LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    விளையாட்டு-Sports Print Friendly and PDF

யுனிசெஃப் அமைப்பின் தெற்காசியாவுக்கான நல்லெண்ண தூதராக சச்சின் நியமனம் !!

ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான யுனிசெஃப் அமைப்பின் தெற்காசியாவுக்கான நல்லெண்ண தூதராக நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். 

 

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தற்போது சமூக சேவை பணியில் ஈடுபட உள்ளார். அவர் சமீபத்தில் ஐ.நா அமைப்பின் ஒரு அங்கமான யுனிசெஃப் அமைப்பின் தெற்காசியாவுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார். 

 

இது குறித்து அவர் செய்தியாளர்களிடையே பேசியதாவது, ''எனது வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்சை தொடங்க அனுமதி அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். யுனிசெஃப்பின் தூதராக என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய ஆவலுடன் இருக்கிறேன். என்னால் முடிந்த வரை சிறந்த சேவையை அளிக்க முயற்சிப்பேன். 

 

 உலக மக்கள் தொகையில் 36 சதவீதம் பேருக்கு, பாதுகாப்பான மற்றும் சுத்தமான கழிப்பறை வசதிகளான அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கப்படவில்லை என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. நோய் தொற்றினால் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு, நாள் ஒன்றுக்கு 1,600 குழந்தைகள் இறப்பதாக சொல்லப்படும் புள்ளி விவரம் மேலும் அதிர்ச்சியை அளிக்கிறது. இது சம்பந்தமாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் யுனிசெஃப்புக்கு உதவி செய்ய தயாராக உள்ளேன். அந்த உதவி எப்படி இருக்கும் என்றால், ஒரு சோப்பை வைத்து கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்பதை சொல்லி கொடுப்பது தான். கழிவறையை பயன்படுத்திய பிறகு, சோப்பால் கைகளை சுத்தப்படுத்துங்கள் என்பதை குழந்தைகளிடம் எடுத்து கூறுவேன் என சச்சின் கூறியுள்ளார்.

by Swathi   on 28 Nov 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, வைஷாலி அபாரம் 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, வைஷாலி அபாரம்
ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்! ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்!
உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன்
உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு
உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார். உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார்.
உஷாவை  முந்திய  திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி உஷாவை முந்திய திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி
விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி
உலக கோப்பை கபடி போட்டியில்  இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன் உலக கோப்பை கபடி போட்டியில் இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.