LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சாதி வாரிக்கணக்கெடுப்பின் தொடர்ச்சியாக தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு உயர்வு

 

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துவருகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு


நடத்த வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், தெலங்கானாவில் 2023-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, தேர்தல் வாக்குறுதியாகச் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் எனக் குறிப்பிட்டிருந்தது. அதன் அடிப்படையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது. அதில், தெலங்கானாவின் மக்கள் தொகையில் 56.33 சதவிகித மக்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என தெலங்கானாவின் சமூகப் பொருளாதார, அரசியல், சாதி கணக்கெடுப்புக்கான அறிக்கை தெரிவித்திருக்கிறது.


இந்தக் கணக்கெடுப்பின் மூலம்  ``தெலங்கானா மாநிலத்தில் (BC) பிற்படுத்தப்பட்ட வகுப்பின மக்கள் தொகை 1,64,09,179 (46.24 சதவிகிதம்). பட்டியலின மக்கள் தொகை (SC) 61,84,319 (17.43 சதவிகிதம்). பட்டியலின பழங்குடியினர் மக்கள் தொகை (ST) 37,05,929 (10.45 சதவிகிதம்). இதர சாதியினர் மக்கள் தொகை (OC) 44,21,115 (13.31 சதவிகிதம்) இருப்பது தெரியவந்துள்ளது. 


அதேபோல  முஸ்லிம் மக்கள் தொகை 44,57,012 (12.56 சதவிகிதம்). இதில், பிற்படுத்தப்பட்ட வகுப்பின முஸ்லிம்கள் (BC) 35,76,588 (10.08 சதவிகிதம்) இதர சாதியின முஸ்லிம்கள் (OC) 8,80,424 (2.48 சதவிகிதம்). 
இதையடுத்து அங்குப் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 42 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, பிற்படுத்தப்பட்டோருக்கு 29 சதவீதம் மட்டுமே இட ஒதுக்கீடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


அதேபோல  பட்டியலினத்தவர்களுக்கு (SC) 15% ஆகவும், பழங்குடியினருக்கு 6% இருந்த இட ஒதுக்கீட்டை  10% ஆகவும் உயர்த்தி அம்மாநிலச் சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

 

 

by hemavathi   on 19 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
10 ஆண்டுகளில்  17 கோடி பேரை வறுமைக் கோட்டுக்கு மேல் உயர்த்திய இந்தியா 10 ஆண்டுகளில் 17 கோடி பேரை வறுமைக் கோட்டுக்கு மேல் உயர்த்திய இந்தியா
பிரதமர் மோடியின் சவுதி அரேபியா பயணத்தால் ஏற்பட்ட பலன்கள்  என்னென்ன? பிரதமர் மோடியின் சவுதி அரேபியா பயணத்தால் ஏற்பட்ட பலன்கள் என்னென்ன?
பயணிகள் விமானப் போக்குவரத்தில் சீனாவை மிஞ்சும் இந்தியா பயணிகள் விமானப் போக்குவரத்தில் சீனாவை மிஞ்சும் இந்தியா
இந்தாண்டு இறுதிக்குள் இந்தியா வருகிறார் எலான் மஸ்க் இந்தாண்டு இறுதிக்குள் இந்தியா வருகிறார் எலான் மஸ்க்
அடுத்த மாதம் விண்வெளிக்குப் புறப்படுகிறார் சுபான்ஷு சுக்லா அடுத்த மாதம் விண்வெளிக்குப் புறப்படுகிறார் சுபான்ஷு சுக்லா
இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் பல்வேறு தளர்வுகளை அறிவித்த சீனா இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் பல்வேறு தளர்வுகளை அறிவித்த சீனா
அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி,வான்ஸ் அடுத்த வாரம்  இந்தியா வருகிறார் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி,வான்ஸ் அடுத்த வாரம் இந்தியா வருகிறார்
டெல்லியில் தங்கினால் வாழ்நாளில் 10 ஆண்டுகள் குறைந்துவிடும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி டெல்லியில் தங்கினால் வாழ்நாளில் 10 ஆண்டுகள் குறைந்துவிடும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.