ஷங்கரின் உதவியாளராக இருந்து, ராஜா ராணி என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் ரசிகர்கள் மனதில் ஒரு நீங்க இடத்தை பிடித்தவர் இயக்குனர் அட்லி.
இவர் தற்போது தனது இரண்டாவது படத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். இந்த படத்தை முதலில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போது இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் தயாரிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் யார் நடிக்கப் போகிறார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த எதிர்பார்ப்புக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில், தற்போது, அட்லியின் இரண்டாவது படத்தில் ஹீரோவாக விஜய் நடிக்கப்போகிறாராம்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ படத்தைத் தொடர்ந்து சிம்புதேவன் இயக்கத்தில் இதுவரை இல்லாத வித்தியாச கதைக்களத்தில் விஜய் நடிக்க உள்ளார்.
அந்த படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைப்பார் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
|