தொலைதூரத்தில் உள்ள கிராமப்புறங்களில் இணையதள வசதிகளை வழங்க, பணிகள் நடைபெற்றுவருவதாக இந்திய ரயில்வேயின், 'ரயில்டெல்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்பத்தை கிராமப்புற மக்களும் தெரிந்து கொள்ளும் விதமாக, கிராம புறங்களில் இணையதள வசதிகளை வழங்க மத்திய அரசு சமீபத்தில் முடிவு செய்தது. இதற்கான உத்தரவை, ரயில்வே தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு பணிகளை, திறம்பட வழங்கி வரும் ரயில்டெல்' நிறுவனத்திடம் மத்திய அரசு வழங்கியது. இந்த நிறுவனம் தற்போது, 42 ஆயிரம் கி.மீ., தூரத்திற்கு, பைபர் ஆப்டிகல் இணைப்பை கொண்டுள்ளது. மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள், கூடுதலாக, 7,500 கி.மீ.,யை எட்ட உள்ளது. இதன் மூலம், மொத்தம், 50 ஆயிரம் கி.மீ.,க்கு, தகவல் தொடர்பு வசதி கொண்டுள்ள, இந்த நிறுவனத்திடம், 45 ஆயிரம் கிராமங்களுக்கு, இணையதள வசதியை வழங்க முடியும். இதற்கான, முதற்கட்டப் பணிகளை, ரயில்டெல் நிறுவனம் துவக்கியுள்ளது. நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள், இப்பணியை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
|