“அடிப்படையில் நானும் ஒரு தமிழன் தான் தெரியுங்களா?” என்று சிரித்தார் ராம்ஜெத்மலானி. “என்ன சார் சொல்கிறீர்கள்” என்றேன் புரியாமல். “ஆமாம். என்னுடைய அம்மா சுத்தமான தமிழச்சி. கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். அப்பா வடநாட்டுக்காரர். இருவருக்கும் காதல். திருமணத்தில் முடிந்தது. ஏனென்று தெரியவில்லை, எனக்கு தமிழை சரியாக கற்றுத்தராமல் விட்டுவிட்டார்கள். நானும் தமிழ் தெரியாமலேயே வளர்த்துவிட்டேன். அதனால்தான் என்னையும் அறியாமல் தமிழ்மீது, தமிழகத்தின் மீது ஒரு பாசம் ஊடாடி வருகிறது” என்று கூறி சிரித்தபோது எனக்கு வியப்பு தாளவில்லை. மனிதர்களுள் எப்படியான ஏக்கங்கள்...?
---- திருச்சி வேலுச்சாமி, “ராஜீவ் படுகொலை: தூக்கு கயிற்றில் நிஜம்” என்ற நூலில் இருந்து...
பவித்ர ஹிந்துஸ்தான் கழகம். 19 நவம்பர் 1995 அன்று ராம் ஜெத்மலானி தொடங்கிய கட்சியின் பெயர். வடக்கையும் தெற்கையும் இணைக்கும் பெயராக இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் அந்தப் பெயரைத் தேர்வுசெய்ததாகக் கூறுகிறார் ஜெத்மலானி. கழகம் என்ற பெயரை ஏன் இணைத்தீர்கள் என்று கேட்டபோது, “என் கட்சி வடநாட்டு மக்களுக்கானது மட்டுமல்ல என்பதைச் சொல்வதற்காகத்தான் கழகத்தைச் சேர்த்தேன்’ என்று சொன்னார் ஜெத்மலானி. Ram Jethmalani : The Authorized Biography by Nalini Gera Penguin
|