LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

புறநானூறு-9

 

201. இவர் என் மகளிர்!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன் : இருங்கோவேள்.
திணை; பாடாண். 
துறை: பரிசில்.
குறிப்பு: பாரி மகளிரை உடன் கொண்டு சென்ற காலத்துப் பாடியது.) 
`இவர் யார்?` என்குவை ஆயின், இவரே,
ஊருடன் இரவலர்க்கு அருளித் ,தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை,
படுமணி யானைப்,பறம்பின் கோமான்
நெடுமாப் பாரி மகளிர்; யானே 5
தந்தை தோழன்: இவர்என் மகளிர்;
அந்தணன், புலவன், கொண்டுவந் தனனே;
நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்,
செம்பு புனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை,
உவரா ஈகைத், துவரை ஆண்டு, 10
நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே! விறற்போர் அண்ணல்!
தாரணி யானைச் சேட்டிருங் கோவே!
ஆண்கடன் உடைமையின், பாண்கடன் ஆற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடி மா அல்! 15
யான்தர, இவரைக் கொண்மதி! வான்கவித்து
இருங்கடல் உடுத்தஇவ் வையகத்து, அருந்திறல்
பொன்படு மால்வரைக் கிழவ! வென்வேல்
உடலுநர் உட்கும் தானைக்,
கெடல்அருங் குறைய நாடுகிழ வோயே! 20
202. கைவண் பாரி மகளிர்!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: இருங்கோவேள்.
திணை:பாடாண். 
துறை: பரிசில்.
குறிப்பு: இருங்கோவேள் பாரி மகளிரைக் கொள்ளானாக, அப்போது பாடியச் செய்யுள் இது. (கபிலரின் உள்ளம் மிகவும் நொந்து போயின நிலையைச் செய்யுள் காட்டுகின்றது.) 
வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்,
கட்சி காணாக் கடமா நல்லேறு
கடறுமணி கிளரச், சிதறுபொன் மிளிரக்,
கடிய கதழும் நெடுவரைப் படப்பை
வென்றி நிலை இய விழுப்புகழ் ஒன்றி, 5
இருபால் பெயரிய உருகெழு மூதூர்க்,
கோடிபல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய
நீடு நிலை அரையத்துக் கேடும் கேள், இனி;
நுந்தை தாயம் நிறைவுற எய்திய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்! 10
நும்போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யுள் கழாஅத் தலையை
இகழ்ந்ததன் பயனே; இயல்தேர் அண்ணல்!
எவ்வி தொல்குடிப் படீஇயர், மற்று,`இவர்
கைவண் பாரி மகளிர்` என்றஎன் 15
தேற்றாப் புன்சொல் நோற்றிசின்; பெரும;
விடுத்தனென்; வெலீஇயர், நின் வேலே! அடுக்கத்து
அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கை
மாத்தகட்டு ஒள்வீ தாய துறுகல்
இரும்புலி வரிப்புறம் கடுக்கும் 20
பெருங்கல் வைப்பின் நாடுகிழ வோயே!  
203. இரவலர்க்கு உதவுக!
பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார்
பாடப்பட்டோன்: சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி
திணை:பாடாண் 
துறை:பரிசில் 
கழிந்தது பொழிந்ததென வான்கண் மாறினும்
தொல்லது விளைந்தென நிலம்வளம் கரப்பினும்,
எல்லா உயிர்க்கும் இல்லால், வாழ்க்கை;
இன்னும் தம்மென எம்ம்னோர் இரப்பின்,
முன்னும் கொண்டிர்என, நும்மனோர் மறுத்தல் 5
இன்னாது அம்ம; இயல்தேர் அண்ணல்!
இல்லது நிரப்பல் ஆற்றா தோரினும்,
உள்ளி வருநர் நசையிழப் போரே;
அனையையும் அல்லை, நீயே; ஒன்னார்
ஆர்எயில் அவர்கட்கு ஆகவும்,`நுமது` எனப் 10
பாண்கடன் இறுக்கும் வள்ளியோய்!
பூண்கடன், எந்தை! நீஇரவலர் புரவே.  
204. அதனினும் உயர்ந்தது!
பாடியவர்: கழைதின் யானையார்.
பாடப்பட்டோன்: வல் வில் ஓரி.
திணை:பாடாண். 
துறை: பரிசில். 
ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்,
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர்,
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல் 5
உண்ணார் ஆகுப, நீர்வேட் டோரே;
ஆவும் மாவும் சென்றுஉணக், கலங்கிச்,
சேறோடு பட்ட சிறுமைத்து ஆயினும்,
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை 10
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்
புலவேன் வாழியர், ஓரி; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே.  
205. பெட்பின்றி ஈதல் வேண்டலம்!
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: கடிய நெடுவேட்டுவன்.
திணை:பாடாண். 
துறை: பரிசில். 
முற்றிய திருவின் மூவர் ஆயினும்,
பெட்பின்றி ஈதல் யாம்வேண் டலமே;
விறற்சினம் தணிந்த விரைபரிப் புரவி
உறுவர் செல்சார்வு ஆகிச், செறுவர்
தாளுளம் தபுத்த வாள்மிகு தானை, 5
வெள்வீ வேலிக் கோடைப் பொருந!
சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கிய
மான்கணம் தொலைச்சிய கடுவிசைக் கதநாய்,
நோன்சிலை, வேட்டுவ! நோயிலை யாகுக!
ஆர்கலி யாணர்த் தரீஇய, கால் வீழ்த்துக், 10
கடல்வயிற் குழீஇய அண்ணலங் கொண்மூ
நீரின்று பெயரா ஆங்குத், தேரொடு
ஒளிறுமறுப்பு ஏந்திய செம்மற்
களிறின்று பெயரல, பரிசிலர் கடும்பே.  
206. எத்திசைச் செலினும் சோறே!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண்: 
துறை: பரிசில். 
வாயி லோயே! வாயிலோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித், தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே! 5
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கோல்? என்னறி யலன்கொல்?
அறிவும் பகழும் உடையோர் மாய்ந்தென,
வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்,
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை; 10
மரங்கொல் தச்சன் மைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே;
எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே.  
207. வருகென வேண்டும்!
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: இளவெளிமான்.
திணை: பாடாண்: 
துறை: பரிசில். 
எழுஇனி, நெஞ்சம்! செல்கம்; யாரோ,
பருகு அன்ன வேட்கை இல்அழி,
அருகிற் கண்டும் அறியார் போல,
அகம்நக வாரா முகன்அழி பரிசில்
தாள்இலாளர் வேளார் அல்லர்? 5
வருகென வேண்டும் வரிசை யோர்க்கே
பெரிதே உலகம்; பேணுநர் பலரே;
மீளி முன்பின் ஆளி போல,
உள்ளம் உள்அவிந்து அடங்காது, வெள்ளென
நோவா தோன்வயின் திரங்கி, 10
வாயா வன்கனிக்கு உலமரு வோரே.  
208. வாணிகப் பரிசிலன் அல்லேன்!
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண்: 
துறை: பரிசில். 
`குன்றும் மலையும் பலபின் ஒழிய,
வந்தனென், பரிசில் கொண்டனென் செலற்கு` என
நின்ற என்நயந்து அருளி, `ஈது கொண்டு,
ஈங்கனம் செல்க, தான்` என என்னை
யாங்குஅறிந் தனனோ, தாங்கரும் காவலன்? 5
காணாது ஈத்த இப்பொருட்கு யானோர்
வாணிகப் பரிசிலன் அல்லேன்; பேணித்
தினை அனைத்து ஆயினும், இனிதுஅவர்
துணை அளவு அறிந்து, நல்கினர் விடினே.  
209. நல்நாட்டுப் பொருந!
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: மூவன்.
திணை: பாடாண்: 
துறை: பரிசில் கடாநிலை. 
பொய்கை நாரை போர்வில் சேக்கும்
நெய்தல்அம் கழனி, நெல்அரி தொழுவர்
கூம்புவிடு மெய்பிணி அவிழ்ந்த ஆம்பல்
அகல் அடை அரியல் மாந்திக், தெண்கடல்
படுதிரை இன்சீர்ப் பாணி தூங்கும் 5
மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந!
பல்கனி நசைஇ, அல்கு விசும்பு உகத்து.
பெருமலை விடர்அகம் சிலம்ப முன்னிப்
பழனுடைப் பெருமரம் தீர்ந்தெனக், கையற்றுப்.
பெறாது பெயரும் புள்ளினம் போல, நின் 10
நசைதர வந்து, நின்இசை நுவல் பரிசிலென்
வறுவியேன் பெயர்கோ? வாள்மேம் படுந!
ஈயாய் ஆயினும், இரங்குவென் அல்லேன்;
நோயிலை ஆகுமதி; பெரும! நம்முள்
குறுநணி காண்குவ தாக - நாளும், 15
நறும்பல் ஒலிவரும் கதுப்பின், தேமொழித்,
தெரியிழை அன்ன மார்பின்,
செருவெம் சேஎய்! நின் மகிழ்இரு க்கையே!  
210. நினையாதிருத்தல் அரிது!
பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை.
திணை: பாடாண்: 
துறை: பரிசில் கடாநிலை. 
மன்பதை காக்கும்நின் புரைமை நோக்காது,
அன்புகண் மாறிய அறனில் காட்சியொடு,
நும்ம னோரும்மற்று இனையர் ஆயின்,
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ;
செயிர்தீர் கொள்கை எம்வெங் காதலி 5
உயிர்சிறிது உடையள் ஆயின், எம்வயின்
உள்ளாது இருத்தலோ அரிதே; அதனால்,
அறனில் கூற்றம் திறனின்று துணியப்
பிறனா யினன்கொல்? இறீஇயர், என் உயிர்!` என
நுவல்வுறு சிறுமையள் பலபுலந்து உறையும் 10
இடுக்கண் மனையோள் தீரிய, இந்நிலை
விடுத்தேன்; வாழியர், குருசில்! உதுக்காண்:
அவல நெஞ்சமொடு செல்வல்: நிற் கறுத்தோர்
அருங்கடி முனையரண் போலப்
பெருங்கை யற்றஎன் புலம்புமுந் துறத்தே. 15
211. நாணக் கூறினேன்!
பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை.
திணை: பாடாண்: 
துறை: பரிசில் கடாநிலை. 
அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலேறு
அணங்குடை அரவின் அருந்தலை துமிய,
நின்றுகாண் பன்ன நீள்மலை மிளிரக்,
குன்றுதூவ எறியும் அரவம் போல,
முரசு எழுந்து இரங்கும் தானையோடு தலைச்சென்று, 5
அரைசுபடக் கடக்கும் உரைசால் தோன்றல்! நின்
உள்ளி வந்த ஓங்குநிலைப் பரிசிலென்,
`வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன்` எனக்,
கொள்ளா மாந்தர் கொடுமை கூற, நின்
உள்ளியது முடிந்தோய் மன்ற; முன்னாள் 10
கையுள் ளதுபோல் காட்டி, வழிநாள்
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம்
நாணாய் ஆயினும், நாணக் கூறி, என்
நுணங்கு செந்நா அணங்க ஏத்திப்,
பாடப் பாடப் பாடுபுகழ் கொண்டநின் 15
ஆடுகொள் வியன்மார்பு தொழுதெனன் பழிச்சிச்
செல்வல் அத்தை, யானே வைகலும்,
வல்சி இன்மையின் வயின்வயின் மாறி,
இல்எலி மடிந்த தொல்சுவர் வரைப்பின்,
பாஅல் இன்மையின் பல்பாடு சுவைத்து, 20
முலைக்கோள் மறந்த புதல்வனொடு,
மனைத் தொலைந்திருந் தவென்வாள் நுதற் படர்ந்தே.  
212. யாம் உம் கோமான்?
பாடியவர்: பிசிராந்தையார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்
திணை: பாடாண்: 
துறை: இயன்மொழி. 
`நுங்கோ யார்?` வினவின், எங்கோக்
களமர்க்கு அரித்த விளையல் வெங்கள்
யாமைப் புழுக்கின் காமம் வீடஆரா,
ஆரற் கொழுஞ்சூடு அங்கவுள் அடாஅ,
வைகுதொழின் மடியும் மடியா விழவின் 5
யாணர் நல்நாட் டுள்ளும், பாணர்
பைதல் சுற்றத்துப் பசிப்பகை யாகிக்,
கோழி யோனே, கோப்பெருஞ் சோழன்
பொத்தில் நண்பின் பொத்தியொடு கெழீஇ,
வாயார் பெருநகை வைகலும் நமக்கே. 10
213. நினையும் காலை!
பாடியவர்: புல்லாற்றூர் எயிற்றியனார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.
திணை: வஞ்சி: 
துறை: துணை வஞ்சி.
குறிப்பு: கோப்பெருஞ்சோழன் தன் மக்கள்மேற் போருக்கு எழுந்தகாலைப் பாடிச் சந்து செய்தது. 
மண்டுஅமர் அட்ட மதனுடை நோன்தாள்,
வெண்குடை விளக்கும், விறல்கெழு வேந்தே!
பொங்குநீர் உடுத்தஇம் மலர்தலை உலகத்து,
நின்தலை வந்த இருவரை நினைப்பின்,
தொன்றுறை துப்பின்நின் பகைஞரும் அல்லர், 5
அமர்வெங் காட்சியொடு மாறுஎதிர்பு எழுந்தவர்:
நினையுங் காலை, நீயும் மற்றவர்க்கு
அனையை அல்லை; அடுமான் தோன்றல்!
பரந்துபடு நல்லிசை எய்தி, மற்று நீ
உயர்ந்தோர் உலகம் எய்திப்; பின்னும் 10
ஒழித்த தாயும் அவர்க்குஉரித்து அன்றே;
அதனால், அன்னது ஆதலும் அறிவோய்! நன்றும்
இன்னும் கேண்மதி, இசைவெய் யோயே!
நின்ற துப்பொடு நின்குறித்து எழுந்த
எண்ணில் காட்சி இளையோர் தோற்பின், 15
நின்பெரும் செல்வம் யார்க்கும்எஞ் சுவையே?
அமர்வெஞ் செல்வ! நீ அவர்க்கு உலையின்,
இகழுநர் உவப்பப், பழியெஞ் சுவையே;
அதனால்,ஒழிகதில் அத்தை,நின் மறனே!வல்விரைந்து
எழுமதி; வாழ்க, நின் உள்ளம்! அழிந்தோர்க்கு 20
ஏமம் ஆகும்நின் தாள்நிழல் மயங்காது
செய்தல் வேண்டுமால். நன்றோ வானோர்
அரும்பெறல் உலகத்து ஆன்றவர்
விதும்புறு விருப்பொடு விருந்தெதிர் கொளற்கே.  
214. நல்வினையே செய்வோம்!
பாடியவர்: கோப்பெருஞ் சோழன்
திணை: பொதுவியல் 
துறை: பொருண்மொழிக் காஞ்சி 
`செய்குவம் கொல்லோ நல்வினை!எனவே
ஐயம் அறாஅர், கசடுஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவுஇல் லோரே;
யானை வேட்டுவன் யானையும் பெறுமே;
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே; 5
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்,
செய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்;
செய்யா உலகத்து நுகர்ச்சி இல்லெனின்,
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்; 10
மாறிப் பிறவார் ஆயினும், இமையத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்,
தீதில் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே,  
215. அல்லற்காலை நில்லான்!
பாடியவர்: கோப்பெருஞ் சோழன்
திணை: பாடாண் 
துறை: இயன்மொழி
குறிப்பு: சோழன் வடக்கிருந்தான்; பிசிராந்தையார் வருவார் என்றான்; 'அவர் வாரார்' என்றனர் சான்றோருட் சிலர்; அவர்க்கு அவன் கூறிய செய்யுள் இது. 
கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்
தாதொரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ,
ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை
அவரை கொய்யுநர் ஆர மாந்தும் 5
தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்
பிசிரோன் என்ப, என் உயிர்ஓம் புநனே;
செல்வ்க் காலை நிற்பினும்,
அல்லற் காலை நில்லலன் மன்னே.  
216. அவனுக்கும் இடம் செய்க!
பாடியவர்: கோப்பெருஞ் சோழன்
திணை: பாடாண் 
துறை: இயன்மொழி
குறிப்பு : வடக்கிருந்த சோழன், பிசிராந்தையாருக்கும் தன்னருகே இடன் ஒழிக்க என்று கூறிய செய்யுள் இது. 
கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும்
காண்டல் இல்லாது யாண்டுபல கழிய,
வழுவின்று பழகிய கிழமையர் ஆயினும்,
அரிதே, தோன்றல்! அதற்பட ஒழுகல் என்று
ஐயம் கொள்ளன்மின், ஆரறி வாளிர்! 5
இகழ்விலன்; இனியன்; யாத்த நண்பினன்;
புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே;
புன்பெயர் கிளக்கும் காலை, என் பெயர்
பேதைச் சோழன் என்னும், சிறந்த
காதற் கிழமையும் உடையவன்; அதன் தலை, 10
இன்னதோர் காலை நில்லலன்;
இன்னே வருகுவன்; ஒழிக்க, அவற்கு இடமே!  
217. நெஞ்சம் மயங்கும்!
பாடியவர்: பொத்தியார்
திணை: பொதுவியல் 
துறை: கையறுநிலை
குறிப்பு: கோப்பெருஞ் சோழன் சொன்னவாறே பிசிராந்தையார் அங்கு வந்தனர்; 
அதனைக் கண்டு வியந்த பொத்தியார் பாடிய செய்யுள் இது.
நினைக்கும் காலை மருட்கை உடைத்தே,
எனைப்பெரும் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்;
அதனினும் மருட்கை உடைத்தே, பிறன் நாட்டுத்
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி, 5
இசைமரபு ஆக, நட்புக் கந்தாக,
இனையதோர் காலை ஈங்கு வருதல்;
வருவன் என்ற கோனது பெருமையும்,
அது பழுது இன்றி வந்தவன் அறிவும்,
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே; 10
அதனால், தன்கோல் இயங்காத்தேயத்து உறையும்
சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்றிசை
அன்னோனை இழந்தஇவ் வுலகம்
என்னா வதுகொல்? அளியது தானே!  
218. சான்றோர்சாலார் இயல்புகள்!
பாடியவர்: கண்ணகனார் நத்தத்தனார் எனவும் பாடம்.
திணை: பொதுவியல் 
துறை: கையறுநிலை
குறிப்பு: பிசிராந்தையார் வடக்கிருந்தார்; அதனைக் கண்டு பாடியது. 
பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்,
இடைபடச் சேய ஆயினும், தொடை புணர்ந்து,
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை,
ஒருவழித் தோன்றியாங்கு-என்றும் சான்றோர் 5
சான்றோர் பாலர் ஆப;
சாலார் சாலார் பாலர் ஆகுபவே.  
219. உணக்கும் மள்ளனே!
பாடியவர்: பெருஞ்கருவூர்ப்சதுக்கத்துப் பூதநாதனார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.
திணை: பொதுவியல். 
துறை: கையறுநிலை. 
உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்,
முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள!
புலவுதி மாதோ நீயே;
பலரால் அத்தை, நின் குறிஇருந் தோரே.  
220. கலங்கனேன் அல்லனோ!
பாடியவர்: பொத்தியார்
திணை: பொதுவியல் 
துறை: கையறுநிலை
குறிப்பு: சோழன் வடக்கிருந்தான்; அவன்பாற் சென்ற பொத்தியார், அவனால் தடுக்கப்பட்டு  உறையூர்க்கு மீண்டார்; சோழன் உயிர் நீத்தான். அவனன்றி
வறி தான உறையூர் மன்றத்தைக் கண்டு இரங்கிப் பொத்தியார் பாடிய செய்யுள் இது.
பெருங்சோறு பயந்து, பல்யாண்டு புரந்த
பெருங்களிறு இழந்த பைதற் பாகன்
அதுசேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை,
வெளில்பாழ் ஆகக் கண்டு கலுழ்ந்தாங்குக்,
கலங்கினேன் அல்லனோ, யானே-பொலந்தார்த் 5
தேர்வண் கிள்ளி போகிய
பேரிசை மூதூர் மன்றங் கண்டே?  
221. வைகம் வாரீர்!
பாடியவர்: பொத்தியார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.
திணை: பொதுவியல். 
துறை: கையறுநிலை.
குறிப்பு: சோழனது நடுகற்கண்டு பாடிய செய்யுள் இது. 
பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே;
ஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனே;
அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே;
திறவோர் புகழ்ந்த தின்நண் பினனே;
மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து; 5
துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்;
அனையன் என்னாது, அத்தக் கோனை,
நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்த்ன்று;
பைதல் ஒக்கல் தழீஇ, அதனை
வைகம் வம்மோ; வாய்மொழிப் புலவீர்! 10
நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்,
கெடுவில் நல்லிசை சூடி,
நடுகல் ஆயினன் புரவலன் எனவே.  
222. என் இடம் யாது?
பாடியவர்: பொத்தியார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.
திணை: பொதுவியல். 
துறை: கையறுநிலை.
குறிப்பு: தன் மகன் பிறந்தபின், சோழனது நடுகல் நின்ற இடத்திற்குச் சென்று, தாமும் 
உயிர்விடத் துணிந்த பொத்தியார், 'எனக்கும் இடம் தா' எனக்
கேட்டுப் பாடியது இச் செய்யுள்
அழல் அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி,
நிழலினும் போகா, நின் வெய்யோள் பயந்த
புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வா என 5
என்இவண் ஒழித்த அன்பி லாள!
எண்ணாது இருக்குவை அல்லை;
என்னிடம் யாது? மற்று இசைவெய் யோயே!  
223. நடுகல்லாகியும் இடங் கொடுத்தான்!
பாடியவர்: பொத்தியார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.
திணை: பொதுவியல். 
துறை: கையறுநிலை. 
பலர்க்கு நிழ லாகி, உலகம் மீக்கூறித்,
தலைப்போ கன்மையிற் சிறுவழி மடங்கி,
நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும்,
இடங் கொடுத்து அளிப்ப, மன்ற-உடம்போடு
இன்னுயிர் விரும்பும் கிழமைத் 5
தொன்னட் புடையார் தம்உழைச் செலினே!  
224. இறந்தோன் அவனே!
பாடியவர்: கருங்குழல் ஆதனார்.
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.
திணை: பொதுவியல். 
துறை: கையறுநிலை. 
அருப்பம் பேணாது அமர்கடந் ததூஉம்;
துணைபுணர் ஆயமொடு தசும்புடன் தொலைச்சி,
இரும்பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்;
அறம்அறக் கணட நெறிமாண் அவையத்து,
முறைநற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த 5
பவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு,
பருதி உருவின் பல்படைப் புரிசை,
எருவை நுகர்ச்சி, யூப நெடுந்தூண்,
வேத வேள்வித் தொழில்முடித் ததூஉம்;
அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்; 10
இறந்தோன் தானே; அளித்துஇவ் வுலகம்
அருவி மாறி, அஞ்சுவரக் கருகிப்,
பெருவறம் கூர்ந்த வேனிற் காலைப்,
பசித்த ஆயத்துப் பயன்நிரை தருமார்,
பூவாட் கோவலர் பூவுடன் உதிரக் 15
கொய்துகட்டு அழித்த வேங்கையின்,
மெல்லியல் மகளிரும் இழைகளைந் தனரே.  
225. வலம்புரி ஒலித்தது!
பாடியவர்: ஆலத்தூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.
திணை: பொதுவியல். 
துறை: கையறுநிலை. 
தலையோர் நுங்கின் தீங்சோறு மிசைய,
இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்,
கடையோர், விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர,
நிலமார் வையத்து வலமுறை வளைஇ,
வேந்துபீ டழித்த ஏந்துவேல் தானையொடு, 5
ஆற்றல் என்பதன் தோற்றம் கேள், இனிக்
கள்ளி போகிய களரியம் பறந்தலை,
முள்ளுடை வியன்காட் டதுவே-நன்றும்
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன் கொல்?
இன்னிசைப் பறையொடு வென்றி நுவலத், 10
தூக்கணம் குரீஇத் தூங்குகூடு ஏய்ப்ப
ஒருசிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி,
ஞாலங் காவலர் கடைத்தலைக்,
காலைத் தோன்றினும் நோகோ யானே.


201. இவர் என் மகளிர்!
பாடியவர்: கபிலர்.பாடப்பட்டோன் : இருங்கோவேள்.திணை; பாடாண். துறை: பரிசில்.குறிப்பு: பாரி மகளிரை உடன் கொண்டு சென்ற காலத்துப் பாடியது.) 
`இவர் யார்?` என்குவை ஆயின், இவரே,ஊருடன் இரவலர்க்கு அருளித் ,தேருடன்முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை,படுமணி யானைப்,பறம்பின் கோமான்நெடுமாப் பாரி மகளிர்; யானே 5தந்தை தோழன்: இவர்என் மகளிர்;அந்தணன், புலவன், கொண்டுவந் தனனே;நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்,செம்பு புனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை,உவரா ஈகைத், துவரை ஆண்டு, 10நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்தவேளிருள் வேளே! விறற்போர் அண்ணல்!தாரணி யானைச் சேட்டிருங் கோவே!ஆண்கடன் உடைமையின், பாண்கடன் ஆற்றியஒலியற் கண்ணிப் புலிகடி மா அல்! 15யான்தர, இவரைக் கொண்மதி! வான்கவித்துஇருங்கடல் உடுத்தஇவ் வையகத்து, அருந்திறல்பொன்படு மால்வரைக் கிழவ! வென்வேல்உடலுநர் உட்கும் தானைக்,கெடல்அருங் குறைய நாடுகிழ வோயே! 20


202. கைவண் பாரி மகளிர்!
பாடியவர்: கபிலர்.பாடப்பட்டோன்: இருங்கோவேள்.திணை:பாடாண். துறை: பரிசில்.குறிப்பு: இருங்கோவேள் பாரி மகளிரைக் கொள்ளானாக, அப்போது பாடியச் செய்யுள் இது. (கபிலரின் உள்ளம் மிகவும் நொந்து போயின நிலையைச் செய்யுள் காட்டுகின்றது.) 
வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்,கட்சி காணாக் கடமா நல்லேறுகடறுமணி கிளரச், சிதறுபொன் மிளிரக்,கடிய கதழும் நெடுவரைப் படப்பைவென்றி நிலை இய விழுப்புகழ் ஒன்றி, 5இருபால் பெயரிய உருகெழு மூதூர்க்,கோடிபல அடுக்கிய பொருள் நுமக்கு உதவியநீடு நிலை அரையத்துக் கேடும் கேள், இனி;நுந்தை தாயம் நிறைவுற எய்தியஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்! 10நும்போல் அறிவின் நுமருள் ஒருவன்புகழ்ந்த செய்யுள் கழாஅத் தலையைஇகழ்ந்ததன் பயனே; இயல்தேர் அண்ணல்!எவ்வி தொல்குடிப் படீஇயர், மற்று,`இவர்கைவண் பாரி மகளிர்` என்றஎன் 15தேற்றாப் புன்சொல் நோற்றிசின்; பெரும;விடுத்தனென்; வெலீஇயர், நின் வேலே! அடுக்கத்துஅரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கைமாத்தகட்டு ஒள்வீ தாய துறுகல்இரும்புலி வரிப்புறம் கடுக்கும் 20பெருங்கல் வைப்பின் நாடுகிழ வோயே!  


203. இரவலர்க்கு உதவுக!
பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார்பாடப்பட்டோன்: சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னிதிணை:பாடாண் துறை:பரிசில் 
கழிந்தது பொழிந்ததென வான்கண் மாறினும்தொல்லது விளைந்தென நிலம்வளம் கரப்பினும்,எல்லா உயிர்க்கும் இல்லால், வாழ்க்கை;இன்னும் தம்மென எம்ம்னோர் இரப்பின்,முன்னும் கொண்டிர்என, நும்மனோர் மறுத்தல் 5இன்னாது அம்ம; இயல்தேர் அண்ணல்!இல்லது நிரப்பல் ஆற்றா தோரினும்,உள்ளி வருநர் நசையிழப் போரே;அனையையும் அல்லை, நீயே; ஒன்னார்ஆர்எயில் அவர்கட்கு ஆகவும்,`நுமது` எனப் 10பாண்கடன் இறுக்கும் வள்ளியோய்!பூண்கடன், எந்தை! நீஇரவலர் புரவே.  


204. அதனினும் உயர்ந்தது!
பாடியவர்: கழைதின் யானையார்.பாடப்பட்டோன்: வல் வில் ஓரி.திணை:பாடாண். துறை: பரிசில். 
ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்,ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர்,கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல் 5உண்ணார் ஆகுப, நீர்வேட் டோரே;ஆவும் மாவும் சென்றுஉணக், கலங்கிச்,சேறோடு பட்ட சிறுமைத்து ஆயினும்,உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை 10உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்புலவேன் வாழியர், ஓரி; விசும்பின்கருவி வானம் போலவரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே.  


205. பெட்பின்றி ஈதல் வேண்டலம்!
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.பாடப்பட்டோன்: கடிய நெடுவேட்டுவன்.திணை:பாடாண். துறை: பரிசில். 
முற்றிய திருவின் மூவர் ஆயினும்,பெட்பின்றி ஈதல் யாம்வேண் டலமே;விறற்சினம் தணிந்த விரைபரிப் புரவிஉறுவர் செல்சார்வு ஆகிச், செறுவர்தாளுளம் தபுத்த வாள்மிகு தானை, 5வெள்வீ வேலிக் கோடைப் பொருந!சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கியமான்கணம் தொலைச்சிய கடுவிசைக் கதநாய்,நோன்சிலை, வேட்டுவ! நோயிலை யாகுக!ஆர்கலி யாணர்த் தரீஇய, கால் வீழ்த்துக், 10கடல்வயிற் குழீஇய அண்ணலங் கொண்மூநீரின்று பெயரா ஆங்குத், தேரொடுஒளிறுமறுப்பு ஏந்திய செம்மற்களிறின்று பெயரல, பரிசிலர் கடும்பே.  


206. எத்திசைச் செலினும் சோறே!
பாடியவர்: அவ்வையார்.பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.திணை: பாடாண்: துறை: பரிசில். 
வாயி லோயே! வாயிலோயே!வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித், தாம்உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்துவரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்பரிசிலர்க்கு அடையா வாயி லோயே! 5கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சிதன்அறி யலன்கோல்? என்னறி யலன்கொல்?அறிவும் பகழும் உடையோர் மாய்ந்தென,வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்,காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை; 10மரங்கொல் தச்சன் மைவல் சிறாஅர்மழுவுடைக் காட்டகத்து அற்றே;எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே.  


207. வருகென வேண்டும்!
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.பாடப்பட்டோன்: இளவெளிமான்.திணை: பாடாண்: துறை: பரிசில். 
எழுஇனி, நெஞ்சம்! செல்கம்; யாரோ,பருகு அன்ன வேட்கை இல்அழி,அருகிற் கண்டும் அறியார் போல,அகம்நக வாரா முகன்அழி பரிசில்தாள்இலாளர் வேளார் அல்லர்? 5வருகென வேண்டும் வரிசை யோர்க்கேபெரிதே உலகம்; பேணுநர் பலரே;மீளி முன்பின் ஆளி போல,உள்ளம் உள்அவிந்து அடங்காது, வெள்ளெனநோவா தோன்வயின் திரங்கி, 10வாயா வன்கனிக்கு உலமரு வோரே.  


208. வாணிகப் பரிசிலன் அல்லேன்!
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.திணை: பாடாண்: துறை: பரிசில். 
`குன்றும் மலையும் பலபின் ஒழிய,வந்தனென், பரிசில் கொண்டனென் செலற்கு` எனநின்ற என்நயந்து அருளி, `ஈது கொண்டு,ஈங்கனம் செல்க, தான்` என என்னையாங்குஅறிந் தனனோ, தாங்கரும் காவலன்? 5காணாது ஈத்த இப்பொருட்கு யானோர்வாணிகப் பரிசிலன் அல்லேன்; பேணித்தினை அனைத்து ஆயினும், இனிதுஅவர்துணை அளவு அறிந்து, நல்கினர் விடினே.  


209. நல்நாட்டுப் பொருந!
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.பாடப்பட்டோன்: மூவன்.திணை: பாடாண்: துறை: பரிசில் கடாநிலை. 
பொய்கை நாரை போர்வில் சேக்கும்நெய்தல்அம் கழனி, நெல்அரி தொழுவர்கூம்புவிடு மெய்பிணி அவிழ்ந்த ஆம்பல்அகல் அடை அரியல் மாந்திக், தெண்கடல்படுதிரை இன்சீர்ப் பாணி தூங்கும் 5மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந!பல்கனி நசைஇ, அல்கு விசும்பு உகத்து.பெருமலை விடர்அகம் சிலம்ப முன்னிப்பழனுடைப் பெருமரம் தீர்ந்தெனக், கையற்றுப்.பெறாது பெயரும் புள்ளினம் போல, நின் 10நசைதர வந்து, நின்இசை நுவல் பரிசிலென்வறுவியேன் பெயர்கோ? வாள்மேம் படுந!ஈயாய் ஆயினும், இரங்குவென் அல்லேன்;நோயிலை ஆகுமதி; பெரும! நம்முள்குறுநணி காண்குவ தாக - நாளும், 15நறும்பல் ஒலிவரும் கதுப்பின், தேமொழித்,தெரியிழை அன்ன மார்பின்,செருவெம் சேஎய்! நின் மகிழ்இரு க்கையே!  


210. நினையாதிருத்தல் அரிது!
பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்.பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை.திணை: பாடாண்: துறை: பரிசில் கடாநிலை. 
மன்பதை காக்கும்நின் புரைமை நோக்காது,அன்புகண் மாறிய அறனில் காட்சியொடு,நும்ம னோரும்மற்று இனையர் ஆயின்,எம்மனோர் இவண் பிறவலர் மாதோ;செயிர்தீர் கொள்கை எம்வெங் காதலி 5உயிர்சிறிது உடையள் ஆயின், எம்வயின்உள்ளாது இருத்தலோ அரிதே; அதனால்,அறனில் கூற்றம் திறனின்று துணியப்பிறனா யினன்கொல்? இறீஇயர், என் உயிர்!` எனநுவல்வுறு சிறுமையள் பலபுலந்து உறையும் 10இடுக்கண் மனையோள் தீரிய, இந்நிலைவிடுத்தேன்; வாழியர், குருசில்! உதுக்காண்:அவல நெஞ்சமொடு செல்வல்: நிற் கறுத்தோர்அருங்கடி முனையரண் போலப்பெருங்கை யற்றஎன் புலம்புமுந் துறத்தே. 15


211. நாணக் கூறினேன்!
பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்.பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை.திணை: பாடாண்: துறை: பரிசில் கடாநிலை. 
அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலேறுஅணங்குடை அரவின் அருந்தலை துமிய,நின்றுகாண் பன்ன நீள்மலை மிளிரக்,குன்றுதூவ எறியும் அரவம் போல,முரசு எழுந்து இரங்கும் தானையோடு தலைச்சென்று, 5அரைசுபடக் கடக்கும் உரைசால் தோன்றல்! நின்உள்ளி வந்த ஓங்குநிலைப் பரிசிலென்,`வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன்` எனக்,கொள்ளா மாந்தர் கொடுமை கூற, நின்உள்ளியது முடிந்தோய் மன்ற; முன்னாள் 10கையுள் ளதுபோல் காட்டி, வழிநாள்பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம்நாணாய் ஆயினும், நாணக் கூறி, என்நுணங்கு செந்நா அணங்க ஏத்திப்,பாடப் பாடப் பாடுபுகழ் கொண்டநின் 15ஆடுகொள் வியன்மார்பு தொழுதெனன் பழிச்சிச்செல்வல் அத்தை, யானே வைகலும்,வல்சி இன்மையின் வயின்வயின் மாறி,இல்எலி மடிந்த தொல்சுவர் வரைப்பின்,பாஅல் இன்மையின் பல்பாடு சுவைத்து, 20முலைக்கோள் மறந்த புதல்வனொடு,மனைத் தொலைந்திருந் தவென்வாள் நுதற் படர்ந்தே.  


212. யாம் உம் கோமான்?
பாடியவர்: பிசிராந்தையார்.பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்திணை: பாடாண்: துறை: இயன்மொழி. 
`நுங்கோ யார்?` வினவின், எங்கோக்களமர்க்கு அரித்த விளையல் வெங்கள்யாமைப் புழுக்கின் காமம் வீடஆரா,ஆரற் கொழுஞ்சூடு அங்கவுள் அடாஅ,வைகுதொழின் மடியும் மடியா விழவின் 5யாணர் நல்நாட் டுள்ளும், பாணர்பைதல் சுற்றத்துப் பசிப்பகை யாகிக்,கோழி யோனே, கோப்பெருஞ் சோழன்பொத்தில் நண்பின் பொத்தியொடு கெழீஇ,வாயார் பெருநகை வைகலும் நமக்கே. 10


213. நினையும் காலை!
பாடியவர்: புல்லாற்றூர் எயிற்றியனார்.பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.திணை: வஞ்சி: துறை: துணை வஞ்சி.குறிப்பு: கோப்பெருஞ்சோழன் தன் மக்கள்மேற் போருக்கு எழுந்தகாலைப் பாடிச் சந்து செய்தது. 
மண்டுஅமர் அட்ட மதனுடை நோன்தாள்,வெண்குடை விளக்கும், விறல்கெழு வேந்தே!பொங்குநீர் உடுத்தஇம் மலர்தலை உலகத்து,நின்தலை வந்த இருவரை நினைப்பின்,தொன்றுறை துப்பின்நின் பகைஞரும் அல்லர், 5அமர்வெங் காட்சியொடு மாறுஎதிர்பு எழுந்தவர்:நினையுங் காலை, நீயும் மற்றவர்க்குஅனையை அல்லை; அடுமான் தோன்றல்!பரந்துபடு நல்லிசை எய்தி, மற்று நீஉயர்ந்தோர் உலகம் எய்திப்; பின்னும் 10ஒழித்த தாயும் அவர்க்குஉரித்து அன்றே;அதனால், அன்னது ஆதலும் அறிவோய்! நன்றும்இன்னும் கேண்மதி, இசைவெய் யோயே!நின்ற துப்பொடு நின்குறித்து எழுந்தஎண்ணில் காட்சி இளையோர் தோற்பின், 15நின்பெரும் செல்வம் யார்க்கும்எஞ் சுவையே?அமர்வெஞ் செல்வ! நீ அவர்க்கு உலையின்,இகழுநர் உவப்பப், பழியெஞ் சுவையே;அதனால்,ஒழிகதில் அத்தை,நின் மறனே!வல்விரைந்துஎழுமதி; வாழ்க, நின் உள்ளம்! அழிந்தோர்க்கு 20ஏமம் ஆகும்நின் தாள்நிழல் மயங்காதுசெய்தல் வேண்டுமால். நன்றோ வானோர்அரும்பெறல் உலகத்து ஆன்றவர்விதும்புறு விருப்பொடு விருந்தெதிர் கொளற்கே.  


214. நல்வினையே செய்வோம்!
பாடியவர்: கோப்பெருஞ் சோழன்திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி 
`செய்குவம் கொல்லோ நல்வினை!எனவேஐயம் அறாஅர், கசடுஈண்டு காட்சிநீங்கா நெஞ்சத்துத் துணிவுஇல் லோரே;யானை வேட்டுவன் யானையும் பெறுமே;குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே; 5அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச்செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்,செய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்;செய்யா உலகத்து நுகர்ச்சி இல்லெனின்,மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்; 10மாறிப் பிறவார் ஆயினும், இமையத்துக்கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்,தீதில் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே,  


215. அல்லற்காலை நில்லான்!
பாடியவர்: கோப்பெருஞ் சோழன்திணை: பாடாண் துறை: இயன்மொழிகுறிப்பு: சோழன் வடக்கிருந்தான்; பிசிராந்தையார் வருவார் என்றான்; 'அவர் வாரார்' என்றனர் சான்றோருட் சிலர்; அவர்க்கு அவன் கூறிய செய்யுள் இது. 
கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்தாதொரு மறுகின் போதொடு பொதுளியவேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ,ஆய்மகள் அட்ட அம்புளி மிதவைஅவரை கொய்யுநர் ஆர மாந்தும் 5தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்பிசிரோன் என்ப, என் உயிர்ஓம் புநனே;செல்வ்க் காலை நிற்பினும்,அல்லற் காலை நில்லலன் மன்னே.  


216. அவனுக்கும் இடம் செய்க!
பாடியவர்: கோப்பெருஞ் சோழன்திணை: பாடாண் துறை: இயன்மொழிகுறிப்பு : வடக்கிருந்த சோழன், பிசிராந்தையாருக்கும் தன்னருகே இடன் ஒழிக்க என்று கூறிய செய்யுள் இது. 
கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும்காண்டல் இல்லாது யாண்டுபல கழிய,வழுவின்று பழகிய கிழமையர் ஆயினும்,அரிதே, தோன்றல்! அதற்பட ஒழுகல் என்றுஐயம் கொள்ளன்மின், ஆரறி வாளிர்! 5இகழ்விலன்; இனியன்; யாத்த நண்பினன்;புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே;புன்பெயர் கிளக்கும் காலை, என் பெயர்பேதைச் சோழன் என்னும், சிறந்தகாதற் கிழமையும் உடையவன்; அதன் தலை, 10இன்னதோர் காலை நில்லலன்;இன்னே வருகுவன்; ஒழிக்க, அவற்கு இடமே!  


217. நெஞ்சம் மயங்கும்!
பாடியவர்: பொத்தியார்திணை: பொதுவியல் துறை: கையறுநிலைகுறிப்பு: கோப்பெருஞ் சோழன் சொன்னவாறே பிசிராந்தையார் அங்கு வந்தனர்; 
அதனைக் கண்டு வியந்த பொத்தியார் பாடிய செய்யுள் இது.நினைக்கும் காலை மருட்கை உடைத்தே,எனைப்பெரும் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்;அதனினும் மருட்கை உடைத்தே, பிறன் நாட்டுத்தோற்றம் சான்ற சான்றோன் போற்றி, 5இசைமரபு ஆக, நட்புக் கந்தாக,இனையதோர் காலை ஈங்கு வருதல்;வருவன் என்ற கோனது பெருமையும்,அது பழுது இன்றி வந்தவன் அறிவும்,வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே; 10அதனால், தன்கோல் இயங்காத்தேயத்து உறையும்சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்றிசைஅன்னோனை இழந்தஇவ் வுலகம்என்னா வதுகொல்? அளியது தானே!  


218. சான்றோர்சாலார் இயல்புகள்!
பாடியவர்: கண்ணகனார் நத்தத்தனார் எனவும் பாடம்.திணை: பொதுவியல் துறை: கையறுநிலைகுறிப்பு: பிசிராந்தையார் வடக்கிருந்தார்; அதனைக் கண்டு பாடியது. 
பொன்னும், துகிரும், முத்தும், மன்னியமாமலை பயந்த காமரு மணியும்,இடைபடச் சேய ஆயினும், தொடை புணர்ந்து,அருவிலை நன்கலம் அமைக்கும் காலை,ஒருவழித் தோன்றியாங்கு-என்றும் சான்றோர் 5சான்றோர் பாலர் ஆப;சாலார் சாலார் பாலர் ஆகுபவே.  


219. உணக்கும் மள்ளனே!
பாடியவர்: பெருஞ்கருவூர்ப்சதுக்கத்துப் பூதநாதனார்.பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. 
உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்,முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள!புலவுதி மாதோ நீயே;பலரால் அத்தை, நின் குறிஇருந் தோரே.  


220. கலங்கனேன் அல்லனோ!
பாடியவர்: பொத்தியார்திணை: பொதுவியல் துறை: கையறுநிலைகுறிப்பு: சோழன் வடக்கிருந்தான்; அவன்பாற் சென்ற பொத்தியார், அவனால் தடுக்கப்பட்டு  உறையூர்க்கு மீண்டார்; சோழன் உயிர் நீத்தான். அவனன்றிவறி தான உறையூர் மன்றத்தைக் கண்டு இரங்கிப் பொத்தியார் பாடிய செய்யுள் இது.
பெருங்சோறு பயந்து, பல்யாண்டு புரந்தபெருங்களிறு இழந்த பைதற் பாகன்அதுசேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை,வெளில்பாழ் ஆகக் கண்டு கலுழ்ந்தாங்குக்,கலங்கினேன் அல்லனோ, யானே-பொலந்தார்த் 5தேர்வண் கிள்ளி போகியபேரிசை மூதூர் மன்றங் கண்டே?  


221. வைகம் வாரீர்!
பாடியவர்: பொத்தியார்.பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.குறிப்பு: சோழனது நடுகற்கண்டு பாடிய செய்யுள் இது. 
பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே;ஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனே;அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே;திறவோர் புகழ்ந்த தின்நண் பினனே;மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து; 5துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்;அனையன் என்னாது, அத்தக் கோனை,நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்த்ன்று;பைதல் ஒக்கல் தழீஇ, அதனைவைகம் வம்மோ; வாய்மொழிப் புலவீர்! 10நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்,கெடுவில் நல்லிசை சூடி,நடுகல் ஆயினன் புரவலன் எனவே.  


222. என் இடம் யாது?
பாடியவர்: பொத்தியார்.பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.குறிப்பு: தன் மகன் பிறந்தபின், சோழனது நடுகல் நின்ற இடத்திற்குச் சென்று, தாமும் 
உயிர்விடத் துணிந்த பொத்தியார், 'எனக்கும் இடம் தா' எனக்கேட்டுப் பாடியது இச் செய்யுள்அழல் அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி,நிழலினும் போகா, நின் வெய்யோள் பயந்தபுகழ்சால் புதல்வன் பிறந்தபின் வா என 5என்இவண் ஒழித்த அன்பி லாள!எண்ணாது இருக்குவை அல்லை;என்னிடம் யாது? மற்று இசைவெய் யோயே!  


223. நடுகல்லாகியும் இடங் கொடுத்தான்!
பாடியவர்: பொத்தியார்.பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. 
பலர்க்கு நிழ லாகி, உலகம் மீக்கூறித்,தலைப்போ கன்மையிற் சிறுவழி மடங்கி,நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும்,இடங் கொடுத்து அளிப்ப, மன்ற-உடம்போடுஇன்னுயிர் விரும்பும் கிழமைத் 5தொன்னட் புடையார் தம்உழைச் செலினே!  


224. இறந்தோன் அவனே!
பாடியவர்: கருங்குழல் ஆதனார்.பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. 
அருப்பம் பேணாது அமர்கடந் ததூஉம்;துணைபுணர் ஆயமொடு தசும்புடன் தொலைச்சி,இரும்பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்;அறம்அறக் கணட நெறிமாண் அவையத்து,முறைநற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த 5பவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு,பருதி உருவின் பல்படைப் புரிசை,எருவை நுகர்ச்சி, யூப நெடுந்தூண்,வேத வேள்வித் தொழில்முடித் ததூஉம்;அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்; 10இறந்தோன் தானே; அளித்துஇவ் வுலகம்அருவி மாறி, அஞ்சுவரக் கருகிப்,பெருவறம் கூர்ந்த வேனிற் காலைப்,பசித்த ஆயத்துப் பயன்நிரை தருமார்,பூவாட் கோவலர் பூவுடன் உதிரக் 15கொய்துகட்டு அழித்த வேங்கையின்,மெல்லியல் மகளிரும் இழைகளைந் தனரே.  


225. வலம்புரி ஒலித்தது!
பாடியவர்: ஆலத்தூர் கிழார்.பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. 
தலையோர் நுங்கின் தீங்சோறு மிசைய,இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்,கடையோர், விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர,நிலமார் வையத்து வலமுறை வளைஇ,வேந்துபீ டழித்த ஏந்துவேல் தானையொடு, 5ஆற்றல் என்பதன் தோற்றம் கேள், இனிக்கள்ளி போகிய களரியம் பறந்தலை,முள்ளுடை வியன்காட் டதுவே-நன்றும்சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன் கொல்?இன்னிசைப் பறையொடு வென்றி நுவலத், 10தூக்கணம் குரீஇத் தூங்குகூடு ஏய்ப்பஒருசிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி,ஞாலங் காவலர் கடைத்தலைக்,காலைத் தோன்றினும் நோகோ யானே.

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.