எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்திலும், நடிப்பிலும் உருவாகி கடந்த வாரம் வெளியான படம் டூரிங் டாக்கீஸ். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், டூரிங் டாக்கீஸ் படத்தை தொடர்ந்து, இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்க எஸ்.ஏ.சி. ஒப்பந்தமாகியுள்ளாராம். இதில் ஏ.வெங்கடேஷ் ஒரு படத்தையும், விக்னேஷ், கிருஷ்ணா எனும் இரட்டை இயக்குனர்கள் மற்றொரு படத்தையும் இயக்குகிறார்கள்.
சமீபத்தில் எஸ்.ஏ.சியை சந்தித்த இயக்குநர் ஏ.வெங்கடேஷ், கூறிய ஒரு கதை மிகவும் பிடித்துப் போனதால், அப்படத்தில் ஹீரோவாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் எஸ்.ஏ.சி. அப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது.
இது தவிர இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார் எஸ்.ஏ.சி. இப்படம், இந்தி திரையுலகில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றி பெற்ற பாக்பான் எனும் படத்தின் கதையை தழுவியது என்று சொல்லப்படுகிறது. இப்படத்தை விக்னேஷ், கிருஷ்ணா எனும் இரட்டை இயக்குனர்கள் இயக்க உள்ளனர். இந்த படத்திற்கு வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
|