|
|||||
புயல் நிவாரணப் பணிக்கு மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.200 கோடி நிதி; அமைச்சர் தங்கமணி தகவல்! |
|||||
புயல் நிவாரணப்பணிக்கு மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.200 கோடி நிதி வழங்கி உள்ளதாகவும்,புயல் சேதமடைந்த மாவட்டங்களில் ஒருவாரத்தில் மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கடந்த 16-ந் தேதி டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்களில் கஜா புயல் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது. இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியது. கஜா புயலால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த புயலால் தென்னை, பலா மற்றும் பழமையான மரங்கள் சாய்ந்தன. லட்சக்கணக்கான மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கஜா புயல் பாதிப்பிற்கு மத்திய அரசு முதற்கட்டாக மின் சீரமைப்பு பணிக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சீரமைப்பு பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின்வாரிய ஊழியர் குடும்பத்துக்கு அமைச்சர் தங்கமணி நிதி வழங்கினார். நாமக்கல் மாவட்டம் மானுவகாட்டு பாளையத்தைச் சேர்ந்த சி.முருகேசன் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவியை அமைச்சர் தங்கமணி வழங்கினார். மேலும் ஊரக பகுதிகளில் இன்னும் ஒரு வாரத்தில் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார். அதிக அளவில் மின்கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளதால் ஆந்திராவில் இருந்து மின்கம்பங்கள் வரவழைக்கப்பட்டு சீரமைப்பு பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். |
|||||
by Mani Bharathi on 25 Nov 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|