LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

நடப்பு ஆண்டின் மத்தியில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் !!

இந்த ஆண்டின் மத்தியில் சோதனை அடிப்படையில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. 

 

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள், முதற்கட்டமாக, கொச்சி, மைசூரு, ஜெய்பூர், புவனேஸ்வர், சிம்லா ஆகிய நகரங்களில் பயன்பாட்டிற்கு வர உள்ளன.

 

இதற்கான ஒப்பந்த புள்ளிகளை, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள கரன்சிகளில், பருத்தி இழைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றை விட, பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை தயாரிக்க, இரு மடங்கு செலவாகும் என்றாலும் பிளாஸ்டிக் நோட்டுகள், கறை படியாமல், நீண்ட காலம் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டவையாக இருக்கும். இந்த தொழில்நுட்பத்தில், கள்ள நோட்டுகளை தயாரிக்க முடியாது. 

 

பிளாஸ்டிக் நோட்டுக்கள் வருகையால் கள்ள நோட்டு புழக்கம் குறைந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் துணை புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியா போன்ற அதிக வெப்பமான நாட்டில், பிளாஸ்டிக் கரன்சியின் தன்மையை உறுதிப்படுத்த முடியாத நிலை உள்ளது. இதை அறியும் நோக்கில் தான், மாறுபட்ட தட்பவெப்ப நிலை கொண்ட ஐந்து நகரங்களில், சோதனை முறையில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

by Swathi   on 26 Jan 2014  0 Comments
Tags: Plastic Currency   RBI   Plastic Note   Indian Plastic Currency   RBI Plastic Currency   பிளாஸ்டிக் கரன்சி   பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள்  
 தொடர்புடையவை-Related Articles
இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் காலிப்பணியிடங்கள் !! இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் காலிப்பணியிடங்கள் !!
இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் விரைவில் அறிமுகமாகும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் !! இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் விரைவில் அறிமுகமாகும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் !!
வங்கி கணக்கு இல்லாதவர்களும் ஏ.டி.எம்-ல் பணம் பெரும் வசதி !! வங்கி கணக்கு இல்லாதவர்களும் ஏ.டி.எம்-ல் பணம் பெரும் வசதி !!
நடப்பு ஆண்டின் மத்தியில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் !! நடப்பு ஆண்டின் மத்தியில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் !!
2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் - ரிசர்வ் வங்கி !! 2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் - ரிசர்வ் வங்கி !!
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வங்கி கணக்கு !! 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வங்கி கணக்கு !!
ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம் !! ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம் !!
கிறுக்கல் ரூபாய் நோட்டுகளை வங்கிகள் வாங்கும் : ரிசர்வ் வங்கி அறிக்கை !! கிறுக்கல் ரூபாய் நோட்டுகளை வங்கிகள் வாங்கும் : ரிசர்வ் வங்கி அறிக்கை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.