LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

புறநானூறு-7

 

151. அடைத்த கதவினை!
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: இளவிச்சிக்கோ.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.
குறிப்பு: இளங் கண்டீரக்கோவும், இளவிச்சிக்கோவும் ஒருங்கு இருந்தன.அவண் சென்ற புலவர் இளங்கண்டீரக் கோவைபப் புல்லி, இளவிச்சிக்கோவைப் புல்லராயினர். 'என்னை என் செயப் புல்லீராயினர்' என அவன் கேட்கப் புலவர் பாடிய செய்யுள் இது. (இருவரது குடியியல்புகளையும் கூறிப் பாடுதலால்
இயன்மொழி ஆயிற்று.) 
பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப,
விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்
கிழவன் சேட்புலம் படரின், இழை அணிந்து,
புன்தலை மடப்பிடி பரிசிலாகப்,
பெண்டிரும் தம்பதம் கொடுக்கும் வண்புகழ்க் 5
கண்டீ ரக்கோன் ஆகலின், நன்றும்
முயங்கல் ஆன்றிசின், யானே: பொலந்தேர்
நன்னன் மருகன் அன்றியும், நீயும்
முயங்கற்கு ஒத்தனை மன்னே: வயங்கு மொழிப்
பாடுநர்க்கு அடைத்த கதவின், ஆடு மழை 10
அணங்குசால் அடுக்கம் பொழியும் நும்
மணங்கமழ் மால்வரை வரைந்தனர், எமரே.  
152. பெயர் கேட்க நாணினன்!
பாடியவர்: வண்பரணர்.
பாடப்பட்டோன்: வல்வில் ஓரி.
திணை: பாடாண். 
துறை: பரிசில் விடை.
சிறப்பு: ஓரியது பெருமித நிலையின் விளக்கம்; அவன் வேட்டுவக் குடியினன் என்பது.
( பரிசில் பெற்ற புலவர், அவனை வியந்து பாடியது இச் செய்யுள்) 
`வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்,
புழல்தலை புகர்க்கலை உருட்டி, உரல்தலைக்
கேழற் பன்றி வீழ, அயலது
ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும், 5
வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன்,
புகழ்சால் சிறப்பின் அம்புமிகத் திளைக்கும்
கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்று இவன்
விலைவன் போலான்: வெறுக்கைநன்கு உடையன்:
ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்,
10
சாரல் அருவிப் பயமலைக் கிழவன்,
ஓரி கொல்லோ? அல்லன் கொல்லோ?
பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும்
மண்முழா அமைமின் ; பண்யாழ் நிறுமின் ;
கண்விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்: 15
எல்லரி தொடுமின் ; ஆகுளி தொடுமின்;
பதலை ஒருகண் பையென இயக்குமின்;
மதலை மாக்கோல் கைவலம் தமின்` என்று,
இறைவன் ஆகலின், சொல்லுபு குறுகி,
மூவேழ் துறையும் ழுறையுளிக் கழிப்பிக், 20
`கோ`வெனப் பெயரிய காலை, ஆங்கு அது
தன்பெயர் ஆகலின் நாணி, மற்று, யாம்
நாட்டிடன் நாட்டிடன் வருதும் ; ஈங்கு ஓர்
வேட்டுவர் இல்லை, நின் ஒப் போர்` என,
வேட்டது மொழியவும் விடாஅன், வேட்டத்தில் 25
தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு,
ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கித்,
தன்மலைப் பிறந்த தாவில் நன்பொன்
பன்மணிக் கு வையொடும் விரைஇக், `கொண்ம்` எனச்,
சுரத்துஇடை நல்கி யோனே : விடர்ச் சிமை 30
ஓங்குஇருங் கொல்லிப் பொருநன்,
ஓம்பா ஈகை விறல்வெய் யோனே!  
153. கூத்தச் சுற்றத்தினர்!
பாடியவர்: வண்பரணர்.
பாடப்பட்டோன்: வல்வில் ஓரி.
திணை: பாடாண். 
துறை: இயன் மொழி. 
மழையணி குன்றத்துக் கிழவன், நாளும்,
இழையணி யானை இரப்போர்க்கு ஈயும்,
சுடர்விடு பசும்பூண், சூர்ப்பு அமை முன்கை,
அடுபோர் ஆனா, ஆதன் ஓரி
மாரி வண்கொடை காணிய, நன்றும் 5
சென்றது மன், எம் கண்ணுளங் கடும்பே;
பனிநீர்ப் பூவா மணிமிடை குவளை
வால்நார்த் தொடுத்த கண்ணியும், கலனும்,
யானை இனத்தொடு பெற்றனர்; நீங்கிப்,
பசியார் ஆகல் மாறுகொல்; விசிபிணிக் 10
கூடுகொள் இன்னியம் கறங்க,
ஆடலும் ஒல்லார் தம் பாடலும் மறந்தே?  
154. இரத்தல் அரிது! பாடல் எளிது!
பாடியவர்: மோசிகீரனார்.
பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான்.
திணை: பாடாண். 
துறை: பரிசில் துறை. 
திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்,
அறியுநர்க் காணின், வேட்கை நீக்கும்
சின்னீர் வினவுவர், மாந்தர் : அதுபோல்,
அரசர் உழைய ராகவும், புரைதபு
வள்ளியோர்ப் படர்குவர், புலவர் ; அதனால், 5
`யானும்,`பெற்றது ஊதியம்; பேறியாது?` என்னேன்;
உற்றனென் ஆதலின் உள்ளிவந் தனனே;
`ஈயென இரத்தலோ அரிதே! நீ அது
நல்கினும், நல்காய் ஆயினும் வெல்போர்
எறிபடைக்கு ஓடா ஆண்மை, அறுவைத் 10
தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத்
தண்பல இழிதரும் அருவி நின்
கொண்டுபெருங்கானம், பாடல் எனக்கு எளிதே.  
155. ஞாயிறு எதிர்ந்த நெருஞ்சி!
பாடியவர்: மோசி கீரனார்.
பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான்.
திணை: பாடாண். 
துறை: பாணாற்றுப்படை 
வணர் கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ,
`உணர்வோர் யார், என் இடும்பை தீர்க்க``எனக்,
கிளக்கும், பாண! கேள், இனி நயத்தின்;
பாழ்ஊர் நெருஞ்சிப் பசலை வான்பூ
ஏர்தரு சுடரின் எதிர்கொண்டு ஆஅங்கு, 5
இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க்
கொண்பெருங்காலத்துக் கிழவன்
தண்தார் அகலம் நோக்கின், மலர்ந்தே.  
156. இரண்டு நன்கு உடைத்தே!
பாடியவர்: மோசிகீரனார்.
பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான்.
திணை: பாடாண். 
துறை: இயன்மொழி. 
ஒன்றுநன் குடைய பிறர் குன்றம்; என்றும்
இரண்டுநன் குடைத்தே கொண்பெருங் கானம்;
நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித்
தொடுத்துணக் கிடப்பினும் கிடக்கும்; அதான்று
நிறையருந் தானை வேந்தரைத் 5
திறைகொண்டு பெயர்க்குஞ் செம்மலும் உடைத்தே.  
157. ஏறைக்குத் தகுமே!
பாடியவர்: குறமகள் இளவெயினி.
பாடப்பட்டோன்: ஏறைக் கோன்.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.
சிறப்பு: ஏறைக் கோன் குறவர் குடியினன் என்பது. 
தமர்தன் தப்பின் அதுநோன் றல்லும்,
பிறர்கை யறவு தான்நா ணுதலும்,
படைப்பழி தாரா மைந்தினன் ஆகலும்,
வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும்,
நும்மோர்க்குத் தகுவன அல்ல; எம்மோன் 5
சிலைசெல மலர்ந்த மார்பின், கொலைவேல்,
கோடல் கண்ணிக் குறவர் பெருமகன்:
ஆடு மழை தவிர்க்கும் பயங்கெழு மீமிசை,
எற்படு பொழுதின், இனம்தலை மயங்கிக்,
கட்சி காணாக் கடமான் நல்லேறு 10
மடமான் நாகுபிணை பயிரின், விடர்முழை
இரும்புலிப் புகர்ப்போத்து ஓர்க்கும்
பெருங்கல் நாடன்-எம் ஏறைக்குத் தகுமே.  
158. உள்ளி வந்தெனன் யானே!
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன் : குமணன்.
திணை; பாடாண்.
துறை: வாழ்த்தியல்; பரிசில் கடாநிலையும் ஆம்.
சிறப்பு : எழுவர் வள்ளல்கள் என்னும் குறிப்பு. 
முரசுகடிப்பு இகுப்பவும், வால்வளை துவைப்பவும்,
அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக்,
கறங்குவெள் அருவி கல் அலைத்து ஒழுகும்
பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக்
கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும்; 5
காரி ஊர்ந்து பேரமர்க் கடந்த,
மாரி ஈகை, மறப்போர் மலையனும்;
ஊராது ஏந்திய குதிரைக், கூர்வேல்,
கூவிளங் கண்ணிக், கொடும்பூண், எழினியும்;
ஈர்ந்தண் சிலம்பின் இருள் தூங்கும் நளிமுழை, 10
அருந்திறல் கடவுள் காக்கும் உயர்சிமைப்,
பெருங்கல் நாடன் பேகனும்; திருந்து மொழி
மோசி பாடிய ஆயும்; ஆர்வமுற்று
உள்ளி வருநர் உலைவுநனி தீரத்,
தள்ளாது ஈயும் தகைசால் வண்மைக், 15
கொள்ளார் ஓட்டிய, நள்ளையும்; என ஆங்கு
எழுவர் மாய்ந்த பின்றை, அழி வரப்
பாடி வருநரும் பிறருங் கூடி
இரந்தோர் அற்றம் தீர்க்கென, விரைந்து இவண்
உள்ளி வந்தனென், யானே; விசும்புஉறக் 20
கழைவளர் சிலம்பின் வழையொடு நீடி,
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று,
முட்புற முதுகனி பெற்ற கடுவன்
துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்,
அதிரா யாணர், முதிரத்துக் கிழவ! 25
இவண்விளங்கு சிறப்பின் இயல்தேர்க் குமண!
இசைமேந் தோன்றிய வண்மையொடு,
பகைமேம் படுக, நீ ஏந்திய வேலே!  
159. கொள்ளேன்! கொள்வேன்!
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன் : குமணன்.
திணை: பாடாண். 
துறை: பரிசில் கடாநிலை.
சிறப்பு : வறுமை வாழ்வின் ஒரு கூற்றைக் காட்டும் சொல்லோவியம். 
`வாழும் நாளொடு யாண்டுபல உண்மையின்,
தீர்தல்செல் லாது, என் உயிர்` எனப் பலபுலந்து,
கோல்கால் ஆகக் குறும்பல ஒதுங்கி,
நூல்விரித் தன்ன கதுப்பினள், கண் துயின்று,
முன்றிற் போகா முதுர்வினள் யாயும்;
5
பசந்த மேனியொடு படர்அட வருந்தி,
மருங்கில் கொண்ட பல்குறு மாக்கள்
பிசைந்துதின வாடிய முலையள், பெரிது அழிந்து,
குப்பைக் கீரைக் கொய்கண் அகைத்த
முற்றா இளந்தளிர் கொய்துகொண்டு, உப்பின்று, 10
நீர்உலை யாக ஏற்றி, மோரின்று,
அவிழ்பதம் மறந்து, பாசடகு மிசைந்து,
மாசொடு குறைந்த உடுக்கையள், அறம் பழியாத்,
துவ்வாள் ஆகிய என்வெய் யோளும்;
என்றாங்கு, இருவர் நெஞ்சமும் உவப்பக் கானவர் 15
கரிபுனம் மயக்கிய அகன்கண் கொல்லை.
ஐவனம் வித்தி, மையுறக் கவினி,
ஈனல் செல்லா ஏனற்கு இழுமெனக்
கருவி வானம் தலைஇ யாங்கும்,
ஈத்த நின்புகழ் ஏத்தித், தொக்க என், 20
பசிதினத் திரங்கிய, ஒக்கலும் உவப்ப-
உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும்,
தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென்; உவந்து, நீ
இன்புற விடுதி யாயின், சிறிது
குன்றியும் கொள்வல், கூர்வேற் குமண! 25
அதற்பட அருளல் வேண்டுவல்-விறற்புகழ்
வசையில் விழுத்திணைப் பிறந்த
இசைமேந் தோன்றல்! நிற் பாடிய யானே.  
160. புலி வரவும் அம்புலியும்!
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன் : குமணன்.
திணை: பாடாண். 
துறை: பரிசில் கடாநிலை.
சிறப்பு : வறுமையின் ஒரு சோகமான காட்சி பற்றிய சொல்லோவியம்.
(பரிசிலை விரும்பி, அரசனைப் புகழ்ந்து வேண்டுகின்றார் புலவர்), 
உருகெழு ஞாயிற்று ஒண்கதிர் மிசைந்த
முளிபுல் கானம் குழைப்பக், கல்லென
அதிர்குரல் ஏறோடு துளிசொரிந் தாங்குப்
பசிதினத் திரங்கிய கசிவுடை யாக்கை
அவிழ்புகுவு அறியா தாகலின், வாடிய
5
நெறிகொள் வரிக்குடர் குனிப்பத் தண்ணெனக்,
குய்கொள் கொழுந்துவை நெய்யுடை அடிசில்,
சிறுபொன் நன்கலஞ் சுற்ற இரீஇக்
கோடின் றாக, பாடுநர் கடும்பு என,
அரிதுபெறு பொலங்கலம் எளிதினின் வீசி, 10
நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன்,
மட்டார் மறுகின், முதிரத் தோனே:
செல்குவை யாயின், நல்குவை, பெரிது` எனப்,
பல்புகழ் நுவலுநர் கூற, வல் விரைந்து,
உள்ளம் துரப்ப வந்தனென்; எள்ளுற்று, 15
இல்லுளைக் குடுமிப் புதல்வன் பன்மாண்
பாலில் வறுமுலைசுவைத்தனன்பெறாஅன்,
கூழும் சோறும் கடைஇ, ஊழின்
உள்ளில் வருங்கலம் திறந்து, அழக் கண்டு,
மறப்புலி உரைத்தும், மதியங் காட்டியும், 20
நொந்தனள் ஆகி, `நுந்தையை உள்ளிப்,
பொடிந்தநின் செவ்வி காட்டு` எனப் பலவும்
வினவல் ஆனா ளாகி, நனவின்
அல்லல் உழப்போள் மல்லல் சிறப்பச்,
செல்லாச் செல்வம் மிகுந்தனை, வல்லே 25
விடுதல் வேண்டுவல் அத்தை; படுதிரை
நீர்சூழ் நிலவரை உயர நின்
சீர்கெழு விழுப்புகழ் ஏத்துகம் பலவே.  
161. பின் நின்று துரத்தும்!
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன் : குமணன்.
திணை: பாடாண்.
துறை: பரிசில். குறிப்பு : பாடிப் பகடு பெற்றது.
(பரிசில் பெற்று அரசனைப் பாடிப் போற்றியது.) 
நீண்டொலி அழுவம் குறைய முகந்துகொண்டு,
ஈண்டுசெலல் கொண்மூ வேண்டுவயின் குழீஇப்
பெருமலை யன்ன தோன்றுதல், சூன்முதிர்பு,
உரும்உரறு கருவியொடு, பெயல்கடன் இறுத்து,
வள்மலை மாறிய என்றூழ்க் காலை,
5
மன்பதை யெல்லாம் சென்றுணர், கங்கைக்
கரைபொரு மலிநீர் நிறைந்து தோன்றியாங்கு,
எமக்கும் பிறர்க்கும் செம்மலை யாகலின்,
`அன்பில் ஆடவர் கொன்று, ஆறு கவரச்,
சென்று தலைவருந அல்ல, அன்பின்று,
10
வன்கலை தெவிட்டும், அருஞ்சுரம் இறந்தோர்க்கு,
இற்றை நாளொடும் யாண்டுதலைப் பெயர்` எனக்
கண் பொறி போகிய கசிவொடு, உரன்அழிந்து,
அருந்துயர் உழக்கும்என் பெருந்துன் புறுவி நின்
தாள்படு செல்வம் காண்டொறும் மருளப், 15
பனைமருள் தடக்கை யொடு முத்துப்படு முற்றிய
உயர்மருப்பு ஏந்திய வரைமருள் நோன்பகடு,
ஒளிதிகழ் ஓடை பொலிய, மருங்கில்
படுமணி இரட்ட, ஏறிச் செம்மாந்து,
செலல்நசைஇ உற்றனென்-விறல்மிகு குருசில்! 20
இன்மை துரப்ப, இசைதர வந்து, நின்
வண்மையில் தொடுத்தஎன் நயந்தினை கேண்மதி!
வல்லினும், வல்லேன் ஆயினும், வல்லே,
என்அளந்து அறிந்தனை நோக்காது, சிறந்த
நின் அளந்து அறிமதி, பெரும! என்றும் 25
வேந்தர் நாணப் பெயர்வேன்; சாந்தருந்திப்
பல்பொறிக் கொண்ட ஏந்துஎழில் அகலம்
மாண்இழை மகளிர் புல்லுதொறும் புகல,
நாள்முரசு இரங்கும் இடனுடை வரைப்பின்நின்
தாள்நிழல் வாழ்நர் நண்கலம் மிகுப்ப, 30
வாள் அமர் உயர்ந்தநின் தானையும்,
சீர்மிகு செல்வமும் ஏந்துகம் பலவே.  
162. இரவலர்அளித்த பரிசில்!
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன் : இளவெளிமான்.
திணை: பாடாண்.
துறை: பரிசில் விடை. 
சிறப்பு : புலவர் பெருமிதம். 
இரவலர் புரவலை நீயும் அல்லை!
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்;
இரவலர் உண்மையும் காண்,இனி; இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண், இனி; நின்ஊர்க்
கடுமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த 5
நெடுநல் யானை எம் பரிசில்;
கடுமான் தோன்றல்! செல்வல் யானே.  
163. தமிழ் உள்ளம்!
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன் : புலவரின் மனைவி.
திணை: பாடாண். 
துறை: பரிசில். 
நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும்,
பன்மாண் கற்பின்நின் கிளைமுத லோர்க்கும்,
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்,
இன்னோர்க்கு என்னாது, என்னோடும் சூழாது, 5
வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி-மனைகிழ வோயே!
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேல் குமணன் நல்கிய வளனே.  
164. வளைத்தாயினும் கொள்வேன்!
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப் பட்டோன்: குமணன்.
திணை: பாடாண். 
துறை: பரிசில் கடாநிலை. 
குறிப்பு: தம்பியால் நாடுகொள்ளப்பட்டுக் குமணன் காட்டிடத்து மறைந்து வாழ்ந்த காலை, அவனைக் கண்டு-பாடியது.
[பரிசில் விரும்பிப் பாடுதலால், பரிசில் கடாநிலை ஆயிற்று. வாகைத் திணையின் பகுதியாகிய, கடைக்கூட்டு நிலைக்கு இளம்பூரணர் எடுத்துக் காட்டுவர் (தொல். புறத்.சூ.30)] 
ஆடுநனி மறந்த கோடுஉயர் அடுப்பின்
ஆம்பி பூப்பத், தேம்புபசி உழவாப்,
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி,
இல்லி தூர்த்த பொல்லா வறுமுலை
சுவைத்தொறும் அழூஉம்தன் மகத்துவம் நோக்கி, 5
நீரொடு நிறைந்த ஈர்இதழ் மழைக்கண்என்
மனையோள் எவ்வம் நோக்கி, நினைஇ,
நிற்படர்ந் திசினே-நற்போர்க் குமண!
என்நிலை அறிந்தனை யாயின், இந்நிலைத்
தொடுத்தும் கொள்ளாது அமையலென்-அடுக்கிய 10
பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ்,
மண்ணமை முழவின், வயிரியர்
இன்மை தீர்க்குங் குடிப்பிறந் தோயே.  
165. இழத்தலினும் இன்னாது!
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன் : குமணன்.
திணை: பாடாண். 
துறை: பரிசில் விடை. குறிப்பு: காடு பற்றியிருந்த குமணன், புலவர் பரிசில் வேண்டிப் பாடத், தன் தலையைக் கொய்து கொண்டு தம்பியின் கையிற் கொடுத்துப் பொருள் பெற்றுப் போகுமாறு சொல்லித் தன் வாளைக் கொடுக்கப், பெற்றுப் புலவர் பாடியது. 
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே;
துன்னரும் சிறப்பின் உயர்ந்த செல்வர்,
இன்மையின் இரப்போர்க்கு ஈஇ யாமையின்,
தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே; 5
தாள்தாழ் படுமணி இரட்டும், பூனுதல்,
ஆடியல் யானை பாடுநர்க்கு அருகாக்
கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப்
பாடி நின்றெனன் ஆகக்,`கொன்னே
பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என் 10
நாடுஇழந் ததனினும் நனிஇன் னாது` என,
வாள்தந் தனனே, தலை எனக்கு ஈயத்,
தன்னிற் சிறந்தது பிறிதுஒன்று இன்மையின்;
ஆடுமலி உவகையோடு வருவல்,
ஓடாப் பூட்கைநிற் கிழமையோன் கண்டே. 15
166. யாமும் செல்வோம்!
பாடியவர்: ஆவூர் மூலங் கிழார்.
பாடப்பட்டோன் : சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன். 
திணை: வாகை. 
துறை: பார்பபன வாகை. 
நன் றாய்ந்த நீள் நிமிர்சடை
முது முதல்வன் வாய் போகாது,
ஒன்று புரிந்த ஈரி ரண்டின்,
ஆறுணர்ந்த ஒரு முதுநூல்
இகல் கண்டோர் மிகல் சாய்மார்,
5
மெய் அன்ன பொய் உணர்ந்து,
பொய் ஓராது மெய் கொளீஇ,
மூவேழ் துறைபும் முட்டின்று போகிய
உரைசால் சிறப்பின் உரவோர் மருக!
வினைக்கு வேண்டி நீ பூண்ட
10
புலப் புல்வாய்க் கலைப் பச்சை
சுவல் பூண்ஞான் மிசைப் பொலிய;
மறம் கடிந்த அருங் கற்பின்,
அறம் புகழ்ந்த வலை சூடிச்,
சிறு நுதல், பேர் அகல் அல்குல்,
15
சில சொல்லின் பல கூந்தல், நின்
நிலைக் கொத்தநின் துணைத் துணைவியர்
தமக்கு அமைந்த தொழில் கேட்பக்;
காடு என்றா நாடுஎன்று ஆங்கு
ஈரேழின் இடம் முட்டாது, 20
நீர் நாண நெய் வழங்கியும்,
எண் நாணப் பல வேட்டும்,
மண் நாணப் புகழ் பரப்பியும்,
அருங் கடிப் பெருங் காலை,
விருந்து உற்றநின் திருந்து ஏந்துநிலை, 25
என்றும், காண்கதில் அம்ம, யாமே! குடாஅது
பொன்படு நெடுவரைப் புயல்ஏறு சிலைப்பின்,
பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்
தண்புனற் படப்பை எம்மூர் ஆங்கண்,
உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்; 30
செல்வல் அத்தை யானே; செல்லாது,
மழைஅண் ணாப்ப நீடிய நெடுவரைக்
கழைவளர் இமயம்போல,
நிலீஇயர் அத்தை, நீ நிலமிசை யானே?  
167. ஒவ்வொருவரும் இனியர்!
பாடியவர்: கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன் : சோழன் கடுமான் கிள்ளி.
திணை: வாகை. 
துறை: அரச வாகை. 
நீயே, அமர்காணின் அமர்கடந்து, அவர்
படை விலக்கி எதிர் நிற்றலின்,
வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கை யொடு,
கேள்விக்கு இனியை, கட்கின் னாயே!
அவரே, நிற்காணின் புறங் கொடுத்தலின், 5
ஊறுஅறியா மெய் யாக்கை யொடு.
கண்ணுக்கு இனியர்; செவிக்குஇன் னாரே!
அதனால்,நீயும் ஒன்று இனியை;அவரும்ஒன்றுஇனியர்;
ஒவ்வா யாவுள, மற்றே? வெல்போர்க்
கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி! 10
நின்னை வியக்குமிவ் வுலகம்; அது
என்னோ? பெரும! உரைத்திசின் எமக்கே.  
168. கேழல் உழுத புழுதி!
பாடியவர்: கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார்.
பாடப்பட்டோன் : பிட்டங் கொற்றன்.
திணை: பாடாண்.
துறை: பரிசில் துறை; இயன்மொழியும், அரச வாகையும் ஆம். 
அருவி ஆர்க்குங் கழைபயில் நனந்தலைக்
கறிவளர் அடுக்கத்து மலரந்த காந்தள்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக், கிளையொடு,
கடுங்கண் கேழல் உழுத பூழி,
நன்னாள் வருபதம் நோக்கிக், குறவர்
5
உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை
முந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார்,
மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்,
மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி
வான்கேழ் இரும்புடை கழாஅது, ஏற்றிச், 10
சாந்த விறகின் உவித்த புன்கம்,
கூதளங் கவினிய குளவி முன்றில்,
செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல்,
நறைநார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி, 15
வடிநவில் அம்பின் வில்லோர் பெரும!
கைவள் ஈகைக் கடுமான் கொற்ற!
வையக வரைப்பில் தமிழகம் கேட்பப்,
பொய்யாச் செந்நா நெளிய ஏத்திப்
பாடுப என்ப பரிசிலர், நாளும்; 20
ஈயா மன்னர் நாண,
வீயாது பரந்தநின் வசையில் வான் புகழே!  
169. தருக பெருமானே!
பாடியவர்: காவிரிபூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.
பாடப்பட்டோன் : பிட்டங்கொற்றன்.
திணை: பாடாண். 
துறை: பரிசில் கடாநிலை.
(பரிசில் வேட்டுப் பாடுதலால் பரிசில் கடாநிலை ஆயிற்று. அரசனின் வென்றிச் சிறப்பைப் போற்றியதும் காண்க.) 
நும்படை செல்லுங் காலை, அவர்படை
எறித்தெறி தானை முன்னரை எனாஅ,
அவர்படை வருஉங் காலை, நும்படைக்
கூழை தாங்கிய, அகல் யாற்றுக்
குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ, 5
அரிதால், பெரும! நின் செவ்வி என்றும்;
பெரிதால் அத்தை, என் கடும்பினது இடும்பை;
இன்னே விடுமதி பரிசில்! வென்வேல்
இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார்,
இகலினர் எறிந்த அகல்இலை முருக்கின் 10
பெருமரக் கம்பம் போலப்,
பொருநர்க்கு உலையாநின் வலன் வாழியவே!  
170. உலைக்கல்லன்ன வல்லாளன்!
பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார்.
பாடப்பட்டோன் : பிட்டங்கொற்றன்.
திணை: வாகை.
துறை: வல்லாண் முல்லை; தானை மறமும் ஆம். 
மரைபிரித்து உண்ட நெல்லி வேலிப்,
பரலுடை முன்றில், அங்குடிச் சீறூர்,
எல்அடிப் படுத்த, கல்லாக் காட்சி
வில்லுழுது உண்மார் நாப்பண், ஒல்லென,
இழிபிறப் பாளன் கருங்கை சிவப்ப, 5
வலிதுரந்து சிலைக்கும் வன்கண் கடுந்துடி,
புலிதுஞ்சு நெடுவரைக் குடிஞையோடு இரட்டும்
மலைகெழு நாடன் கூர்வேல் பிட்டன்,
குறுகல் ஓம்புமின், தெவ்விர்; அவனே
சிறுகண் யானை வெண்கோடு பயந்த 10
ஒளிதிகழ் முத்தம் விறலியர்க்கு ஈந்து,
நார்பிழிக் கொண்ட வெங்கள் தேறல்
பண்அமை நல்யாழ்ப் பாண்கடும்பு அருத்தி,
நசைவர்க்கு மென்மை அல்லது, பகைவர்க்கு
இரும்புபயன் படுக்குங் கருங்கைக் கொல்லன் 15
விசைத்துஎறி கூடமொடு பொருஉம்
உலைக்கல் அன்ன, வல்லா ளன்னே.  
171. வாழ்க திருவடிகள்!
பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.
பாடப்பட்டோன் : பிட்டங்கொற்றன்.
திணை: பாடாண். 
துறை: இயன்மொழி.
சிறப்பு: 'ஈவோர் அரிய இவ்வுலகத்து வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே' என்னும் வாழ்த்தில், உலகின் தன்மையைக் காணலாம். 
இன்று செலினுந் தருமே; சிறுவரை
நின்று செலினுந் தருமே ; பின்னும்,
முன்னே தந்தனென் என்னாது, துன்னி
வைகலும் செலினும், பொய்யலன் ஆகி,
யாம்வேண்டி யாங்குஎம் வறுங்கலம் நிறைப்போன்; 5
தான்வேண்டி யாங்குத் தன்இறை உவப்ப
அருந்தொழில் முடியரோ, திருந்துவேல் கொற்றன்;
இனமலி கதச்சேக் களனொடு வேண்டினும்,
களமலி நெல்லின் குப்பை வேண்டினும்,
அருங்கலம் களிற்றொடு வேண்டினும், பெருந்தகை 10
பிறர்க்கும் அன்ன அறத்தகை யன்னே,
அன்னன் ஆகலின், எந்தை உள்ளடி
முள்ளும் நோவ உற்றாக தில்ல!
ஈவோர் அரியஇவ் உலகத்து,
வாழ்வோர் வாழ, அவன் தாள் வாழியவே! 15
172. பகைவரும் வாழ்க!
பாடியவர்: வடமண்ணக்கன் தாமோதரனார்.
பாடப்பட்டோன் : பிட்டங்கொற்றன்.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி. 
ஏற்றுக உலையே; ஆக்குக சோறே;
கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள்ளிழைப்
பாடுவல் விறலியர் கோதையும் புனைக;
அன்னவை பலவும் செய்க ; என்னதூஉம்
பரியல் வெண்டா வருபதம் நாடி, 5
ஐவனங் காவல் பெய்தீ நந்தின்.
ஒளிதிகழ் திருந்துமணி நளியிருள் அகற்றும்
வன்புல நாடன், வயமான் பிட்டன்;
ஆரமர் கடக்கும் வேலும், அவனிறை
மாவள் ஈகைக் கோதையும். 10
மாறுகொள் மன்னரும், வாழியர் நெடிதே!  
173. யான் வாழுநாள் வாழிய!
பாடியவர்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
பாடப்பட்டோன்: சிறுகுடி கிழான் பண்ணன்.
திணை: பாடாண். 
துறை: இயன்மொழி. 
யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய!
பாணர் ! காண்க, இவன் கடும்பினது இடும்பை;
யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்ன
ஊணொலி அரவந் தானும் கேட்கும்;
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி 5
முட்டை கொண்டு வற்புலம் சேரும்
சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்,
சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்
இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும்,
மற்றும் மற்றும் வினவுதும், தெற்றெனப்; 10
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின், எமக்கே,  
174. அவலம் தீரத் தோன்றினாய்!
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன் : மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன்.
ணை: வாகை. 
துறை: அரச வாகை. 
அணங்குடை அவுணர் கணம்கொண்டுஒளித்தெனச்,
சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது,
இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து
இடும்பைகொள் பருவரல் தீரக், கடுந்திறல்
அஞ்சன் உருவன் தந்து நிறுத்தாங்கு, 5
அர சிழந்து இருந்த அல்லற் காலை,
முரசுஎழுந்து இரங்கும் முற்றமொடு, கரைபொருது
இரங்குபுனல் நெரிதரு மிகுபெருங் காவிரி
மல்லல் நன்னாட்டு அல்லல் தீரப்,
பொய்யா நாவிற் கபிலன் பாடிய, 10
மையணி நெடுவரை ஆங்கண் ஒய்யெனச்
செருப்புகல் மறவர் செல்புறம் கண்ட
எள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசை,
அருவழி இருந்த பெருவிறல் வளவன்
மதிமருள் வெண்குடை காட்டி, அக்குடை 15
புதுமையின் நிறுத்த புகழ்மேம் படுந!
விடர்ப்புலி பொறித்த கோட்டைச், சுடர்ப் பூண்,
சுரும்பார் கண்ணிப், பெரும்பெயர் நும்முன்
ஈண்டுச்செய் நல்வினை யாண்டுச்சென்று உணீஇயர்,
உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின், 20
ஆறுகொள் மருங்கின் மாதிரம் துழவும்
கவலை நெஞ்சத்து அவலந் தீர
நீதோன் றினையே-நிரைத்தார் அண்ணல்!
கல்கண் பொடியக், கானம் வெம்ப
மல்குநீர் வரைப்பில் கயம்பல உணங்கக், 25
கோடை நீடிய பைதறு காலை,
இருநிலம் நெளிய ஈண்டி,
உரும்உரறு கருவிய மழைபொழிந் தாங்கே!  
175. என் நெஞ்சில் நினைக் காண்பார்!
பாடியவர்: கள்ளில் ஆத்திரையனார்.
பாடப்பட்டோன் : ஆதனுங்கன்.
திணை: பாடாண். 
துறை: இயன்மொழி. 
எந்தை; வாழி; ஆதனுங்க ! என்
நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே;
நின்யான் மறப்பின், மறக்குங் காலை,
என்உயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும்,
என்யான் மறப்பின், மறக்குவென் - வென்வேல் 5
விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்
திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த
உலக இடைகழி அறைவாய் நிலைஇய
மலர்வாய் மண்டிலத் தன்ன, நாளும்
பலர்புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே. 10

151. அடைத்த கதவினை!
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.பாடப்பட்டோன்: இளவிச்சிக்கோ.திணை: பாடாண்.துறை: இயன்மொழி.குறிப்பு: இளங் கண்டீரக்கோவும், இளவிச்சிக்கோவும் ஒருங்கு இருந்தன.அவண் சென்ற புலவர் இளங்கண்டீரக் கோவைபப் புல்லி, இளவிச்சிக்கோவைப் புல்லராயினர். 'என்னை என் செயப் புல்லீராயினர்' என அவன் கேட்கப் புலவர் பாடிய செய்யுள் இது. (இருவரது குடியியல்புகளையும் கூறிப் பாடுதலால்இயன்மொழி ஆயிற்று.) 
பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப,விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்கிழவன் சேட்புலம் படரின், இழை அணிந்து,புன்தலை மடப்பிடி பரிசிலாகப்,பெண்டிரும் தம்பதம் கொடுக்கும் வண்புகழ்க் 5கண்டீ ரக்கோன் ஆகலின், நன்றும்முயங்கல் ஆன்றிசின், யானே: பொலந்தேர்நன்னன் மருகன் அன்றியும், நீயும்முயங்கற்கு ஒத்தனை மன்னே: வயங்கு மொழிப்பாடுநர்க்கு அடைத்த கதவின், ஆடு மழை 10அணங்குசால் அடுக்கம் பொழியும் நும்மணங்கமழ் மால்வரை வரைந்தனர், எமரே.  


152. பெயர் கேட்க நாணினன்!
பாடியவர்: வண்பரணர்.பாடப்பட்டோன்: வல்வில் ஓரி.திணை: பாடாண். துறை: பரிசில் விடை.சிறப்பு: ஓரியது பெருமித நிலையின் விளக்கம்; அவன் வேட்டுவக் குடியினன் என்பது.( பரிசில் பெற்ற புலவர், அவனை வியந்து பாடியது இச் செய்யுள்) 
`வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழிபேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்,புழல்தலை புகர்க்கலை உருட்டி, உரல்தலைக்கேழற் பன்றி வீழ, அயலதுஆழற் புற்றத்து உடும்பில் செற்றும், 5வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன்,புகழ்சால் சிறப்பின் அம்புமிகத் திளைக்கும்கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்று இவன்விலைவன் போலான்: வெறுக்கைநன்கு உடையன்:ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்,
10சாரல் அருவிப் பயமலைக் கிழவன்,ஓரி கொல்லோ? அல்லன் கொல்லோ?பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும்மண்முழா அமைமின் ; பண்யாழ் நிறுமின் ;கண்விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்: 15எல்லரி தொடுமின் ; ஆகுளி தொடுமின்;பதலை ஒருகண் பையென இயக்குமின்;மதலை மாக்கோல் கைவலம் தமின்` என்று,இறைவன் ஆகலின், சொல்லுபு குறுகி,மூவேழ் துறையும் ழுறையுளிக் கழிப்பிக், 20`கோ`வெனப் பெயரிய காலை, ஆங்கு அதுதன்பெயர் ஆகலின் நாணி, மற்று, யாம்நாட்டிடன் நாட்டிடன் வருதும் ; ஈங்கு ஓர்வேட்டுவர் இல்லை, நின் ஒப் போர்` என,வேட்டது மொழியவும் விடாஅன், வேட்டத்தில் 25தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு,ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கித்,தன்மலைப் பிறந்த தாவில் நன்பொன்பன்மணிக் கு வையொடும் விரைஇக், `கொண்ம்` எனச்,சுரத்துஇடை நல்கி யோனே : விடர்ச் சிமை 30ஓங்குஇருங் கொல்லிப் பொருநன்,ஓம்பா ஈகை விறல்வெய் யோனே!  


153. கூத்தச் சுற்றத்தினர்!
பாடியவர்: வண்பரணர்.பாடப்பட்டோன்: வல்வில் ஓரி.திணை: பாடாண். துறை: இயன் மொழி. 
மழையணி குன்றத்துக் கிழவன், நாளும்,இழையணி யானை இரப்போர்க்கு ஈயும்,சுடர்விடு பசும்பூண், சூர்ப்பு அமை முன்கை,அடுபோர் ஆனா, ஆதன் ஓரிமாரி வண்கொடை காணிய, நன்றும் 5சென்றது மன், எம் கண்ணுளங் கடும்பே;பனிநீர்ப் பூவா மணிமிடை குவளைவால்நார்த் தொடுத்த கண்ணியும், கலனும்,யானை இனத்தொடு பெற்றனர்; நீங்கிப்,பசியார் ஆகல் மாறுகொல்; விசிபிணிக் 10கூடுகொள் இன்னியம் கறங்க,ஆடலும் ஒல்லார் தம் பாடலும் மறந்தே?  


154. இரத்தல் அரிது! பாடல் எளிது!
பாடியவர்: மோசிகீரனார்.பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான்.திணை: பாடாண். துறை: பரிசில் துறை. 
திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்,அறியுநர்க் காணின், வேட்கை நீக்கும்சின்னீர் வினவுவர், மாந்தர் : அதுபோல்,அரசர் உழைய ராகவும், புரைதபுவள்ளியோர்ப் படர்குவர், புலவர் ; அதனால், 5`யானும்,`பெற்றது ஊதியம்; பேறியாது?` என்னேன்;உற்றனென் ஆதலின் உள்ளிவந் தனனே;`ஈயென இரத்தலோ அரிதே! நீ அதுநல்கினும், நல்காய் ஆயினும் வெல்போர்எறிபடைக்கு ஓடா ஆண்மை, அறுவைத் 10தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத்தண்பல இழிதரும் அருவி நின்கொண்டுபெருங்கானம், பாடல் எனக்கு எளிதே.  


155. ஞாயிறு எதிர்ந்த நெருஞ்சி!
பாடியவர்: மோசி கீரனார்.பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான்.திணை: பாடாண். துறை: பாணாற்றுப்படை 
வணர் கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ,`உணர்வோர் யார், என் இடும்பை தீர்க்க``எனக்,கிளக்கும், பாண! கேள், இனி நயத்தின்;பாழ்ஊர் நெருஞ்சிப் பசலை வான்பூஏர்தரு சுடரின் எதிர்கொண்டு ஆஅங்கு, 5இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க்கொண்பெருங்காலத்துக் கிழவன்தண்தார் அகலம் நோக்கின், மலர்ந்தே.  


156. இரண்டு நன்கு உடைத்தே!
பாடியவர்: மோசிகீரனார்.பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான்.திணை: பாடாண். துறை: இயன்மொழி. 
ஒன்றுநன் குடைய பிறர் குன்றம்; என்றும்இரண்டுநன் குடைத்தே கொண்பெருங் கானம்;நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித்தொடுத்துணக் கிடப்பினும் கிடக்கும்; அதான்றுநிறையருந் தானை வேந்தரைத் 5திறைகொண்டு பெயர்க்குஞ் செம்மலும் உடைத்தே.  


157. ஏறைக்குத் தகுமே!
பாடியவர்: குறமகள் இளவெயினி.பாடப்பட்டோன்: ஏறைக் கோன்.திணை: பாடாண். துறை: இயன்மொழி.சிறப்பு: ஏறைக் கோன் குறவர் குடியினன் என்பது. 
தமர்தன் தப்பின் அதுநோன் றல்லும்,பிறர்கை யறவு தான்நா ணுதலும்,படைப்பழி தாரா மைந்தினன் ஆகலும்,வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும்,நும்மோர்க்குத் தகுவன அல்ல; எம்மோன் 5சிலைசெல மலர்ந்த மார்பின், கொலைவேல்,கோடல் கண்ணிக் குறவர் பெருமகன்:ஆடு மழை தவிர்க்கும் பயங்கெழு மீமிசை,எற்படு பொழுதின், இனம்தலை மயங்கிக்,கட்சி காணாக் கடமான் நல்லேறு 10மடமான் நாகுபிணை பயிரின், விடர்முழைஇரும்புலிப் புகர்ப்போத்து ஓர்க்கும்பெருங்கல் நாடன்-எம் ஏறைக்குத் தகுமே.  


158. உள்ளி வந்தெனன் யானே!
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.பாடப்பட்டோன் : குமணன்.திணை; பாடாண்.துறை: வாழ்த்தியல்; பரிசில் கடாநிலையும் ஆம்.சிறப்பு : எழுவர் வள்ளல்கள் என்னும் குறிப்பு. 
முரசுகடிப்பு இகுப்பவும், வால்வளை துவைப்பவும்,அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக்,கறங்குவெள் அருவி கல் அலைத்து ஒழுகும்பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக்கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும்; 5காரி ஊர்ந்து பேரமர்க் கடந்த,மாரி ஈகை, மறப்போர் மலையனும்;ஊராது ஏந்திய குதிரைக், கூர்வேல்,கூவிளங் கண்ணிக், கொடும்பூண், எழினியும்;ஈர்ந்தண் சிலம்பின் இருள் தூங்கும் நளிமுழை, 10அருந்திறல் கடவுள் காக்கும் உயர்சிமைப்,பெருங்கல் நாடன் பேகனும்; திருந்து மொழிமோசி பாடிய ஆயும்; ஆர்வமுற்றுஉள்ளி வருநர் உலைவுநனி தீரத்,தள்ளாது ஈயும் தகைசால் வண்மைக், 15கொள்ளார் ஓட்டிய, நள்ளையும்; என ஆங்குஎழுவர் மாய்ந்த பின்றை, அழி வரப்பாடி வருநரும் பிறருங் கூடிஇரந்தோர் அற்றம் தீர்க்கென, விரைந்து இவண்உள்ளி வந்தனென், யானே; விசும்புஉறக் 20கழைவளர் சிலம்பின் வழையொடு நீடி,ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று,முட்புற முதுகனி பெற்ற கடுவன்துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்,அதிரா யாணர், முதிரத்துக் கிழவ! 25இவண்விளங்கு சிறப்பின் இயல்தேர்க் குமண!இசைமேந் தோன்றிய வண்மையொடு,பகைமேம் படுக, நீ ஏந்திய வேலே!  


159. கொள்ளேன்! கொள்வேன்!
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.பாடப்பட்டோன் : குமணன்.திணை: பாடாண். துறை: பரிசில் கடாநிலை.சிறப்பு : வறுமை வாழ்வின் ஒரு கூற்றைக் காட்டும் சொல்லோவியம். 
`வாழும் நாளொடு யாண்டுபல உண்மையின்,தீர்தல்செல் லாது, என் உயிர்` எனப் பலபுலந்து,கோல்கால் ஆகக் குறும்பல ஒதுங்கி,நூல்விரித் தன்ன கதுப்பினள், கண் துயின்று,முன்றிற் போகா முதுர்வினள் யாயும்;
5பசந்த மேனியொடு படர்அட வருந்தி,மருங்கில் கொண்ட பல்குறு மாக்கள்பிசைந்துதின வாடிய முலையள், பெரிது அழிந்து,குப்பைக் கீரைக் கொய்கண் அகைத்தமுற்றா இளந்தளிர் கொய்துகொண்டு, உப்பின்று, 10நீர்உலை யாக ஏற்றி, மோரின்று,அவிழ்பதம் மறந்து, பாசடகு மிசைந்து,மாசொடு குறைந்த உடுக்கையள், அறம் பழியாத்,துவ்வாள் ஆகிய என்வெய் யோளும்;என்றாங்கு, இருவர் நெஞ்சமும் உவப்பக் கானவர் 15கரிபுனம் மயக்கிய அகன்கண் கொல்லை.ஐவனம் வித்தி, மையுறக் கவினி,ஈனல் செல்லா ஏனற்கு இழுமெனக்கருவி வானம் தலைஇ யாங்கும்,ஈத்த நின்புகழ் ஏத்தித், தொக்க என், 20பசிதினத் திரங்கிய, ஒக்கலும் உவப்ப-உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும்,தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென்; உவந்து, நீஇன்புற விடுதி யாயின், சிறிதுகுன்றியும் கொள்வல், கூர்வேற் குமண! 25அதற்பட அருளல் வேண்டுவல்-விறற்புகழ்வசையில் விழுத்திணைப் பிறந்தஇசைமேந் தோன்றல்! நிற் பாடிய யானே.  


160. புலி வரவும் அம்புலியும்!
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.பாடப்பட்டோன் : குமணன்.திணை: பாடாண். துறை: பரிசில் கடாநிலை.சிறப்பு : வறுமையின் ஒரு சோகமான காட்சி பற்றிய சொல்லோவியம்.(பரிசிலை விரும்பி, அரசனைப் புகழ்ந்து வேண்டுகின்றார் புலவர்), 
உருகெழு ஞாயிற்று ஒண்கதிர் மிசைந்தமுளிபுல் கானம் குழைப்பக், கல்லெனஅதிர்குரல் ஏறோடு துளிசொரிந் தாங்குப்பசிதினத் திரங்கிய கசிவுடை யாக்கைஅவிழ்புகுவு அறியா தாகலின், வாடிய
5நெறிகொள் வரிக்குடர் குனிப்பத் தண்ணெனக்,குய்கொள் கொழுந்துவை நெய்யுடை அடிசில்,சிறுபொன் நன்கலஞ் சுற்ற இரீஇக்கோடின் றாக, பாடுநர் கடும்பு என,அரிதுபெறு பொலங்கலம் எளிதினின் வீசி, 10நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன்,மட்டார் மறுகின், முதிரத் தோனே:செல்குவை யாயின், நல்குவை, பெரிது` எனப்,பல்புகழ் நுவலுநர் கூற, வல் விரைந்து,உள்ளம் துரப்ப வந்தனென்; எள்ளுற்று, 15இல்லுளைக் குடுமிப் புதல்வன் பன்மாண்பாலில் வறுமுலைசுவைத்தனன்பெறாஅன்,கூழும் சோறும் கடைஇ, ஊழின்உள்ளில் வருங்கலம் திறந்து, அழக் கண்டு,மறப்புலி உரைத்தும், மதியங் காட்டியும், 20நொந்தனள் ஆகி, `நுந்தையை உள்ளிப்,பொடிந்தநின் செவ்வி காட்டு` எனப் பலவும்வினவல் ஆனா ளாகி, நனவின்அல்லல் உழப்போள் மல்லல் சிறப்பச்,செல்லாச் செல்வம் மிகுந்தனை, வல்லே 25விடுதல் வேண்டுவல் அத்தை; படுதிரைநீர்சூழ் நிலவரை உயர நின்சீர்கெழு விழுப்புகழ் ஏத்துகம் பலவே.  


161. பின் நின்று துரத்தும்!
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.பாடப்பட்டோன் : குமணன்.திணை: பாடாண்.துறை: பரிசில். குறிப்பு : பாடிப் பகடு பெற்றது.(பரிசில் பெற்று அரசனைப் பாடிப் போற்றியது.) 
நீண்டொலி அழுவம் குறைய முகந்துகொண்டு,ஈண்டுசெலல் கொண்மூ வேண்டுவயின் குழீஇப்பெருமலை யன்ன தோன்றுதல், சூன்முதிர்பு,உரும்உரறு கருவியொடு, பெயல்கடன் இறுத்து,வள்மலை மாறிய என்றூழ்க் காலை,
5மன்பதை யெல்லாம் சென்றுணர், கங்கைக்கரைபொரு மலிநீர் நிறைந்து தோன்றியாங்கு,எமக்கும் பிறர்க்கும் செம்மலை யாகலின்,`அன்பில் ஆடவர் கொன்று, ஆறு கவரச்,சென்று தலைவருந அல்ல, அன்பின்று,
10வன்கலை தெவிட்டும், அருஞ்சுரம் இறந்தோர்க்கு,இற்றை நாளொடும் யாண்டுதலைப் பெயர்` எனக்கண் பொறி போகிய கசிவொடு, உரன்அழிந்து,அருந்துயர் உழக்கும்என் பெருந்துன் புறுவி நின்தாள்படு செல்வம் காண்டொறும் மருளப், 15பனைமருள் தடக்கை யொடு முத்துப்படு முற்றியஉயர்மருப்பு ஏந்திய வரைமருள் நோன்பகடு,ஒளிதிகழ் ஓடை பொலிய, மருங்கில்படுமணி இரட்ட, ஏறிச் செம்மாந்து,செலல்நசைஇ உற்றனென்-விறல்மிகு குருசில்! 20இன்மை துரப்ப, இசைதர வந்து, நின்வண்மையில் தொடுத்தஎன் நயந்தினை கேண்மதி!வல்லினும், வல்லேன் ஆயினும், வல்லே,என்அளந்து அறிந்தனை நோக்காது, சிறந்தநின் அளந்து அறிமதி, பெரும! என்றும் 25வேந்தர் நாணப் பெயர்வேன்; சாந்தருந்திப்பல்பொறிக் கொண்ட ஏந்துஎழில் அகலம்மாண்இழை மகளிர் புல்லுதொறும் புகல,நாள்முரசு இரங்கும் இடனுடை வரைப்பின்நின்தாள்நிழல் வாழ்நர் நண்கலம் மிகுப்ப, 30வாள் அமர் உயர்ந்தநின் தானையும்,சீர்மிகு செல்வமும் ஏந்துகம் பலவே.  


162. இரவலர்அளித்த பரிசில்!
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.பாடப்பட்டோன் : இளவெளிமான்.திணை: பாடாண்.துறை: பரிசில் விடை. சிறப்பு : புலவர் பெருமிதம். 
இரவலர் புரவலை நீயும் அல்லை!புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்;இரவலர் உண்மையும் காண்,இனி; இரவலர்க்குஈவோர் உண்மையும் காண், இனி; நின்ஊர்க்கடுமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த 5நெடுநல் யானை எம் பரிசில்;கடுமான் தோன்றல்! செல்வல் யானே.  


163. தமிழ் உள்ளம்!
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.பாடப்பட்டோன் : புலவரின் மனைவி.திணை: பாடாண். துறை: பரிசில். 
நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும்,பன்மாண் கற்பின்நின் கிளைமுத லோர்க்கும்,கடும்பின் கடும்பசி தீர யாழநின்நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்,இன்னோர்க்கு என்னாது, என்னோடும் சூழாது, 5வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்எல்லோர்க்கும் கொடுமதி-மனைகிழ வோயே!பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்திருந்துவேல் குமணன் நல்கிய வளனே.  


164. வளைத்தாயினும் கொள்வேன்!
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.பாடப் பட்டோன்: குமணன்.திணை: பாடாண். துறை: பரிசில் கடாநிலை. குறிப்பு: தம்பியால் நாடுகொள்ளப்பட்டுக் குமணன் காட்டிடத்து மறைந்து வாழ்ந்த காலை, அவனைக் கண்டு-பாடியது.[பரிசில் விரும்பிப் பாடுதலால், பரிசில் கடாநிலை ஆயிற்று. வாகைத் திணையின் பகுதியாகிய, கடைக்கூட்டு நிலைக்கு இளம்பூரணர் எடுத்துக் காட்டுவர் (தொல். புறத்.சூ.30)] 
ஆடுநனி மறந்த கோடுஉயர் அடுப்பின்ஆம்பி பூப்பத், தேம்புபசி உழவாப்,பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி,இல்லி தூர்த்த பொல்லா வறுமுலைசுவைத்தொறும் அழூஉம்தன் மகத்துவம் நோக்கி, 5நீரொடு நிறைந்த ஈர்இதழ் மழைக்கண்என்மனையோள் எவ்வம் நோக்கி, நினைஇ,நிற்படர்ந் திசினே-நற்போர்க் குமண!என்நிலை அறிந்தனை யாயின், இந்நிலைத்தொடுத்தும் கொள்ளாது அமையலென்-அடுக்கிய 10பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ்,மண்ணமை முழவின், வயிரியர்இன்மை தீர்க்குங் குடிப்பிறந் தோயே.  


165. இழத்தலினும் இன்னாது!
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.பாடப்பட்டோன் : குமணன்.திணை: பாடாண். துறை: பரிசில் விடை. குறிப்பு: காடு பற்றியிருந்த குமணன், புலவர் பரிசில் வேண்டிப் பாடத், தன் தலையைக் கொய்து கொண்டு தம்பியின் கையிற் கொடுத்துப் பொருள் பெற்றுப் போகுமாறு சொல்லித் தன் வாளைக் கொடுக்கப், பெற்றுப் புலவர் பாடியது. 
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே;துன்னரும் சிறப்பின் உயர்ந்த செல்வர்,இன்மையின் இரப்போர்க்கு ஈஇ யாமையின்,தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே; 5தாள்தாழ் படுமணி இரட்டும், பூனுதல்,ஆடியல் யானை பாடுநர்க்கு அருகாக்கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப்பாடி நின்றெனன் ஆகக்,`கொன்னேபாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என் 10நாடுஇழந் ததனினும் நனிஇன் னாது` என,வாள்தந் தனனே, தலை எனக்கு ஈயத்,தன்னிற் சிறந்தது பிறிதுஒன்று இன்மையின்;ஆடுமலி உவகையோடு வருவல்,ஓடாப் பூட்கைநிற் கிழமையோன் கண்டே. 15


166. யாமும் செல்வோம்!
பாடியவர்: ஆவூர் மூலங் கிழார்.பாடப்பட்டோன் : சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன். திணை: வாகை. துறை: பார்பபன வாகை. 
நன் றாய்ந்த நீள் நிமிர்சடைமுது முதல்வன் வாய் போகாது,ஒன்று புரிந்த ஈரி ரண்டின்,ஆறுணர்ந்த ஒரு முதுநூல்இகல் கண்டோர் மிகல் சாய்மார்,
5மெய் அன்ன பொய் உணர்ந்து,பொய் ஓராது மெய் கொளீஇ,மூவேழ் துறைபும் முட்டின்று போகியஉரைசால் சிறப்பின் உரவோர் மருக!வினைக்கு வேண்டி நீ பூண்ட
10புலப் புல்வாய்க் கலைப் பச்சைசுவல் பூண்ஞான் மிசைப் பொலிய;மறம் கடிந்த அருங் கற்பின்,அறம் புகழ்ந்த வலை சூடிச்,சிறு நுதல், பேர் அகல் அல்குல்,
15சில சொல்லின் பல கூந்தல், நின்நிலைக் கொத்தநின் துணைத் துணைவியர்தமக்கு அமைந்த தொழில் கேட்பக்;காடு என்றா நாடுஎன்று ஆங்குஈரேழின் இடம் முட்டாது, 20நீர் நாண நெய் வழங்கியும்,எண் நாணப் பல வேட்டும்,மண் நாணப் புகழ் பரப்பியும்,அருங் கடிப் பெருங் காலை,விருந்து உற்றநின் திருந்து ஏந்துநிலை, 25என்றும், காண்கதில் அம்ம, யாமே! குடாஅதுபொன்படு நெடுவரைப் புயல்ஏறு சிலைப்பின்,பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்தண்புனற் படப்பை எம்மூர் ஆங்கண்,உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்; 30செல்வல் அத்தை யானே; செல்லாது,மழைஅண் ணாப்ப நீடிய நெடுவரைக்கழைவளர் இமயம்போல,நிலீஇயர் அத்தை, நீ நிலமிசை யானே?  


167. ஒவ்வொருவரும் இனியர்!
பாடியவர்: கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்.பாடப்பட்டோன் : சோழன் கடுமான் கிள்ளி.திணை: வாகை. துறை: அரச வாகை. 
நீயே, அமர்காணின் அமர்கடந்து, அவர்படை விலக்கி எதிர் நிற்றலின்,வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கை யொடு,கேள்விக்கு இனியை, கட்கின் னாயே!அவரே, நிற்காணின் புறங் கொடுத்தலின், 5ஊறுஅறியா மெய் யாக்கை யொடு.கண்ணுக்கு இனியர்; செவிக்குஇன் னாரே!அதனால்,நீயும் ஒன்று இனியை;அவரும்ஒன்றுஇனியர்;ஒவ்வா யாவுள, மற்றே? வெல்போர்க்கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி! 10நின்னை வியக்குமிவ் வுலகம்; அதுஎன்னோ? பெரும! உரைத்திசின் எமக்கே.  


168. கேழல் உழுத புழுதி!
பாடியவர்: கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார்.பாடப்பட்டோன் : பிட்டங் கொற்றன்.திணை: பாடாண்.துறை: பரிசில் துறை; இயன்மொழியும், அரச வாகையும் ஆம். 
அருவி ஆர்க்குங் கழைபயில் நனந்தலைக்கறிவளர் அடுக்கத்து மலரந்த காந்தள்கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக், கிளையொடு,கடுங்கண் கேழல் உழுத பூழி,நன்னாள் வருபதம் நோக்கிக், குறவர்
5உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினைமுந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார்,மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்,மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசிவான்கேழ் இரும்புடை கழாஅது, ஏற்றிச், 10சாந்த விறகின் உவித்த புன்கம்,கூதளங் கவினிய குளவி முன்றில்,செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல்,நறைநார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி, 15வடிநவில் அம்பின் வில்லோர் பெரும!கைவள் ஈகைக் கடுமான் கொற்ற!வையக வரைப்பில் தமிழகம் கேட்பப்,பொய்யாச் செந்நா நெளிய ஏத்திப்பாடுப என்ப பரிசிலர், நாளும்; 20ஈயா மன்னர் நாண,வீயாது பரந்தநின் வசையில் வான் புகழே!  


169. தருக பெருமானே!
பாடியவர்: காவிரிபூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.பாடப்பட்டோன் : பிட்டங்கொற்றன்.திணை: பாடாண். துறை: பரிசில் கடாநிலை.(பரிசில் வேட்டுப் பாடுதலால் பரிசில் கடாநிலை ஆயிற்று. அரசனின் வென்றிச் சிறப்பைப் போற்றியதும் காண்க.) 
நும்படை செல்லுங் காலை, அவர்படைஎறித்தெறி தானை முன்னரை எனாஅ,அவர்படை வருஉங் காலை, நும்படைக்கூழை தாங்கிய, அகல் யாற்றுக்குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ, 5அரிதால், பெரும! நின் செவ்வி என்றும்;பெரிதால் அத்தை, என் கடும்பினது இடும்பை;இன்னே விடுமதி பரிசில்! வென்வேல்இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார்,இகலினர் எறிந்த அகல்இலை முருக்கின் 10பெருமரக் கம்பம் போலப்,பொருநர்க்கு உலையாநின் வலன் வாழியவே!  


170. உலைக்கல்லன்ன வல்லாளன்!
பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார்.பாடப்பட்டோன் : பிட்டங்கொற்றன்.திணை: வாகை.துறை: வல்லாண் முல்லை; தானை மறமும் ஆம். 
மரைபிரித்து உண்ட நெல்லி வேலிப்,பரலுடை முன்றில், அங்குடிச் சீறூர்,எல்அடிப் படுத்த, கல்லாக் காட்சிவில்லுழுது உண்மார் நாப்பண், ஒல்லென,இழிபிறப் பாளன் கருங்கை சிவப்ப, 5வலிதுரந்து சிலைக்கும் வன்கண் கடுந்துடி,புலிதுஞ்சு நெடுவரைக் குடிஞையோடு இரட்டும்மலைகெழு நாடன் கூர்வேல் பிட்டன்,குறுகல் ஓம்புமின், தெவ்விர்; அவனேசிறுகண் யானை வெண்கோடு பயந்த 10ஒளிதிகழ் முத்தம் விறலியர்க்கு ஈந்து,நார்பிழிக் கொண்ட வெங்கள் தேறல்பண்அமை நல்யாழ்ப் பாண்கடும்பு அருத்தி,நசைவர்க்கு மென்மை அல்லது, பகைவர்க்குஇரும்புபயன் படுக்குங் கருங்கைக் கொல்லன் 15விசைத்துஎறி கூடமொடு பொருஉம்உலைக்கல் அன்ன, வல்லா ளன்னே.  


171. வாழ்க திருவடிகள்!
பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.பாடப்பட்டோன் : பிட்டங்கொற்றன்.திணை: பாடாண். துறை: இயன்மொழி.சிறப்பு: 'ஈவோர் அரிய இவ்வுலகத்து வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே' என்னும் வாழ்த்தில், உலகின் தன்மையைக் காணலாம். 
இன்று செலினுந் தருமே; சிறுவரைநின்று செலினுந் தருமே ; பின்னும்,முன்னே தந்தனென் என்னாது, துன்னிவைகலும் செலினும், பொய்யலன் ஆகி,யாம்வேண்டி யாங்குஎம் வறுங்கலம் நிறைப்போன்; 5தான்வேண்டி யாங்குத் தன்இறை உவப்பஅருந்தொழில் முடியரோ, திருந்துவேல் கொற்றன்;இனமலி கதச்சேக் களனொடு வேண்டினும்,களமலி நெல்லின் குப்பை வேண்டினும்,அருங்கலம் களிற்றொடு வேண்டினும், பெருந்தகை 10பிறர்க்கும் அன்ன அறத்தகை யன்னே,அன்னன் ஆகலின், எந்தை உள்ளடிமுள்ளும் நோவ உற்றாக தில்ல!ஈவோர் அரியஇவ் உலகத்து,வாழ்வோர் வாழ, அவன் தாள் வாழியவே! 15


172. பகைவரும் வாழ்க!
பாடியவர்: வடமண்ணக்கன் தாமோதரனார்.பாடப்பட்டோன் : பிட்டங்கொற்றன்.திணை: பாடாண்.துறை: இயன்மொழி. 
ஏற்றுக உலையே; ஆக்குக சோறே;கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள்ளிழைப்பாடுவல் விறலியர் கோதையும் புனைக;அன்னவை பலவும் செய்க ; என்னதூஉம்பரியல் வெண்டா வருபதம் நாடி, 5ஐவனங் காவல் பெய்தீ நந்தின்.ஒளிதிகழ் திருந்துமணி நளியிருள் அகற்றும்வன்புல நாடன், வயமான் பிட்டன்;ஆரமர் கடக்கும் வேலும், அவனிறைமாவள் ஈகைக் கோதையும். 10மாறுகொள் மன்னரும், வாழியர் நெடிதே!  


173. யான் வாழுநாள் வாழிய!
பாடியவர்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.பாடப்பட்டோன்: சிறுகுடி கிழான் பண்ணன்.திணை: பாடாண். துறை: இயன்மொழி. 
யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய!பாணர் ! காண்க, இவன் கடும்பினது இடும்பை;யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்னஊணொலி அரவந் தானும் கேட்கும்;பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி 5முட்டை கொண்டு வற்புலம் சேரும்சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்,சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும்,மற்றும் மற்றும் வினவுதும், தெற்றெனப்; 10பசிப்பிணி மருத்துவன் இல்லம்அணித்தோ? சேய்த்தோ? கூறுமின், எமக்கே,  


174. அவலம் தீரத் தோன்றினாய்!
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.பாடப்பட்டோன் : மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன்.ணை: வாகை. துறை: அரச வாகை. 
அணங்குடை அவுணர் கணம்கொண்டுஒளித்தெனச்,சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது,இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்துஇடும்பைகொள் பருவரல் தீரக், கடுந்திறல்அஞ்சன் உருவன் தந்து நிறுத்தாங்கு, 5அர சிழந்து இருந்த அல்லற் காலை,முரசுஎழுந்து இரங்கும் முற்றமொடு, கரைபொருதுஇரங்குபுனல் நெரிதரு மிகுபெருங் காவிரிமல்லல் நன்னாட்டு அல்லல் தீரப்,பொய்யா நாவிற் கபிலன் பாடிய, 10மையணி நெடுவரை ஆங்கண் ஒய்யெனச்செருப்புகல் மறவர் செல்புறம் கண்டஎள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசை,அருவழி இருந்த பெருவிறல் வளவன்மதிமருள் வெண்குடை காட்டி, அக்குடை 15புதுமையின் நிறுத்த புகழ்மேம் படுந!விடர்ப்புலி பொறித்த கோட்டைச், சுடர்ப் பூண்,சுரும்பார் கண்ணிப், பெரும்பெயர் நும்முன்ஈண்டுச்செய் நல்வினை யாண்டுச்சென்று உணீஇயர்,உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின், 20ஆறுகொள் மருங்கின் மாதிரம் துழவும்கவலை நெஞ்சத்து அவலந் தீரநீதோன் றினையே-நிரைத்தார் அண்ணல்!கல்கண் பொடியக், கானம் வெம்பமல்குநீர் வரைப்பில் கயம்பல உணங்கக், 25கோடை நீடிய பைதறு காலை,இருநிலம் நெளிய ஈண்டி,உரும்உரறு கருவிய மழைபொழிந் தாங்கே!  


175. என் நெஞ்சில் நினைக் காண்பார்!
பாடியவர்: கள்ளில் ஆத்திரையனார்.பாடப்பட்டோன் : ஆதனுங்கன்.திணை: பாடாண். துறை: இயன்மொழி. 
எந்தை; வாழி; ஆதனுங்க ! என்நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே;நின்யான் மறப்பின், மறக்குங் காலை,என்உயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும்,என்யான் மறப்பின், மறக்குவென் - வென்வேல் 5விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்தஉலக இடைகழி அறைவாய் நிலைஇயமலர்வாய் மண்டிலத் தன்ன, நாளும்பலர்புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே. 10

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.