வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தங்கம் இறக்குமதி செய்வதற்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளது. இதன் படி,
1.இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தில் இருபது சதவீதம் தங்க ஆபரணங்களாக மாற்றி மீண்டும் ஏற்றுமதி செய்ய வேண்டும்.
2.இறக்குமதி செய்யும் தங்கத்தின் மதிப்பிற்கேற்ப அதே அளவு தங்கம், சுங்கத் துறையிடம் டிபாசிட் செய்யப்பட வேண்டும்.
இந்தியாவில் தங்கம் இறக்குமதி அதிகமாக உள்ளதால் கடந்த 2012–2013–ம் நிதி ஆண்டில் இந்த நடப்பு கணக்கு பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவுக்கு 4.8 சதவீதம் அதிகரித்து உள்ளது.தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாட்டின் காரணமாக தங்கத்தின் விலை உயரும் என்று நகை வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
|