இலங்கையில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் பிரிட்டிஷ் ராணி இரண்டாவது எலிசபெத் பங்கேற்க மாட்டார் எனவும் அவருக்குப் பதிலாக இளவரசர் சார்லஸ் பங்கேற்பார் என பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1973-ம் ஆண்டுக்குப் பின் இப்போதுதான் முதல்முறையாக காமன்வெல்த் மாநாட்டில் எலிசபெத் ராணியின் பங்கேற்பு இல்லாமல் நடைபெறவுள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல், போர்க் குற்றங்கள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி அங்கு காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தி வரும், இந்த சூழ்நிலையில் ராணி எலிசபெத் இந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
|