LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ரயில்களில் தானியங்கி கதவுகளை அமைக்க ரயில்வே நிர்வாகம் ஆலோசனை !!!

 

ஓடும் ரயில்களில், பயணிகள் தவறி விழுவதை தடுத்து நிறுத்த, தானியங்கி கதவுகள் அமைக்க வலியுறுத்தி, அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் ஒரு பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், ரயில்களில் தானியங்கி கதவுகளை அமைக்க, ரயில்வே துறைக்கு உத்தரவிட்டது. இதனை அடுத்து ரயில்வே துறை, உயர்நீதி மன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. உச்ச நீதி மன்றமும், பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பையே வழங்கியது. 
நீதி மன்றத்தின் தீர்ப்பின் படி, ரயில்களில் தானியங்கி கதவுகளை அமைப்பது குறித்து, ரயில்வே அதிகாரிகளின் கூட்டம், கடந்த வாரம் நடைபெற்றது. இதில், குறிப்பிட்ட சில ரயில்களில், ஏசி வகுப்பு பெட்டிகளில் மட்டும், தானியங்கி கதவுகளை அமைப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. இவ்வாறு, ஏசி பெட்டிகளில் அமைக்கப்படும் தானியங்கி கதவுகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் பொறுப்பு, ரயில் ஓட்டுனர் அல்லது குறிப்பிட்ட பெட்டியில் உள்ள காப்பாளர் வசம் இருக்கும். தானியங்கி கதவுள்ள பெட்டிகளில் உள்ள கதவுகள், ரயில்வே ஸ்டேஷன்களுக்கு ரயில் வந்து சேர்ந்ததும் திறந்து கொள்ளும், ஸ்டேஷனிலிருந்து புறப்பட்டதும் தானாக மூடிக்கொள்ளும்.
சோதனை முயற்சியாக, கபூர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில், 20 ஏசி பெட்டிகளில் தானியங்கி கதவு வசதியுடன் வடிவமைக்கப்பட உள்ளன. துவக்கமாக, டில்லி மண்டலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு அதன் வெற்றியை தொடர்ந்து, படிப்படியாக, அனைத்துமுக்கிய ரயில்களில் அமல்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூடத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஓடும் ரயில்களில், பயணிகள் தவறி விழுவதை தடுத்து நிறுத்த, தானியங்கி கதவுகள் அமைக்க வலியுறுத்தி, அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் ஒரு பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், ரயில்களில் தானியங்கி கதவுகளை அமைக்க, ரயில்வே துறைக்கு உத்தரவிட்டது. இதனை அடுத்து ரயில்வே துறை, உயர்நீதி மன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. உச்ச நீதி மன்றமும், பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பையே வழங்கியது. 

 

நீதி மன்றத்தின் தீர்ப்பின் படி, ரயில்களில் தானியங்கி கதவுகளை அமைப்பது குறித்து, ரயில்வே அதிகாரிகளின் கூட்டம், கடந்த வாரம் நடைபெற்றது. இதில், குறிப்பிட்ட சில ரயில்களில், ஏசி வகுப்பு பெட்டிகளில் மட்டும், தானியங்கி கதவுகளை அமைப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. இவ்வாறு, ஏசி பெட்டிகளில் அமைக்கப்படும் தானியங்கி கதவுகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் பொறுப்பு, ரயில் ஓட்டுனர் அல்லது குறிப்பிட்ட பெட்டியில் உள்ள காப்பாளர் வசம் இருக்கும். தானியங்கி கதவுள்ள பெட்டிகளில் உள்ள கதவுகள், ரயில்வே ஸ்டேஷன்களுக்கு ரயில் வந்து சேர்ந்ததும் திறந்து கொள்ளும், ஸ்டேஷனிலிருந்து புறப்பட்டதும் தானாக மூடிக்கொள்ளும்.

 

சோதனை முயற்சியாக, கபூர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில், 20 ஏசி பெட்டிகளில் தானியங்கி கதவு வசதியுடன் வடிவமைக்கப்பட உள்ளன. துவக்கமாக, டில்லி மண்டலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு அதன் வெற்றியை தொடர்ந்து, படிப்படியாக, அனைத்துமுக்கிய ரயில்களில் அமல்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூடத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

 

by Swathi   on 22 Sep 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’ கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’
கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை. கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை.
செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..! செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.