LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

ஏனெனில் என் பெயர் தமிழ். -ஆர்.பாலகிருஷ்ணன்

நான்
வாழ்ந்த மொழி... 
வாழும் மொழி...
வளரும் மொழி...
எனக்கு 
இறப்பு என்பது
எப்போதும் இல்லை

ஏனெனில் 
என் பெயர் தமிழ்.

குகைகளிலிருந்து 
குடிசைக்கும்... 
குடிசையிலிருந்து 
கோட்டைக்கும்... 
நடந்த கால்கள்
என் 
"நாற்றங்கால்கள்..."

ஏனெனில் 
என் பெயர் தமிழ்.

பானையில் கீறலாய்
கல்லில் வெட்டாய்
ஏட்டில் எழுத்தாய்
அச்சில் அச்சாய்..
கணினியில் எழுத்துருவாய்
என் 
உயிரும்..
மெய்யும்...
உயிர் மெய்யும்...

ஏனெனில்
என் பெயர் தமிழ்..

அரண்மனைகளில்
அந்தப்புரங்களில்
'புழங்கியதால்' 
துவங்கவில்லை...
துலங்கவில்லை...
என் இருப்பு.

ஏனெனில்
என் பெயர் தமிழ்.

கொற்றவனும்...
குயத்தியும்...
கணியனும்...
கணக்காயனும்...
குறமகளும்..‌
கொல்லனும்...
வணிகனும்..
வண்ணக்கனும்...
சேரனும் சோழனும் பாண்டியனும்...
கூடிப் பாடிய 
கூட்டியக்கம் நான்.

ஏனெனில்
என் பெயர் தமிழ்.

வெள்ளம் வரும் போகும்...
"கள்ளம்" வரும் போகும்...
ஆயினும்
உள்ளம் உடைய 
உயர்மக்கள்
என் மக்கள்.

ஏனெனில்
என் பெயர் தமிழ்.

எனக்கு 
இறப்பு என்பது
எப்போதும் இல்லை

ஏனெனில்
என் பெயர் தமிழ்.

ஆர்.பாலகிருஷ்ணன்

by Swathi   on 15 Sep 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.