LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வேயில் அசிஸ்டென்ட் லோகோ பைலட் மற்றும் டெக்னிஷியன் ஆகிய பணிக்கு மேலும் 33,458 காலிப்பணியிடங்கள்!!

இந்திய ரயில்வேயில் அசிஸ்டென்ட் லோகோ பைலட்(Assistant Loco Pilot) மற்றும் டெக்னிஷியன் (Technician) பணிகளுக்குரிய 26,502 காலியிடங்களை நிரப்ப கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, இதற்கான எழுத்து தேர்வு வரும்(ஆகஸ்ட் 09, 2018) 9ம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் மேலும் 33,458 ALP(Assistant Loco Pilot) மற்றும் Technician காலியிடங்களை நிரப்ப ரயில்வே தேர்வு வாரியம்(Railway Recruitment Board) முடிவு செய்துள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை ரயில்வே தேர்வு வாரியம் தொடங்கியுள்ளது. ஒட்டு மொத்தமாக இந்த ஆண்டு சுமார் 60,000 ALP மற்றும் Technician பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இது தொடர்பான விரிவான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதாவதொரு தொழிற்பிரிவில் ITI படித்து NCVT-சான்று பெற்றிருப்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க அடிப்படை கல்வித்தகுதியாகும்.

 

வயது வரம்பு : வயது 18 முதல் 28-க்குள் இருக்கவேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை : தகுதியானவர்கள் RRB-ஆல் நடத்தப்படும் CBT-எனப்படும் கணினி வழி எழுத்துத்தேர்வு மற்றும் ALP-பணிக்குரிய APtitute Test-ன் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

இந்த பணிகுறித்த முழுமையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

by Swathi   on 05 Aug 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
எத்தனை பேருக்கு திருவாரூர் CentralUniversity பற்றிய விவரம் தெரியும்...? எத்தனை பேருக்கு திருவாரூர் CentralUniversity பற்றிய விவரம் தெரியும்...?
இந்தியாவில் மகளிருக்கான வேலைவாய்ப்பு 48% அதிகரிப்பு இந்தியாவில் மகளிருக்கான வேலைவாய்ப்பு 48% அதிகரிப்பு
அமெரிக்காவைப் போல தமிழ்நாட்டிலும் கல்லூரிகளில் சேரும் சதவீதம் குறைந்து கொண்டிருக்கிறது... அமெரிக்காவைப் போல தமிழ்நாட்டிலும் கல்லூரிகளில் சேரும் சதவீதம் குறைந்து கொண்டிருக்கிறது...
உஷாரய்யா உஷாரு-அரசுப்பள்ளியில் சேர்ப்போம் உஷாரய்யா உஷாரு-அரசுப்பள்ளியில் சேர்ப்போம்
பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ? பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ?
வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்! வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்!
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு! தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.