|
|||||
மந்திரிகள் மற்றும் இலாக்காக்களின் எண்ணிக்கையைக் குறைக்கிறது, சீனாவின் புதிய அரசு!! |
|||||
சீனாவில் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சியாளர்கள் மாற்றப்படுவார்கள். அப்போது நிர்வாகத்தில் தேவையான மாறுதல்களைச் செய்வார்கள். அதன்படி தற்போது ஹூ ஜீண்டாவோ அதிபராக உள்ளார். இவரின் பதவிக்காலம் இப்போது முடிவடைகிறது. அடுத்த வாரம் ஜி ஜின்பிங் புதிய அதிபராக பதவி ஏற்க உள்ளார். இம்முறை அரசு நிர்வாகத்தில் சீனா செய்யப்போகிற மாற்றங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ள புதிய கொள்கை முடிவுகள் பின்வருமாறு: சமூக மற்றும் சந்தை பிரச்னைகளில் நிர்வாகத்தின் தலையீட்டைக் குறைக்கவும், அதிகார மையத்தைக் கட்டுப்படுத்தவும் தற்போதுள்ள மந்திரிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. இப்போது உள்ள 27 இலாகாக்களும் இனி 25 ஆக குறைக்கப்படும். ரெயில்வேதுறையானது நிறையப் புகார்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. அது, மின்னல்வேக புல்லட் ரெயில் திட்டத்தை நிறைவேற்றுவதில் ஈடுபட்டுள்ளதால் பெரும் கடன் சுமையில் இருக்கிறது. அதனால் விரையமும், முறைகேடும் நிலவுகிறது. எனவே ரெயில்வே துறை கலைக்கப்பட்டு ரயில் சேவைகளை வழங்குதல் மற்றும் கண்காணிப்புப் பிரிவு ஆகியவற்றின் நிர்வாகம் மற்றும் வர்த்தகப் பிரிவு என இனி தனித்தனியாகச் செயல்படும். இதற்காக, தனியார் முதலீடும் ஈர்க்கப்படும். ரயில்வே நிர்வாகத்தை இனி போக்குவரத்து அமைச்சகம் கண்காணிக்கும். குடும்ப நலத்திட்ட கமிஷனும் நிறைய புகார்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. எனவே, குடும்ப நலத்திட்ட கமிஷன், சுகாதார இலாகாவுடன் இணைக்கப்படும். இத்துடன் உணவு, மருந்து கட்டுப்பாடு ஆகிய துறைகளையும் கூடுதலாக இணைத்து அதிக அதிகாரம் வழங்கப்படும். பத்திரிகைத்துறை மற்றும் வானொலி, சினிமா, தொலைக்காட்சித்துறை என இரண்டாக இருந்த துறைகள் இனி ஒன்றாக இணைக்கப்படுகிறது. அனைத்து அரசுத் துறைகளிலும் ஊழல், முறைகேடுகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ராணுவ கொள்கையில் எவ்விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. |
|||||
by MAYIL on 11 Mar 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|