செவ்வாய் கிரகத்தில், சுமார் 370 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ஏரியை இருப்பதை, நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
செவ்வாய் கிரகம் குறித்து ஆராய, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ரோவர் கிரியோசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பியது. செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய இந்த விண்கலம், தனது ஆய்வு முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில் தற்போது, 370 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ஏரியை கிரியோசிட்டி விண்கலம் கண்டுபிடித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில், 'எல்லோனை பே' பகுதியில் உள்ள மண்ணைத் தோண்டி ஆய்வு செய்த போது, இந்த ஏரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தோண்டி எடுக்கப்பட்ட மண்ணில், கந்தகம், நைட்ரஜன், பாஸ்பரஸ், ஹைட்ரஜன், ஆக்சிஜன் மற்றும் கார்பன் துகள்கள் கலந்துள்ளன; இந்த ஆய்வின் மூலம், ஏரியில் தண்ணீர் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு, செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருந்ததற்கான ரகசியத்தை அறிந்து கொள்வதை எளிதாக்கியிருப்பதாக, நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
|