LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- வட மலை நிகண்டு

சகர இகர வருக்கம்

 

சிவையெனும் பெயரே நவையிலா வுமையுடன்
கொல்ல னுலையும் பெரும் நரியுமாம். ....683
சிதமெனும் பெயரே செயமுறப் படுதலும்
ஞானமும் வெளுப்பும் வான் மீனுமாம். ....684
சிந்தெனும் பெயரே நீருங் கடலும்
நதியுங் குறளும் யாப்பின் முச்சீரும்
ஓர்தேச முமென வுரைத்தனர் புலவர். ....685
சிதரெனும் பெயரே சீலைத் துணியுந்
துவலையு முறியும் வண்டுஞ் சொல்லுவர். ....686
சிமைய மெனும்பெயர் சிகரமுங் குடுமியும். ....687
சிலையெனும் பெயரே மலையும் பாறையும்
வில்லு மெனவே விளம்புவர் புலவர். ....688
சினையெனும் பெயரே செழுமரக் கோடுங்
கருவின் பெயரு முட்டையு முறுப்புமாம். ....689
சிலீமுக மெனும்பெயர் அம்பும் வண்டும்
முலைக்கணின் பெயரு மொழியப் பெறுமே. ....690
சிமிலி யெனும்பெயர் உறியுங் கீழ்வீடும்
குடுமியு மெனவே கூறுவர் புலவர். ....691
சிக்க மெனும்பெயர் சீப்புங் குடுமியும்
உறியு மெனவே யுரைத்தனர் புலவர். ....692
சிந்துர மெனும்பெயர் திலகமும் வெட்சியும்
செந்நிறப் பொருள்களுஞ் செங்குடைப் பெயரும்
மதகரிப் பெயர்புளி மாவும் வழங்கும். ....693
சிரக மெனும்பெயர் கரகமும் வட்டிலுஞ்
சென்னியிற் கோடுஞ் செப்பப் பெறுமே. ....694
சிதலை யெனும்பெயர் செல்லொடு துணியுமாம். ....695
சிகண்டி யெனும்பெயர் பாலையாழ்த் திறத்தின்
ஓசையும் அலியு மயிலு மாமே. ....696
சில்லி யெனப்பெயர் சிள்வீடும் வட்டமும்
தேருரு ளுஞ்சிறு கீரையும் செப்புவர். ....697
சிறை யெனும்பெயரே புள்ளி னிறகும்
காவலு மோர்பா லிடமும் கரையுமாம். ....698
சிவப்பெனும் பெயரே செம்மையும் சினமும்
சினக்குறிப் புமெனச் செப்புவர் புலவர். ....699
சில்லை யெனும்பெயர் பகண்டைப் புள்ளும்
சிள்வீடுங் கிலுகிலுப் பையுஞ் செப்புவர். ....700
சிகரி யெனும்பெயர் மலையு மெலியும்
கருநா ரையுங் கோபுரமுங் கருதுவர். ....701
சித்த மெனும்பெயர் திடமும் உளமுமாம். ....702
சித்திர னெனும்பெயர் சித்திர காரனுந்
தச்சனு மெனவே சாற்றப் பெறுமே. ....703
சிகியெனும் பெயரே மயிலும் கேதுவும்
நெருப்பு நூபுரமு நிகழ்த்தப் பெறுமே. ....704
சித்திர மெனும்பெயர் சித்திர கவிதையும்
மெய்போற் பொய்யை யுரைத்தலு மழகும்
துணித்த பலபொரு ளுமதி சயமுஞ்
செய்சொல் வடிவுங் காடுமா மணக்குமாம். ....705
சித்திர பானு வெனும்பெயர் நெருப்புஞ்
சூரியன் பெயரு மோராண்டுஞ் சொல்லுவர். ....706
சிலம்பெனும் பெயரே மலையு மோசையும்
பரிபுரப் பெயரும் பகர்ந்தனர் புலவர். ....707
சிகர மெனும்பெயர் திரையுந் திவலையு
மலையி னுச்சியும் சென்னியுங்
கவரி மாவின் பெயருங் கருதுவர். ....708
சிகழிகை யெனும்பெயர் மயிர்முடிப் பெயரும்
மாலையின் பெயரும் வழங்கப் பெறுமே. ....709
சிதட னெனும்பெயர் குருடனு மூடனும். ....710
சிரமெனும் பெயர்நெடுங் காலமுஞ் சென்னியும். ....711
சிவமெனும் பெயரே முத்தியும் பெருமையும்
குறுணியின் பெயருங் கூவப் பெறுமே. ....712
சித்தெனும் பெயரே செயமும் ஞானமுமாம். ....713

 

சிவையெனும் பெயரே நவையிலா வுமையுடன்

கொல்ல னுலையும் பெரும் நரியுமாம். ....683

 

சிதமெனும் பெயரே செயமுறப் படுதலும்

ஞானமும் வெளுப்பும் வான் மீனுமாம். ....684

 

சிந்தெனும் பெயரே நீருங் கடலும்

நதியுங் குறளும் யாப்பின் முச்சீரும்

ஓர்தேச முமென வுரைத்தனர் புலவர். ....685

 

சிதரெனும் பெயரே சீலைத் துணியுந்

துவலையு முறியும் வண்டுஞ் சொல்லுவர். ....686

 

சிமைய மெனும்பெயர் சிகரமுங் குடுமியும். ....687

 

சிலையெனும் பெயரே மலையும் பாறையும்

வில்லு மெனவே விளம்புவர் புலவர். ....688

 

சினையெனும் பெயரே செழுமரக் கோடுங்

கருவின் பெயரு முட்டையு முறுப்புமாம். ....689

 

சிலீமுக மெனும்பெயர் அம்பும் வண்டும்

முலைக்கணின் பெயரு மொழியப் பெறுமே. ....690

 

சிமிலி யெனும்பெயர் உறியுங் கீழ்வீடும்

குடுமியு மெனவே கூறுவர் புலவர். ....691

 

சிக்க மெனும்பெயர் சீப்புங் குடுமியும்

உறியு மெனவே யுரைத்தனர் புலவர். ....692

 

சிந்துர மெனும்பெயர் திலகமும் வெட்சியும்

செந்நிறப் பொருள்களுஞ் செங்குடைப் பெயரும்

மதகரிப் பெயர்புளி மாவும் வழங்கும். ....693

 

சிரக மெனும்பெயர் கரகமும் வட்டிலுஞ்

சென்னியிற் கோடுஞ் செப்பப் பெறுமே. ....694

 

சிதலை யெனும்பெயர் செல்லொடு துணியுமாம். ....695

 

சிகண்டி யெனும்பெயர் பாலையாழ்த் திறத்தின்

ஓசையும் அலியு மயிலு மாமே. ....696

 

சில்லி யெனப்பெயர் சிள்வீடும் வட்டமும்

தேருரு ளுஞ்சிறு கீரையும் செப்புவர். ....697

 

சிறை யெனும்பெயரே புள்ளி னிறகும்

காவலு மோர்பா லிடமும் கரையுமாம். ....698

 

சிவப்பெனும் பெயரே செம்மையும் சினமும்

சினக்குறிப் புமெனச் செப்புவர் புலவர். ....699

 

சில்லை யெனும்பெயர் பகண்டைப் புள்ளும்

சிள்வீடுங் கிலுகிலுப் பையுஞ் செப்புவர். ....700

 

சிகரி யெனும்பெயர் மலையு மெலியும்

கருநா ரையுங் கோபுரமுங் கருதுவர். ....701

 

சித்த மெனும்பெயர் திடமும் உளமுமாம். ....702

 

சித்திர னெனும்பெயர் சித்திர காரனுந்

தச்சனு மெனவே சாற்றப் பெறுமே. ....703

 

சிகியெனும் பெயரே மயிலும் கேதுவும்

நெருப்பு நூபுரமு நிகழ்த்தப் பெறுமே. ....704

 

சித்திர மெனும்பெயர் சித்திர கவிதையும்

மெய்போற் பொய்யை யுரைத்தலு மழகும்

துணித்த பலபொரு ளுமதி சயமுஞ்

செய்சொல் வடிவுங் காடுமா மணக்குமாம். ....705

 

சித்திர பானு வெனும்பெயர் நெருப்புஞ்

சூரியன் பெயரு மோராண்டுஞ் சொல்லுவர். ....706

 

சிலம்பெனும் பெயரே மலையு மோசையும்

பரிபுரப் பெயரும் பகர்ந்தனர் புலவர். ....707

 

சிகர மெனும்பெயர் திரையுந் திவலையு

மலையி னுச்சியும் சென்னியுங்

கவரி மாவின் பெயருங் கருதுவர். ....708

 

சிகழிகை யெனும்பெயர் மயிர்முடிப் பெயரும்

மாலையின் பெயரும் வழங்கப் பெறுமே. ....709

 

சிதட னெனும்பெயர் குருடனு மூடனும். ....710

 

சிரமெனும் பெயர்நெடுங் காலமுஞ் சென்னியும். ....711

 

சிவமெனும் பெயரே முத்தியும் பெருமையும்

குறுணியின் பெயருங் கூவப் பெறுமே. ....712

 

சித்தெனும் பெயரே செயமும் ஞானமுமாம். ....713

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.