இராசகோபாலன் சிதம்பரம் (Rajagopala Chidambaram) ஓர் இந்திய அணு அறிவியலாளர் மற்றும் புகழ்பெற்ற உலோகவியல் அறிஞர். இந்திய அரசின் முதன்மை அறிவியல் அறிவுரைஞராகப் பணியாற்றி வருகிறார். இந்தியாவின் அடிப்படை அணுவியல் ஆய்வுமையமான பாபா அணு ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குனராக இருந்துள்ளார். முனைவர். சிதம்பரம் பொக்ரானில் நடந்த 1974 அணுகுண்டு சோதனையில் முக்கிய பங்காற்றியுள்ளார். மே 1998ஆம் ஆண்டு நடந்த சக்தி நடவடிக்கையின்போது அணுசக்தித் துறையின் குழுவை தலைமையேற்று நடத்தியுள்ளார்.
முனைவர். சிதம்பரம் பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தின் 'மாண்புடை நபர்களின் குழு' அங்கத்தினர்களில் ஒருவராக உள்ளார். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்குமிடையே குடிசார் அணுவாற்றல் கூட்டுறவு உடன்பாடுகையெழுத்தாகும் முன்னர் பன்னாட்டு முகமையின் இயக்குனர்குழு "பாதுகாவல்கள் உடன்பாட்டை" ஏற்றுக்கொள்ள இவர் ஆற்றிய பங்கு முதன்மையானதாகும்.
|