LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ

ரூசோ

மனிதன் சுதந்திரமாகத்தான் பிறக்கிறான் . ஆனால்

எங்கும் அடிமைச்சங்கிலியால் கட்டப்பட்டுள்ளான் .


பிரெஞ்சுப் புரட்சி , பழமைவாதம் மற்றும் சமூகவுடைமைக் கோட்பாடுகளிலும் செல்வாக்கு படைத்த அரசியல் தத்துவத்தை உருவாக்கியவர் ஜூன் ஜாக்குஸ் ரூசோ ( Rousseau ) ஆவார் . இவர் 1712 ஆம் ஆண்டு ஜூன் 12 அன்று இன்றை சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவில் பிறந்தார் . சிறுவயதிலேயே மிகவும் துன்பத்தை அனுபவித்தார் . இருப்பினும் பல நூல்களை விரும்பிப் படித்தார் . பின்னர் பல நூல்களையும் , புதினங்களையும் எழுதினார் . இவரது புதிய ஏலவீஸ் என்னும் புதினம் 18 ஆம் நூற்றாண்டில் அதிகம் விற்பனையானது . இவர் 18 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கினார் . இவர் இசையில் ஆர்வம் கொண்டவர் . பெண்களுக்கு இசை கற்றுக் கொடுக்கும் பணியிலும் ஈடுபட்டார் .

புதிய கல்வி அறிவியல் முறையில் வழங்கப்பட வேண்டும் . அத்துடன் குழந்தைகளுக்குக் கல்வியில் முழுச் சுதந்திரத்தை வழங்க வேண்டும் என்றார் . அத்துடன் சுற்றுச்சூழல் கல்வியும் தேவை என்றார் . பிரபுக்கள் , மன்னர்கள் , சமய குருமார்களின் ஆடம்பர வாழ்க்கையை எதிர்த்து எழுதி வந்தார் . அதனால் பாரிஸ் நீதிமன்றமும் , திருச்சபையும் இவரை எதிர்த்தன . அரசன் என்பவன் மக்களின் நலனுக்காக மக்களோடு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் பயனால் உருவானவன் . மக்களின் உரிமைகளைக் காப்பாற்றும் வரைதான் மன்னன் . அவ்விதிகளை மீறும்போது மக்களும் தம்மைக் கட்டுபடுத்தும் ஒப்பந்த விதிமுறைகளை மீறலாம் என தனது சமுதாய ஒப்பந்தம் என்னும் தத்துவ நூலில் எழுதியுள்ளார் . இவர் 1778 ஆம் ஆண்டு ஜூலை 2 இல் காலமானார் .

by Swathi   on 02 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.