LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

ரஷ்யப் பயணம்

 சொர்க்கத்தைப் பற்றியும் நரகத்தைப் பற்றியும் ஒரு வாதம் நடந்தது . ஆனால் மார்க் ட்வைன் மட்டும் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தார் . அவரிடம் காரணம் கேட்டனர் .

அதற்கு மார்க் ட்வைன் எந்த இடம் என்றாலும் பரவாயில்லை . ஏனென்றால் சொர்க்கத்திலும் நரகத்திலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள் என்றார் .

இப்படிப்பட்ட சொர்க்கம் , நரகம் பற்றிய சிந்தனை ஏதுமில்லாமல் நாட்டு மக்களின் நலன் பற்றியே சிந்தித்தவர் பெருந்தலைவர் . நம் நாட்டு முன்னேற்றத்திற்காக உலகச் சுற்றுப் பயணம் செய்யப் புறப்பட்டார் .

1966 ஜூலை மாதம் 22 ஆம் தேதி பகல் 1-45 மணியளவில் பெருந்தலைவர் ரஷ்யா தலைநகர் மாஸ்கோ விமான நிலையத்தில் இறங்கினார் . சுப்ரீம்சோவியத் சபையின் தலைவர் ஸ்பிரிதினோவ் , உதவித் தலைவர் ஜான்தீவ் வெளிவிவகார அமைச்சர் பிருபின் மற்றும் பல முக்கிய அதிகாரிகள் காமராசரை வரவேற்றனர் .

சுமார் 65 லட்சம் பேர் உள்ள மாஸ்கோ நகர மேயருடன்அந்த நகரத்தின் பிரச்சினைகள் குறித்து விவாதித்தார் .

பிறகு ஜூலை 23 ஆம்தேதி கிரெம்ளின் மாளிகையைப் பார்வையிட்டார் . பிறகு லெனின் உடல் தைலமிடடு கெடாமல் பாதுகாக்கப்பட்டிருக்கும சமாதியைப் பார்வையிட்டு மலர் வளையம் வைத்தார் . பிறகு அருகில் இருந்த ஆர் . வெங்கட்ராமனிடம் “ காந்திஜியின் உடலையும் இப்படிப் பாதுகாக்காமல் போய் விட்டோமே “ என்றார் .

பெருந்தலைவர் ரஷ்யப் பிரதமர் கோஸிஜினைச் சந்தித்தார் . தவைர்கள்இருவரும் உலகப் பிரச்சினைகள் பற்றிச் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் பேசினார்கள் .

பின்னர் இன்டான் துஷான்பே நகரப்பொழுது போக்குப் பூங்காவைச் சுற்றிப் பார்த்தார் .

ஜூலை 15 ல் தாஜிக் கம்யூனிஸ்ட் கட்சிக் காரியதரிசியான திரு . ரசலோவைச் சந்தித்தார் . அந்தக் கட்சி அலுவலகத்தில் பணியாற்றும ஊழியர்களையும சந்தித்துப்பேசினார் .

கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தங்கள் வருவாயில் ஒரு பகுதியைக் கட்சிக்குக் கொடுத்து விடுவதைக்கேட்டு வியப்புற்றார் . ஜூலை 26 ஆம்தேதி ஹிட்லரை எதிர்த்துப் போரிட்ட வால்காகிராட் நகரில் காலடி வைத்தார் . பூங்கா யுத்த கால நினைவுச் சின்னங்களைப் பார்வையிட்டார் .

அதன் பிறகு வரலாற்றுப் புகழ் பெற்ற லெனின் கிராட் நகரத்துக்குச் சென்றார் . அங்கு பெருந்தலைவருக்கு அந்த நகர மேயர் விருந்தளித்தார் . விருந்தில் பேசிய காமராசர் ருஷ்யப் புரட்சியையும் , ருஷ்யத்தலைவர் லெனினையும் வெகுவாகப் புகழ்ந்து பேசினார் . அப்போது பாரதியார் பாடிய ,

“ ஆகாவென் றெழுந்தது பார் யுகப் புரட்சி
கொடுங்கோலன் ஜார் மன்னன் அலறி வீழ்ந்தான் “

என்ற பாடலையும் பாடி போரின் கொடுமையில் இருந்து உலகத்தை விடுவிப்பதற்காகப் பாடுபடும் சமாதானக் காவலனாம் ரஷ்யாவோடு இந்தியா தோளோடு தோள் நின்று ஒத்துழைக்கும் என்றும் கூறினார் .

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.