|
|||||
யுனிசெஃப் அமைப்பின் தெற்காசியாவுக்கான நல்லெண்ண தூதராக சச்சின் நியமனம் !! |
|||||
ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான யுனிசெஃப் அமைப்பின் தெற்காசியாவுக்கான நல்லெண்ண தூதராக நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தற்போது சமூக சேவை பணியில் ஈடுபட உள்ளார். அவர் சமீபத்தில் ஐ.நா அமைப்பின் ஒரு அங்கமான யுனிசெஃப் அமைப்பின் தெற்காசியாவுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடையே பேசியதாவது, ''எனது வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்சை தொடங்க அனுமதி அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். யுனிசெஃப்பின் தூதராக என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய ஆவலுடன் இருக்கிறேன். என்னால் முடிந்த வரை சிறந்த சேவையை அளிக்க முயற்சிப்பேன்.
உலக மக்கள் தொகையில் 36 சதவீதம் பேருக்கு, பாதுகாப்பான மற்றும் சுத்தமான கழிப்பறை வசதிகளான அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கப்படவில்லை என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. நோய் தொற்றினால் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு, நாள் ஒன்றுக்கு 1,600 குழந்தைகள் இறப்பதாக சொல்லப்படும் புள்ளி விவரம் மேலும் அதிர்ச்சியை அளிக்கிறது. இது சம்பந்தமாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் யுனிசெஃப்புக்கு உதவி செய்ய தயாராக உள்ளேன். அந்த உதவி எப்படி இருக்கும் என்றால், ஒரு சோப்பை வைத்து கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்பதை சொல்லி கொடுப்பது தான். கழிவறையை பயன்படுத்திய பிறகு, சோப்பால் கைகளை சுத்தப்படுத்துங்கள் என்பதை குழந்தைகளிடம் எடுத்து கூறுவேன் என சச்சின் கூறியுள்ளார். |
|||||
by Swathi on 28 Nov 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|