LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

ராமசாமியார் நினைவு மண்டபம் விரைவில் திறக்கப்படும்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

சுதந்திரப் போராட்ட வீரர் ராமசாமியார் நினைவு மண்டபம் விரைவில் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.ராமசாமியாரின் முழு உருவப் படத்தை சட்டப் பேரவை மண்டபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  திறந்து வைத்தார்.

1952-ஆம் ஆண்டு தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியைத் தோற்றுவித்து, அதே ஆண்டில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் ராமசாமியார் உள்பட 19 பேர் வெற்றி பெற்றனர். மக்கள் பணியாற்றுவதில் மற்ற தலைவர்களுடன் இணக்கமாகச் செயல்பட்டவர் ராமசாமியார்.

ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனிலும், முன்னேற்றத்திலும் அதிக அக்கறை எடுத்துக் கொண்ட தலைவர்களில் முதல் வரிசையில் திகழ்ந்தவர் ராமசாமியார்.

வன்னியர் சமுதாயத்துக்கு மாநிலத்தில் 20 சதவீத ஒதுக்கீடும், மத்தியில் 2 சதவீத ஒதுக்கீடும் அளிக்க வேண்டுமென்ற தீர்மானத்தை உழைப்பாளர் கட்சி மாநாட்டில் நிறைவேற்றி தீர்மானம் நிறைவேற தொடர்ந்து அவர் அழுத்தம் கொடுத்து வந்தார்.

பின்தங்கிய மக்களுக்காக உழைத்த ராமசாமியாரைச் சிறப்பிக்க கடலூர் மாவட்டத்தில் நினைவு மண்டபமும், முழு உருவ வெண்கலச் சிலையும் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்து இருந்தார். 
அதன்படி, கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் ராமசாமியாருக்கு 1.5 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கி நினைவு மண்டபமும், வெண்கலச் சிலையும் அமைக்க அடிக்கல்லும் நாட்டப்பட்டது.  இந்த நினைவு மண்டபம் விரைவில் திறக்கப்படும் என்று சட்டப்பேரவையில் படத்தைத் திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

விழாவிற்கு சபாநாயகர்  ப.தனபால் தலைமை தாங்கிப் பேசினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

விழாவில், பொள்ளாச்சி ஜெயராமன்,  மு.க.ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் அன்புமணி ராமதாஸ், கோ.க.மணி,  ஏ.கே.மூர்த்தி, கிருஷ்ணசாமி,  பொன்னையன், வளர்மதி,  மைத்ரேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கி.சீனிவாசன் நன்றி கூறினார்.

முழு உருவப் படத் திறப்பு விழாவில், ராமசாமியாரின் மகன் ராமதாஸ் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். 

பேரவை மண்டபத்தில் ஏற்கனவே காந்தியடிகள், ராஜாஜி, நேரு, திருவள்ளுவர், அண்ணா, காமராஜர், முத்துராமலிங்கத்தேவர், பெரியார், அம்பேத்கர், காயிதேமில்லத், ஜெயலலிதா ஆகிய 11 தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன. இப்போது, ராமசாமியாரின் முழு உருவப் படம் 12-ஆவதாக இடம்பெற்றுள்ளது.
ஒவ்வொரு உருவப்படத்துக்கு கீழும், அவர்களின் செயல்பாடுகளை ஒரு வரியில் விளக்கும் வகையில் வாசகங்கள் இடம்பெற்று உள்ளன.

அந்த வகையில், ராமசாமியாரின் உருவப் படத்துக்குக் கீழே, "வீரம்-தீரம்-தியாகம்' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

by Mani Bharathi   on 22 Jul 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல். இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்.
முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம். முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம்.
நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார். நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்.
"உலகத் தமிழ் மாநாடு" - வரலாறு திரும்புமா ?
2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்! 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்!
செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம். செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம்.
மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு! மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு!
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.