தனியார் வங்கிகள் கருப்புப் பணத்தை முதலீடாகப் பெறுவதாகவும், வாடிக்கையாளர் விவரங்களை சரிபார்க்காமல் பல கணக்குகள் தொடங்க அனுமதிப்பதாகவும் கோப்ரா போஸ்ட் என்ற இணையதளம் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ரிசர்வ் வங்கி தீவிர விசாரணை நடத்தியது, இதில் கே.ஒய்.சி எனப்படும், வாடிக்கையாளர் குறித்த முழுமையான விவரங்ககள் சேகரிப்பு நடவடிக்கையை மீறியதாக ஆக்ஸிஸ் வங்கிக்கு ஐந்து கோடி ரூபாய் அபராதமும், எச்.டி.எஃப்.சி. வங்கிக்கு நான்கரை கோடி ரூபாயும் அபராதம், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதிப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனினும், இந்த வங்கிகள் கருப்பு பணத்தை முதலீடாகப் பெற்றதாக கூறப்பட்ட புகார் மீது இதுவரை எந்த ஆதாரமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
|