தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றார் ராஜீவ் ரஞ்சன்
2019ம் ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதி தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட கே. சண்முகம் அவர்களின் பதவிக்காலம் 2020 ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 31ம் தேதி வரை பணி நீட்டிப்பு செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் பிப்ரவரி 1ம் தேதியான இன்று தமிழகத்தின் 47வது புதிய தலைமைச் செயலாளராக ராஜூவ் ரஞ்சன் அவர்கள் பொறுப்பேற்றார். மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை செயலாளராக பணியாற்றி வந்த இவர் எம்.எஸ்.சி. எம்.பி.ஏ. பட்டதாரி என்பதும் குறிப்பிடத்தக்கது. ஓய்வு பெற்ற கே.சண்முகம் அவர்கள் தற்காலிக ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
|