LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

45 ஆயிரம் கிராமங்களுக்கு இணையதள வசதி வழங்குகிறது ரயில்டெல் நிறுவனம் !!

தொலைதூரத்தில் உள்ள கிராமப்புறங்களில் இணையதள வசதிகளை வழங்க, பணிகள் நடைபெற்றுவருவதாக இந்திய ரயில்வேயின், 'ரயில்டெல்' நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 

உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்பத்தை கிராமப்புற மக்களும் தெரிந்து கொள்ளும் விதமாக, கிராம புறங்களில் இணையதள வசதிகளை வழங்க மத்திய அரசு சமீபத்தில் முடிவு செய்தது. இதற்கான உத்தரவை, ரயில்வே தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு பணிகளை, திறம்பட வழங்கி வரும் ரயில்டெல்' நிறுவனத்திடம் மத்திய அரசு வழங்கியது. இந்த நிறுவனம் தற்போது,  42 ஆயிரம் கி.மீ., தூரத்திற்கு, பைபர் ஆப்டிகல் இணைப்பை கொண்டுள்ளது. மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள், கூடுதலாக, 7,500 கி.மீ.,யை எட்ட உள்ளது. இதன் மூலம், மொத்தம், 50 ஆயிரம் கி.மீ.,க்கு, தகவல் தொடர்பு வசதி கொண்டுள்ள, இந்த நிறுவனத்திடம், 45 ஆயிரம் கிராமங்களுக்கு, இணையதள வசதியை வழங்க முடியும். இதற்கான, முதற்கட்டப் பணிகளை, ரயில்டெல் நிறுவனம் துவக்கியுள்ளது. நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள், இப்பணியை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

by Swathi   on 29 Oct 2013  0 Comments
Tags: Railtel   45   000 Villages   Broadband Connection   இணையவசதி   ரயில்டெல்   கிராமப்புற மக்கள்  
 தொடர்புடையவை-Related Articles
45 ஆயிரம் கிராமங்களுக்கு இணையதள வசதி வழங்குகிறது ரயில்டெல் நிறுவனம் !! 45 ஆயிரம் கிராமங்களுக்கு இணையதள வசதி வழங்குகிறது ரயில்டெல் நிறுவனம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.