LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF

சிங்கமும், முயலும் !!

ஒரு அடர்ந்த காட்டில் கர்வம் கொண்ட சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. 


தான் தான் இந்த காட்டிற்கே ராஜா என்ற கர்வத்துடன் அந்த சிங்கம் காட்டில் வாழ்ந்த அனைத்து மிருகங்களையும் வேட்டையாடி கொண்டிருந்தது.


காட்டில் உள்ள மற்ற சிங்கங்கள் விலங்குகளை உணவுக்காக மட்டும் வேட்டையாடும். அனால் இந்த சிங்கம் பொழுதுபோக்கிற்காக வேட்டையாடியது. இதனால் காட்டில் வாழ்ந்த மற்ற மிருகங்கள் சிங்கத்தின் மீது கோபம் கொண்டன.


ஒவ்வொருநாளும் சிங்கம் பல மிருகங்களை வேட்டையாடியது. இதனை கண்ட மற்றைய மிருகங்கள் மிக்க பயத்துடன் அந்த காட்டில் வாழ்ந்து வந்தன.


சிங்கம் இப்படியே பல மிருகங்களை ஒவ்வொருநாளும் கொல்வதால் தாம் வெகு சீக்கிரமே இறந்துவிடுவோம் என எண்ணி அவை எல்லாம் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தியது.


சிங்கத்தை எதிர்த்து அவைகளால் போராட முடியாது என்பது அவைகளுக்குத் நன்கு தெரியும். அதனால் அவை சிங்கத்திற்கு இரையாக தினம் ஒரு மிருகமாக போவதற்கு தீர்மானித்தன.


அடுத்தநாள் குரங்கு ஒன்று அந்த கர்வம் கொண்ட சிங்கத்தை சந்திக்க அதன் குகைக்குள் சென்றது.


இதைக்கண்ட சிங்கம் முகுந்த கோபத்துடன் உறுமியது. குரங்கிற்கு பயம் வந்துவிட்டது. சிங்கம் குரங்கை பார்த்து, "உனக்கு என்ன துணிச்சல் இருந்தால் என் குகைக்கு வந்துருப்பாய்?" என்றது. அதற்கு குரங்கு, எல்லா மிருகங்களும் தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வருகின்றோம் என தெரிவித்தன. அதனால் சிங்கராசா இரை தேடி அலையத் தேவையில்லை.


"ஏன் இந்த முடிவு?" என்றது சிங்கம்.


தினம் தினம் எந்த மிருகம் உங்களால் வேடையாடப்படும் என்ற பயத்துடன் வாழ்வதை விட, தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வந்தால் மற்ற மிருகங்கள் பயமின்றி சிறிது காலம் வாழலாம் என்றது.


அத்துடன் நீங்கள் பல மிருகங்களை ஒரே நாளில் கொன்றால் நாங்கள் எல்லோரும் சீக்கிரமே இறந்து விடுவோம். பின்பு உங்களுக்கு உணவுகிடையாமல் நீங்களும் சீக்கிரமே இறந்து விடுவீர்கள் என்றது.


இதனை கேட்ட சிங்கத்திற்கு மகிழ்ச்சி பொங்கியது. மேலும் குரங்கிடம் தவறாமல் தினமும் காலையில் ஒரு மிருகம் கண்டிப்பாக வரவேண்டும். இல்லையென்றல் அனைவரையும் வேடையடிவிடுவேன் என்றது சிங்கம்.


அன்றிலிருந்து தினம் ஒவ்வொரு மிருகம் சிங்கத்திற்கு இரையாகச் சென்றது. ஒருநாள் ஒரு முயலின் முறை வந்தது. முயல் சிங்கத்தின் குகைக்கு சிறிது தாமதமாகச் சென்றது.


அதனால் மிகுந்த கோபம் கொண்ட சிங்கம், முயலைப் பார்த்து நீ ஏன் தாமதமாக வந்தாய் என கர்ச்சித்தது.


அதனைக் கேட்ட முயலார் நடுக்கத்துடன் “சிங்கராசா” நான் வரும் வழியில் வேறொரு பெரிய சிங்கம் என்னை வேட்டையாட முயற்சி செய்தது. நான் பதுங்கி இருந்துவிட்டு, இப்பதான், அதனிடம் இருந்து தப்பித்து வருகிறேன் என்றது.


என்னைவிட பெரிய சிங்கம் இந்தக் காட்டில் இருக்கிறதா? என்று கர்வத்துடன் கேட்டது.


அதற்கு “சிங்கராசா” வாருங்கள் காட்டுகின்றேன் என்று சிங்கத்தை அழைத்துச் சென்று ஒரு கிணற்றைக் காட்டி இதற்குள்தான் அந்த பெரிய சிங்கம் இருந்தது என்று கூறியது.


அதனை நம்பிய சிங்கம் கிணற்றை எட்டிப் பாத்தது. அப்போது சிங்கத்தின் நிழல் (பிம்பம்) வேறொரு சிங்கம் கிணற்றினுள் இருப்பது போல் தெரிந்தது. சிங்கம் அதைப் பார்த்து கர்ச்சித்தது.


பிம்பமும் கர்ச்சித்தது. சிங்கத்திற்க்கு ஆத்திரம் பொங்கியது. இதோபார் உனக்கு இப்போதே ஒரு முடிவு கட்டுகிறேன் என கூறிக்கொண்டு கிணற்றினுள் பாய்ந்தது. சிங்கம் கிணற்று நீரில் மூழ்கி மாண்டது. 


முயல் துள்ளிகுதித்து வெற்றியை மற்ற மிருகங்களிடம் சென்று கூரியது. 


முயலின் இந்த சமயோசித முயற்சியை காட்டில் உள்ள அனைத்து விலங்குகளும் பாராட்டின.  

by Swathi   on 18 Mar 2014  4 Comments
Tags: Rabbit Kids Stories   Lion Kids Stories   முயல் கதைகள்   சிங்கம் கதைகள்           
 தொடர்புடையவை-Related Articles
சிங்கமும், முயலும் !! சிங்கமும், முயலும் !!
தந்திரமான நரியும், வயதான சிங்கமும் தந்திரமான நரியும், வயதான சிங்கமும்
கருத்துகள்
13-Mar-2018 12:16:29 ramesh.r said : Report Abuse
Kadhai arumai aanal padangalum irundhal kuyandhaigal aarvamudan parthu rasippargal!nandri!
 
01-Dec-2017 11:23:52 SARANYA said : Report Abuse
புத்திசாலி முயல்குட்டி .... அதிகமாக இந்த ஒரு பொருளுக்கும் ஆசை பட கூட து... தன்னை விட பலசாலி யாரும் இல்லை என்ற ஆளுமை யாரிடம் இருக்கின்றதோ அவர்களுக்கும் சிங்கத்திரு ஏற்பட்ட நிலைமை தான்அவர்களுக்கும் ஏற்படும் என்பதைமுயலும் சிங்கமும் நீதி கதை உணர்த்ததுகிறது!.
 
21-Sep-2017 16:34:33 sudhan said : Report Abuse
வெரி நைஸ் my சன் என்ஜோய் எவெரி டே
 
09-Aug-2017 18:37:15 Stephen said : Report Abuse
ஸ்டோரீஸ் ஆர் அவெசொமே
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.