ஜிம்பாப்வேயில் கடந்த ஜூலை மாதம் 31-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் அந்நாட்டின் தற்போதைய அதிபர், ராபர்ட் முகாபே மற்றும் பிரதமரும் எதிர்கட்சித்தலைவருமான வேங்கிராய் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 61 சதவிகித வாக்குகளை பெற்ற அதிபர் முகாபே வெற்றி பெற்றார். இந்நிலையில் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக வேங்கிராய் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை அரசியலமைப்பு கோர்ட் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து நேற்று ராபர்ட் முகாபே ஏழாவது முறையாக ஜிம்பாப்வேயின் அதிபராக பதவியேற்றார்.
|