LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ

ராபர்ட் கிரீன் இங்கர்சால்

ஒரு மனிதனின் உண்மையான தன்மையை

அறிய வேண்டுமானால் , அவனுக்கு

அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள் .


அமெரிக்காவின் பகுத்தறிவு மேதை என அழைக்கப்படுபவர் ராபர்ட் கிரீன் இங்கர்சால் ( Robert G. Ingersoll ) ஆவார் . இவர் 1833 ஆம் ஆண்டு ஆகஸ்டு 11 அன்று நியூயார்க் மாகாணத்தில் உள்ள டிரத்தன் என்ற ஊரில் பிறந்தார் . சிறு வயதிலேயே சிந்தனைதிறன் கொண்டவராக இருந்தார் . ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தார் . மதப் போதகர்கள் இவரிடம் ஞானஸ்நானம் பற்றி கருத்து கேட்ட போது , ஞானஸ்நானத்தை விட சோப்புக் குளியல் நல்லது என்றார் . அதனால் இவர் ஆசிரியர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் . பின்னர் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார் . தனது அறிவாலும் , திறமையாலும் இல்லியான்சு மாநில அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார் .

இவரின் கொள்கைப்பிடிப்பு , நேர்மையின் காரணமாக இல்லியான்சு மாகாணத்தின் ஆளுநர் வாய்ப்பு கிடைத்தது . மதம் சார்ந்த விமர்சனங்களை திரும்பப் பெற்றால் ஆளுநர் பதவிக்கு பரிந்துரைப்பதாகக் கூறினார்கள் . இங்கர்சால் மதம் சார்ந்த விமர்சனங்களைத் திரும்பப் பெற மறுத்ததால் ஆளுநர் பதவி கிடைக்காமல் போனது , மக்கள் துயரமடைவதற்கும் , நாட்டில் பல அநீதிகள் நிகழ்வதற்கும் மதங்களே காரணம் என்றார் . கிறிஸ்துவ மதத்தின் மூடநம்பிக்கையை எதிர்த்து 40 ஆண்டுகள் தீவிர எதிர்ப்புகளுக்கிடையே பிரச்சாரம் செய்தார் . இவர் 1899 ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டுப் பிரிந்தார் .

by Swathi   on 02 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.