|
|||||
சபரிமலையை கலவர பூமியாக்க நாங்கள் விரும்பவில்லை- கேரள தேவசம் போர்டு அமைச்சர் பேட்டி! |
|||||
சபரிமலையை கலவர பூமியாக்க நாங்கள் விரும்பவில்லை என்று கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பைத் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்று, பக்தர்களால் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். இந்தச் சூழலில் சபரிமலை குறித்து செய்தி சேகரிப்பதற்காக பெண் நிருபர்கள் செல்ல முயன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து பெரும் புயலை கிளப்பி உள்ளன. இதில் முதலில் முயற்சி செய்தவர் சுகாசினி ராஜ் (38). டெல்லியை சேர்ந்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் மூத்த பெண் நிருபரான சுகாசினிராஜ் (38) தனது நண்பருடன் சன்னிதானத்துக்கு செல்ல முயன்றார். அவருடன் போலீசாரும் பாதுகாப்பாக சென்றனர். ஆனால் மரக்கூட்டம் பகுதியில் வைத்து பக்தர்கள் திரண்டு அவரை முற்றுகையிட்டனர். தரிசனம் முடித்து வந்த பக்தர்களும், தரிசனத்துக்கு சென்று கொண்டு இருந்த பக்தர்களும் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது: ‘‘சபரிமலைக்கு பக்தியுடன் வரும் யாராக இருந்தாலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். ஆனால் கடந்த சில தினங்களாக சவால் விட்டுக்கொண்டு சில பெண் இயக்கவாதிகள் தான் வருகின்றனர். போலீஸ் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து சன்னிதானத்துக்கு அழைத்து சென்றது தவறு. பேஸ்புக், வாட்ஸ்அப் என சமூக வலைத்தளங்களில் சவால் விட்டுக்கொண்டு யாரும் சபரிமலைக்கு வர முயற்சிக்க கூடாது. சபரிமலையை கலவர பூமியாக்க நாங்கள் விரும்பவில்லை’’ இவ்வாறு அவர் கூறினார். |
|||||
by Mani Bharathi on 20 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|