LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இந்தியாவின் கோடீஸ்வரர் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தார் ரோஷினி நாடார்

தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஷிவ் நாடார் முன்னணித் தொழிலதிபர்களில் ஒருவர் ஆவார்.

 

இவர், ஹெச்.சிஎல் கார்ப்பரேஷன் மற்றும் வமா சுந்தரி இன்வெஸ்ட்மென்ட்ஸ் (டெல்லி) ஆகியவற்றில் தன் வசம் உள்ள 51-ல் 47 சதவீதப் பங்குகளை, தனது ஒரே மகள் ரோஷினி நாடார் மல்கோத்ராவுக்கு (43) பரிசாக வழங்கி உள்ளார்.



கடந்த 6-ம் தேதி பதிவு செய்யப்பட்ட தான பத்திரம், 7-ம் தேதி தேசியப் பங்குச் சந்தையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்மூலம் ஹெச்.சிஎல்  குழுமத்தைச் சேர்ந்த  ஹெச்.சிஎல் டெக்னாலஜிஸ் மற்றும் ஹெச்.சிஎல் இன்போசிஸ்டம்ஸ் ஆகிய 2 முக்கிய நிறுவனங்கள் இவரது கட்டுப்பாட்டில் வந்துள்ளன.


இதன் மூலம் ரோஷினி இந்தியாவின் கோடீஸ்வரர் பட்டியலில்  மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார். 
ரூ.7.66 லட்சம் கோடி சொத்துடன் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.  


 ரூ.5.99 லட்சம் கோடி சொத்துடன் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி 2-ம் இடத்திலும் உள்ளார். இப்போது ரோஷினி 3-ம் இடம் பிடித்துள்ளார்.


ஷிவ் நாடார், கிரண் நாடார் தம்பதிக்கு 1982-ல் ஒரே மகளாகப் பிறந்த ரோஷினி, டெல்லியில் உள்ள வசந்த் வேலி பள்ளியில் தனது கல்விப் பயணத்தைத் தொடங்கினார். 


அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலை.யில் இளநிலைப் பட்டம் பெற்றார். பின்னர் கெல்லாக் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் முதுநிலை வணிக நிர்வாகம் பட்டம் பெற்றார்.

தொடக்கத்தில் ஊடகத் துறையில் செய்தி தயாரிப்பாளராகப் பணியாற்றிய ரோஷினி, ஹெச்.சிஎல் குழுமத்தில் இணைந்தார். 2020-ல் ஹெச்.சிஎல் டெக்னாலஜிஸ் தலைவர் ஆனார். 


ரோஷினி தலைமையின் கீழ், ஹெச்.சிஎல் டெக்னாலஜிஸ் பாலின சமத்துவத்தை நிலைநாட்டியது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் கால் பதித்தது.


ரோஷினி ‘ஷிவ் நாடார் அறக்கட்டளை’ மூலம் சமூக சேவை செய்து வருகிறார். 2010-ல் ஷிகர் மல்கோத்ராவைத் திருமணம் செய்து கொண்டார். 2 மகன்கள் உள்ளனர்.
 
போர்ப்ஸ் இதழ் 2023-ல் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் ரோஷினி 60-ம் இடம் பெற்றிருந்தார். 
by hemavathi   on 27 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
10 ஆண்டுகளில்  17 கோடி பேரை வறுமைக் கோட்டுக்கு மேல் உயர்த்திய இந்தியா 10 ஆண்டுகளில் 17 கோடி பேரை வறுமைக் கோட்டுக்கு மேல் உயர்த்திய இந்தியா
பிரதமர் மோடியின் சவுதி அரேபியா பயணத்தால் ஏற்பட்ட பலன்கள்  என்னென்ன? பிரதமர் மோடியின் சவுதி அரேபியா பயணத்தால் ஏற்பட்ட பலன்கள் என்னென்ன?
பயணிகள் விமானப் போக்குவரத்தில் சீனாவை மிஞ்சும் இந்தியா பயணிகள் விமானப் போக்குவரத்தில் சீனாவை மிஞ்சும் இந்தியா
இந்தாண்டு இறுதிக்குள் இந்தியா வருகிறார் எலான் மஸ்க் இந்தாண்டு இறுதிக்குள் இந்தியா வருகிறார் எலான் மஸ்க்
அடுத்த மாதம் விண்வெளிக்குப் புறப்படுகிறார் சுபான்ஷு சுக்லா அடுத்த மாதம் விண்வெளிக்குப் புறப்படுகிறார் சுபான்ஷு சுக்லா
இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் பல்வேறு தளர்வுகளை அறிவித்த சீனா இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் பல்வேறு தளர்வுகளை அறிவித்த சீனா
அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி,வான்ஸ் அடுத்த வாரம்  இந்தியா வருகிறார் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி,வான்ஸ் அடுத்த வாரம் இந்தியா வருகிறார்
டெல்லியில் தங்கினால் வாழ்நாளில் 10 ஆண்டுகள் குறைந்துவிடும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி டெல்லியில் தங்கினால் வாழ்நாளில் 10 ஆண்டுகள் குறைந்துவிடும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.