எல்லாம்மறத் தகை மைந்தரொடு ஆண்டுப்பட் டனவே;தேர்தர வந்த சான்றோர் எல்லாம், 5தோல் கண் மறைப்ப, ஒருங்கு மாய்ந்தனரே;விசித்து வினை மாண்ட மயிர்க்கண் முரசம்,பொறுக்குநர் இன்மையின், இருந்துவிளிந் தனவே;சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென,வேந்தரும் பொருது, களத்து ஒழிந்தனர்; இனியே, 10என்னா வதுகொல் தானே; கழனிஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்பாசவல் முக்கித், தண்புனல் பாயும்,யாணர் அறாஅ வைப்பின்காமர் கிடக்கை அவர் அகன்றலை நாடே? 15


64. புற்கை நீத்து வரலாம்!
பாடியவர்: நெடும்பல்லியத்தனார்.பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.திணை: பாடாண். துறை : விறலியாற்றுப்படை. 
அருமிளை இருக்கை யதுவே-மனைவியும்,வேட்டச் சிறா அர் சேட்புலம் படராது,படைமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் மிதவை,யாணர் நல்லவை பாணரொடு, ஓராங்கு 5வருவிருந்து அயரும் விருப்பினள் ; கிழவனும்அருஞ்சமம் ததையத் தாக்கிப், பெருஞ்சமத்துஅண்ணல் யானை அணிந்தபொன்செய் ஓடைப் பெரும்பரி சிலனே.நல்யாழ்,ஆகுளி, பதலையொடு சுருக்கிச், 10செல்லா மோதில் சில்வளை விறலி!களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை,விசும்புஆடு எருவை புசுந்தடி தடுப்பப்,பகைப்புலம் மரீஇய தகைப்பெருஞ் சிறப்பின்குடுமிக் கோமாற் கண்டு, 15நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே?  


65. நாணமும் பாசமும்!
பாடியவர்: கழாஅத் தலையார்.பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சேரலாதன்; இவன் கரிகாற் பெருவளத்தானோடு பொருது புறப்புண்பட்டு, வடக்கிருந்தபோது பாடியது.திணை: பொதுவியல். துறை : கையறுநிலை.சிறப்பு: புறப்புண்பட்டோர் நாணி வடக்கிருந்து உயிர்விடும் மரபு. 
மண்முழா மறப்பப், பண் யாழ் மறப்பஇருங்கண் குழிசி கவிழ்ந்து இழுது பறப்பச்,சுரும்பூஆர் தேறல் சுற்றம் மறப்ப,உழவர் ஓதை மறப்ப, விழவும்அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப, 5உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து,இருசுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர்புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்,தன்போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்தபுறப்புண் நாணி, மறத்தகை மன்னன் 10வாள் வடக்கு இருந்தனன்; ஈங்கு,நாள்போல் கழியல, ஞாயிற்றுப் பகலே!  


66. நல்லவனோ அவன்!
பாடியவர்: வெண்ணிக் குயத்தியார்: வெண்ணிற் குயத்தியார் எனவும் பாடம்.பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.திணை: வாகை. துறை : அரச வாகை. 
நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி,வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!களி இயல் யானைக் கரிகால் வளவ!சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்றவென்றோய், நின்னினும் நல்லன் அன்றே 5கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,மிகப் புகழ் உலகம் எய்திப்,புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே!  


67. அன்னச் சேவலே!
பாடியவர்: பிசிராந்தையார்.பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்,திணை: பாடாண். துறை: இயன்மொழி. 
அன்னச் சேவல் ! அன்னச் சேவல் !ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்நாடு தலை அளிக்கும் ஒண்முகம் போலக்,கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்மையல் மாலை யாம் கையறுபு இனையக், 5குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி,வடமலைப் பெயர்குவை ஆயின், இடையதுசோழ நன்னாட்டுப் படினே, கோழிஉயர் நிலை மாடத்துக், குறும்பறை அசைஇ,வாயில் விடாது கோயில் புக்கு, எம் 10பெருங் கோக் கிள்ளி கேட்க, இரும்பிசிர்ஆந்தை அடியுறை எனினே, மாண்ட நின்இன்புறு பேடை அணியத், தன்அன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே.  


68. மறவரும் மறக்களிரும்!
பாடியவர்: கோவூர் கிழார். பாடப்பட்டோன்; சோழன் நலங்கிள்ளி.திணை: பாடாண். துறை: பாணாற்றுப்படை. 
உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின்கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது,சில்செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து,ஈங்குஎவன் செய்தியோ? பாண ! பூண்சுமந்து,அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து 5மென்மையின் மகளிர்க்கு வணங்கி,வன்மையின்ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை,புனிறு தீர் குழவிக்கு இலிற்றுமுலை போலச்சுரந்த காவிரி மரங்கொல் மலிநீர்மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன், 10உட்பகை ஒருதிறம் பட்டெனப், புட்பகைக்குஏவான் ஆகலின், சாவோம் யாம் என,நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத்,தணிபறை அறையும் அணிகொள் தேர்வழிக்கடுங்கண் பருகுநர் நடுங்குகை உகத்த 15நறுஞ்சேறு ஆடிய வறுந்தலை யானைநெடுனகர் வரைப்பின் படுமுழா ஓர்க்கும்உறந்தை யோனே குருசில்;பிறன்கடை மறப்ப நல்குவன், செலினே!  


69. காலமும் வேண்டாம்!
பாடியவர்: ஆலந்தூர் கிழார்.பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.திணை:பாடாண். துறை: பாணாற்றுப்படை. 
கையது, கடன் நிறை யாழே; மெய்யது,புரவலர் இன்மையின் பசியே; அரையதுவேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர்ஓம்பி உடுத்த உயவற் பாண!பூட்கை இல்லோன் யாக்கை போலப் 5பெரும்புல் என்ற இரும் பேர் ஒக்கலை;வையகம் முழுவதுடன் வளைப், பையெனஎன்னை வினவுதி ஆயின், மன்னர்அடுகளிறு உயவும் கொடிகொள் பாசறைக்,குருதிப் பரப்பின் கோட்டுமா தொலைச்சிப். 10புலாக் களம் செய்த கலாஅத் தானையன்பிறங்கு நிலை மாடத்து உறந்தை யோனே!பொருநர்க்கு ஓங்கிய வேலன், ஒரு நிலைப்பகைப் புலம் படர்தலும் உரியன் ; தகைத் தார்ஒள்ளெரி புரையும் உருகெழு புசும்பூண் 15கிள்ளி வளவற் படர்குவை ஆயின்,நெடுங் கடை நிற்றலும் இலையே; கடும் பகல்தேர்வீசு இருக்கை ஆர நோக்கி,நீ அவற் கண்ட பின்றைப், பூவின்ஆடுவண்டு இமிராத் தாமரை 20சூடாய் ஆதல் அதனினும் இலையே.  


70. குளிர்நீரும் குறையாத சோறும்
பாடியவர்: கோவூர் கிழார்: (கோவூர் அழகியார் எனவும் பாடம்).பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.திணை : பாடாண். துறை: பாணாற்றுப்படை. 
தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண!கயத்து வாழ் யாமை காழ்கோத் தன்னநுண்கோல் தகைத்த தெண்கண் மாக்கிணைஇனிய காண்க; இவண் தணிக எனக் கூறி;வினவல் ஆனா முதுவாய் இரவல! 5தைத் திங்கள் தண்கயம் போலக்,கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்,அடுதீ அல்லது சுடுதீ அறியாது;இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்,கிள்ளி வளவன் நல்லிசை யுள்ளி, 10நாற்ற நாட்டத்து அறுகாற் பறவைசிறுவெள் ளாம்பல் ஞாங்கர்,ஊதும்கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப்பாதிரி கமழும் ஓதி, ஒண்ணுதல்,இன்னகை விறலியொடு மென்மெல இயலிச் 15செல்வை ஆயின், செல்வை ஆகுவை;விறகுஒய் மாக்கள் பொன்பெற் றன்னதோர்,தலைப்பாடு அன்று, அவன் ஈகை;நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே!  


71. இவளையும் பிரிவேன்!
பாடியவர்: ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்திணை: காஞ்சி துறை: வஞ்சினக் காஞ்சி 
மடங்கலின் சினைஇ, மடங்கா உள்ளத்து,அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்துஎன்னொடு பொருந்தும் என்ப ; அவரைஆரமர் அலறத் தாக்கித் தேரொடுஅவர்ப்புறம் காணேன் ஆயின் - சிறந்த 5பேரமர் உண்கண் இவளினும் பிரிக:அறன்நிலை திரிய அன்பின் அவையத்துத்,திறன்இல் ஒருவனை நாட்டி, முறை திரிந்துமெலிகோல் செய்தேன் ஆகுக; மலி புகழ்வையை சூழ்ந்த வலங்கெழு வைப்பின் 10பொய்யா யாணர் மையற் கோமான்மாவனும், மன்எயில் ஆந்தையும், உரைசால்அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும்,வெஞ்சின இயக்கனும், உளப்படப் பிறரும்,கண்போல் நண்பிற் கேளிரொடு கலந்த 15இன்களி மகிழ்நகை இழுக்கிய யான் ஒன்றோ,மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்ததென்புலம் காவலின் ஒரிஇப், பிறர்வன்புலங் காவலின் மாறி யான் பிறக்கே!  


72. இனியோனின் வஞ்சினம்!
பாடியவர்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்திணை: காஞ்சி துறை: வஞ்சினக் காஞ்சி 
நகுதத் கனரே, நாடு மீக் கூறுநர்;இளையன் இவன் என உளையக் கூறிப்படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்நெடுநல் யானையும், தேரும், மாவும்,படைஅமை மறவரும், உடையும் யாம் என்று 5உறுதுப்பு அஞ்சாது, உடல்சினம் செருக்கிச்சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரைஅருஞ்சமஞ் சிதையத் தாக்கி, முரசமொடுஒருங்கு அகப் படேஎன் ஆயின்; பொருந்தியஎன் நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது, 10கொடியன்எம் இறை எனக் கண்ணீர் பரப்பிக்,குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்விமாங்குடி மருதன் தலைவன் ஆக,உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின் 15புலவர் பாடாது வரைக, என் நிலவரை;புரப்போர் புன்கண் கூர,இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே.  


73. உயிரும் தருகுவன்!
பாடியவர்:சோழன் நலங்கிள்ளி; 'நல்லுருத்திரன் பாட்டு' எனவும் பாடம்.திணை: காஞ்சி துறை: வஞ்சினக் காஞ்சி 
மெல்ல வந்து, என் நல்லடி பொருந்தி,ஈயென இரக்குவர் ஆயின், சீருடைமுரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்;இன்னுயிர்ஆயினும்கொடுக்குவென், இந்நிலத்துஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது, என் 5உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின்துஞ்சு புலி இடறிய சிதடன் போல,உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக்கழைதின் யானைக் கால் அகப் பட்டவன்றிணி நீண்முளை போலச், சென்று அவண் 10வருந்தப் பொரேஎன் ஆயின், பொருந்தியதீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்பல்லிருங் கூந்தல் மகளிர்ஒல்லா முயக்கிடைக் குழைக, என் தாரே!  


74. வேந்தனின் உள்ளம்!
பாடியவன்: சேரமான் கணைக்கா லிரும்பொறைதிணை: பொதுவியல் துறை; முதுமொழிக் காஞ்சி 'தாமே தாங்கியதாங்கரும் பையுள்' என்னும் துறைக்குக் காட்டுவர் இளம்பூரணர் 
குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,ஆள் அன்று என்று வாளின் தப்பார்தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇயகேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத், 5தாம் இரந்து உண்ணும் அளவைஈன்ம ரோ, இவ் உலகத் தானே?  


75. அரச பாரம்!
பாடியவன்: சோழன் நலங்கிள்ளிதிணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி 
மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்,பால்தர வந்த பழவிறல் தாயம்எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு எனகுடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச்சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே! 5மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள்விழுமியோன் பெறுகுவன் ஆயின், தாழ்நீர்அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடைஎன்றூழ் வாடுவறல் போல, நன்றும்நொய்தால் அம்ம தானே-மையற்று, 10விசும்புஉற ஓங்கிய வெண்குடைமுரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே.

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.