பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்களை உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக, மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ற வகையில், ரயில் கட்டணங்களை மாற்றி அமைப்பது தொடர்பான அறிவிப்பு, பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது. அதன்படி பார்த்தால், அக்டோபர் முதல் தேதி, அந்த திட்டம் அமலாகி இருக்க வேண்டும். ஆனால், இதுதொடர்பான கோப்புகள் தற்போது தான் எனக்கு வந்துள்ளது. அவற்றை நான் ஆய்வு செய்து வருகிறேன்; விரைவில் கட்டண உயர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும், எரிபொருள் சிக்கனம் குறித்த பல்வேறு பரிந்துரைகள் ரயில்வே துறைக்கு வந்துள்ளதாகவும், அவற்றை ஆய்வு செய்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
|