தகுதி இல்லாதவர்களுக்கு மருத்துவப் படிப்பிற்கான இடங்களை வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய காங்கிரஸ் எம்.பி.யுமான ரஷீத் மசூத்திற்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி அவரது எம்.பி .பதவியை பறிபோகிறது.
வி.பி.சிங் பிரதமராக இருந்த போது, மத்திய அரசில் சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்த ரஷீத் மசூத் மீது, கடந்த 1990-91 ஆம் ஆண்டில் தகுதி இல்லாதவர்களுக்கு மருத்துவப் படிப்பிற்கான இடங்களை வழங்கியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ரஷீத் மசூத் குற்றவாளி என டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் கடந்த 20 ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும், தண்டனை விவரத்தை அக்டோபர் 1ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது. இதன் படி இன்று தீர்ப்பளித்த டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம், ரஷீத் மசூத்துக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உச்ச நீதி மன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பி படி, எம்.பி. பதவியை இழக்கும் முதல் அரசியல்வாதி ரஷீத் மசூத் என்பது குறிப்பிடத்தக்கது.
|