LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

புயல் நிவாரணப் பணிக்கு மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.200 கோடி நிதி; அமைச்சர் தங்கமணி தகவல்!

புயல் நிவாரணப்பணிக்கு  மத்திய அரசு  முதற்கட்டமாக ரூ.200 கோடி நிதி வழங்கி உள்ளதாகவும்,புயல் சேதமடைந்த மாவட்டங்களில் ஒருவாரத்தில் மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி  தெரிவித்து உள்ளார்.

 தமிழகத்தில் கடந்த 16-ந் தேதி டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்களில் கஜா புயல் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது.  இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியது.

 கஜா புயலால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தியது.

இந்த புயலால் தென்னை, பலா மற்றும் பழமையான மரங்கள் சாய்ந்தன.  லட்சக்கணக்கான மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  
மின் கம்பங்களை சரி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.  மின் இணைப்பு பணிகளும் சீர் செய்யப்பட்டு வருகின்றன. டெல்லி சென்று பிரதமரை பார்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி 15 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் தேவை என்றும், தற்போது உடனடியாக 1500 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். 

இந்த நிலையில் கஜா புயல் பாதிப்பிற்கு மத்திய அரசு முதற்கட்டாக மின் சீரமைப்பு பணிக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சீரமைப்பு பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின்வாரிய ஊழியர் குடும்பத்துக்கு அமைச்சர் தங்கமணி நிதி வழங்கினார். நாமக்கல் மாவட்டம் மானுவகாட்டு பாளையத்தைச் சேர்ந்த சி.முருகேசன் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவியை அமைச்சர் தங்கமணி வழங்கினார். 

மேலும் ஊரக பகுதிகளில் இன்னும் ஒரு வாரத்தில் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார். அதிக அளவில் மின்கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளதால் ஆந்திராவில் இருந்து மின்கம்பங்கள் வரவழைக்கப்பட்டு சீரமைப்பு பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

by Mani Bharathi   on 25 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.