LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சித்திரை விஷூ சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை வரும் 10ம் தேதி திறக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும், சித்திரை முதல் தேதியன்று, சித்திரை விஷூ பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த வருட சித்திரை விஷூ பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. 

இதையொட்டி வரும் 10ம் தேதி கோயில் நடை திறக்கப்படுகிறது. அன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடைதிறந்து தீபாராதனை காட்டுகிறார்.

அன்றைய தினம் வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. மறுநாள் (11ம் தேதி) காலை 5 மணிக்கு நடை திறந்து சிறப்பு பூஜைகள் தொடங்குகின்றன.

ஏப்ரல் 15ம் தேதியன்று, சித்திரை விஷூ சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்று அதிகாலை 3 மணியளவில் நடை திறக்கப்பட்டு விஷூ கனி தரிசனம் நடத்தப்படும். அன்று காலை தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் தந்திரியும், மேல்சாந்தியும், விஷூ கை நீட்டம் அளிப்பார்கள்.

தொடர்ந்து 19ம் தேதி வரை தினமும் நெய் அபிஷேகம் நடக்கும். 19ம் தேதி இரவு 10 மணி அளவில் கோயில் நடை சாத்தப்படும்.

by Mani Bharathi   on 05 Apr 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பிரதமர் மோடிக்கு அமெரிக்கப் பாடகி மேரி மில்பென் பாராட்டு பிரதமர் மோடிக்கு அமெரிக்கப் பாடகி மேரி மில்பென் பாராட்டு
தபேலா இசைக் கலைஞர்  ஜாகிர் ஹுசைன் காலமானார் தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் காலமானார்
இனி வருங்கால வைப்பு நிதிப் பணத்தை ஏ.டி.எம் -மி்ல் எடுக்கலாம் இனி வருங்கால வைப்பு நிதிப் பணத்தை ஏ.டி.எம் -மி்ல் எடுக்கலாம்
இந்தியாவில் 16.9 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் இந்தியாவில் 16.9 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள்
கேவின்கேர் ,MMA , FWC  இணைந்து நடத்திய  சின்னிகிருஷ்ணன் கண்டுபிடிப்பாளர்  விருது விழாவில் , சாஷே புரட்சியின் தந்தை நூல் வெளியிடப்பட்டது. கேவின்கேர் ,MMA , FWC இணைந்து நடத்திய சின்னிகிருஷ்ணன் கண்டுபிடிப்பாளர் விருது விழாவில் , சாஷே புரட்சியின் தந்தை நூல் வெளியிடப்பட்டது.
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.