மனோரா கோட்டையை கைஃபா அமைப்பினரும், தொல்லியல் துறையும் இணைந்து சீரமைத்துள்ளனர்
மனோரா கோட்டை தஞ்சையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 1814ல் கடல் போரில் நெப்போலியனுடன் போரிட்டு ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதைப் பாராட்டும் வகையில், தஞ்சையை ஆண்ட தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி அவர்கள் ஒரு நினைவுச் சின்னத்தை நிறுவினார். அந்நினைவுச் சின்னத்தை ‘மனோரா’ என்று அழைக்கின்றனர். இது எட்டு மாடி அறு கோண வடிவ கோபுர அமைப்பைக் கொண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 23 மீட்டர் உயரம் கொண்டது. இந்த கோட்டை ‘மினாரெட்’ என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து மனோரா என்ற பெயரைப் பெற்றது. இக்கோட்டையானது பல ஆண்டுகளாகப் பராமரிப்பற்றுக் கிடந்தது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கோட்டையை கைஃபா அமைப்பினரும், தொல்லியல் துறையும் இணைந்து சீரமைத்துள்ளனர்.
|