|
||||||||
புது வரவும் தொல்லையும் |
||||||||
புதிது புதிதாய் வசதிகள் கேட்டு வந்தபின்
தொல்லை என்று அடுத்ததை
வரவேற்க தயாராகிறோம்
உறவுகள்,நண்பர்கள் உடன்
அரங்கில் சினிமா நாடகம்
பார்க்கசென்றவன் தனியாய் சுகமாய்
சினிமா நாடகம் பார்க்க
வண்ண தொலை காட்சி
வாங்கி அனுபவித்த பின்
தொலைகாட்சியை கண்டு மிரளுகிறான்
அக்கம் பக்கம் நட்புகள்
குறைந்து ஆள் கிடைக்காமல்
திண்டாடுகிறான்.
தனி குடித்தனம் சுகமானது
யாரோ சொல்ல அதுவே
மந்திரமாய் அனுபவித்து
இன்று தனிமரமாய் தடுமாறுகிறான்
உறவுகள் தொலைந்து உருக்கொலைகிறான்.
நடந்து சென்று எடுத்து
பேசும் தொலைபேசிக்கு அன்றே
சலித்தவன் நடந்தும்,படுத்தும்
பேசிக்கொண்டே இருக்கும் செல்போன்
வாங்கி அனுபவித்த பின் !
என்று ஒழியும் இந்த செல்போன்?
அழுது புலம்புகிறான். இருந்தும்
வெளி வர முடியாமல்
பேசிக்கொண்டே இருக்கின்றான்
உலகமே கணிணியில் தெரிந்தும்
கவலையில் இருக்கிறான் தவறுகள்
வீட்டுக்குள் நுழைந்திடுமோ வாரிசுகள்
வழி மாறிடுமோ ?
எல்லா வசதிகள் வந்தபின்
வசதிக்கு மட்டும் என்பது போய்
தொல்லைகள் ஆகிறது புது வரவு |
||||||||
New comes facing problems | ||||||||
by Dhamotharan.S on 01 Jun 2017 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|